அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, February 12, 2012

செருப்படி வாங்கியும் திருந்தாத இந்து முன்னனியினர்!


சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்ற கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூட பாராமால் தாக்கி பின்னர் பெண்களிடம் செருப்படி வாங்கி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் சில இந்து முன்னனி நிர்வாகிகள்.





தற்போது இது தொடர்பாக தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருக்கும் இந்து முன்னனி கூடன்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை கலவரக்காரர்கள் என்றும் தங்களை அப்பாவிகள் என்று கூறியுள்ளது. மத்திய மாநில குழுவிடம் ஆதரவு கடிதத்தை கொடுக்க வந்த‌ இந்து முன்னனியினரிடம் வேண்டுமென்றே அணு உலை எதிர்ப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினார்கள் என்றும் கூறுகிறது. காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு இந்து முன்னனியினரை கைது செய்துவிட்டதாகவும், உடனே முதலைமைச்சர் இதில் தலையிட்டு இதனை தீர்த்துவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

முஸ்லீம்களின் உரிமையை உறுதி செய்வேன்: சல்மான் குர்ஷித்!

ஃபரூக்காபாத்,பிப்.11- காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சட்ட துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது மனைவி போட்டியிடும் ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 27 சதவிகிதத்தில் சிறுபான்மையினருக்கான உள் ஒதுக்கீடு 9 சதவிகிதமாக உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.

குஜராத் கலவரம் தொடர்பான ஆதார ஆவணங்களை அரசு அழித்து விட்டது'' காவல்துறை உயர் அதிகாரி புகார்!!!



ஆமதாபாத், பிப். 12- குஜராத் இனக் கலவரம் தொடர்பான தும், நரேந்திரமோடிக்கு எதிரா னதுமான ஆவணங்களை மாநில அரசு அழித்து விட்ட தாக அஞ்சுவதாக சஸ்பெண்டு ஆன அய்.பி.எஸ்.அதிகாரி, நானாவதி ஆணையத்திடம் புகார் செய்துள்ளது.
இனக் கலவரங்கள்

காவி தீவிரவாதம்!!!

இது தமிழக மக்களை மிரட்டுவதற்காக எழுதப்பட்ட கட்டுரை அல்ல, மாறாக இன்றைய காலச்சூழ்நிலைகளை உண்ணிப்பாக கவனித்து, இன்றைய அரசாங்கத்தின் செயல்பாடுகளை உற்று நோக்கிய பின்னர் தமிழக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த சிறு கட்டுரை.