அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, April 21, 2011

இந்திய மாணவரைக் கொன்றேன்: 16 வயது ஆஸ்திரேலியர் வாக்குமூலம்.

மெல்போர்ன், ஏப்.21: கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற மாணவரைக் கொன்றதை ஆஸ்திரேலிய இளைஞன் ஒப்புக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்த நிலையில் அது இன வெறி தாக்குதலா? என்ற அச்சம் உருவானது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற 21 வயது மாணவர் அடையாளம் தெரியாத ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தியர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டார். குற்றவாளியின் நண்பர் ஒருவருக்கு 18 மாதம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்றில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டது. தனது நண்பருக்கு கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வழங்கியதை ஒப்புக் கொண்டார். தனது நண்பர்தான் கொலை செய்ததாக தனக்கு தெரிய வந்ததாக அவர் விசாரணையின்போது குறிப்பிட்டார். இதனடிப்படையில் கொலையாளி என கருதப்பட்ட இளைஞனது வீட்டில் ஒட்டுக் கேட்புக் கருவியை போலீஸôர் வைத்தனர். கொலையாளிக்கும் அவரது தாய்க்கும் இடையிலான உரையாடலில் அவர்தான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது நிரூபணமானது. இதனடிப்படையில் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாகவும் அவரை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீஸôர் தெரிவித்தனர். ஆனால் கைது செய்யப்பட்ட இளைஞனின் புகைப்படம், அவரைப்பற்றிய விவரம் எதையும் வெளியிட மறுத்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதம் நடைபெற உள்ளது. அதுவரை அந்த இளைஞன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர்.

சிகிச்சைக்கு இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்.


வாஷிங்டன், ஏப்.21: குறைந்த செலவிலான மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் மிகவும் அதிகமாகும். இதனால் அமெரிக்கர்கள் மருத்துவ சிகிச்சை குறைவாக உள்ள இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்குச் சென்று சிகிச்சை பெறுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர், அமெரிக்காவிலேயே தரமான சிகிச்சை தனது குடிமக்களுக்குக் கிடைக்க வழி ஏற்படுத்தித் தரப் போவதாகக் கூறினார். வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள சமுதாயக் கல்லூரியில் அவர் இவ்விதம் கூறியவுடன் அதை பலத்த கரகோஷத்துடன் மக்கள் வரவேற்றனர். அமெரிக்காவில் மருத்துவ கட்டணங்கள் உயர்ந்து வருவது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்டதற்கு, ஒபாமா இவ்விதம் பதில் அளித்தார். குடிமக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் அளிக்க வேண்டும் என்பதற்காக அரசு திட்டமிடும்போது, மக்கள் வேறு நாடுகளுக்கு சிகிச்சைக்காக செல்வது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். உள்நாட்டிலேயே உயர்தர சிகிச்சை பெறுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார். மருத்துவ கவனிப்பு என்பது ஆரம்பம் முதலே தொடங்கப்பட வேண்டும். இது எவ்விதம் செயல்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து அதில் உள்ள கோளாறுகள் சரி செய்யப்படும். இங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும், அனைத்து டாக்டர்களும் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கின்றன. இருப்பினும் மருத்துவ செலவு அதிகரிப்பது குறித்து கவனத்தில் கொண்டு அதை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். மருந்து, மாத்திரைகளின் விலையும் கட்டுக்குள் கொண்டு வரப்படும். இதன் மூலம் நீங்கள் அளிக்கும் பணத்துக்கு உரிய மருந்துகளை வாங்கியுள்ளீர்கள் என்பதை உணரலாம். ஆனால் கனடா மற்றும் மெக்ஸிகோவில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் தொகை செலவிட வேண்டியிருக்கும் என்றார். அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் விலை பிற நாடுகளைவிட இங்கு அதிக விலைக்கு விற்பனையாவது ஏன் என்பது புரியவில்லை. இதற்கு இங்குள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்தான் காரணம். வெளிநாடுகளில் இதுபோன்ற நிலை கிடையாது. இதற்கு இங்குள்ள வரி விதிப்பு காரணமா அல்லது இதனால் அரசின் வரி வருவாய் குறையுமா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஒபாமா

அன்னா ஹசாரே யார்?


அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரானவரா?

அன்னா ஹசாரே காங்கிரசுக்கு எதிரானவரா?

பிஜேபி ஆட்சியிலும் ஊழல் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியிலும் ஊழல் இருக்கிறது என்கிறார் அன்னா ஹசாரே.

ஆனால் இன்று இருக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அன்னா ஹசாரே போராடுவது பிஜேபிக்குத்தான் சாதகமாகிப் போகும்.

மோடியைப் பாராட்டிய ஹசாரே, தான் மதச்சார்பற்றவர் என்று கூறுகிறார்.

ஆனால் ஹசாரே கோயிலில் தங்கியிருக்கிறார். அதனால் அவருக்கு மத உணர்வு இருக்க வேண்டும் என்பது இல்லை.

அவருக்குப் பின்னால் திரண்டவர்கள் எல்லோரும் மதச்சார்பு கொண்டவர்கள் என்று பொருள் அல்ல.

ஊழலை எதிர்த்தால் அதற்கு ஏன் மதச்சார்பு சாயம் பூச வேண்டும்?கூடாது.

ஆனால் யாருடைய ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போராடுகிறார் என்பதுதான் முக்கியம்.

அவர் இப்போது காங்கிரசின் ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்.

இப்போது ஆட்சியில் காங்கிரஸ் இருப்பதால் அவர் காங்கிரசின் ஊழலுக்கு எதிராகத்தான் போராட முடியும்.

ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தை முடக்குபவர்கள் என்று அவர் காட்ட நினைக்கலாம்.

இன்றைய உண்மைகள் காங்கிரசுக்கு எதிரான ஒரு போராட்டத்தை ஊக்குவிக்கின்றன. ஒரு சக்திக்கு எதிராகத்தான் எதிர்சக்தி உருவாக முடியும். அது காங்கிரசுக்கு எதிராக இப்போது நடைபெறுகிறது.

காங்கிரசுக்கு எதிராக இருக்கும் சக்திகள் அனைத்தும் மதச்சார்பு சக்திகள் என்று கொள்ள முடியாது. கூடாது.

காங்கிரசே முழுக்க முழுக்க மதச்சார்பற்ற சக்தி என்றும் பார்க்கப்பட முடியாது. காங்கிரசின் மூத்த அதிகார மையங்கள் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்றன.

சிறுபான்மை சமூகத்தின் அதிகார மையங்களின் கீழே ஊழல் அதிகாரம் ஒன்று உருவாகிக் கிடக்கிறது என்றுதான் எதிர்சக்திகள் காட்ட நினைக்கின்றன.

அது அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.

ஊழல் அதிகாரங்களை உடைக்கும்போது மேலே ஆட்சி செலுத்தும் அதிகார மையங்கள் உடைந்துவிடும்.

இப்போது அந்த அதிகார மையங்கள் சிறுபான்மை மையங்களாக இருக்கின்றன. எனவே அவைதான் உடையும். உடைய வேண்டும்.

ஊழலுக்கு எதிரான போராட்டம் சிறுபான்மை பிம்பங்களுக்கு எதிரான போராட்டம் என்ற குற்றச்சாட்டு இப்படித்தான் நிகழ்கிறது.

குற்றச்சாட்டுகளுக்கு பயந்தால் எந்தப் போராட்டமும் நடக்க முடியாது.

ஊழலுக்கு எதிரான போராட்டமும் அப்படித்தான்.

அதனால் அன்னா ஹசாரே வெற்றி பெறுவார். வெற்றி பெற வேண்டும்.

இந்த நாடே அவருக்குப் பின்னால் அணி திரளக் காத்திருக்கிறது.

அல்லது, அப்படிக் காட்டப்படுகிறது.

எப்போதும் எந்தப் போராட்டமும் தன் உண்மைத் தோற்றத்தை வெளிக்காட்டிக் கொண்டதில்லை.

