அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, September 28, 2010

திரையிட்டு வந்தேன்..

purkka.jpg

அஸ்ஸலாமு அலைக்கும்,

குறையேதுமில்லை

திரையிட்டு வந்தேன்;

உன் இச்சைக்கொண்ட

பார்வைக்கு எச்சில் துப்பி

எதிர்ப்பேன்!

அரைநிர்வாணம்

அழகாய் தோன்றும் உனக்கு;

உன் அக்காள் தங்கை

காட்டி வந்தாள் முழுக்கோபம் எதற்கு!

மாற்றான் தோட்டத்து

மல்லிகை மட்டும்

மணக்கவேண்டும் உனக்கு;

மானங்கெட்ட மானிடனே

மனைவியை

பூட்டிவைக்கிறாய் எதற்கு!

போர்த்தியிருக்கும் எங்களை

கழட்டச் சொல்லி கேட்கிறாய்;

கழட்டி வந்த பெண்களிடம்

கைவரிசையைக் காட்டுகிறாய்!

மானம் காக்க

மறைத்திருப்பது

சிறையென்று நீ நினைத்தால்;

ஒத்துக்கொள்கிறேன்

ஒளிந்திருக்கிறேன்

உனக்காகத்தான்;

தப்பிப்பதற்கு!

Monday, September 27, 2010

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு - சட்டம் கண்களைத் திறக்குமா?

லக அரங்கில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றி, ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் குழிதோண்டிப் புதைத்த நாள் டிசம்பர் 6, 1992. அதாவது, 400 ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்று நினைவுச்சின்னம் பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலஹபாத் உயர் நீதிமன்றம் சாவகாசமாக வருகின்ற செப்டம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பு எழுத இருக்கிறது.

400 ஆண்டு காலமாக, உரிய ஆவணங்களுடன் நிலை பெற்றிருந்த ஒரு சொத்து யாருக்குச் சொந்தம்? என்ற கேள்வியே அபத்தமானது. இதனை உணர்ந்ததால் தானோ என்னமோ, சம்பந்தப்பட்ட நிலத்தில் இருந்த பாபரி மஸ்ஜிதைத் திட்டமிட்டு தகர்த்து விட்டு, பிரச்சினையை நீதிமன்றம் தீர்க்கும் என வழக்கு தொடுக்க வைத்து விட்டனர்.


இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க, சிவில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டு, ஆச்சரியமான முறையில் சம்பந்தப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலைகொண்டிருந்த நிலத்தின் கீழே கோயில் இருந்ததா என்பதை ஆராய்ந்து அறிக்கை தரக்கோரி தொல்பொருள் ஆய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

உலகில் எந்த ஒரு இடத்திலும் இன்று நிலைகொண்டிருக்கும் ஒரு கட்டடத்தின் கீழே வேறு ஏதாவது கட்டடமோ குடியிருப்போ இருந்ததா என்றொரு தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுமானால் எப்போதோ இருந்த ஏதோ ஒரு கட்டடமோ குடியிருப்போ நாகரீகச் சின்னங்களோ இருந்ததற்கான தடயங்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில், அதனை அடிப்படையாகக் கொண்டு, இன்று சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களாக இருப்பவர்களுக்கு அந்த நிலம் சொந்தமல்ல என்று தீர்ப்பு வழங்க முடியுமா? அப்படி வழங்கினால், வெள்ளை மாளிகையிலிருந்து நமது இந்திய நாடாளுமன்ற கட்டடம் வரை பெரும்பாலான இடங்கள் அரசுகளின் கைகளை விட்டுச் செல்ல வேண்டிய அபத்தமான சூழல் உருவாகும். தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில் அடிக்கடி நிலத்தடியில் கிடைக்கும் சோழர்காலச் சிலைகளையும் நாணயங்களையும் அதன் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் முடிவு செய்தால் எப்போதோ இறந்துபோன சோழர்குலக் குடிமக்களை தேடிப்பிடிக்க வேண்டிய கேலிக்கூத்து உத்தரவையும் நீதிமன்றம் வெளியிடவேண்டிவரும்.

பாபரி மஸ்ஜித் நிலத்தின் கீழே கோயில் இருந்ததா? என்ற தொல்பொருள் ஆராய்ச்சி குழுவின் ஆய்வு முடிவுகளில், 400 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு ஒரு ஆலயம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அந்நிலத்தில் மக்கள் வசித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் சில தடய விவரங்களுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் விஜயபாரதம்(10.09.2010) இதழ் மட்டும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.


இக்கட்டுரையை வாசிக்கும் எவருக்கும் கோயிலின் மீது பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது. கார்பன் 12, 14 ஆகிய விஞ்ஞான முறைகளில் ஒரு இடத்தை ஆய்வு செய்து, அதில் முன்னர் வாழ்ந்தவர்களின் தடயத்தைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் அந்நிலத்தின் உடமையாளரைத் தீர்மானிக்க ஆரம்பித்தால் என்ன நிலமை ஏற்படும் என்பதைத் தனியாக விளக்க வேண்டியத் தேவையேதும் இல்லை. அத்துடன், 400 ஆண்டுகளுக்கும் 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய நிலை என்ன என்பதை வெறும் தொல்லியல் ஆய்வு கொண்டு 100 சதம் சரியான முடிவுக்கு வருவதும் சாத்தியமற்ற ஒன்று என்பதை அறிவுடையோர் அனைவரும் புரிந்து கொள்வர்.


