அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 28, 2011

நார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவல்கள்.

புது தில்லி : நார்வேயில் 92 நபர்களை படுகொலை செய்த தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக் இந்தியாவில் உள்ள இந்துத்துவ தலைவர்களை புகழ்ந்தும் அவர்களின் திட்டங்களை மேற்கோள் காட்டியும் எழுதியுள்ள ஆவணங்கள் பரபரப்பையும் இந்துத்துவ தலைவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 ”2083: ஐரோப்பாவின் சுதந்திர பிரகடனம்” எனும் தலைப்பில் ப்ரிவேக் எழுதியுள்ள 1500 பக்க திட்ட ஆவணத்தில் 100 பக்கங்களுக்கு மேல் இந்தியா மற்றும் இந்துத்துவ சக்திகளை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். மேலும் இஸ்லாம் ஐரோப்பாவில் பரவுவதை தடுக்க தன் சகாக்களோடு இந்துத்துவ சக்திகள் தோளாடு தோளாய் போராட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். இந்திய தேசியவாதிகளையும் சனாதன தர்மத்தை பாதுகாப்பவர்களையும் உண்மையான வீரர்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தன்னுடைய ஆவணத்தில் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏ.பி.வி.பி (BJP, RSS and ABVP) யை குறித்தும் அவர்களின் இணையதளங்களிலிருந்து சான்றுகளை எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலையின் பெயரை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் பெயராலேயே அம்மலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வலதுசாரி வரலாற்றாசிரியர் ராவை மேற்கோளிட்டு இந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் பிரேவிக் தான் இந்தியாவில் உள்ளவர்களோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளான். இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்ஸின் ராம் மாதவ் இது உள்நோக்கத்துடன் செய்யப்படும் பிராசரம் என்றும் வி.எச்.பியின் வினோத் பன்சால் பிரேவிக் இந்து தேசியவாதிகளை புகழ்ந்தது தேவையற்றது என்றும் கூறியுள்ளார். ஆனால் பி.ஜே.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிங்கால் அத்தீவிரவாதியின் வழிமுறைகள் தவறென்றாலும் அவரின் சித்தாந்தத்தை தான் ஆதரிப்பதாக கூறினார்.

சிதம்பரம்! பதவி நிரந்தரம்?