அன்னா ஹசாரேயின் போராட்டத்தினுடைய உண்மைத் தோற்றம் தெரிய பல ஆண்டுகள் ஆகலாம்.

ஆகும்.

ஜெயித்தது யார்? ஜெயிக்கப்போவது யாரோ?



ஏப்ரல் 9-ஆம் தேதியன்று,மத்திய அரசு தன்னுடைய பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து லோக்பால் மசோதா விவகாரத்தில் வெளி நபர்களையும் சேர்த்துக் கொள்வது, அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவது என்று ஒப்புக் கொண்டபோது, ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாட்டம் கொஞ்சம் அதிகப்படியாகத் தான் தெரிந்தது.

வெறும் ஒற்றை அறிவிப்புக்கே இத்தனை கொண்டாட்டமா?

ஆச்சரியம் ஒருபுறம், காங்கிரஸ்வாலாக்கள் குள்ள நரிகளாயிற்றே, எப்படி இந்தப் பின்னடைவை சமாளிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ஒரு புறமாகக் குடைந்து கொண்டிருந்ததில், விடை தெரிய அதிக நாட்கள் தேவைப்படவில்லை.

ஊழல் குற்றச்சாட்டுக்களை விரைவாக விசாரித்து, தண்டனை வழங்கும் ஒரு அமைப்பின் தேவை கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாகவே நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் இருந்து வருகிறது. ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்லி, இத்தனை நாட்கள் தள்ளிப்போடத் தெரிந்தவர்களுக்கு அன்னா ஹசாரே போன்ற காந்தீயவாதிகள் நடத்திய உண்ணாவிரதம் எல்லாம் ஒரு பொருட்டா என்ன?

ஆனால், போராட்டம் தொடங்கிய நேரம், சமாளிப்பதற்குத் தேவையான அவகாசத்தை அளிக்கவில்லை! அதனால் என்ன? அவதூறுகளை அள்ளி வீசினால் போகிறது! தினம் நூறு குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசினால், அசராமல் தாக்குப் பிடிக்க முடிகிறவர்கள் எத்தனை பேர்? காங்கிரஸ் அதைத் தான் செய்ய ஆரம்பித்தது.


அன்னா ஹசாரே மற்றும் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களும் சரி, ஆளும் தரப்பும் சரி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விதத்தில் நாடெங்கிலும் திரள ஆரம்பித்த ஜனங்களுடைய ஆதரவு, கொந்தளிப்பு இரண்டும் சேர்ந்து, ஆளும் தரப்பை வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்ள வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஐந்து மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல்கள் நெருங்குகிற சமயம் பார்த்து இந்தப் போராட்டம் ஆரம்பித்தது, காங்கிரசை ரொம்பவுமே நெளிய வைத்துவிட்டது.
போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி, வழக்கமான விஷமத்தனமான பிரசாரத்தை ஆரம்பித்து வைக்க, தன்னுடைய போராட்டம் அரசியல் சார்பற்றது என்று அன்னா ஹசாரே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டி வந்தது. .

அரசியல் சார்பு அல்லது ஆதரவு என்று வந்தால் "கறை" ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில், அரசியல் கட்சிகளின் ஆதரவை ஏற்றுக் கொள்ளத் தயக்கம்! ஆதரவு தெரிவிக்க ஜந்தர் ந்தருக்கு வந்த உமாபாரதி போன்றவர்கள் திருப்பி அனுப்பப் பட்டதும் நடந்தது.

"
கறை நல்லது" என்ற ஸ்லோகன் எல்லாம் டிவி விளம்பரத்தில் மட்டும் தான் எடுபடும்போல!!

காங்கிரஸ் கட்சி குள்ள நரிகள் அசந்துவிடுவார்களா என்ன !

அபிஷேக் மனு சிங்வி என்ற காங்கிரஸ் கட்சி பேச்சாளர், "நீங்கள் சொல்கிறபடி எல்லாம் சட்டமியற்ற முடியாது, வேண்டுமென்றால் தேர்தலில் ஜெயித்து வாருங்கள், அப்புறமாக நீங்கள் விரும்புகிறபடி சட்டமியற்றிக் கொள்ளுங்கள்" என்று நக்கலாகச்சொன்னார். சொன்னது கொஞ்சம் கொந்தளிப்பை ஏற்படுத்தி, சிங்வியின் யோக்கியதையையே கேள்விக்குள்ளாக்குகிற மாதிரி ஆகிவிட, அதே வார்த்தைகளை கபில் சிபல் வேறுவிதமாக சிரித்துக் கொண்டே அரசுக்கு சிவில் சொசைடி கட்டளையிட முடியாது" என்று சீரியசாகச் சொன்னார். உண்ணாவிரதம் மூன்று நாட்களைத் தொட்டபோதும் கூடக் காங்கிரஸ் அசருவதாக, இறங்கி வருவதாக இல்லை!

ஆனால், உலகக் கோப்பை முடிந்து, ஐபிஎல் கிரிக்கெட் தொடங்குவதற்கு முந்தைய இடைவேளையில், வேறு பரபரப்புச் செய்தி எதுவும் இல்லாத நிலையில், டிவி ஊடகங்கள் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை மிக விரிவாகவே கவர் செய்து, ஊது ஊதென்று ஊதித்தள்ள ஆரம்பித்துவிட்டன. இதை இரண்டாவது விடுதலைப் போராக சித்தரிக்க ஆரம்பித்தது,

இதற்கு முன்னால் எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய போராட்டத்தைப் பற்றிய பிரக்ஞை ஊடகங்களுக்கு மட்டுமல்ல, பின்னால் மெழுகுவர்த்திகளைத் தூக்கிக் கொண்டு அலைந்தவர்களுக்குமே இல்லை என்பதைப் புலப்படுத்தியது.

காங்கிரஸ்காரர்கள் முதலில் இந்தப் போராட்டமே ஒரு ப்ளாக்மெயில் என்றார்கள். காந்தீய வழியில் ஒரு விஷயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பது எப்படி, எவரை ப்ளாக்மெயில் செய்வதாக இருக்க முடியுமென்று சோனியா காண்டியைப் பின்பற்றும் காங்கிரஸ் வாலாக்களால் சொல்ல முடியவில்லை.அரசைத் தனிநபர்கள் மிரட்டுவதா? தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடைய அதிகாரத்தை சிவில் சொசைடி என்ற பெயரில் தாங்களே கையில் எடுத்துக் கொள்வதா?அதெப்படி என்றார்கள்.
ஆனால், அரசு என்பது பெரும்பாலான ஜனங்களுக்கு எதிராகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கடமையை சரிவர செய்யத் தெரியாதவர்களாக, ஊழலில் கூட்டாளிகளாக இருப்பதை சொல்ல மறுத்தார்கள்.அரசோ, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ தங்களுடைய கடமையை சரியாக செய்திருந்தால், இப்படி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அவசியமே இருந்திருக்காதே!

தன்னலமற்ற நபராகத் தெரிந்த ஒருவர் மேற்கொண்ட போராட்டத்துக்கு அதில் உண்மை இல்லாமலிருந்தால், ஜனங்களுடைய ஆதரவு ஒவ்வொரு ஊராகக் கைகளில் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு பெருக ஆரம்பித்திருக்காதே!

நிலைமை கைமீறிப் போய்விடும் என்பதை உணர்ந்த பிறகுதான் காங்கிரஸ் இறங்கிவந்தது. குள்ளநரித்தனம் போய்விடுமா என்ன? ஜெயித்து விட்டதாக ஜனங்கள் தெருக்களில் கொண்டாடினார்களாம்! அதனால் என்ன? இந்தப் போராட்டத்தை எந்தெந்த வழிகளில் கேவலப்படுத்தலாம் என்பதைக் கோயபல்சுக்கே பாடம் சொல்லித் தருகிற அளவுக்குத் தேர்ச்சி பெற்றதில்லையா காங்கிரஸ்! கண்ணசைவிற்குத் தகுந்தமாதிரி ஆடுகிற அமர்சிங் முதல் சண்டித்தனம் செய்கிற மாயாவதிகள் உட்பட எத்தனை கருவிகள் கைகளில் என்பதை இவர்களுக்குக் கொஞ்சம் காட்ட வேண்டாமா!