தொல்பொருள் ஆய்வின் அடிப்படையில் நில உரிமைக்கான தீர்ப்பு வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளதா? இதுவும் விவாதத்துக்குரிய ஒரு விஷயமே.

20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிலத்தை உரிய ஆவணங்களுடன் ஒருவர் சொந்தமாகக் கொண்டு அனுபவித்திருந்தால், அது தற்போதைய உரிமையாளருக்கே சொந்தம் என்பதை நீதிபதி சச்சார் அவர்கள் உரியத் தீர்ப்பு ஆதாரத்துடன் விளக்குவதோடு, பாபரி நிலத்தின் உரிமை எவ்வகையில் பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் பாபரி நில வழக்கில் எதிர்தரப்பான வி.ஹெச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் உட்பட உள்ள சங்கபரிவாரத்தினருக்கு அதனைச் சொந்தம் கொண்டாட எவ்வித உரிமையும் இல்லை என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைப்பதைப் பெட்டிச் செய்தியில் காண்க.

வருகின்ற 24 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்ற பாபரி நிலத் தீர்ப்பு விஷயத்தில், என்ன தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் வழக்கின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் மேல்முறையீடு செய்ய இன்னும் வாய்ப்பு உள்ளது என்றும் அரசுகள் மக்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. பாபரி மஸ்ஜித் இடிப்பில் முக்கியக் குற்றவாளியான பாஜக தலைவர் அத்வானியும், "தீர்ப்பு எப்படி அமைந்தாலும் மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் செல்வது உறுதி" என திருவாய் மலர்ந்துள்ளார். இதைவிட ஒருபடி மேலே, ஆர்.எஸ்.எஸ் தலைவர், "தீர்ப்பு எப்படியானாலும் முஸ்லிம்கள் மனமுவந்து நிலத்தை இந்துக்களுக்கு விட்டுக்கொடுத்து விட வேண்டும். இல்லையேல் அவர்கள் தேசதுரோகிகள் என்றே எண்ணப்படுவர்" என்று பாபரி நில விஷயத்தைத் தேசதுரோகத்துடன் விஷமத்துடன் தொடர்புபடுத்தி விஷயத்தைக் கக்கியுள்ளார்.


அநியாயமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டட விஷயத்தில் தங்கள் தவறை ஒத்துக்கொண்டு, தவறைத் திருத்த முன்வராததோடு அந்த நிலத்தையே தங்களுக்கு விட்டுக்கொடுத்து விட வேண்டும்; இல்லையேல் முஸ்லிம்கள் தேசத்துரோகிகளாவர் என்று கூறுவது, இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்ந்தால் எங்களின் தயையில் நாங்கள் கூறுவதையும் செய்வதையும் விருப்பமில்லையேனும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராக இருந்தாலும் முழு மனதுடன் ஏற்று, அங்கீகரித்தே வாழ வேண்டும், இல்லையேல் தேசத்துரோகிகள் என்ற முத்திரையுடன் முழுமையாக அழித்தொழிக்கத் தயங்கமாட்டோம் என்றே ஆர்.எஸ்.எஸ் தலைவர் அகங்காரத்துடன் இந்திய முஸ்லிம்களை மிரட்டுவதாகத்தான் கருதவேண்டியுள்ளது.


இந்நிலையில், இதுநாள் வரை இந்திய ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்கும் என்றும் நம்பிக்கையுடன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு, வர இருக்கின்ற தீர்ப்பு மட்டுமே உரிய நியாயத்தை வழங்கும். இந்தியாவின் அனைத்து மட்டங்களிலும் ஃபாஸிஸம் தன் வேரைப் பாய்ச்சி வளர்ந்து விட்டச் சூழலில், நீதித்துறையும் தன்னுடைய கண்களைக் கட்டிக்கொண்டால், அது உலக அரங்கில் இந்தியாவை ஒருபோதும் தலைநிமிர வைக்காமல் செய்து விடும்.

Ayodhya verdict - All parties must act to face the situation - by Rajindar Sachar

The government, the Opposition and the public in general are rightly in panic awaiting the verdict on Babri Masjid by the Allahabad High Court – a situation brought about by the faltering non-secular stand by the governments concerned. The High Court is to give its verdict on the following points: (1) Was the place under Babri Majid the birthplace of Lord Ram? (2) Was there a temple on the land on which Babri Masjid was built?

Now it is obvious to the meanest intelligence that it is impossible to prove that the birthplace of Lord Ram was under the masjid — it may be a matter of faith, genuine or contrived or otherwise, but that is no proof, nor can it ever be put forward as a legal ground to take away the land from the mosque.

If the finding is that the masjid was not built on a temple, then the Muslims get the land back and will be free to use it in any way, including the building of the mosque.

In the alternative it may be held that there was a temple on the land of Babri Masjid. But even with this finding the suit by the VHP/RSS has to be dismissed. Admittedly, Babri Masjid has been in existence for over 400 years till it was demolished by goons of the VHP/RSS in 1992. Legally speaking, the Sangh Parivar would have no right even if a temple had been demolished to build Babri Masjid.

I say this in view of the precedent of the case of Masjid Shahid Ganj in Lahore decided by the Privy Council in 1940. In that case there was admittedly a mosque existing since 1722 AD. But by 1762, the building came under Sikh rule and was used as a gurdwara. It was only in 1935 that a suit was filed claiming the building was a mosque and should be returned to the Muslims.