  p.sithambaram
கெட்டிக்காரன் தோற்றம்-இதுதான் ப.சிதம்பரத்தின் சிறப்பே! வாய் மொழியும், உடல் மொழியும் அவ்வாறே!’ செய்வன திருந்தச்செய்!’ இது சிதம்பரத்திற்கு முற்றிலும் பொருந்தும் பழமொழி. கொள்கை சரியில்லை என ஆதங்கபடுவோர் உண்டு. ஆனால், எனது கொள்கையே இது தான் என்பது ப.சிதம்பரத்தின் பார்வையாகும். இவை இரண்டிலும் எது சரி ஆனாலும் சிதம்பரம் கூறுவதில் தெளிவு உண்டு.
அமைச்சர்களின் வழக்கமான அறிவு சூன்யத்திலிருந்து மாறுபட்டு காரியங்களை படிப்பார். சில நேரங்களில் படித்ததை விட படித்தவர் போல் நடிக்கவும் செய்வார். இத்தகைய கர்வத்துடன் கூடிய அமைச்சரை அணுகும் உயர் அதிகாரிகளுக்கு கூட படபடப்பு தொற்றிக்கொள்ளும். தனக்கு புரியாத எதனையும் செய்யமாட்டார். தனக்கு புரிந்ததை தான் அதிகாரிகளும் செய்ய வேண்டும் என கருதுவார். கோப்புகளை பார்க்காமல், விஷயங்களை ஆராயாமல் சென்றால் வார்த்தைகளால் வெளுத்துவாங்கும் அமைச்சரை கண்டு அதிகாரிகள் பயபடுவர்.
ஆனால் சிதம்பரத்திற்கு காங்கிரஸில் ஹைக்கமாண்டை தவிர வேறு எவருக்கும் பயமில்லை. அமெரிக்காவையும் பொருட்படுத்தமாட்டார். சொந்த கட்சிக்காரர்களும் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. இதனால் கட்சியில் பலருக்கு இவர் மீது அலர்ஜி ஏற்படுவது சகஜமே! இளங்கோவன் போன்ற சிலர் ஜெ.வின் முகாமில் தஞ்சமடைய எதிர்பார்த்து துதிபாடும் வேளையில் அவரைக் குறித்து சற்றும் அலட்டிக்காதவர். இதன் விளைவு தான் அம்மாவின் சமீபத்திய டெல்லி பேட்டி.
முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலக்கட்டத்தில் நிகழ்ந்த மும்பை தாக்குதலின் போது  மத்திய உள்துறை அமைச்சகம் குப்புற கவிழ்ந்துவிட்டதா?என நாட்டில் பெரும்பாலோருக்கு சந்தேகம் ஏற்பட்ட வேளை. சிவராஜ் பாட்டீலின் கெட்டிக்காரத்தனம் ஆடை அணிவதில் மட்டும் தான் என்பதை காங்கிரஸாரும் புரிந்துக்கொண்டனர். அடுத்த உள்துறை அமைச்சர் யார்? என காங்கிரஸ் கட்சி நடத்திய குலுக்கலில் துண்டுச்சீட்டில் ப.சிதம்பரத்தின் பெயர் வந்தது. டெல்லி நார்த் ப்ளாக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை துப்புரவுச்செய்து அரசின் முகத்தை பாதுகாக்கும் நோக்கில் மேடம் சிதம்பரத்தை மத்திய உள்துறை அமைச்சராக நியமித்தார்!
மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா இந்த மும்மூர்த்திகள் தாம் இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையின் சிற்பிகள் என்றாலும் முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலக்கட்டத்தில் நிதியமைச்சராக பணியாற்றிய ப.சிதம்பரத்திற்கு அக்கொள்கைக்கு தன்னால் இயன்ற நன்கொடைகளை அளிக்க சூழ்நிலைகள் அனுமதியளிக்கவில்லை. ஆனால், உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு தமது தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான சுதந்திரத்தை பயன்படுத்தவும் சிதம்பரம் தவறவில்லை.
தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு முதல் எதிரி நக்ஸல்கள் என பிரகடனப்படுத்திய சிதம்பரம் அவர்களை ஒழித்துக்கட்ட பசுமை வேட்டைக்கு உத்தரவிட்டார். ஸல்வாஜுதூம் என்ற கொலைக்காரப்படையை உருவாக்கிய சட்டீஷ்கர் பா.ஜ.க அரசுக்கு சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகம் அனைத்து உதவிகளையும் அளித்தது. சொந்த குடிமக்களை நோக்கி துப்பாக்கியை தூக்கமாட்டோம் என்ற நல்லிணக்க வார்த்தை பின்னர் தாக்குதல் மொழியாக மாறிப்போனது.
முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரித்த இடதுசாரிகளுக்கு புரிந்த, இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரிக்கும் மமதாவுக்கு புரியாது போன பழங்குடியின மக்களை வேட்டையாடுவதில் இருந்த ஆவேசமும், வேகமும் தற்பொழுது இல்லை எனலாம். அதற்காக கொள்கையை மாற்றிவிட்டார்கள் என்பது அர்த்தமல்ல!
தலை குப்புற வீழ்ந்துகிடந்த மத்திய உள்துறை அமைச்சகத்தை தூக்கி நிறுத்தியவர் ப.சிதம்பரம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். அதனால் தான் 3 ஆண்டுகால அமைதிக்கு பிறகு மும்பையில் மீண்டும் குண்டுகள் வெடித்த பிறகு ப.சிதம்பரத்தை குறைகூற யாருக்கும் மனசு வரவில்லை. ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நுழைந்த பொழுது அலட்சியத்தால் முடங்கிக்கிடந்த மின் விசிறி மட்டுமல்ல, அலுவலகத்தில் வேலை நேரத்திற்கு முன்பே வருகைதரும் அமைச்சருடன் பணியாளர்களும் ஓடத்துவங்கினர்.
குவிந்து கிடந்த கோப்புகள் நகரத்துவங்கின. காலையில் ஒரு தகவலை கேட்டால் ஒரு மாதம் கழித்து அதனைக்குறித்து சிந்திக்கத்துவங்கும் முறை மாறியது. மதிய வேளையில் உண்ட மயக்கத்தில் தூங்கி வழிந்து கனவில் தென்படுவதையெல்லாம் உளவுத்துறை செய்திகளாக அளித்து அரசையும், நாட்டு மக்களையும் பீதிவயப்படச்செய்யும் வழக்கமும் மாறியது.த கவல்கள் மட்டுமல்ல, அதன் உறைவிடத்தையும் சிதம்பரம் கேட்பார் என்றவுடன் கனவில் தோன்றுவதல்ல ரகசிய உளவு விபரங்கள் என்பது புலனாய்வு ஏஜன்சிகளுக்கு புரிந்து போனது.
ஏதேனும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தால் இதனைக்குறித்து முன்பே எச்சரிக்கை விடுத்தோம் எனக்கூறும் புலனாய்வு ஏஜன்சிகளின் வீம்பான அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற பெயரில் இல்லாத அமைப்புகளின் பெயரால் பிரதமரையே பயமுறுத்தி உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு வந்த மலையாள மாஃபியா எம்.கே.நாராயணனை மேற்குவங்காள மாநிலத்தின் ஆளுநராக ஓய்வெடுக்க அனுப்பியதில் ப.சிதம்பரத்திற்கும் பங்குண்டு என பேச்சு எழுந்தது.
ஏதேனும் ஒரு தாக்குதல் நடந்தவுடன் அரைமணிநேரத்திற்குள் வெளிநாட்டு அமைப்பு ஒன்றின் பெயரை ஊடக உலகில் பிரவீன் சுவாமிகளுக்கு ரகசியமாக அளித்து உடல் அசையாமல் தலை தப்புவதற்கு புலனாய்வு துறைகள் நடத்தும் முயற்சிகளும் முடிவுக்கு வந்தது எனலாம். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான இண்டலிஜன்ஸ் ஒருங்கிணைப்பை சிதம்பரம் உருவாக்கினார். இவற்றின் காரணமாகவோ அல்லது தீவிரவாதிகள் தாக்குதல்களை வேண்டாம் நின்று நிறுத்திவிட்டதாலோ என்னவோ குண்டு வெடிப்புகள் குறைந்தன.
அண்மையில் நடந்த மும்பை குண்டு வெடிப்பிலும் புலனாய்வு ஏஜன்சிகள் மற்றும் அரசின் அறிக்கைகளில் மேம்பட்ட அணுகுமுறை ஏற்பட்டுள்ளதை காணலாம். குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஒரு மணிநேரத்திற்குள் குற்றவாளிகள் மற்றும் அமைப்புகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. யாரோ இந்தியன் முஜாஹிதீன் என்ற வழக்கமான பெயரை கசியவிட அதனை பிடித்துக்கொண்டு பரபரப்புக்கு வேறு செய்தி இல்லாததால் ஊடகங்கள் பரப்புரை செய்துவருகின்றன. ஆனால், புலனாய்வு ஏஜன்சிகள் இருட்டில் துளாவுகின்றன என்பது தான் உண்மை.