"இந்த வைத்தி கண்ணசைச்சா வாகனங்கள் பறக்காதோ!" தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் பேசும் வசனம் இது.

சிபிஐ, வருமானவரித்துறை,இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் கைகளில் இருக்கும்போது கண்ணசைவிற்குத் தகுந்தமாதிரி ஆட எத்தனை பேர் கிடைப்பார்கள், சும்மா விட்ருவோமா?

அன்னா ஹசாரே ஆரம்பித்துவைத்த ஊழலுக்கெதிரான இயக்கம், இப்போது சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன் என்ற தகப்பன்-மகன் வழக்கறிஞர்களைக் கொச்சைப்படுத்துகிற முயற்சியில் கலகலத்துப் போயிருக்கிறது.!

ஒரு ஒலிப்பதிவு சிடியை வைத்து முலாயம் சிங்கின் சகா அமர்சிங் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார். மாயாவதி அரசு மிகச் சொற்பமான விலைக்கு பூஷன் குடும்பத்துக்கு பண்ணை நிலத்தை வழங்கியதில் ஒருகோடியே முப்பது லட்சம் பத்திரப்பதிவுக் கட்டணத்தைக் குறைவாக செலுத்தியிருக்கிறார் என்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து தாக்கீது! மாயாவதி சிலை வைப்பு விவகாரத்தில் மாயாவதியை எதிர்த்து வழக்காடிய ஜெயந்த் பூஷனுக்கும் மனை ஒதுக்கீடு, இது லஞ்சமல்லாமல் வேறென்ன என்று கொக்கரிக்கும் காங்கிரஸ் வாலாக்கள் என்று ஷாந்திபூஷன் பிரசாந்த் பூஷன் இருவரையும் குறிவைத்து ஏகப்பட்ட கேள்விக்கணைகள்!

லோக்பால் மசோதா, ஊழலுக்கெதிரான இந்தியா எல்லாம் பின்னுக்குப்போய் விடவேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்வம் வெளிப்படையாகவே தெரிகிறது!

வெறி தீர்த்த ராஜபக்சே சிக்குவாரா?


ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்! ஈழத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான 'ஐ.நா. பொதுச் செயலாளர் குழு’ வெளியிட்டுள்ள அறிக்கைதான் இதற்குக் காரணம்!
ஈழப் போரின் கடைசிக் காலம் பற்றி விசாரித்து, தனக்கு ஆலோசனை சொல்ல கடந்த ஆண்டு ஜூன் 22-ல் ஒரு குழுவை அமைத்தார்,

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன். வட கொரியாவுக்கான ஐ.நா-வின் சிறப்புத் தூதரான இந்தோனேஷியாவின் மர்சுகி தருஸ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை ஆர்வலரான யாஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் குழுவில் நியமிக்கப்பட்டனர்.

இந்த குழுவின் நியமனத்தையே கடுமையாக எதிர்த்தது இலங்கை அரசு. ''அந்த மூவர் குழு நாட்டுக்குள் வந்தால், அவர்களை அனுமதிக்க மாட்டோம்!'' எனப் பகிரங்கமாகவே சொன்னார் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
இந்த மிரட்டலுக்கு ஐ.நா. தரப்பில் குறிப்பிடும்படியான பதில் எதுவும் தரப்படவில்லை. இலங்கைக்குள் போகாம​லேயே விசாரணையை முடித்தது மூவர் குழு!

கடந்த 12-ம் தேதி பான் கி மூனிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிடு​வதற்கு முன்பே, இலங்கை அரசுக்கு அனுப்பிவைத்​தார் பான் கி மூன். முறைப்படி அறிவிக்கப்படும் முன்பே, கொழும்பு பத்திரிகை மூலம் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது.

''இலங்கை ராணுவம் செய்தது போர்க் குற்றம்தான்!'' என அடித்துச் சொல்லும் இந்த அறிக்கை, ''2008 செப்​டம்பர் முதல் 2009 மே 19 வரை வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் பெரிய அளவிலான குண்டு வீச்சுகளை நடத்தியதில், ஏராளமான பொது மக்களைக் கொன்று குவித்துள்ளது. வன்னியின் 3.3 லட்சம் மக்களை​யும் போரினால் சுருங்கிய குறுகிய பிரதேசத்தில் மொத்தமாக ஒதுங்கச் செய்தனர்.

'தாக்குதலற்ற பகுதி இது’ என்று அறிவித்துவிட்டு, ஒட்டுமொத்தமாக அங்கு குவிந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களைக்கொண்டு தாக்கினர்.

மருத்துவமனைகள் எனத் தெரிந்தும் அரச படைகள் அவற்றின் மீது குறிவைத்து, எறிகணைகள், மோர்ட்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஐ.நா. அவையின் உணவு, உதவி முகாம்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள், உதவிக் கப்பல்களும் அரசப் படைகளின் குண்டுவீச்சுகளுக்குத் தப்பவில்லை. சில மருத்துவமனைகள் மீது பல முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலால் படுகாயம் அடைந்த மக்களுக்கு உயிர்த் தேவையான அடிப்படை சிகிச்சைகூடக் கிடைக்கவிடாமல், மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியது இலங்கை அரசு.

2009 ஜனவரி முதல் மே வரை மட்டுமே பத்தாயிரக்​கணக்கில் மக்கள் இப்படி அடையாளம் தெரியாமல் செத்துப்போனார்கள். சண்டைப் பிரதேசத்தில் இருந்து தப்பியவர்​களிடம், அரசுத் தரப்பு மிக மோசமாக நடந்துகொண்டது. விடுதலைப் புலிகள் என சந்தேகப்​பட்டவர்களை எல்லாம் ரகசியமாகக் கொண்டு​போய், கணிசமானவர்களைக் கொன்றுபோட்டது ராணுவம். அவர்களில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாகத் தெரிகிறது.

தப்பியவர்கள் அனைவரும் முகாம்களில் நெருக்கடியாக அடைக்கப்பட்டனர். விசாரணைக்கு ஆளா​னவர்கள், கடுமையாக சித்ரவதை செய்யப்​பட்டனர். புலி என சந்தேகிக்கப்​பட்டவர்கள் வெளியுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவாறு சொல்லவொண்​ணாத சித்ர​வதைத் துன்பங்களுக்கு ஆளாக்கப்​பட்டனர்!'' எனக் குற்றம் சாட்டும் ஐ.நா. நிபுணர்கள், புலிகள் மீதும் போர்க் குற்றம் சுமத்தியுள்ளனர்.

''போர்ப் பிரதேசத்தில் பொது மக்களைக் கேடயங்களாகப் பிடித்து​வைத்து, விடுதலைப் புலிகள் அங்கிருந்து நகரவிடாமல் செய்தனர். 14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களையும் அவர்கள் கட்டாய​மாகப் படையில் சேர்த்தனர். பிப்ரவரி மாத காலத்தில் தப்பிச் செல்லும் பொது மக்களையும் அவர்கள் தாக்கினர்'' என்றும் ஐ.நா. நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை அடுத்து, நல்லிணக்க ஆணைக் குழு என்ற ஒன்றை இலங்கை அரசு அமைத்தது. சண்டை நிறுத்தம் தொடங்கிய 2002 முதல் 2009 மே வரையிலான இனப் பிரச்னை குறித்து விசாரிப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தக் குழுவைப்பற்றியும், ஐ.நா. நிபுணர்கள் காட்டமாக விமர்சித்து இருக்கின்றனர்.

''இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக் குழு, சர்வதேச மனித உரிமைச் சட்ட விதிகளின்படி அமைக்கப்படவில்லை. இறுதிக் கட்டப் போரில் உண்மையில் என்ன நடந்தது என்பதுபற்றி நேர்மையாக விசாரிக்கவும் இல்லை. பாதிக்கப்பட்ட துயரத்தில் இருப்பவர்களை மரியாதையாக நடத்தாததுடன், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பையும் வழங்கவில்லை. ஏற்கெனவே, பான் கி மூனும் ராஜபக்ஷேவும் கூட்டறிக்கையில் ஒப்புக்கொண்டதற்கு மாறாக, இந்த நல்லிணக்க ஆணைக் குழு பெரும் தவறைச் செய்துவிட்டது!'' என்றும் நிபுணர் குழுவினர் குற்றம் சாட்டினர்.
ஆனால், வேதனை என்ன தெரியுமா? போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை அரசே, மனித உரிமை மீறல்கள், மனிதகுல விரோத அத்துமீறல்கள் குறித்து நேர்மையாக விசாரணையைத் தொடங்க வேண்டும்.

இந்த விசாரணையைக் கண்காணிப்பதற்கான சர்வதேச முறை ஒன்றை பான் கி மூன் ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது அறிக்கை.
மேலும், ''இலங்கை அரசு மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழுக்களின் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் நிலைமை தொடர்பாக உடனடியாக அரசுத் தரப்பு புலன்விசாரணையை நடத்த வேண்டும். புலி என சந்தேகிக்கப்படுவோர் உள்பட பிடித்துவைக்கப்பட்டு உள்ள அனைவரின் பெயர்களையும் அறிவிக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருடனும், வழக்கறிஞர்​களுடனும் தொடர்புகொள்ள அனுமதிக்க வேண்டும். பிடித்துவைக்கப்​பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாக வாதாடவும் அனுமதிக்க வேண்டும்.

மக்களைப் பய பீதியில் ஆழ்த்தி, சுதந்திரத்தைத் தடுக்கும் அனைத்து வித அரச வன்முறைகளையும் நிறுத்த வேண்டும். கடைசிக் கட்டப் போரின்போது ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் அரசின் பங்குபற்றி பகிரங்கமாக விளக்கம் ஒன்றை வெளியிட வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அரசின் மீதான மனித உரிமை மீறல் தீர்மானத்தை, ஐ.நா. மனித உரிமை ஆணையம் மறு பரிசீலனை செய்யவேண்டும். போரின்போதும், அதன் பின்பும், இலங்கையில் ஐ.நா. அமைப்புகளின் செயல்பாடுகள்பற்றி ஐ.நா. பொதுச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்!'' என்றும் மூவர் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

தமிழ் மக்களைப் படுகொலை செய்து சிங்களப் படை செய்த போர்க் குற்றத்தை, ஐ.நா. நிபுணர் குழுவினர் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து, ''சர்வதேச விசாரணைக் குழுவை பான் கி மூன் அமைத்து, போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இதைக் கேட்டு ஆவேசமடைந்த ராஜபக்ஷே, ''ஐ.நா-வுக்கு எதிராகப் போராட்டம் நடத்துங்கள்!'' என்று சிங்கள மக்களைத் தூண்டிவிட்டுள்ளார். ''உறுப்பு நாடு என்கிற முறையில் இலங்கையை ஐ.நா. காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகார​முள்ள சீனா, ரஷ்யாவின் உதவியை நாடுவோம்!'' என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் ராஜபக்ஷேவின் தம்பி கோத்தபய ராஜபக்ஷே.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகளோ, ''முக்கியமான சில உண்மைகளை இந்தக் குழு ஒப்புக்​கொண்டுள்ளது. போர்க் குற்றத்தை வேடிக்கை பார்த்த ஐ.நா. அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுபற்றி இதில் எந்தக் குறிப்பும் இல்லையே! எமது மக்களைத் துடிக்கத் துடிக்க சிங்களப் படை கொன்று குவித்தபோது, தடுத்திருக்க வேண்டிய ஐ.நா., இனி மேல் நீதியைத் தரும் என்று நம்பிவிட முடியாது!'' என்று பரவலாகக் கருத்துகளைத் தெரிவித்து உள்ளன.

வெள்ளைக் கொடி ஏந்திச் சென்ற நடேசன் குழுவினரைப் படுகொலை செய்தது தொடர்பாக, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஐ.நா-வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான பாலித கோகன்ன மீது வழக்கு தொடுத்துள்ளது, சுவிஸ் ஈழத் தமிழர் அவை. அவையின் சட்ட ஆலோசகரும் இந்த வழக்கைத் தொடர்ந்தவர்களில் ஒருவருமான லதான் சுந்தரலிங்கத்திடம் இந்த அறிக்கைபற்றிக் கேட்டபோது, சட்ட நுணுக்கங்களை விவரித்தவர், ''சிங்களப் படை செய்த போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்கள் எம்மிடம் ஏராளமாக உள்ளன. இதைவைத்து, இலங்கை அரசுத் தரப்பை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி சர்வதேச சட்டங்களின் மூலம் நாமே தண்டனை பெற்றுத் தருவதுதான் சிறந்த வழி. கட்டாயம் நம்மால் இதைச் சாதிக்க முடியும். உலகின் எந்த சக்தியாலும் இதைத் தடுத்துவிட முடியாது!'' என்றார் உறுதியுடன்.

அவர்கள் சரி, தாய்த் தமிழகம் இதில் என்ன செய்யப்போகிறது?!

கொட்டித்தீர்த்த கோடைமழை! மக்கள் உற்சாகம்

சென்னை : சென்னை நகரில் இன்று காலையில் திடீரென பெய்த கனமழையால் கடும் வெப்பத்தினால் தலை காய்ந்து போயிருந்த சென்னைவாசிகள் குளிர்ந்த காற்றினால் மகிழ்ச்சியடைந்தனர்.

சென்னையில் இன்று காலை 10.30 மணி அளவில் திடீரென கன மழை கொட்டியது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைககளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தமிழகத்தில் மார்ச் முதலே கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது 100 டிகிரிக்கும் மேல் வெயில் அடிக்கிறது. இதுபோன்ற வெப்பநிலை மே மாதத்தில்தான் காணப்படும். ஆனால் தொடக்கத்திலேயே வெயில் கடுமையாக இருக்கிறது. மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் தற்போதே வெயில் கொடுமையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வெயில் காரணமாக கடலில் இருந்து வீசும் காற்று நிலப்பகுதிக்கு வரவில்லை. இதனால் வானில் வெப்ப சலனம் ஏற்பட்டு, இன்று காலை ஆங்காங்கே கருமேகக்கூட்டம் சூழ்ந்தது. பிறகு காலை 10.30 மணி அளவில் ஆலந்தூர், பரங்கிமலை, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், பகுதியில் திடீரென கன மழை கொட்டத்துவங்கியது சுமார் 15 நிமிடங்கள் கொட்டித்தீர்த்த மழையால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


இந்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி பரவியதால் வாகன ஓட்டிகளும், மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இதுபோல வேளச்சேரி, மேடவாக்கம், பல்லாவரம், தாம்பரம், பகுதியில் மழை மேகம் சூழ்ந்தது. இதனால் கோடை வெயிலின் கடுமை இன்று சென்னையின் பல பகுதிகளில் குறைந்து காணப்படுகிறது.

சிரியாவில் தாங்கள் கலவரத்தை தூண்டவில்லை என்று அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிரான கலவரத்தை அமெரிக்கா தான் தூண்டிவிடுகிறது என்று விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியில், அமெரிக்க அதிபராக புஷ் இருந்தபோது, அவர் சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிரான கலவரத்தை தூண்டுவதற்காக நிதி உதவி செய்தார் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிரியாவுக்கு எதிராக கலவரத்தை தாங்கள் தூண்டவில்லை என்று மறுத்துள்ள அமெரிக்கா, சிரியா மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்ற அதிபர் பஷார் அல் ஆசாத் முன்வர வேண்டும் என்றும் கூறி உள்ளது.

