அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 10, 2012

உலகில் செல்வாக்குள்ள 50முஸ்லிம்கள் - 2011!





உலக சனத்தொகையில் 1.6 பில்லயின் பேர் முஸ்லிம்களாவர். உலக சனத்தொகையில் 5 பேரில் ஒருவர் முஸ்லிமாவார். சர்வதேச மட்டத்தில் மிக வேகமாக வளரும் மார்க்கம் இஸலாம் என்று கடைசியாக மேற்கொள்ளப்ட்ட சுயாதீன ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை எவராலும் மறைக்க முடியாது. சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற துறைசார் இஸ்லாமிய பிரபலங்கள் இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

குஜராத்:மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டசபையில் ஏன் தாக்கல் செய்யவில்லை? – உயர்நீதிமன்றம் கேள்வி


gujarat-vapi
அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை தொடர்பான தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கையை ஏன் சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை? என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் மோடி அரசுக்கு கேள்வி விடுத்துள்ளது.
மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யாதது மனித உரிமை மீறல் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யாதது குறித்து மாநில அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என ஆக்டிங் தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா, நீதிபதி ஜெ.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் கூறியது.

திசை மாறிப் போகும் கல்வி


money education
‘படிப்பது- அறிவை பெறுவதற்கும், வாழ்க்கை தேவைகளை நிறைவுச்செய்ய ஒரு வேலையை தேடுவதற்கும்’ என்பது கல்விக்கு முன்பு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் ஆகும். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. பணம் சம்பாதிப்பதே கல்வி கற்பதன் முக்கிய நோக்கமாக ஆகிவிட்டது. இதுதான் இன்றைய மாணவ சமூகத்தின் மூளையில் கட்டாயமாக பதிய வைக்கப்படுகிறது. இதற்கு பெற்றோர் மட்டுமல்ல, மாறி மாறி இந்நாட்டை ஆளும் அரசுகளும் அதற்கு காரணமாகும்.

இஹ்ஸான் ஜாஃப்ரி கொலை வழக்கு: எஸ்.ஐ.டி அறிக்கையை சமர்ப்பித்தது!!

புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலை வேளையில் முன்னாள் காங்.எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி உள்ளிட்டவர்களை கூட்டுப் படுகொலைச் செய்த வழக்கில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

உ.பி:தேர்தலில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் உள்பட 30 கிரிமினல்கள் போட்டி!!!

புதுடெல்லி:உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சிறையில் இருந்துக்கொண்டே ஹிந்துத்துவா தீவிரவாதிகள் உள்பட 30 கொடிய கிரிமினல்கள் போட்டியிடுகின்றார்கள்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூர், ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்த்துவா தீவிரவாதி ரமேஷ் உபாத்யாயா ஆகியோர் உ.பி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Thursday, February 9, 2012

இஸ்ரேலுடனான உறவை வலுப்படுத்த‌ மொஸாத் உள‌வாளிகளை விடுவித்த இந்தியா!!!

மங்களூர்: தேசத்தின் பாதுகாப்பு என்ற கொள்கை கோட்பாடையெல்லாம் மூட்டை கட்டி விட்டு இஸ்ரேலுடனான் தன்னுடைய உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தியாவிற்கு வந்த மொஸாத் உள‌வாளிகள் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது மத்திய அரசு.

பள்ளி ஆசிரியர் கத்தியால் குத்தி கொலை !!!

சென்னை: பள்ளியில் நடத்தை குறித்து பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் அனுப்பியதால் ஆத்திரமுற்ற மாணவன் ஒருவன் சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பெண் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக ஆட்சி!!!


கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்த நாள் முதலே, அந்தக் கட்சியின் ""புகழ்'' பல்கிப்பெருகிக் கொண்டே இருக்கிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதவி விலகியதோடு பாஜகவைப் பிடித்த சாபம் விலகிவிடவில்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள் பாஜக-வின் மூன்று அமைச்சர்கள். அவையில் விவாதம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் நீலப்படம் பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்து, மூன்று அமைச்சர்களும் பதவி விலகியிருக்கிறார்கள்.