சிதம்பரமும், உயர் அதிகாரிகளும் இதனை ஒப்புக்கொள்ளவும் தயங்கவில்லை. குண்டு வெடிப்பின் ஆதாரங்கள் கனத்த மழையில் அடித்து செல்ல கிடைத்த அம்மோனியம் நைட்ரேட்டும் வெளிநாட்டினரை விட உள்நாட்டினர் கைவசம் தான் உள்ளன என்பதை புலனாய்வு ஏஜன்சிகள் நம்புகின்றன. ஆகவே விசாரணையின் வரம்பில் நிழலுக குழுக்கள் உள்பட அனைத்து வாய்ப்புகளையும் புலனாய்வு ஏஜன்சிகள் ஆராய்கின்றன. எல்லைக்கடந்த அந்நிய நாட்டு தீவிரவாத பின்னணி இல்லை என வெளிப்படையாக அவர்கள் கூறுகின்றனர்.
நாளை வேறுவிதமான தகவல்கள் வெளிவரலாம். ஆனால் துவக்கத்திலேயே தீர்ப்பை வழங்கும் முறை மாறிவிட்டது எனலாம். இந்நிலையில் ‘முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்லர்! ஆனால் தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள்!’ என்ற புலனாய்வு ஏஜன்சிகளின் மனோநிலையில் மாற்றத்தை மட்டும் சிதம்பரத்தால் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், அவர்களின் மனோவியாதிக்கு சிதம்பரமும் பலியாகமாட்டார் என நம்புவோம்.ஏனெனில் முன்பு ஜிஹாது குறித்தும், புனே ஜெர்மன் பேக்கறி குண்டு வெடிப்புக் குறித்தும் சிதம்பரம் அவசரப்பட்டு வெளியிட்ட அறிக்கையில் தவறு என்று தெரிந்தவுடன் திருத்திக்கொண்டதை மறந்திருக்கமாட்டார்.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பே மலேகான், அஜ்மீர், நந்தத் ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு துவக்கத்திலேயே அறிவிக்கும் அமைப்புகள் காரணம் அல்ல என்பது தெரியவந்தது. மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் முகமூடியை கிழித்துக்கொண்டிருக்கும் வேளையில் தான் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சிதம்பரம் வந்த பிறகு உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு ஏஜன்சியும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்பதை வெளிக்கொணர்ந்தது.
இதனால் அஸிமானாந்தா சிக்கினார். மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் பயங்கரவாத தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரின் தீவிரவாத தொடர்பு குறித்த ஆதாரங்களை என்.ஐ.ஏ சேகரித்துவருகிறது. இவையெல்லாம், ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு தான் நடப்பதாக ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க கருதுவதால் அவர்களின் தாக்குதல் இப்பொழுது சிதம்பரத்தை நோக்கி திரும்பியுள்ளது.
முறைகேடுகளின் பாதையில் சிதம்பரம் சஞ்சரித்தாரா? என்பது உறுதியாக கூறவியலாது.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்திற்கு தி.மு.கவுடன் தமிழன் என்ற ரதியில் நல்லிணக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கருதுவோரும் உண்டு. ஆனால் இதனை ஆயுதமாக்கி சிதம்பரத்தை குறிவைத்து சங்க்பரிவார் எழுப்பும் கூக்குரல்கள் ஜனநாயகத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்ற அவர்களது அடங்காத ஆவலா? நிச்சயமாக இல்லை.
இருட்டில் நடத்திக்கொண்டிருந்த நாசவேலைகளை வெளிக்கொணர்ந்ததன் மூலம் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என அஞ்சுவது தான் சங்க்பரிவாருக்கு ப.சிதம்பரத்தின் மீதான பழிவாங்கும் கேடுகெட்ட எண்ணம் ஏற்பட்டதற்கு காரணம். தேச பக்தியின் பெயரால் எழுப்பும் முழக்கங்கள், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்ட கர்ஜனைகள் ஆகியவற்றின் திரைமறைவில் நடத்திவந்த தேசவிரோத பயங்கரவாத செயல்பாடுகள் வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கு காரணமான ப.சிதம்பரத்தின் மீது கொண்டுள்ள தீராத பகைதான் சங்க்பரிவாரின் தற்போதையை கூக்குரலும், கும்மாளமும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சிவராஜ் பாட்டீல் ஆளுநர் உடையை களைந்துவிட்டு மீண்டும் உள்துறை அமைச்சராக பதவி ஏற்பார் என மத்திய அமைச்சரவை மறு சீரமைப்பின் போது ஊகமான செய்திகள் உலாவியதன் பின்னணியில் யார் செயல்பட்டார்கள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள முடியும்.
2ஜி, மும்பை குண்டு வெடிப்புகளை காரணம் காட்டி ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க முழங்கி வருகிறது. நாடு பாதுகாப்பான சூழலில் இல்லாத வேளையில் ப.சிதம்பரத்தால் எவ்வாறு அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்க முடிகிறது? என்பது தான் அவர்களது முக்கிய கேள்வி. இந்த கேள்விகளை கேட்பவர்களின் தகுதிதான் என்ன? கார்கில் போரில் வெளிநாட்டு ஊடுருவலை குறித்து அறியாதவர்கள்!  பாராளுமன்றத் தாக்குதல் நடக்கும்வரை கைக்கட்டி வாய்பொத்தி பார்த்து நின்றவர்கள்! கார்கில் போரில் இறந்த வீரர்களின் உடலை எடுத்துச்செல்லும் சவப்பெட்டியிலும் ஊழல் புரிந்து சர்வதேச அளவில் இந்தியாவின் மானத்தை இழக்கச்செய்தவர்கள்! லஞ்சம் வாங்கினாலும் அமெரிக்க டாலரில் தான் வாங்குவேன் என கூறிய தேசபக்திக்கு சொந்தக்காரர்கள்! லாபம் தரும் நிறுவனங்களையெல்லாம் தனியாருக்கு விற்றுத்தொலைக்க தனியாக அமைச்சரவையே உருவாக்கி நாட்டை ஒளிரச்செய்தவர்கள்! இத்தகைய கேடுகெட்ட கூட்டம்தான் ப.சிதம்பரத்தை பதவி விலக கோருகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்தின் பங்கினைக்குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி பா.ஜ.கவினர் சி.பி.ஐ இயக்குநரை அணுகியுள்ளனர். அரசியல் ரீதியான அழுத்தம் கொடுப்பதையும் தாண்டி ஒரு அரசியல் கட்சி மத்திய புலனாய்வு ஏஜன்சி ஒன்றை அணுகுவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய நாடக கூத்துக்களால் ப.சிதம்பரம் ராஜினாமா செய்வார் என்றோ, சோனியாகாந்தி அவரை கைவிடுவார் என்றோ பா.ஜ.க கருதவில்லை. ஆனால், காவிப்படைக்கு எதிராக காய்களை நகர்த்தினால் கதி! அதோகதி தான்! என சிதம்பர உள் மனதில் அஞ்சினாலே ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க வகையறாக்களுக்கு வெற்றிதான். மறுபுறம் சிதம்பரத்திற்கு எதிராக அவருடைய நடவடிக்கைகளை கண்டு அஞ்சாமல் போராடுகிறோம் என்று ஹிந்துத்துவா ஆதரவாளர்களுக்கு தோன்றினாலும் வெற்றிதான். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். இதுதான் சங்க்பரிவாரின் உண்மையான நோக்கம்.
ஊளையிடும் சங்க்பரிவார குள்ள நரிகளுக்கெல்லாம் அஞ்சாமல் இருந்தால் சிதம்பரம் செட்டிநாட்டு சிங்கம்தான். இப்பொழுது நமக்கு முன்னால் எழுந்துள்ள கேள்வி என்னவெனில் காங்கிரஸ் கட்சி அஞ்சினால் சிதம்பரத்தின் பதவி நிரந்தரமா? என்பது தான்.