2ஜி வழக்கு -அமலாக்கப் பிரிவு அறிக்கை

இந்திய உச்சநீதிமன்றம்
இந்திய உச்சநீதிமன்றம்
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை அமலாக்கப் பிரிவு செவ்வாய்க் கிழமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த முறைகேடுகள் தொடர்பாக, 31 நிறுவனங்களை கண்காணித்து வருவதாகவும், அவற்றில் 26 நிறுவனங்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்திருப்பதாகவும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கப் பிரிவு அறிக்கையில், அந்த முறைகேடுகளில் தொடர்புடைய பணம் 6 நாடுகளில் இருந்து பரிமாறிக் கொள்ளப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், சைப்ரஸ் உள்ளிட்ட சில நாடுகளுக்கு இது தொடர்பாக கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் இரு நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், அமலாக்கப் பிரிவின் சார்பில் ஆஜராகி, அந்த அறிக்கையை வாசித்தார்.

பணப்பரிவர்த்தனை

சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ ராசா
சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ ராசா

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கிடையில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதன் பிறகு, அந்தத் தொகை கடனாகப் பெறப்பட்டதாகவும், அது வட்டியுடன் திருப்பித் தரப்பட்டுவிட்டதாகவும் ஒரு நிறுவனம் கூறியது. ஆனால், அதைத் தொடர்ந்து அந்தத் தொகை அந்த நிறுவனத்தின் மொரீஷஸ் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது என்று வேணுகோபால் தெரிவித்தார். ஆனால் அந்த நிறுவனங்களின் பெயர்களை வேணுகோபால் வெளியிடவில்லை.

டி.பி. ரியால்டீஸின் துணை நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் அளித்ததாகவும், அது பங்குகள் வாங்குவதற்காக தரப்பட்ட முன்பணத் தொகை என்றும், ஆனால் பங்கு விலையில் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்தத் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கலைஞர் தொலைக்காட்சி சார்பி்ல் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் மத்திய புலனாய்வுத்துறை சென்னையில் விசாரணை நடத்தியது. நேற்று, அந்தத் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் ஷரத் குமாரிடம் டெல்லியில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அலைக்கற்றை உரிமம் பெற்ற பிறகு, ஒரு நபர் தனது பங்குகளை விற்றதன் மூலம் பெரும் லாபம் பெற்றிருப்பதாகவும், அது மொரிஷஸ் வங்கிக் கணக்கில் போடப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் அமலாக்கப்பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், பூர்வாங்க அடிப்படையில் பார்க்கும்போது சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள்.

அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, பொது நல வழக்குகளுக்கான மையம் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷண் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மத்திய புலனாய்வுத்துறையும் விசாரணை நிலவர அறிக்கையை இன்று தாக்கல் செய்திருக்கிறது. அது நாளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புலனாய்வுத்துறை கடந்த மார்ச் 1-ம் தேதி விசாரணையின் போது, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, 10 நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்பட 63 பேர் தங்கள் கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவித்திருந்தது. இந்த மாத இறுதியில் அந்த அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களின் கோரிக்கை நிராகரிப்பு

அமைச்சர் திஸாநாயக்க
அமைச்சர் திஸாநாயக்க
இலங்கையின் கிழக்கு பல்கலைகழத்திலிருந்து பொலிஸ் காவல் நிலையத்தை அகற்ற முடியாது என்று அந்நாட்டின் உயர்கல்வியமைச்சர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

வந்தாறுமூலையில் இருக்கும் கிழக்கு பல்கலைகழகத்திலுள்ள காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரி மாணவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க இயலாது என்று அங்கு விஜயம் செய்த அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க என்று கூறிவிட்டார்.

பல்கலைகழக மாணவர்களுக்கும், பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிசாருக்கும் இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் கிழக்கு பல்கலைகழகத்தில் கல்விச் செயற்பாடுகள் தடைபட்டுள்ளன.

அங்கு நிலவும் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக புதன்கிழமை அங்கு விஜயம் செய்த அமைச்சர் திஸாநாயக்க, அங்கு விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது "பல்கலைகழக வளாகத்திலிருந்து பொலிஸ் காவல் நிலையத்தை அகற்ற முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

மாணவர்கள் மற்றும் பல்கலைகழகத்தின் பாதுகாப்பு கருதியே அங்கு பொலிஸ் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த பொலிஸ் காவல் நிலையம் அகற்றப்பட்டால், அங்கு பாதுகாப்புக்காக இராணுமோ அல்லது கடற்படையினரோ அல்லது சிறப்பு அதிரடிப் படையினரோ கடமையாற்ற வேண்டி வரும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், அமைச்சருடனான சந்திப்பை அடுத்து வியாழக்கிழமை முதல் மாணவர்கள் விரிவுரைகளுக்கு சமூகமளிப்பர் என்று மாணவர் ஒன்றியத் தலைவர் கூறுகிறார்.

சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடப்புத்தகம் இணைய தளத்தில் வெளியானது.

சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடத் திட்டம் பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத் திட்டம் வருகிற கல்வி ஆண்டில் முழு மையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் இனிமேல் ஒரே பாடத்திட்டத்தை படிக்கின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் 10-ம்வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் தயாராக உள்ளன. மாணவ-மாணவிகள் இப்போதே சமச்சீர் பாடப்புத்தகங்கள் கேட்டு அலைகிறார்கள். மே மாதம் இறுதியில் தான் சமச்சீர் பாட புத்தகங்கள் விற் பனைக்கு வழங்க தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனாலும் 10-ம் வகுப்பு பாடப் புத்தகங்களை மட்டும் இணைய தளத்தில் வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இன்று காலையில் www.pallikalvi.in என்ற இணைய தளத்தில் 10-ம் வகுப்பு புத்தகங்கள் முழுவதும் வெளியிடப்பட்டன. மாணவர்கள் வசதிக்காக தமிழ் வழி பாடப் புத்தகங்களும், ஆங்கில வழி பாடப்புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், அறிவியல், கணிதம் ஆகிய 5 பாடப்புத்தகங்கள் பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு சாப்பிட்டால் போதும்..



ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமானது என்பது அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதிய சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவு தான் சரியானது. மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும்.

இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வு தான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.

The People of Aad (Quran)

Recent gas exploration activity in the south east region of the Arabian desert uncovered a skeletal remains of a human of phenomenal size. This region of the Arabian Desert is called the Empty Quarter , or in Arabic, 'Rab-Ul-Khalee'.

The discovery was made by the Aramco Exploration team. As ALLAH states in the Quran that He had created people of phenomenal size the like of which He has not created since. These were the people of Aad where Prophet HUD was sent. They were very tall, big, and very powerful, such that they could put their arms around a tree trunk and uproot it. Later these people, who were given all the power, turned against ALLAH and the Prophet and transgressed beyond all boundaries set by ALLAH. As a result they were destroyed. Ulema's of Saudi Arabia believe these to be the remains of the people of Aad. Saudi Military has secured the whole area and no one is allowed to enter except the ARAMCO personnel. See the attachment and note the size of the two men standing in the picture in comparison to the size of the skeleton.

Fun & Info @ Keralites.net Fun & Info @ Keralites.net
Fun & Info @  Keralites.net
Fun & Info @  Keralites.netFun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.netFun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.netFun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Please, don’t close this e-mail without forwarding it to other Muslims..........


Pray for All Muslim Ummah.....May ALLAH forgive our sins & shower his rehmah & blessings upon us forever.......Aameen....