Wednesday, February 8, 2012

சங்கரன் கோவி கலவரம் - நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்


நெல்லை மாவட்டத்தில் (மேற்கு) சங்கரன்கோவில் கழுகுமலை ரோட்டில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். நட்புணர்வோடும், சுமூகமாகவும் வாழ்ந்து வரும் இவர்கள் மத்தியில் பகையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சில சமூக விரோத விஷமிகள் சமீபகாலமாக பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.


அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று (07.02.2012) தலித்கள் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் ஊர்வலம் கழுகுமலை ரோடு பள்ளிவாசல் அருகே வரும்போது ஊர்வலத்தில் இருந்த விஷமிகள் சிலர் பள்ளிவாசலின் உள்ளே செருப்புக்களை வீசியும், வெடிகளை வெடித்தும் பிரச்சனை செய்து விட்டு சென்றுள்ளனர். இதனைப் பார்த்த முஸ்ளிம்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். பிரச்சனையின் தீவிரத்தை உணராத காவல் துறையினரோ சில காவலர்களை மட்டும் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: தமிழக அரசு கடும் எதிர்ப்பு!!!

புதுடில்லி: ""மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்'' என்றும், தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு சட்டம் ஏற்கனவே பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, அது நிலைக்குழு முன் பரிசீலனையில் இருக்கிறது. இந்நிலையில், அந்த சட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. டில்லியில் நடைபெற்ற உணவு அமைச்சர்களின் மாநாட்டில், தமிழக அரசின் சார்பில் உணவு அமைச்சர் காமராஜ், விவசாய அமைச்சர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா சட்டமாகுமா?

 1865 முதலே இந்தியாவில் வகுப்புவாத வன்முறைகள் மூலம் சிறுபான்மை முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றார்கள்.
       இன்றளவும் பலகோடி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். 1947 இல் இந்தியா விடுதலையடைந்தபோது எல்லா மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பது அரசின் அடிப்படைக் கடமை என சட்டம் அமைக்கப்பட்டது. இது குடிமக்களின் அடிப்படை உரிமை.
       இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் பிரிவு 21. சட்டப்படி உருவாக்கப்பட்ட விசாரணை முறைப்படியன்றி வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக் கூடாது எனக் கூறுகின்றது. இதன் விளக்கம் (24) எந்த அளவுக்குச் செல்கின்றது என்றால், ஒருவர் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள முயற்சி செய்வது அதாவது தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கின்றது.

கூடங்குளம் அணு மின் நிலையம் 30 கேள்விகள் ? பதில்கள் !


1.கூடங்குளத்தில் என்ன நடக்கிறது? 

1000 மின்சாரம் தயாரிக்கும் இரண்டு ருசிய அணு உலைகள் நிறுவப்படுகின்றன .1988-ஆம் ஆண்டு ரூபாய் 6000 கோடி செலவாகும் என்றார்கள் .1997 -ஆம் ஆண்டு 17000 கோடி வரை செலவாகும் என்றார்கள் .தற்போதைய செலவு விபரங்கள் யாருக்கும் தெரியாது.இந்த திட்டத்திற்காக பொது மக்களிடம் கருத்து கேட்கவோ ,சுற்று சூழல் தாக்க அறிக்கையினை பகிர்ந்து கொள்ளவோ செய்யாத நிலையில் மேலும் 4 அணு உலைகள் நிறுவவும் முயற்சி நடந்து வருகிறது .இதன் செலவு ருபாய் 55000 கோடி என்கிறார்கள்.இதற்கான கருத்து கேட்பு கூட்டம் சூன் 2 ,2007 அன்று அரசு விதிகளை மதிக்காது அய்யோக்கியதனமாக நடத்தி முடிக்கப்பட்டது .