Source:Thoothu

2ஜி : ரிசர்வ் வங்கி ஆளுநரின் முடிவைத்தான் செயல்படுத்தினேன்: பெகுரா



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிதித்துறை முன்னாள் செயலாளரும் ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநருமான சுப்பாராவின் முடிவுகளின்படியே செயல்பட்டேன் தொலைத் தொடர்புத்துறையின் முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஒரு வாரமாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஆ.ராசா சார்பில் இரண்டு நாள்களாக வாதாடப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதன்கிழமை காலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சித்தார்த்த பெகுரா சார்பாக வழக்கறிஞர் அமன் லேக்கி வாதாடினார். 2ஜி அலைகற்றை ஓதுக்கீடு மத்திய அரசின் கொள்கைப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் கூறிய அவர், அதற்கான ஆதாரங்களையும் சுட்டிக் காட்டினார்.

தாம் தொலை தொடர்பு துறையின் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அத் துறையின் செயலாளராக இருந்த மாத்தூர் மற்றும் அப்போதைய நிதி அமைச்சகத்தின் செயலாளரும் ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநருமான சுப்பா ராவ் ஆகியோர், கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி எடுத்த முடிவுகளைத்தான் சித்தார்த்த பெகுரா நடைமுறைப்படுத்தி உள்ளார். இந்த கூட்டத்தில் அப்போதைய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் முன்னிலையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன என்று அமன் லேக்கி வாதிட்டார்.

அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு அதிகாரிகளின் கடமையாகும். மத்திய அரசின் கொள்கைகள், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படும் முடிவுகளை மத்திய அரசின் அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் மத்திய அரசின் செயலாளர், மத்திய அரசின் கொள்கையை நடைமுறைபடுத்துவது எவ்வாறு தவறாகும்? இந்த விவகாரத்தில் ஏன் சித்தார்த்த பெகுரா பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார் என்று லேக்கி கேள்வி எழுப்பினார். தனது வாதத்தை தொடர்ந்து வியாழக்கிழமை நடத்த உள்ளார்.