سبحانك اللهم وبحمدك أشهد ألا إله إلا أنت أستغفرك و أتوب إليك

------------







اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை

வழமையான, மேன்மை பொருந்திய வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய சமுதாயம் இன்று கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருக்கிறது. முதலாளித்துவமும், ஊழலும், தகுதிக்கேடும் இன்று இஸ்லாமிய சமூகத்தை பீடித்திருக்கிறது. இதற்கு, மக்களை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்பும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் தவறான ஆட்சி முறையுமே காரணம் ஆகும். இஸ்லாமிய சமூகம் தங்கள் பிடியில் இருக்கும் படியும், தங்களின் (குடியேற்ற நாடுகளின்) தலைமையே இஸ்லாமிய சமூகத்தை ஆதிக்கம் செலுத்தும் வகையிலுமே குடியேற்ற நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் இருக்கின்றன. இவ்வாறாக, அமெரிக்கா மற்றும் அதைப்போன்ற நாடுகள் , இஸ்லாமிய நாடுகளை தங்களின் பொருட்களை விற்கும் சந்தையாகவே கருதுகின்றன. குடியேற்ற நாடுகளின் பிடியிலிருந்து மீள முஸ்லீம் ஆட்சியாளர்கள் கையாள வேண்டிய பொருளாதாரக் கொள்கைகள் இங்கே விளக்கப்பட்டுள்ளன. மேலும் இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகள் குர்ஆன் மற்றும் திருநபியின்(ஸல்) போதனைப்படி அமையும் வழியையும் சுட்டுகிறது.

தனி மனிதனின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல், சமதர்மத்தை நிலைநிறுத்துவது பற்றியும், மொத்த தேசிய உற்பத்தியை பெருக்க வேண்டும் எனவும் மட்டுமே குடியேற்ற நாடுகள் வலியுறுத்துகின்றன. இதன் தொடர்பாக, மேலை நாடுகள், பொருளாதாரத்தைப் பற்றி புத்தகங்கள் பலவற்றை பிரசுரித்து, தொழில் முன்னேற்றம் கண்ட தங்களுடன் சரி நிலையை அடைய, இஸ்லாமிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன.

மொத்த தேசிய உற்பத்தியை பெருக்கி-அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைப்பதும், சமதர்மக் கொள்கையும், சமூக நீதி திட்டமும், சமூகத்திற்கு எவ்வித பயனும் தராமல் உண்மை நிலையிலிருந்து விலகியே நிற்கின்றன. சமூக நீதி கொள்கையானது, முதலாளித்துவக்கொள்கைக்கு கைகொடுக்குமெயன்றி வேறொரு பயனும் அளிக்காது.

இஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாத காரணத்தினாலும், அவை மட்டுமே மனித சமூகம் உயர வழி கோலும் என்பதாலும், முஸ்லீம்கள் நிலையற்ற அல்லது பிற நாட்டைச்சார்ந்த பொருளாதாரத்திட்டத்தை பின்பற்றுவது உபயோகமற்றதாகும். இஸ்லாமியர்களின் பொருளாதார அமைப்பு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டப்படியும், சுன்னாஹ் எனப்படும் நபிகளாரின்(ஸல்) வழிகாட்டுதலின் படியும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்வின் படியும்(இஜ்மா-அஸ்-ஸஹாபா), கியாஸ்(ஒப்புநோக்குதல்) படியும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படையில் பின்வரும் நான்கு கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.

1. ஒரு தனி நபருக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தனிப்பட்ட தேவைகள் உண்டு என இஸ்லாம் கருதுகிறது.

2. ஒரு மனிதன் வாழ அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என இஸ்லாம் கருதுகிறது.

3. தொழில் சுதந்திரத்தையும், வேலையில் யாவரும் சமம் என்ற நிலையையும், இறைவனின் வழங்களிலிருந்து பயனடைதலின் மூலம் பெற முடியும் என இஸ்லாம் கருதுகிறது.

4. உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே உள்ள தொடர்பையும் இஸ்லாம் நிர்வகிக்கிறது.

ஆகவே, மனிதன் உழைப்பதின் மூலமும், மனிதர்களிடையே உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதின் வாயிலாகவும், தனி நபரின் முக்கியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், அவனுடைய வாழக்கைத் தரத்தை உயர்த்தவும், அவனை முன்னேற்றமடையச்செய்யவும் இஸ்லாம் வழி சொல்கிறது.

எனவே உற்பத்தியைப் பெருக்குவதோ, சமதர்மக்கொள்கையோ, சமூக நீதி திட்டமோ இவை அனைத்தும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையாகாது. முஸ்லிம் உம்மாவிடையே, அல்லாஹ்வின் வழங்களை சமமாக பங்கிடுதலின் மூலமாக, ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவைகளையும், அதிகப்படியான தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை கூறுகிறது.

வழங்களை சமமாக பங்கிடுதல் மட்டுமல்லாமல் நிலத்தை உழுவதின் மூலமாகவும் அவற்றை செழுமைப்படுத்தியும் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று அறியப்படுகிறது. இவ்வாறாக ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இரு வேறு கோணத்திலிருந்து இஸ்லாம் பொருளாதாரத்தை விளக்குகிறது.

1.
பொருளாதாரக் கொள்கை.
2.
பொருளாதார முன்னேற்றம்(பொருள் உற்பத்தியும் பெருக்கமும்).

பொருளாதாரக் கொள்கை.

பொருளாதாரக் கொள்கைகளை இரு வகைகளாக வகுத்து நோக்கலாம்.

1. பொருளாதாரத்தின் முக்கிய வருமான வழிகள்.

2. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய முறைகள்.

பொருளாதார முன்னேற்றம்.

வழங்களை வளர்க்கும் வழிமுறைகள் கூர்ந்து நோக்க வேண்டிய ஒரு விசயமாகும். மனித தேவைகளை கருத்திற்கொள்ளாது உற்பத்தியை மட்டும் கருத்திற் கொள்வதால், நாட்டிற்கு நாடு இது வேறுபடுகிறது. இஸ்லாமிய நாட்டில் தொழிற் புரட்சியின் வாயிலாக விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறையினை கண்டறிவமே இதன் முக்கிய நோக்கமாகும். அதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழிற்சாலைகள் முக்கிய பங்காற்றுமாறு செய்யலாம். இவ்வணுகுமுறையை நான்கு பகுதிகளாக நோக்கலாம்.

1. விவசாயக் கொள்கை

2. இயந்திரமயமாக்கற் கொள்கை

3. திட்டங்களுக்கான மூலதனம்

4. வெளிநாட்டுச் சந்தை உருவாக்கம்

விவசாயக் கொள்கை

இது பண்ணை உற்பத்தி அதிகரிப்பை அடிப்படையாக்க கொண்டதாகும். இது பின்வரும் முறைகளை உள்ளடக்கியுள்ளது.

மண்ணின் விளைச்சலை அதிகரித்தல் : இது அதி நவீன இயந்திரங்களையும், இரசாயண பொருட்களையும், உற்பத்தித்திறன் மிக்க விதைகளையும் உபயோகிப்பதன் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்யமுடியாத விவசாயிகட்கு மானியங்கள் வழங்குவதையும் (கடன்கள் அல்ல), முடியுமாணோரை ஊக்குவிப்பதையும் அரசு மேற்கொள்ளும்.

உற்பத்திக்கான நில அளவை அதிகரித்தல் : நில அளவை அதிகரித்தல் என்பது விவசாயிகளிடம் இருக்கும் உற்பத்தி நிலங்களை அதிகரித்தலாகும். இது உலர் நிலங்களை விவசாயத்திற்கு ஏற்ற முறையில் மாற்றியமைக்க உதவுவதோடு நிலமற்ற சிறிய அளவிலான விவசாயிகட்கு அரசாங்கத்தின் கைவசம் இருக்கும் நிலங்களை வழங்குவதன் மூலமாகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. விளைநிலத்தை, விளைச்சலின்றி மூன்று ஆண்டுகள் வைத்திருப்பது ஹராம் ஆதலால் அவ்வாறு செய்வோரின் நிலங்களை அபகரித்து விவசாயத்திற்கு ஈடுபடுத்தப்படவேண்டும்.