The Privy Council, while observing that “their Lordship have every sympathy with a religious sentiment which would ascribe sanctity and inviolability to a place of worship, they cannot under the Limitation Act accept the contentions that such a building cannot be possessed adversely”, went on to hold “The property now in question having been possessed by Sikhs adversely to the waqf and to all interests there under for more than 12 years, the right of the mutawali(caretaker) to possession for the purposes of the waqf came to an end under the Limitation Act”. On the same parity of reasoning even if a temple existed prior to the building of the masjid 400 years ago, the suit by the VHP etc has to fail.

There is another reason why in such a situation, the suit will fail because in common law, even a rightful heir, if he kills his ancestor, forfeits his right of inheritance. In the masjid case too there was a “murder most foul” and hence the murderer cannot be allowed to take the benefit of his own dastardly deeds, whatever the legal position maybe.

It is true that sometimes some Muslim groups in a spirit of large-heartedness and as a measure of mutual accommodation, suggest that if it was found that the masjid was built on the site of a temple, they would not like to now build a mosque on the said site because the Koran forbids the Muslims to build a mosque by demolishing any other religious place. But even then if the Muslims choose not to build a masjid on this site, the ownership and use of the land remains with them. The Hindus cannot under any circumstances lay a claim to this site which was under Babri Masjid.

Some well-intentioned persons come out with an apparently neutral suggestion of building a multi-religious complex on the site. To me this would be a surrender to the rabid Hindu communal sentiment. Whatever explanation you may give, a Muslim then would feel a less equal citizen if even after he has won, he is asked to share this site with the goons who destroyed the holy mosque. This would be a defeat of secularism and against our Constitution, which mandates that all citizens — Hindus, Muslims and others — have equal rights and are equal before law.

A multi-religious complex or a multi-culture centre or a hospital can obviously be built by the joint free will efforts of both Hindus and Muslims. But such a complex, if it is to be built necessarily, must be on the land away and outside the masjid complex, and that too only if the Muslims give their consent — obviously as the vacant land belongs to the Muslims. But under all circumstances, the site under Babri Masjid must remain in the exclusive possession of the Muslims, who should be free to use it in any way the community decides.

I feel that the government should start doing an exercise of consultation and preparation on these lines – to await helplessly trying to anticipate what the verdict would be is like a pigeon who on seeing a cat closes its eyes with the delusion that the cat would go away — the result is obvious.

Equally, I feel that leaders of all communities, political parties and social groups should start planning to meet the situation because the matter requires the involvement of people at the grassroots level and the matter does not brook any delay.

The legal position is clear. It is only the weakness of political will that is responsible for the Ayodhya imbroglio to continue as one of the bitterest disputes within the country. By keeping the Ayodhya issue alive, the country has been kept away from addressing its most urgent task — how to meet the challenge of the growing pauperisation of the masses. And that includes both Hindus and Muslims.

The writer is a former Chief Justice of the High Court of Delhi

தூரத்தேசத்து நண்பன்

kasmiiri.jpg


அஸ்ஸலாமு அலைக்கும்,

வாக்குரிமைச் சொல்லும்

இந்தியன் என்று

வாழும் இடம் சொல்லும்

காஷ்மீர் என்று;

பத்திரிக்கைச் சொல்லும்

பயங்கரவாதி என்று;

காவல் துறைச் சொல்லும்

தீவிரவாதி என்று;

அரசியல் சொல்லும்

கலகக்காரன் என்று!

உலகெங்கும் ஆதரவுண்டு

தனி நாடு இஸ்ரேலுக்குண்டு;

தனி ஈழம் முழக்கமுண்டு

கைகொடுக்க கழகமுண்டு!

அறுத்துவிட்ட அனாதைகளாக;

வேலியே பயிரை மேயும்;

எங்கள் உயிரை வாங்கும்!

இங்கு மட்டும்தான்

பிறந்த பாலகனும் பயங்கரவாதியாக;

கம்பூன்றும் கிழவனும்

தீவிரவாதியாக!

நிம்மதியாய் சுவாசம்விட

நிம்மதி தொலைத்து நிற்கும்

தூரத்தேசத்து நண்பன்!

பரிந்துப்பேச உனையன்றி ..

eye-crying.jpg


அஸ்ஸலாமு அலைக்கும்,

வழிமேல் விழிவைத்துக்

காத்திருந்தாலும்

வலி மட்டுமே மிஞ்சும்;

உன் நினைவுகள் எப்போதும் கெஞ்சும்!

ஒருமாத விடுப்பில்

ஒய்யாரமாய் வந்தாய்;

மணம் முடித்தாய்

கனம் கொடுத்தாய்;

கடல் தாண்டினாய்!

புதுமுகமாய் எல்லோரும்

உன் வீட்டில் -என்

புத்தம் புது ஆடைகளெல்லாம்

எனைப் பார்க்க வந்த

உன் உறவினருக்காக!

முதல் மாதத்தில் கேட்டேன்

எப்போது திரும்புவாய் என்று;

சிரித்தாய்;

மறு மாதத்தில் கேட்டேன்

புன்னகைத்தாய்;

மற்றொரு முறைக் கேட்டேன்

கடுகடுத்தாய்!

புரியாத எனக்கு

புதிராகவே இருந்தது;

மனம் கனமாக இருந்தது!

பரிந்துப்பேச உனையன்றி

யாருமில்லை எனக்கு;

புரிந்துக் கொண்டு

புறப்பட்டுவா அன்புக்

கட்டளையிடுகிறேன் உனக்கு!

இப்படி

மணம் முடித்து

மனம் கொடுத்து

தனம் எடுக்க

வனம் இருந்து

வாழ்வதற்கு

வந்துவிடு இங்கே!

தலை முடி மூலம் மாரடைப்பை கண்டறியலாம்!