சிறைக்கு வெளியே கைதியாக வாழும் ஒரு தந்தை

  abdulkareem
’மார்க்கரீதியான ஒழுக்கத்துடனும், சமூக மரியாதைகளுடனும் நான் வளர்த்த என் பிள்ளைகள் எந்த ஒரு குண்டுவெடிப்பிலும், மனித தன்மையற்ற செயலிலும் பங்காளிகளாக மாட்டார்கள்.எனது பிள்ளைகள் குற்றவாளிகளா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றங்களாகும். அதற்கான வாய்ப்பை அளிக்காமல் இவ்வழக்கு காரணமின்றி இழுத்துக்கொண்டே செல்வதுதான் நாங்கள் அனுபவிக்கும் நீதி மறுப்பாகும் – இது ஒரு தந்தையின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் வேதனையான வார்த்தைகள்.
தனது 5 பிள்ளைகளில் இரண்டு பேர் தேசத்துரோகம் உள்பட பல்வேறு கடுமையான குற்றங்கள் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவதியுறும் வேளையில் ஜாமீனில் வெளியே கொண்டுவர கூட முடியாமல் பி.எஸ்.அப்துல்கரீம் என்ற ஆசிரியர் கடுமையான வேதனைகளை உள்ளத்திலே ஒதுக்கி வாழ்கிறார். சிறைக்கு வெளியே இவர் இருந்தாலும் ஒரு கைதியைப் போலவே இவருடைய வாழ்க்கை கழிகிறது.
தடைச்செய்யப்படும் முன்பு ’சிமி’ இயக்கத்தில் இதர இளைஞர்களை போலவே எனது மகன்களும் அதில் பணியாற்றினர். ஆனால், அதனை ஆயுதமாக்கி எந்த பிரச்சனை நடந்தாலும் அதில் குற்றவாளியாக்கப்பட்டு போலீஸின் விசாரணை இவர்களை சுற்றி மட்டுமே நடக்கும் பீதியான நினைவுகளுடன் நான் பயணிக்கிறேன் ஆசிரியர் அப்துல்  கரீம்  கூறுகிறார். வாழ்க்கைக்கான போராட்டத்தின் அக்னி பரீட்சைகளில் சிக்கி தவித்து அதில் தளராமல் உறுதியாக நிற்க துடிக்கும் ஒரு தந்தையின் அனுபவத்தை அவர் விவரிக்கிறார்.
பொதுவாகவே கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள ஈராட்டுப்பேட்டை கல்வியில் பின்தங்கியுள்ள பகுதியாகும். பெரும்பாலான குடும்பத்தில் 10-வகுப்பை முடித்தவர்களை ஆபூர்வமாகவே காண முடியும். அவர்களுக்கிடையே குடும்பத்தின் பொறுப்புகள் ஒவ்வொன்றாக தனது தலையில் விழுந்த போதும் எவருடைய ஆதரவும் இல்லாதிருந்தும் பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்று அஃப்ஸலுல் உலமா தேர்வில் தேர்ச்சிப்பெற்று அரபி மொழி ஆசிரியராக பணியாற்றியவர் தாம் அப்துல் கரீம்.
பானாயிக்குளம் சம்பவம் தொடர்பாக அவருடைய மகன்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு காலத்தில் தாம் பெற்ற பிள்ளைகளால் பாக்கியம் பெற்றவன் என புகழப்பட்ட, பொறாமையுடன் நோக்கப்பட்ட அப்துல் கரீம் ’தீவிரவாதிகளின் தந்தை’ என முத்திரை குத்தப்பட்டார். நீண்ட 29 ஆண்டுகளாக பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு அறிவை கற்றுக்கொடுத்த மனித நேயமிக்க இந்த ஆசிரியருக்கு இத்தகைய குற்றச்சாட்டு தீராத ரணத்தை ஏற்படுத்தியது.
தென் கேரளாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராட்டுப்பேட்டை பஞ்சாயத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மிக அதிக மதிப்பெண்களை பெற்றனர் அப்துல்கரீமின் பிள்ளைகள். ’கல்வி கற்பதில் திறமைசாலிகளாக திகழ்ந்த 5 பேரையும் கடன்வாங்கியும், நிலத்தை விற்றும் எல்லா தந்தைகளைப்போல மிகப்பெரிய நம்பிக்கையுடன் நான் அவர்களை படிக்க வைத்தேன். ஷிப்லியும், அவனது தம்பி ஃபஸ்லியும் கம்ப்யூட்டர் ஹார்டுவேரில் டிப்ளமோவும், ஷாதுலியும், ஃபவுஸினாவும் பி.டெக்கை டிஸ்டிங்சனிலும் (சிறப்பு முதலிடம்) முடித்தனர். ஆனால் தற்போது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மதிப்பான வாழ்க்கையை யாசகம் கேட்டு நீதிமன்ற வாசல்களில் ஏறி இறங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது’ அப்துல் கரீம் வருத்தத்துடன் கூறுகிறார்.
பீதிவயப்பட்ட நாட்கள்
2006 ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அப்துல்கரீமின் வாழ்க்கையில் கறுப்பு அத்தியாமாக மாறியது. நினைவுக்கூற விரும்பாத அனுபவங்களை நன்கொடையாக அளித்த மாதம். அன்று எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பானாயிகுளம் என்ற இடத்தில் இளைஞர்களின் குழு ஒன்று பகிரங்கமாக நோட்டீஸ் விநியோகித்து சுதந்திர தின போராளிகளை நினைவுக்கூர்ந்த நிகழ்ச்சி ஊடகங்கள் மற்றும் அரசின் தலையீட்டால் மிகவும் பிரசித்திப்பெற்றது.
இந்த நினைவு நிகழ்ச்சியில் முன்னாள் சிமி உறுப்பினர்களும் கலந்துக் கொண்டதால் அதனை தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ரகசிய கூட்டமாக ஊடகங்கள் சித்தரித்தன. தேசிய பத்திரிகைகள் என கூறிக்கொள்ளும் பத்திரிகைகளும், சேனல்களும் எவ்வித உண்மையை கண்டறியும் விசாரணையும் மேற்கொள்ளாமல் கற்பனை கதைகளை எழுதி மலையாளிகளை பீதியின் முள்முனையில் நிறுத்தினர். கேரள பொது சமூகத்தின் உள்ளங்களில் பீதியை உருவாக்கி சமூக பிரிவினையை உருவாக்கியதில் இத்தகைய ஊடக செய்திகள் காரணாமாகின.
‘தீவிரவாதத்தின் அவமானத்தை சுமக்கும் பல்வேறு நபர்களையும், குடும்பத்தினரையும் உருவாக்கிய ஊடக-அரசு பயங்கரவாதம் பானாயிக்குளம் சம்பவத்தை கருவாக்கி தீயை மூட்டியது’ என அப்துல்கரீம் கூறுகிறார்.
மகன்கள் குஜராத் சிறையில்
’பானாயிகுளம் சம்பவத்தில் இளையமகன் ஷாதுலியும், மகள் ஃபவுஸினாவின் கணவர் ராஸிக்கும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசத்துரோகிகள் மற்றும் தீவிரவாதிகளின் தந்தையாக நான் முத்திரைக்குத்தப்பட்டேன். எனது ஐந்து பிள்ளைகளில் இரண்டு பேர் மீதும் மருமகன் மீதும் தேசத்துரோகம், தீவிரவாதம் உள்பட ஏராளமான வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன.
இப்பொழுது எனது மூத்தமகன் ஷிப்லியும், இளையமகன் ஷாதுலியும் குஜராத் மாநிலம் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிமி தொடர்பு எனக்குற்றம் சாட்டி 2008 மார்ச் மாதம் 26-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர். இப்பொழுது ஐந்து மாநிலங்களில் நடந்த ஏராளமான வழக்குகளில் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களின் கைதிற்கு பிறகு 2008 ஜூலை 26-ஆம் தேதி நடந்த குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கிலும் அவர்களை குற்றவாளிகளாக சேர்த்தனர்.
சிறுவயதில் ஷாதுலியை திருக்குர்ஆனை படிக்க கூறும் பொழுது தயங்கும் அவன் சகோதரர்களுடன் சேர்ந்து சிமியில் பணியாற்ற துவங்கிய பொழுது எவரும் நிர்பந்திக்காமலேயே திருக்குர்ஆன் ஓதுவதையும், சமூக பணிகளில் பங்கேற்பதையும் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தது நான் தான்.’ அப்துல் கரீம் கூறுகிறார்.
ஒரு தொலைபேசி எண்ணின் பெயரால்…