இவ்விரு முறைகளின் மூலமாக விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் காணப்படுவதோடு விவசாயக் கொள்கையின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. இக்கொள்கையை அமுல்படுத்தும் நிலையில் வேறு சில விசயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். விளைச்சலை அதிகரிப்பதோடு அதன் தரத்தையும் அதிகரித்தல் அவசியமாகும். இது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமாக சாத்தியமடைவதால் இயந்திரத் தொழிற்புரட்சியை ஏற்படுத்துதல் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது.

அகவே விவசாயத் தறனை அதிகரிப்பதில் பின்வரும் நோக்கங்கள் அடிப்படையாக அமையவேண்டும்.

1. அன்றாடத் தேவை, நீண்ட கோடை, விளைச்சல் சரிவு, வர்த்கத் தடை, என்பனவற்றை மனதிற்கொண்டு இச்சந்தர்ப்பங்களை முகம் கொடுக்கும் வகையில் உணவு உற்பத்தியில் முன்னேற்றம் காண வேண்டும். இதன் போது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இரண்டிலும் கவனம் செலுத்துதல் அவசியம்

2. ஆடை அணிகட்கு தேவையான பருத்தி, பட்டு, கம்பளி போன்ற மூலப்பொருட்களின் உற்பத்தியல் முன்னேற்றம் காணல். இதன் முக்கிய நோக்கம் வர்த்தகத்தடையின் போது அறக்குமதியினை சார்ந்திராது சுயதேவையினை பூர்த்தி சய்து கொள்வதேயாகும்.

3. வெளிநாட்டு சந்தையில் கிராக்கி நிலவும் பொருள்களின் உற்பத்தியல் முன்னேற்றம். அது ஆடை அணிகலன்களானாலும் சரி அல்லது உணவுப் பொருட்களான பேரீத்தம் பழம் போன்ரவையானாலும் சரி.

அணைகள் கால்வாய்கள் கிணறுகள் அமைத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் மிக அவசியமாயின் முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். இதன் நோக்கம் விவசாயப்புரட்சியினை மட்டும் ஏற்படுத்துவதல்ல. மாறாக இயந்திரப் புரட்சியினை, விவசாயத்தை புறக்கணிக்காமல் ஏற்படுத்தி, உற்பத்தியினை அதிகரித்தலாகும். இதன் முக்கிய நோக்கம் பொருள் அபிவிருத்தியினை உண்டாக்குவதே. இது இயந்திரப் புரட்சியன்றி சாத்தியமாகாது.

இன்றைய முஸ்லிம் உலகின் பொருளாதாரம் ஒரு தோழிற்சாலைகளுடன், விவசாயத்தை மட்டுமே முழுமையாக ஒன்றியதாக உள்ளதால் பொருளாதார பின்னடைவு பெற்றதாக காணப்படுகிறது. அதனால் இயந்திரப் புரட்சி ஏற்படுத்த அதிகளவிலான முயற்சி மிக அவசியமாகும். குடியேற்ற சக்திகளின் நோக்கம் ஏனைய நாடுகளை விவசாயத்தில் மட்டும் கவனம் செலுத்தச் செய்து, இயந்திர தொழில் முயற்சிகளை தடைசெய்து அவ்வியந்திரங்கட்காக மேற்குலகை நம்பியிருக்கவைப்பதாகும். ஆகவே விவசாயத்தினை மட்டும் ஊக்குவிக்க முனையும் இவர்களின் திட்டங்களை அலட்சியப்படுத்துதல் மிக அவசியமாகும். ஷரீஆ முடிவை இவ்விடம் கூறுவது பயனளிக்கும்,சமூகத்திற்கு பயன்தரக்குடிய வீண்விரயமற்ற செயல்திட்டங்கட்கு பொருள் விநியோகிக்க முடியுமானவிடத்து அதனை மேற்கொள்ளல் கடமையாகும் அதாவது மூலதனம் இருக்குமாயின் அதனை மேற்கொள்ளல் அவசியமானது. அச்செயல்திட்டம் அதி முக்கியமாக இல்லாவிடில் வரிவிதித்தலையோ அல்லது தன் நாட்டு மக்கள்டையே கடன் வாங்கியோ மேற்கொள்ளக் கூடாது.

இயந்திரமயமாக்கற்கொள்கை.

இக்கொள்கையின் முக்கிய நோக்கம் நாட்டை இயந்திரமயமாக்கலாகும். இக்குறிக்கோளை அடையக்கூடிய முக்கிய வழியானது இயந்திரங்களை உற்பத்தி செய்வதாகும். பின் மற்றைய உற்பத்தித் தொழிற்சாலைகளை மேற்கொள்ளலாம். இவ்விலக்கை அடைய மாற்று வழியேதும் இல்லாததால் இயந்திரங்களை வடிவமைக்கும் தொழிற்சாலைகளை நிறுவுவதில் முக்கியத்துவம் அளித்தல் மிக அவசியமானது. இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களால் இயங்கும் தொழிற்சாலைகளை அமைக்கும் வாய்ப்பு வாய்க்கிறது. இயந்திரங்களை உற்பத்தி செய்வதானது அதிக காலம் எடுக்கும் ஒரு நடைமுறை ஆதலால் நுகர்வோர் பாவனை பொருள் உற்பத்தியினை மேற்கொள்ளும் தொழிற்சாலைகளை முதலில் அமைத்தல் வேண்டும் என்பது அடிப்படையற்ற நாசகாரத்தை நோக்கிய ஒரு கருத்தாகும். இது இஸ்லாமிய நாடுகளை தன் பொருட்களின் சந்தையாக மாற்றுவதற்காக மேற்கத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட ஒரு கருத்தேயன்றி வேறில்லை.

மேலும் இந்நோக்கை அடைய இயந்திரத் தொழில்நுட்ப அறிவுடைய மனிதவளத்தை முதலில் உருவாக்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும். மேற்குலகில் அளவிற்கு அதிகமாக காணப்படும் பொறியாலார்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்துவதுடன் முஸ்லிம் இளைஞர்களை வெளிநாடுகளில் இத்துறைகளில் கற்கவைக்கலாம். மேலும் கற்றுக் கொண்டிருப்போரையும் உபயோகிக்கலாம். ஆகையால் சிறு அல்லது நுகர்வோர் பாவனை பொருட் தொழிற்சாலைகளை உருவாக்க முனைவதன் மூலம் இயந்திரமயமாக்கல் முயற்சி வீணடிக்கப்படக்கூடாது. முதல் படியே இயந்திரங்களை உற்பத்தி செய்தலாக அமையவேண்டும். இக்கொள்கைக்கான படிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்படாது ஒரே சமயத்தில் மேற்கொள்ள வேண்டும். ஒரு படியினை நிறைவேற்றிய பின்பே மற்ற படியினை ஆரம்பித்தல் என்பது இம்முயற்சிக்கு எதிரான ஒரு தடையாகும்.

தற்போதுள்ள நுகர்வோர் பாவனை பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகளை மேலும் விரிவுபடுத்துவதில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து இயந்திரமயமாக்கலில் முழு கவனத்தையும் செலுத்துதல் அவசியம். சுய உற்பத்தியை ஆரம்பிக்கும் வரையில் தற்போதுள்ள இறக்குமதி கொள்கையினை, இஸ்லாமிய பொருளாதார கொள்கையை, அமலில் வைக்கலாம். அரசின் கீழுள்ள கனிமப்பொருள் அகழ்வுத்துறுயும் இதே நுணுக்கத்தை கையாளலாம். இஸ்லாமிய கொள்கைகளின் பிரகாரம் இத்துறையின் பிரதிநிதியான இஸ்லாமிய அரசு, இத்துறைக்குத் தேவையான உபகரணங்களை சுய உற்பத்தியில் மேற்கொள்ள முனைய வேண்டும். இந்நிலையினை அடையும் வரை இறக்குமதியை மேற்கொள்வதோடு தன் கவனத்தை சிதறடிக்காது இயந்திரமயமாக்கலில் முழுதாக செலுத்தவேண்டும்.