நமது தலை முடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு வருமா என்பதை கண்டறிய முடியும் என கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தலைமுடியில் ஹார்மோன் கார்டிசால் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளதாக ஸ்டிரஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. வேலை, குடும்பம் மற்றும் பணப் பிரச்சனைகளால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்த்தியை வைத்து இதை கணிக்க முடியும் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

வழக்கமாக ரத்த நிணநீர், சிறுநீர் மற்றும் உமிழ்நீரில் தான் கார்டிசாலின் அளவு கண்டறியப்பட்டது. இவற்றில் சில மணி நேரத்தில் இருந்து சில நாட்கள் வரை உள்ள கார்டிசாலைத் தான் அளக்க முடியும். இதனால் நீண்ட காலமாக உள்ள அழுத்தத்தைக் கண்டறிய முடியாது. ஆனால் தலைமுடியில் உள்ள கார்டிசாலை வைத்து பல மாதங்களுக்கு முன்பே மாரடைப்பை கணிக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சாதாரணமாக நமது தலை முடி ஒவ்வொரு மாதமும் 1 செமீ வளர்கிறது. 6 செமீ நீளம் உள்ள முடியை பரிசோதனை செய்வதன் மூலம் நெடுங்காலமாக இருந்து வரும் அழுத்த அளவை அறியலாம்.

இதுதொடர்பாக இஸ்ரேலில் உள்ள மெய்ர் மெடிகல் சென்டரில் அனுமதிக்கப்பட்ட, மாரடைப்பு ஏற்பட்ட 56 ஆண்களின் முடி மாதிரியையும், இதய நோயாளிகள் அல்லாத 56 ஆண்களின் முடி மாதிரியையும் பரிசோதித்தனர். இதில் மாரடைப்பு நோயாளிகளின் முடியில் கார்டிசால் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம்.

அபூபக்கர்(ரலி)யின் அறிவு கூர்மை!..வரலாறு இன்றும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

"அல்லாஹ்வின் திருப்பெயரால்."

அபூபக்கர்(ரலி)யின் அறிவு கூர்மை!
M.S. கமாலுத்தீன்

நபி(ஸல்) அவர்களால் சொர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து நபர்களில் முதல் நபர் அபூபக்கர் (ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து சொல்லிக்கொண்டிருந்த ஆரம்ப கால கட்டத்தில் பலரும் தயங்கும்போது தைரியமாக இஸ்லாத்தை ஏற்று தன்னுடைய செல்வங்களையெல்லாம் அதை செலவழித்தவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். இதை இந்த ஹதீஸின் மூலம் நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களை அல்லாஹ்வின் நேசராக்கி வைக்கிறார்கள். நம்மிடம் எவருடைய எந்த உதவியும் அதற்குரிய பிரதி அளிக்கப் பெறாமலில்லை. அபூபக்கர் (ரலி) அவர்களின் உதவியைத் தவிர. ஏனெனில் நிச்சயமாக அவர்களின் ஓர் உதவி நம்மீது இருக்கிறது. அதற்குரிய பிரதியை மறுமை நாளின்போது அல்லாஹ் அவர்களுக்கு நல்குவான். அன்றி எவருடைய பொருளும் எனக்கு அவ்வளவு பலன் தரவில்லை. அபூபக்கர்(ரலி) அவர்களுடைய பொருள் பலன் அளித்ததைப்போல, மேலும் நான் இஸ்லாத்தை தழுவுமாறு எடுத்துரைத்த பொழுது எல்லோரும் தயங்கவே செய்தனர். அபூபக்கர்(ரலி) அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்ததைத் தவிர நிச்சயமாக அவர் தயங்கவில்லை. ஒருவேளை நான் எனக்கு ஓர் ஆருயிர்த் தோழரைத் தேர்ந்தெடுப்பதானால் அபூபக்கர்(ரலி) அவர்களையே தேர்ந்தெடுப்பேன்.

அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களின் தோழர் அல்லாஹ்வின் நேசராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதீ

ஒருவேளை நான் என் இறைவனைத்தவிர வேரொருவரைத் தோழராகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் அபூபக்கர்(ரலி) அவர்களை தேர்ந்தெடுத்திருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதாவூத்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நபி(ஸல்) அவர்களுக்கு உடல் நலக்குறை அதிகப்பட்ட பொழுது மக்களுக்கு இமாமாக நின்று தொழவைத்த அல்லாஹ்வின் நேசரான அபூபக்கர்(ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குபின் ஏற்பட்ட கடுமையான சோதனையின்போது……

நபி(ஸல்) அவர்கள் இறந்த நேரத்தில் அபூபக்கர்(ரலி) அவர்கள் ஸூன்ஹில் (மதினாவை அடுத்துள்ள சிற்றூர்) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சிலரும், இறக்கவில்லை என்று மீதப் பேர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இறக்கவில்லை என்று சொன்ன கூட்டத்திற்கு உமர்(ரலி) அவர்கள் தலைமை தாங்கினார்கள். அல்லாஹ்வின் மீது ஆனையாக நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை, அன்றி அல்லாஹ் அவர்களை (மயக்கம் தெளிந்தபின்) நிச்சயமாக எழச்செய்வான். நபி(ஸல்) அவர்களை இறந்து போனார்கள் என்று சொன்னவர்களை கை, கால்களை வெட்டுவேன் என்று கூறினார்கள். உமர் ரலியல்லாஹ் அவர்களின் கோபம் தான் நபித் தோழார்களுக்கு நன்கு தெரியுமே. நபி(ஸல்) அவர்களும் மனிதரே; அவர்களுக்கும் மரணம் உண்டு என்பதை அறிந்த சில நபித் தோழர்களும் உமர்(ரலி)க்கு பயந்து கொண்டு பேசாமல் இருந்து விட்டார்கள். அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டு உடன் வந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிய பின் அவர்களை முத்தமிட்டு, என் தாய், தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தாங்கள் உயிரோடிருந்த போதிலும் மணமுள்ளவர்களாகவே இருந்தீர்கள். இறந்த பின்னரும் மணமுள்ளவர்களாகவே இருக்கிறீர்கள். எவன் கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக அல்லாஹ் உங்களை இரு முறை இறப்பை நுகருமாறு ஒரு போதும் செய்யமாட்டான் என்று கூறிவிட்டு வெளியே வந்து கூடி இருந்த மக்கள் மத்தியில்:

ஆணையிட்டு கூறுவோரை! அமரும்’ என்று கூறினார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் பேசத்துவங்கியதும் உமர்(ரலி) அவர்கள் அமர்ந்துவிட்டனர். பின்னர் அபூபக்கர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்த பின் அறிந்து கொள்ளுங்கள்! எவர் முஹம்மது (ஸல்) அவர்களை வணங்கி வந்தார்களோ (அவர்கள் அறிந்து கொள்ளட்டும்) நிச்சயமக முஹம்மது(ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். அன்றி எவர் அல்லாஹ்வை வணங்கி வந்தார்களோ (அவர்கள் அறிந்து கொள்ளட்டும்) அல்லாஹ் உயிருடன் இருக்கிறான். அவன் இறக்கவே மாட்டான். என்று கூறி:

நிச்சயமாக நீரும் இறந்துவிடக் கூடியவரே! நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தாம் (39:30) என்ற அல்குர்ஆனின் வசனததையும்

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி (வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால், நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (3:144)

பின்னர் மக்கள் வாயடைத்தவர்களாக தேம்பித் தேம்பி அழுதனர். நபி(ஸல்) அவர்கள் மனிதர்தான் – அவர்களும் மரணிப்பவர்களே என்பதை விளக்கும் பல குர்ஆன் வசனங்கள் (பார்க்க 40:77, 43:41) இருந்தாலும் 39:30 வசனத்தை குறிப்பிட்டு விட்டு 3:144 வசனத்தையும் குறிப்பிடுகிறார்கள். காரணம் அன்று சிலர் தங்களின் பழைய மார்க்கத்திற்கு போய்விடலாம் என்று இருந்தார்கள். அந்த எண்ணத்திற்கு 3: 144 வசனத்தின் மூலம் சாவு மணி அடித்தார்கள். நபி(ஸல்) அவர்களை எங்கே அடக்கம் செய்வது என்ற சர்ச்சை எழுந்த போதும் தலமைத் தனத்தை ஏற்றுக் கொள்வதிலும் ஏற்பட்ட பிரச்னையில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் முடிவெடுத்து குழப்பங்களைத் தவிர்த்தவர்கள். அவர்கள் ஆட்சி காலமும் மிக சிறப்பாக இருந்ததை வரலாறு இன்றும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறது.

முட்ட விட்டு வேடிக்கை பார்கிறார்கள் ....

smalarnews_18618410826.jpg



அஸ்ஸலாமு அலைக்கும்,


இருதரப்பிற்கும் உள்ளது
இணையத்தளம் கொண்டது;
மாறி மாறி பூசிக்கொள்வோம்
மாற்றி மாற்றி அடித்துக் கொள்வோம்!

கொட்டித் தீர்ப்போம்
முட்டி மோதியக் கதையை;
கட்டுக் கதை ஏதும் இல்லையென
கடிவாளமும் போடுவோம்!

தட்டச்சி தெறிக்கும்
கண்கள் கோபத்தில் சிவக்கும்;
பதில் தரச்சொல்லி தலையே வெடிக்கும்!

எதற்கெடுத்தாலும் குறை சொல்ல
ஒரு கூட்டம் உண்டு;
மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும்
உளவுத்துறை இதைக் கண்டு!

முட்ட விட்டு வேடிக்கைப்
பார்ப்பது யாரென்று தெரியாது;
முத்தமிட்டு அனைத்துக்கொள்ளும்
நாளொன்றும் கிடையாதா!

மனம் மகிழும்
காவிகளுக்கு கைக்காரியம் குறைவு;
எப்போது எட்டுமோ
என் சமுதாயம் தெளிவு!

ஒன்றாக வேண்டுமென
ஒருக் கூட்டம் நினைக்கும்;
முடியாதோ இவ்வேதனை
மனம் பதைப் பதைக்கும்!

இன்னொரு அன்னை..

50-50-page-header.jpg

அஸ்ஸலாமு அலைக்கும்,

எதைக் கேட்டாலும்
எனை எதிர்க்காத உன்
பொறுமை அழகு;
உன்னோடு எனைச்
சேர்த்துப் பார்க்கும் போது
என் பொறுமை கடுகு!

என்னோடு நீ பாதி
என்றென்னும் தத்துவத்தை
மறந்தேன்;
பனிக் கொண்ட உன் கண்ணீரைக்
என் கரம் கொண்டு துடைப்பேன்!

விலைமதிப்பில்லா உன் தியாகம்
எதைக் கொண்டு உரைப்பேன்;
ஒரு நாள் கதைக்காவிட்டாலும்
உன் பாசம் கண்டுத் திகைப்பேன்!