மூத்த மகன் ஷிப்லி படிப்பை முடித்த பிறகு முதலில் திருவனந்தபுரத்திலும், பின்னர் பெங்களூர், மும்பை ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர் ஸாஃப்ட்வெயர் நிறுவனமான டாட்டா எலக்ஸியில் பணியாற்றினான். மீண்டும் பெங்களூருக்கு மாற்றலாகி வேலையில் தொடரவே தனிப்பட்ட காரணத்திற்காக மும்பைக்கு சென்றுள்ளான். 2006 ஜூலை 11 ஆம் தேதி மும்பையில் சிட்டி சர்வீஸ் நடத்தும் ஸபர்மன் ரெயில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
குண்டுவெடிப்பு தொடர்பாக அன்றைய மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ரகுவன்ஷியும், குழுவினரும் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தனர்.(கொல்லப்பட்ட நேர்மையான அதிகாரி ஹேமந்த் கர்கரே நடத்திய விசாரணையில் ஷிப்லி குற்றவாளி இல்லை என நிரூபணமாகி வழக்கு பதிவு செய்யாமல் ஷிப்லி விடுவிக்கப்பட்டார்). வீட்டில் தந்தையின் தாயார் தீவிரமாக நோய்வாய்ப்பட்டுள்ளார். குண்டுவெடிப்பு நிகழ்ந்த அன்று ’மும்பையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததால் ரெயில்கள் ஓடவில்லை. ஆதலால் வர இயலவில்லை’ என குடும்பத்தினருக்கு தெரிவித்தார்.
இரண்டு தினங்கள் கழித்து ரெயில் போக்குவரத்து சீரான பொழுது ஊருக்கு வந்து வீட்டில் தந்தையின் தாயாரை சந்தித்துவிட்டு திரும்பி சென்றான். பின்னர் சில தினங்கள் கழித்து மகனை தேடி மஹராஷ்ட்ரா போலீஸார் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் ஷிப்லியை தேடி அவன் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்றதால் அங்கு அவனது பணி பறிபோனது. குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிமி உறுப்பினரிடமிருந்து ஷிப்லியின் மொபைல் நம்பர் கைப்பற்றப்பட்டது தான் அவனை கைது செய்ய காரணமாகும்-அப்துல் கரீம் கூறுகிறார்.
’செய்யாத குற்றத்திற்கு மீண்டும் குற்றவாளியாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் அவனை வீட்டிலிருந்து வேறு இடத்திற்கு செல்ல கூறினோம். தாயார் நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். இவ்வேளையில் பானாயிகுளம் சம்பவத்தின் பெயரால் இளைய மகனையும், மருமகனையும் போலீஸ் கைது செய்தது. இந்நாட்களில் ஊடகங்கள் கற்பனைகதைகளை பரப்பி கொண்டாடின.’-அப்துல் கரீம் வேதனையுடன் நினைவுக்கூறுகிறார்.
கற்பனையில் வரைந்த கட்டுக்கதைகள்
இந்நிலையில் நிற்கதியற்று குரல் எழுப்பும் இந்த குடும்பத்தின் துயரத்தை எவரும் காண தயாராகவில்லை. பிள்ளைகளின் ஜாமீனுக்காக நீதிமன்ற படிகளை தனித்தே ஏறி இறங்கினார் அப்துல்கரீம். பிள்ளைகளுக்கு ஜாமீன் கிடைக்காத பொழுது உயர்நீதிமன்றத்தில் கதறி அழுதுள்ளார் இந்த ஆசிரியர். ஊடகத்தில் வெளியான செய்திகளையும், போலீசின் பரப்புரைகளையும் கேட்டு ’நன்றாக படித்த இந்த பிள்ளைகளுக்கு இது தேவையா?” என குத்தல் வார்த்தைகளை கூறியும், செய்த உறவினர்களுக்கும், ஊர்வாசிகளுக்கும் கோபத்துடன் ஒருபோதும் அப்துல்கரீம் பதிலளிக்கவில்லை. இறுதியாக 60 தினங்கள் கழிந்த பிறகு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது.
ஜாமீன் கிடைத்து வெளியே வந்த போது புதிய கதைகளை பத்திரிகைகள் கட்டவிழ்த்துவிட்டன. அதில் மிகவும் வேதனையை அளித்த செய்தி என்னவெனில், ஷிப்லி பணியில் இருந்த வேளையில் துவங்கிய வீட்டுப்பணி தீவிரவாத குற்றச்சாட்டை தொடர்ந்து அவனது வேலை பறிக்கப்பட்டவுடன் முடங்கிவிட்டது. அவ்வேளையில் ’ஷிப்லி ஹெலிகாப்டரை இறக்குவதற்கு வசதியாக மாளிகையை கட்டுவதாக உள்ளூர் செய்தியாளர் ஒருவர் கேரளகவுமுதி என்ற பத்திரிகையில் எழுதினார். இந்த புரட்டையும் அப்துல் கரீம் வாசிக்க நேர்ந்தது.
வேலை விஷயமாக இந்தூருக்கு சென்ற ஷிப்லியை காண ஷாதுலி சென்றான். 2008 மார்ச் 23-ஆம் தேதி ஒருவாரத்திற்கு பிறகு போலீஸ் வீட்டில் ரெய்டுக்கு வந்த பிறகு தான் தெரியும் எனது மகன்களை போலீஸ் கைது செய்த விபரம். இந்த விபரத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றோரையும், ஷிப்லியின் மனைவி நஜீபாவிடமும் தெரிவிக்க போலீஸ் பத்திரிகையாளர்கள் புடைசூழ வருகை தந்தனர். இந்தூரில் இருந்து கைது செய்த பிறகு நடந்த குண்டு வெடிப்புகள் உட்பட பல்வேறு வழக்குகளில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.-அப்துல் கரீம் கூறுகிறார்.
கொடூரமான கொடுமைகள்
விசாரணை கைதிகளாக சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களின் வழக்குகள் ஆமை வேகத்தில் நகர்கின்றன. குஜராத் அரசிடம் இவர்களை ஒப்படைத்தபிறகு கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்கள். பல நாட்கள் தூங்கவிடாமல் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என தந்தை அப்துல் கரீம் கூறுகிறார். இதற்கு தலைமை வகித்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதசாமா சொஹ்ரபுதீன் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் தற்பொழுது இதே சிறையில் விசாரணை கைதியாக உள்ளார்.
தனது மகன்கள் மீதான வழக்குகளை குஜராத்திற்கு வெளியே கொண்டுவரும் முயற்சியில் தற்போது இந்த தந்தை முயன்றுவருகிறார். ’குஜராத் ஸே முஸல்மான கோயி இன்ஸாப் நஹீ மிலேகா’ (குஜராத்தில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது) என வழக்கை வாதாடும் குஜராத் மாநிலத்தைஸ் சார்ந்த மூத்த வழக்கறிஞர் கே.எம்.முன்ஷி கூறியதை நினைவுக்கூறுகிறார் அப்துல் கரீம்.
நமது நாட்டின் சட்டங்களை இயற்றியவர்கள் நிரபராதிகள் ஒருபோதும் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். ஆனால், ஏராளமான நிரபராதிகளை வேட்டையாடி அவர்களின் மானத்தையும், ஆயுளையும் நசிக்கஸ் செய்து இறுதியில் நீதிமன்றம் குற்றவாளிகள் அல்லர் எனக்கூறி விடுதலை செய்த அண்மைக்கால சம்பவங்களை அப்துல் கரீம் நினைவுக் கூர்ந்தார்.
உள்ளத்தில் ஒதுக்கியுள்ள வேதனைகளையும், கவலைகளையும் அப்துல் கரீம் அல்லாஹ்விற்கு முன்பு மட்டுமே எடுத்துரைப்பார். குற்றவாளியாக்க காட்டும் அவசரத்தின் நூறில் ஒரு பகுதியை நேர்மையாக இத்தகைய வழக்குகளை விசாரிக்க செலவிடும் துணிச்சலான புலனாய்வு அதிகாரிகள் முன்வரமாட்டார்களா? என எதிர்பார்த்து காத்திருக்கிறார் அப்துல்கரீம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மெளனமாக கதறும் அதே வேளையில் எவ்வித கொடுமையான சூழலிலும் இறைவனின் உதவியை எதிர்பார்க்கும் ஏராளாமான அப்பாவிகளின் சின்னமாக ஆசிரியர் அப்துல் கரீம் நம் முன்னால் தெரிகிறார்.
பேட்டி:எ.எம்.நஜீப்
தமிழில்:அ.செய்யது அலீ.
நன்றி:தேஜஸ்