திட்டங்களுக்கான மூலதனம்

அரசும், தனியார் துறையும் பொறுப்பேற்க வேண்டிய திட்டங்கள் எவை என இஸ்லாத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை முற்றுமுழுதாக தனியார் வசம் தெல்வதோடு, மானியம் வழங்கல் கட்டடங்களுக்கான முதலீடு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றில் அரசு பங்கேற்கும். ஆனால் இயந்திரமயமாக்கலில் அரசு மற்றும் தனியார் ஆகிய இரு துறையும் பங்கேற்கும். ஆனால் எண்ணை கனிம்ப்பொருள் அகழ்வு என்பன அரசின் கீழ் வருதல் கட்டாயமாகும். ஏனெனில் புமியினின்றும் கிடைக்கும் கனிமப்பொருட்கள் முஸ்லிம் உம்மாவுக்கு சொந்தமானது. எனவே அதன் பிரதிநிதியான இஸ்லாமிய அரசே அதனை பேணிப்பாதுகாக்க வேண்டும்.

தனியார் மற்றும் அரசு இரண்டும் திட்டங்களுக்கான மூலதனம் திரட்டல் அவசியம். தனியார் துறையை பொருத்தமட்டில் இது தனியொருவரோ அல்லது பங்காளர்கள் இணைந்தோ சட்டவிரோதமற்ற, இஸ்லாத்திற்கு எதிரான முறையில் இல்லாமல் அமைத்துக் கொள்ளலாம். அரசினை பொருத்தமட்டில் இதற்காக வெளிநாட்டு உதவிகளில் இருந்து தவிர்த்தல் அவசியம். இது வறுமையையும் வெளிநாட்டினை சார்ந்திருக்கும் நிலையையும் உண்டாக்குகிறது. அதுமட்டுமன்றி வெளிநாட்டு கடன்கள் வட்டியை அடிப்படையாகக் கொண்டதாகும். வட்டி இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டுக் கடன்களை விலக்குதல் அவசியம். ஆகையால் திட்டங்களுக்கான மூலதனத்திரட்டல், அது அதி முக்கியத்திட்டமாக இருப்பின், தன் மக்களிடம் வரிவிதித்தல் மூலம் மேற்கொள்ளலாம். இதன்போது இஸ்லாமிய வரிவிதிப்புக் கொள்கை செயல்படுத்தப்படவேண்டும். திட்டங்களுக்கான மூலதனத்திரட்டல் தவணை முறையாலும் மேற்கொள்ளப்படலாம். இதன்போது அதன் கொள்ளளவு விலையிலும் அதிகமாக காணப்படுமாயின் அது வட்டி ரீதியாக அமையாது விலை ரீதியில் அமையுமாயின் மேற்கொள்ளலாம்.

வெளிநாட்டுச்சந்தை உருவாக்கம்

பொருள் சந்தைப்படுத்தலானது வருமானத்தை தரக்கூடிய முக்கிய வழியாகும். பல நாடுகள் தன் பொருட்களுக்கான சந்தை உருவாக்கலில் அன்றுபோல் இன்றும் மும்முறமாக ஈடுபட்டுள்ளன. பல பொருளாதார வல்லரசுகள் இதன் மூலம் உருவாகியுள்ளன. ஆகையால் இஸ்லாமிய அரசும் தன் பொருள்களை வேளிநாட்டு சந்தையில் சந்தைப்படுத்தல் முக்கியமாகும். ஆனால் இது ஒரு தனி நோக்கமாக அமையாது. இயந்திரமயமாக்கலுக்கு தேவையான பொருள் கொள்முகல், தழும்பலற்ற அன்னியசிசெலாவணி திரட்டு, முஸ்லிம் இளைஞர்கட்கு பொறியியல் வைதிதியத் துறைகளில் கல்வி என்பவற்றை கருத்தில் கொண்டு அமையவேண்டும். வர்த்தகம், இயந்திரமயமாக்கலை நோக்காக கொண்டு அமையவேண்டும். இதன்போது வர்த்தகமீதி யில் கவனம் செலுத்துவது அவசியமற்றது. வர்த்தகமானது, இயந்திரமயமாக்கலுக்கும், இஸ்லாமிய தூது ஏனைய நாடுகளை அடையும் வகையில் இருப்பின், ஏற்றுமதி இறக்குமதியிலும் அதிகமாகவோ, சமமாகவோ அல்லது குறைவாகவோ அமைதலைப்பற்றி சிந்திக்கவேண்டிய அவசியம் கிடையாது. அனைத்து நாடுகளும் பொருட்கள் எங்கு உற்பத்தியாகின்றன என்பதை நோக்க்கிறது. எனினும் நம் கொள்கை வர்த்தகர்கள் எந்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதில் கவனம் செலுத்துகிறது. அதன் மூலமே இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ள முடியும். இஸ்லாமிய நாட்டைச் சார்ந்த வர்த்தகத்கள் இஸ்லாமிய ஷரீஆவால் அனுமதிக்கப்பட்ட வகையில் வர்த்தகம் செய்வர். வெளிநாட்டவர் தன் சொந்த கொள்கையினை பின்பற்றி வர்த்தகம் செய்வர். இம்முறை உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

சுருக்கம்.

நாம் இன்று மேலைத்தேய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையால் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளோம். சுதந்திர வர்த்தக நடைமுறைகள் (free trade), உலக நிதி நிறுவனம் (IMF) பின்பற்றும் கொள்கைகள் (இது அடிப்படை தேவைகளில் நிறைவற்ற தன்மையை உருவாக்கும்), இன்றைய முஸ்லிம் நாடுகளில் சுரண்டல் ஆகியவற்றால் அல்லாஹ் தன் அருளால் வழங்கிய வளம் வீணாகி உபயோகமற்றதாகிவிடுகிறது. தெளிவான ஒரு தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள, குர்ஆன் மற்றும் சுன்னாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறையான கிலைஃபா முறைக்கு திரும்புவதற்கு இதுவே தக்க தருணமாகும்.

முஸ்லிம்களின் நோக்கம் அல்லாஹ் (சுபு)வின் மார்கத்தை அமுல்படுத்தி, இதனை முழு மனித சமுதாயத்திற்கும் சென்றடைய செய்வதாகும். இஸ்லாமிய பொருளாதார கொள்கையானது இயந்திரமயமாக்கல் மூலம் வல்லரசாகி தஆவா, ஜிஹாத் மூலம் இஸ்லாத்தை மற்றையோருக்கு சென்றடைய செய்வதுடன் தன் குடிமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகும். அமெரிக்கா, பிரிட்டிஷ் (முதலாளித்தும்), ரஷ்ய (கம்யூனிஸம்) மற்றும் ஏனைய முஸ்லிம் அல்லாதோர்தளின் கொள்கையை பின்பற்றும் அதிகாரத்தை மீட்பதன் மூலமே நம் இலக்குகளை நாம் அடையமுடியும்.

மேலும், (நபியே !) அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக நீர் அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றியும் விடாதீர். அன்றியும், உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்த்தில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பி விடாதபடியும், நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பீராக. (உம்முடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால், அப்போது அல்லாஹ் (சுபு) நாடுவதெல்லாம் அவர்களின் சில பாவங்களின் காரணமாக அவர்களை அவன் (தண்டிக்க) பிடிப்பதைத்தான் என்பதை நீர் அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.

அறியாமை காலத்துத் தீர்ப்பையா அவர்கள் தேடுகின்றனர். உறுதியாக நம்பிக்கை கொண்ட சமூகத்திற்குத் தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வை விடவும் மிக்க அழகானவன் யார் ? (TMQ 5:49, 50)