ஒருப் போதும் கொய்ய மாட்டேன்
வார்த்தையால் உன்னை;
அன்புக்கு எனக்கிடைத்த
இன்னொரு அன்னை!

ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும் : ஜெர்மனி அதிபர் மெர்கல்

பெர்லின் : ஜெர்மனியில் முஸ்லீம்கள் அதிகரித்து வருதல் மற்றும் ஜெர்மனியின் சமூக தளத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து ஜெர்மானியர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றும் வருங்காலத்தில் சர்ச்சுகளை விட மசூதிகள் அதிகம் இருக்க போகும் யதார்த்தத்தை ஜெர்மானியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் மெர்கல் கூறியதாக ப்ராங்க்பர்டர் அல்லெஜெமின் ஜெய்துங் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் மெர்கல் " நிச்சயமாக ஜெர்மனியின் சமூக தளம் மிகப் பெரும் மாறுதலை சந்தித்து வருவதாகவும் இனி வரும் காலங்களில் மசூதிகள் நம் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 45 இலட்சம் முஸ்லீம்கள் வாழும் ஜெர்மனியில் சமீபத்தில் திலோ சராஜின் எனும் அரசியல்வாதி முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுப்பதாகவும் குழந்தை பிறப்பின் மூலம் தங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஜெர்மனி அதிபரின் அறிக்கை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டி காட்டுகின்றனர். பிற ஐரோப்பிய தேசங்களை போல் விரைவில் ஜெர்மனியும் இஸ்லாத்தின் இரும்பு கோட்டையாகும் என்றும் மெர்கல் குறிப்பிட்டார். மெர்கல் சொல்வதை போல் பிரான்ஸில் 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30 % முஸ்லீம்களாகவும் பாரீஸ்போன்ற நகரங்களில் 45% மேலும் உள்ளது. இங்கிலாந்திலும் சுமார் 1000 மசூதிகள் உள்ளதாகவும் அதில் சில சர்ச்சுகளாக முன்னர் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியத்தில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 50 % முஸ்லீம்களாக உள்ளனர். சமீபத்தில் லிபிய அதிபர் கடாபி ஐரோப்பா கத்தியின்றி, தோட்டாவின்றி, தீவிரவாதிகளின்றி விரைவில் இஸ்லாத்தை தழுவும் என்று குறிப்பிட்டதை மேற்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாக சமூகவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வி.ஏ.ஓ. தேர்வு ரகசியம்!



மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளதை அறிவீர்கள். இவ்வறிவிப்பின் மூலம் வி.ஏ.ஓ. பதவிக்கு தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்க எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும். இவற்றை பொது அறிவு பாடத்திலிருந்து 100 கேள்விகளும், பொதுத்தமிழ் பாடத்திலிருந்து 100 கேள்விகளும் கேட்கப்படும். அதன்படி ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். இவற்றுள் அதிகமான சரியான விடைகளை யார் அளிக் கிறார்களோ அவர்களே வெற்றி பெற முடியும். இதில் ஐ.ஏ.எஸ்., வங்கி, இரயில்வே தேர்வுகள் போன்று நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது. இத்தேர்வில் ஒருவர் வெற்றிப் பெற்று வி.ஏ.ஓ. ஆக வேண்டுமெனில் தமிழ் பாடத்தில் 100 வினாக்களுக்கு சரியான விடைகளையும், பொது அறிவு பாடத்தில் 85 வினாக்களுக்கு சரியாகவும், ஆக மொத்தம் 200 வினாக்களில் 185 கேள்விகளுக்கு சரியான பதில் தருபவர்கள் உறுதியாக வெற்ற பெற முடியும்.

அது சரி, பயிற்சி மையங்களுக்கு செல்லாமல், தனியாக தயார் செய்பவர்களால் இந்த அளவுக்கு மதிப்பெண்களை பெற முடியுமா? என்றால் முடியும். நிச்சயம் உங்களால் வெற்றி பெற முடியும். எந்த பயிற்சி மையங் களிலும் சென்று படிக்காமல் 190 கேள்விகளுக்கு மேல் சரியாக பதில் தர உங்களால் முடியும். அதற்கு வழிகாட்டவும், உதவி செய்யவும் "பொது அறிவு உலகம்' தயாராக உள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, இத்தேர்வின் போக்கினை நன்கு புரிந்துக் கொண்டு அதற்கேற்ற முறையில் படிக்க வேண்டும். பயிற்சி செய்ய வேண்டும். இத்தேர்வில் 200 கேள்விகள் எப்படி கேட்கப் படுகின்றன, அதற்கு எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போம்.

பொது அறிவும், பொதுத்தமிழும்

பொது அறிவுக்கான 100 வினாக்களும் டி.என்.பி.எஸ்.சி.-யின் சிலபஸின்படி கேட்கப்பட்டாலும், அவை மிக நுட்பமாக ஆராய்ந்தோமெனில் பின்வருமாறுதான் கேட்கப்படுகின்றன. இந்திய வரலாறு மற்றும் இந்திய விடுதலைப் போராட்டம் பாடத்திலிருந்து 6 அல்லது 7 கேள்விகள், புவியியல் பாடத்தில் பொதுப் புவியியல், தமிழக புவியியல், இந்திய புவியியல் உட்பட 7 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்திய அரசிய லமைப்பு-8, இந்திய பொருளாதாரம்-8, இயற்பியல்-4, வேதியியல்-4, உயிரியல்-12, புள்ளியியல்-4 அல்லது 3, அறிவுக்கூர்மை (கணிதம்)-8, இந்தியப் பொது அறிவு-5, நடப்பு நிகழ்வுகள்-8, அறிவியல்-2, கம்ப்யூட்டர்-2, இந்தியப் பண்பாடு-3, தமிழக பொது அறிவு-7, தமிழக வரலாறு-6, தமிழ் இலக்கிய வரலாறு-3 என்றவாறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதை பார்த்ததும் ஒவ்வொரு பாடத்திலிருந்து இவ்வளவு கேள்விகள் தானா என நீங்கள் எண்ணக்கூடும். ஆனால் 1 கேள்விக்கூட உங்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியுடையது, நீங்கள் இத்தேர்வில் வெற்றிப் பெற வேண்டுமானால் அனைத்து கேள்விக்கும் பதில் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில்தான் படிக்க வேண்டும்.