பள்ளிவாசல் தரைமட்டம்! விழுப்புரத்தில் அயோத்தி!!




விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராவுத்த நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான் மையாகவும், முஸ்லிம்கள் 40 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.
ராவுத்த நல்லூர் கிராமத்திற்கு அடுத்து புதுப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு கிராமத்தில் உள்ள முஸ் லிம்கள் தங்கள் வணக்க வழிபா டுகளை நிறைவேற்றிக் கொள்வ தற்காக நவாப் ஆட்சிக் காலத்தில் ராவுத்த நல்லூர் கிராம எல்லை யில் ஒரு ஏக்கர் 19 செண்ட் நிலம் ஆற்காடு நவாபினால் நன்கொ டையாக வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி இரண்டு கிராம முஸ்லிம்களும் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இரண்டு கிராமத் தின் மையத்தில் புதிய பள்ளி வாசல்கள் உருவாகிவிட்டபடி யால் நவாப் பள்ளிவாசலின் பயன்பாடு குறைந்து போனது.
இதனால் அருகிலுள்ள ஆதி திராவிடர் தரப்பினர் அந்த இடத் தின் மீது சொந்தம் கொண்டாடி னர். திடீரென்று அந்த இடத்தில் விநாயகர் சிலையையும் வைத்து விட்டனர். இதனால் புதுப் பேட்டை கிராம முஸ்லிம்கள் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்த னர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கிடையே நடந்த சமாதான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் விநாயகர் சிலை அகற்றப்பட்டது. வழக்கும் வாபஸ் பெறப்பட் டது.
இந்நிலையில் ராவுத்தநல்லூர் முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் நவாப் பள்ளிவாசலை மீண்டும் புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக பள்ளிவா சலை போட்டோ எடுத்தனர்.
இந்த தகவல் ஆதி திராவிடர் தரப்பிற்கு தெரிய வந்ததும் இர வோடு இரவாக நவாப் பள்ளிவா சல் இடிக்கப்பட்டு தரைமட்ட மாக்கப்பட்டது. அந்த இடத்தில் புதிதாக விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் இரண்டு கிராமத்து முஸ்லிம்களும் காவல் நிலையத்தில் முறையிட்டனர்.
காவல்துறையிடம் இரு தரப் பாரும், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று முறையிட் டதால் வருவாய் கோட்டாட்சி யர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆதி திராவிடர் தரப்பினர் அந்த இடம் மயானப் புறம்போக்கு இடம் என்றும், மேலும் அந்த இடத்தை புதுப்பேட்டை ஜமா அத்தினர் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று விட்டதாகவும் விசாரணை யில் தெரிவித்தனர்.
புதுப்பேட்டை ஜமாஅத்தினர் அந்த இடம் வருவாய்த்துறையி னரின் பதிவேடுகளில் 1983வரை பள்ளிவாசல் என்றுதான் குறிப் பிட்டிருந்தது. இடையில் மயானப் புறம்போக்கு என்று மாற்றப்பட் டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் பள்ளிவாசலை எதுவும் செய்யக் கூடாது என்றும், அதற்கு பாதை யையும் ஒதுக்கித் தரவும், ஒத்துக் கொண்டு ஆதி திராவிடர் தரப்பி னர் உறுதி அளித்திருந்ததாகவும், அந்த வாக்குறுதியை மீறி பள்ளி வாசலை இடித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் அந்த இடத்தை ஆதி திராவிடர் எழுதி வாங்கியபோது, “இந்த நிலத்தை ஆதி திராவிடர் பயன்படுத்துவது குறித்து ஏதே னும் பிரச்சினை ஏற்பட்டால் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று வாக்குறுதி அளித்திருப்பதையும் சுட்டிக் காட்டினர்.
இறுதியில் வருவாய் கோட் டாட்சியர் முன்னிலையில் ஆதி திராவிடர் கொடுத்த பணத்தை புதுப்பேட்டை ஜமாஅத்தினர் திரும்ப கொடுத்து விட வேண்டும்; அந்த நிலத்தின் ஓரமான ஒரு பகுதியை ஆதி திராவிடர் பயன் படுத்திக் கொள்வது என்றும் கடந்த 17ம் தேதி வெள்ளிக் கிழமை முதல் முஸ்லிம்கள் அந்த இடத்தில் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கு ஆதி திராவிடர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த அடிப்படையில் கடந்த 17ம் தேதி முஸ்லிம்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்த முயற் சித்தனர். ஆனால் ஆதி திராவி டர்கள் திரண்டு வந்து அவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் ஏற்படும் சூழ் நிலை உருவானது. முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் முயற்சி தடுக்கப்பட்டது. காவல்துறையி னர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்ததால் அசம்பா விதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனையடுத்து கடந்த 20ம் தேதி மீண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் அமை திப் பேச்சுவார்த்தை நடத்தப்பட் டது. அந்தப் பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் மூலமாக வக்ஃபு போர்டுக்கு கடிதம் எழுதி முடிவைப் பெறுவது என்றும், அரசின் மறு உத்தரவு வரும்வரை இரு தரப்பினரும் அந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் முடிவெடுக் கப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையி னால் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்த போதிலும், மீண்டும் எப்போது வெடிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. ஜமாஅத் முக்கியஸ்தர்கள் இத னால் அமைதியடைந்த போதி லும் முஸ்லிம் இளைஞர்கள் முஸ் லிம்களுக்கு அநீதி இழைக்கப்ப ட்டு விட்டதாகவே குமுறுகின்றனர்.
1. பள்ளிவாசல் இடத்தை விற்பதற்கு ஜமாஅத்திற்கு யார் உரிமை அளித்தது?
2. யாரிடமும் ஆலோசனை நடத்தாமல் ஒரு சிலர் மட்டும் முடிவெடுத்தது இடத்தை விற் பனை செய்தது எப்படி நியாயமா கும்?
3. பள்ளிவாசலை இடித்தவர் களை இன்றைய தேதி வரையில் போலீஸôர் கைது செய்யாதது ஏன்?
4. பள்ளிவா சல் இடத்தில் சட்ட விரோத மாக வைத் துள்ள விநாய கர் சிலையை அகற்றாதது ஏன்?
இளைஞர்கள் கேட்கும் இந்தக் கேள்வி களில் நியா யம் இருப் பதை மறுப்ப தற்கில்லை.
அயோத்தி பாபர் பள்ளி வாசல் ஆக்கிரமிப்பிற்கும் - விழுப்புரம் ராவுத்தநல்லூர் நவாப் பள்ளிவாசல் ஆக்கிரமிப்புக்கும் இடை யில் சின்ன வித்தியாசம்தான். பாபர் பள்ளிவாசலில் முதலில் சிலை வைத்தார்கள். பிறகு இடித்து தரைமட்டமாக்கினார்கள். நவாப் பள்ளிவாசலை முதலில் தரைமட் டமாக்கி விட்டு பிறகு சிலை வைத்துள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசல் இடத்தில் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் காவல்துறை, பள்ளிவாசலை இடித்தவர்கள் துணிவுடன் சுற்றித் திரிந்து வருவதைப் பார்த்துக்க கொண்டு அவர்களை கைது செய் யாமல் அலட்சியம் காட்டி வருகி றது.
முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இதனை மீட்க வேண்டும். இல்லை யென்றால் சங்கராபுரம் பகுதியில் 40 ஏக்கருக்கும் மேல் வக்ஃபு சொத்துகள் உள்ளன. அவற்றின் நிலையும் கேள்விக் குறியாகி விடும்!
- இப்னு மக்பூல்
سبحان الله العظيم
ஒன்று பட்ட சமுதாயமாகவாழ
நம் அனைவருக்கும்அந்த வல்ல
இறைவன் அருள் புரியட்டும்.
ஆமீன்

சாய்பாபா – நறுமண சாமியாரின் சொகுசு வாழ்க்கை விபரங்கள்


புட்டபர்த்தி : சாய்பாபாவின் ஆசிரமத்தில் சோதனை செய்யும் அதிகாரிகள் அவரது தனி அறையான யஜுர் மந்திரில் கிலோ கணக்காய் தங்கம், வெள்ளி எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரின் அன்றாட பயன்பாட்டுக்காக பயன்படுத்திய அழகு சாதன பொருட்களை பார்த்து திகைத்து போய் உள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட ஷேவிங் செட்கள், விலை உயர்ந்த சர்வதேச செண்டுகள், ஷாம்புகள், சோப்கள் மற்றும் நாப்கின்கள் அவரின் அறை முழுக்க இருந்ததாக தெரிகிறது. எப்போது உபதேசம் செய்ய வரும் போதும் நறுமணங்களை பூசிக் கொள்ளும் பழக்கம் உடையவராக சாய்பாபா இருந்ததாக தெரிகிறது. மேலும் உலகின் முண்ணணி பிராண்டுகளின் கைக்கடிகாரங்களும் உயர்ந்த ரக உலர் பழங்களின் பாக்கெட்டுகளும் ஏராளமாய் இருந்துள்ளது.
அது போல் பக்தர்கள் நன்கொடையாய் கொடுத்த ஏராளமான பொருட்கள் திறக்கப்படாமலேயே உள்ளது. 7 கிலோ எடை கொண்ட தங்க மாலைகள், 75 வெள்ளி டம்ளர்கள் உள்ளிட்ட பல அன்பளிப்புகள் அப்படியே திறக்கப்படாமல் உள்ளன. உலகில் வாழும் சாமியார்களில் வேறு யாருக்கும் பக்தர்கள் இது போல் கொடுத்ததை தாங்கள் கண்டதில்லை என்று சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறினர்.
அது போல் 10,000 க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த சேலைகள், பிராண்டட் சட்டைகள், வேட்டிகளும் சாய்பாபாவின் அந்தரங்க அறைக்குள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. 2005-லிருந்தி இவ்வறையில் வசிக்கும் சாய்பாபா இவ்வறையில் டிரஸ்டின் மூத்த உறுப்பினர்களை கூட இவ்வறைக்குள் அனுமதித்ததில்லை என்பதும் அவரின் அந்தரங்க உதவியாளர் சத்யஜித்க்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கஷ்மீர்:பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்த இந்தியா-பாக். ஒப்புதல்.