அடுத்து பொதுத்தமிழ் பார்ப்போம். டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள பொதுத்தமிழ் சிலபஸானது, 20 பாடக்குறிப்புகள் உள்ள டக்கியது. அதில் ஒவ்வொன்றுக்கும் 5 கேள்விகள் வீதம் மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன.

படிக்கும் முறை

வெற்றியாளர்கள் புதிதாக எதையும் செய்வதில்லை. மற்றவர்கள் செய்வதையே புதுமையாக செய்கிறார்கள். அதுபோல நீங்கள் வெற்றிபெற்றே தீர வேண்டுமானால் புதிய முறையில் தேர்வை அணுக வேண்டியது அவசியம். முதலில் இத்தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள தமிழ்நாட்டு அரசு பாடநூல் நிறுவனத்தின் பாட நூல்களிலிருந்தே கேட்கப்படுகின்றது என்பது உண்மை. ஆனாலும் கம்ப்யூட்டர், புள்ளியியல், அறவியல், இந்தியப் பண்பாடு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவை 11, 12-ம் வகுப்பு பாடநூல்கள். இந்திய பொது அறிவு, தமிழ்நாடு பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் போன்றவை வெளியிலிருந்து கேட்கப்படும் வினாக்கள். அதனால் பாடநூல்களை முழுவது மாக படித்து கொள்ளுங்கள். சிலபஸ் உள்ளடக்கிய (பாடநூல்கள் மற்ற முக்கிய நூல்கள்) அனைத்து பாடக்குறிப்புகளையும் "பொது அறிவு உலகம்' இதழில் விரிவாக தந்து வரு கிறோம். அதனையும் சேர்த்து படித்து கொள்ளுங்கள். அதன் பின்னர், பொது அறிவு உலகம் வெளியிடும் 5 யஆஞ தேர்வு சிறப் பிதழ்களில், தேர்வுக்கு கேட்கப்படவுள்ள மிக மிக முக்கிய வினா-விடைகள், அடிக்கடி கேட்கப்படும் முந்தைய தேர்வு வினா-விடைகள், மிக முக்கியமான டி.என்.பி.எஸ்.சி கேள்விகளை தயாரிக்கும் அதே முறையில் அதே நூல் களிலிருந்து 15,000-த்திற்கும் மேற்பட்ட வினா-விடைகளை 5 சிறப்பிதழ்களாக வெளியிட்டு வருகிறோம். இவற்றை அனைத் தையும் வாங்கி பயிற்சி செய்யுங்கள்.

மாதிரி தேர்வுகள்

படித்துக்கொண்டே இருந்தால் சோர்வுதான் வரும். ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடித்தவுடன்யஆஞ சிறப்பிதழை கொண்டு மாதிரி தேர்வு எழுதி பாருங்கள். உங்களை நீங்களே சோதித்துக் கொண்டால், எப்படி படித்துள்ளீர்கள், இன்னும் எப்படி படிக்க வேண்டும் என்பதை சுய மதிப்பிடலாம். இதன் மூலம் தேர்வை வென்று விடுவோம் என்ற தைரியமும் கிடைக்கும். அதேபோல் பொதுத்தமிழில் நூறு வினாக்களுக்கும் சரியான மதிப்பெண்களை பெற்றுத்தரும் நோக்கில் "பொதுத்தமிழுக்கான சிறப்பிதழ்' கல்லூரி பேராசிரியர்களின் துணையுடன் தயாரித்துள்ளோம். இப்போது அச்சில் உள்ளது. விரைவில் வெளிவரும். எமது அனைத்து வெளியீடுகளும் யஆஞ தேர்வுக்கு 100 சதவீதம் பொருந்தும் முறையில் தயாரிக்கப்படுதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முந்தைய குரூப்-2, ஊ.ஞ., காவலர், ந.ஒ. தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பாடத்தொகுப்புகள் மற்றும் மாதிரி வினா-விடைகள் தொகுப்புகள் வெளி யிட்டுள்ளோம். அவற்றில் அதிக அளவிலான வினாக்கள் தேர்வுகளில் கேட்கப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றோம். சமீபத்தில் பிரபலமான நாளிதழ் ஒன்று மார்க்கெட் கைடை படிக்க வேண்டாம் என்று செய்தி வெளியிட்டனர். அதன்பின் அந்த நாளிதழ் வெளியிடும் வி.ஏ.ஓ. தேர்வு மாதிரி வினா-விடை (இணைப்பு) குறிப்பிட்ட சில மார்க்கெட் கைடி லிருந்தே எடுக்கப்பட்டு, வெளியிடப்படுகிறது. அதுபோல இல்லாமல் பொது அறிவு உலகம் மாணவர்கள் நலன் சார்ந்தே வெளிவருகிறது என்பதை அறிவீர்கள்.

வாசகர்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

எண்ணற்ற பொது அறிவு உலகம் வாசக கள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு வரு கின்றனர். அவர்களின் சந்தேகங்களை களைவது "பொது அறிவு உலக'த்தின் கடமை. அந்த அடிப்படையில் சமீபத்தில் கேட்கப்பட்ட சந்தேகங்களை தொகுத்து இங்கு விளக்கம் அளிக்க முற்பட்டுள்ளோம்.

சரியாக எவ்வளவு பேர் வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்?

13 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன. அதில் 12 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகின. தொடர்ந்து அனைத்து விண்ணப்பங்களும் பிரிக்கப்பட்டு அடுக்கிவைத்து எண்ணும் பணி முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த கட்டுரை எழுதும் வரை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கட்டி வைத்துவிட்டனர். மீதியுள்ளவற்றை தொடர்ந்து கட்டுமானப்பணி நடந்துவருகிறது. விற்பனையாகிய அளவிலான விண்ணப்பங்கள் டி.என்.பி.எஸ்.சி அலுவல கத்திற்கு வரவில்லை. ஏனெனில் பல ஆயிரக் கணக்கான பேர் விண்ணப்பத்தை அனுப்பாமல் இருந்துவிட்டனர்.

எந்தெந்த காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்?

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான மிக முக்கிய மூன்று காரணங்கள் ஒன்று, கையெழுத்திடாமல் விண்ணப்பத்தை அனுப்பி யிருத்தல். இரண்டு, தேர்வுக் கட்டணத்தை செலுத்தாமல் விட்டிருத்தல், குறிப்பாக ஆதிதிராவிடர்/அருந்ததியர், பழங்குடியினர் உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை இவர்களுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவ திலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பின், முதல் மூன்றுமுறை மட்டும் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவை யில்லை. பட்டப்படிப்பு இல்லாமல் +2, அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தால் கட்டாயம் தேர்வுக் கட்டணத்தை செலுத்தி யிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மூன்றாவ தாக சான்றிதழ்களில் முறைகேடு செய்தவர்கள். இவைகள் தவிர மற்ற எந்தவொரு காரணத்திற் காகவும் உங்களின் விண்ணப்பங்கள் உறுதியாக நிராகரிக்கப்படமாட்டாது. அட்டஸ்டேஷன் வாங்கவில்லை என்றாலோ, விண்ணப்பப் படிவத்தில் தெரியாமல் செய்த சிறியப் பிழை, ஒழுக்கம் மற்றும் நடத்தைச் சான்றிதழ் அனுப் பாமலிருந்தாலோ இன்னும் எந்த ஒரு காரணத்திற்காகவும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படமாட்டாது. டி.என்.பி.எஸ்.சி சேர்மன் அவர்களும் மற்ற அதிகாரிகளும் மனிதநேயம் கொண்டவர்கள். உங்களின் விண்ணப்பங்களை உங்களின் வாழ்க்கையாக கருதுகிறார்கள். அதனால் விண்ணப்பங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

வி.ஏ.ஓ. தேர்வு எப்போது?

2007-ம் ஆண்டு 2500 காலியிடங்களுக்கான வி.ஏ.ஓ. தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்தனர். பின்னர் எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டு, 2007 ஜூன் 10-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதுபோல வி.ஏ.ஓ. போன்ற பெரிய தேர்வுகளை நடத்தும்போது எவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்களோ அதற்கு தக்கவாறு வினாத்தாள்கள், தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

அதற்கு திட்டமிடவும் செயல்படுத்தவும் சிறிது காலம் தேவைப்படுவதால் தேதி பின்னர் அறிவிப்பது இயல்பான ஒன்றாகும். எமக்கு கிடைத்த தகவல்படி ஜனவரி இரண்டாம் வாரத்தில் வி.ஏ.ஓ. தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் மருத்துவ பணிகளுக்கான நேர்காணல். செப்டம்பர் மாதம் முழுவதும் வி.ஏ.ஓ. தேர்வு விண் ணப்பங்கள் பரிசீலனை மற்றும் சென்ற வருடம் நடைப்பெற்ற குரூப்- 2 தேர்வு முடிவுகள் தயாரித்தல். அக்டோபர் இரண்டாம் வாரத்தில் குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்பு மற்றும் குரூப்-1 தேர்வு முடிவுகளை தயாரித்தல். டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடுதல். இதன் பொருட்டு, டி.என்.பி.எஸ்.சி தலைவர் அரங்க. செல்லதுரை ஐ.ஏ.எ.ஸ் அவர்கள் ஓய்வின்றி உழைக்கின்றார். வயதாகிவிட்டாலும் அவரின் வேகமும், திட்டமிடலும் மிகவும் சிறப்பான முறையில் உள்ளது. தமிழக இளைஞர்கள் மேல் மிகுந்த நேசம் கொண்டதால், தனது காலத்திலேயே அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுதர வேண்டுமென நினைக்கிறார். அதையே கூறிவருகிறார்.

அடுத்த அறிவிப்பு ஏதேனும் உண்டா?

நிச்சயம் உண்டு. இப்போதுதான் வரு வாய்த்துறை, சமூக நலத்துறை, வணிக வரித்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் உள்ள காலியிடங்கள் கண்டறிந்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அதனால் நவம்பர் மாதம் அறிவிக்கப்படும் குரூப்-2 தேர்வுக்கான காலியிடங்கள் சென்ற ஆண்டைவிட கூடுதலாக இருக்கும்.