  pak4-270711
புதுடெல்லி:தீவிரவாதத்தை இணைந்து எதிர்கொள்ளவும், கஷ்மீர் விவகாரத்தில் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இந்தியா-பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானியும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இத்தீர்மானங்களை வெளியிட்டனர்.
தீவிரவாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரேபோல பிரச்சனை என கிருஷ்ணா கூறினார். அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியது இருநாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய யுகம் பிறந்துள்ளதாக ஹினா ரப்பானி தெரிவித்தார்.
நேற்று முன் தினம் டெல்லிக்கு வருகைத்தந்த பொழுதை விட தற்பொழுது எனக்கு தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. கஷ்மீர் விவகாரத்திலும் சரியான தீர்வு வேண்டும். இதற்காக இனியும் பேச்சுவார்த்தையை தொடருவோம் என ஹினா ரப்பானி தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த ஆண்டு இஸ்லாமாபாத்தில் மீண்டு பேச்சுவார்த்தை நடத்துவர்.
ஜம்மு-காஷ்மீர் பிரச்னை குறித்து இருநாட்டு அமைச்சர்களும் முக்கியமாகப் பேசினர். இந்த விஷயத்தில் தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும். விஷயத்தை தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும். வேறுபாடுகளைக் களைந்து, நம்பிக்கையூட்டும் வகையில் அமைதியான தீர்வை எட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஷ்மீர்-பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலிருக்கும் கஷ்மீர் இடையேயான வர்த்தக தொடர்பு தாராளமாக்கப்படும். வர்த்தகம் செய்யும் பொருட்களின் பட்டியலை செயற்குழு பரிசோதித்து அனுமதி அளிக்கும். வர்த்தகத்தின் கால அளவு வாரத்தில் இரண்டு முதல் நான்கு தினங்களாக அதிகரிக்கப்படும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் ஸ்ரீநகர்-முஷாராபாத், பூஞ்ச்-ராவல்கோட் வழிகளில் ட்ரக் போக்குவரத்தை அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கஷ்மீர், தீவிரவாதம், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானில் விசாரணை, கடல் எல்லையை மீறி மீன்பிடிக்கச் சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட மனிதநேய பிரச்சனைகள், வர்த்தக-பொருளாதார ஒத்துழைப்பு, ஸர்க்ரீக், சியாச்சின், அமைதி, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடந்தது.
ஹினா ரப்பானி டெல்லியில் ஹுர்ரியத் தலைவர்கள் செய்யத் அலிஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் ஆகியோருடனும், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை தீவிரமாக்க இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் மக்தூம் ஆமினை பேச்சுவார்த்தைக்காக இந்தியாவுக்கு அழைத்துள்ளார்
Source.Thoothu

விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...





நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன். 

சென்சிடிவ்வான தகவல்கள் அடங்கிய பதிவு. சகோதரிகள் மன்னிக்கவும். எழுதுவதற்கு சங்கடமாக இருந்தாலும்,  பெண்ணடிமைத்தனத்திற்கு விஞ்ஞானிகளும் காரணம் என்று புரியவைப்பதற்காகவே இந்த பதிவு.  

வரலாற்றில் நடந்த சில சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சி தரக்கூடியவை. இந்த பதிவில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளும்  அத்தகைய ரகத்தை சார்ந்தவைதான். 

"பெண்களே நீங்கள் உடலாலும், அறிவாலும் ஆண்களை விட கீழானவர்களே" - யார் தெரியுமா இப்படி கூறியவர்கள்?.....விஞ்ஞானிகள்...ஆம் விஞ்ஞானிகளே தான். அதிலும் பிரபல விஞ்ஞானிகள்.... 

உங்களுக்கு இது அதிர்ச்சியை தரலாம். இவ்வளவு முக்கிய தகவலை நாங்கள் இது வரை கேள்விப்பட்டதில்லையே என்றும் உங்களில் சிலர் எண்ணலாம்.  வரலாற்றில் பல செய்திகள் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருப்பது புதிதில்லையே...

விஞ்ஞானிகள் சொன்னார்களா?...அவர்கள் நன்கு ஆராயாமல்  எதையும் சொல்லமாட்டார்களே என்று நீங்கள் கேட்கலாம். உங்களுடைய கருத்து சரிதான். 'ஆண்களை விட தாழ்ந்தவர்கள் பெண்கள்' என்ற கருத்தை நன்கு ஆராய்ந்தே(??) கூறியவர்கள் நாம் மேலே பார்த்த விஞ்ஞானிகள்.

இவர்களுக்கு துணையாய் நின்றது பரிணாம கோட்பாடு. ஆம், இந்த அறிவியலாளர்கள் மேற்கூறிய முடிவுக்கு வர காரணமாக இருந்தது பரிணாம கோட்பாடுதான். 

எப்படி இனவெறியர்களுக்கு துணையாக நின்று இலட்சகணக்கான மக்கள் கொல்லப்பட காரணமாக பரிணாமம் இருந்ததோ, அதுபோலவே, ஆண்களை விட கீழானவர்கள் பெண்கள் என்ற கருத்துக்கு துணையாக நின்று மனரீதியாக பெண்கள் கொல்லப்பட காரணமாய் இருந்தது பரிணாம கோட்பாடு. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 

கொரில்லா குரங்குகளின் மூளைகளுக்கு நிகரானது பெண்களின் மூளை என்று கருத்து கூறிய பிரபல விஞ்ஞானிகள் கூட உலகில் உண்டு என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? மனைவி என்பவள் நாயை விட மேலானவள் என்று டார்வின் கூறினாரே, இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?      

"ஆண்களை விட அறிவுத்திறனிலும், உடல் வலிமையிலும் நீங்கள் தாழ்ந்தவர்களே" என்று பெண்களை நோக்கி அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுத்து, அவர்களை "நாம் கீழானவர்களே" என்று உளவியல்ரீதியாக நம்பவைத்து கேவலப்படுத்தியது பரிணாம கோட்பாடு.    

ஆணாதிக்கம்...ஆணாதிக்கம் என்று பெண்ணுரிமைக்காக கூப்பாடு போடும் பரிணாம ஆதரவாளர்கள், தற்போது அதி விரைவாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்த ஆணாதிக்கத்திற்கு அறிவியல் ரீதியாக தீனி போட்டு வளர்த்ததில் பரிணாம கோட்பாட்டிற்கு முக்கிய பங்குண்டு என்பதைத்தான். 'பெண்ணை விட உயர்ந்தவன் ஆண்' என்பதை அழுத்தம் திரூத்தமாக சொன்னவர்களில் டார்வினும் உண்டு என்பத்தைத்தான்.

ஆதாரங்களே இல்லாத, ஒரு யூகமாக இருக்க கூட தகுதி இல்லாத பரிணாம கோட்பாடு, இவ்வுலகிற்கு பரிசாக தந்த சீர்கேடுகளில் முக்கியமானவை...இனவெறி மற்றும் பெண்ணடிமைத்தனம். 

மனிதர்களிடேயே உயர்வு தாழ்வை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தியது பரிணாம கோட்பாடு. அதுபோலவே,  பெண்ணடிமைத்தனத்தை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தியது பரிணாம கோட்பாடு. 

சரி, மேலே பார்த்ததற்கெல்லாம் என்ன ஆதாரம்? இதோ ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன.

பெண்கள் குறித்த பரிணாமத்தின் பார்வை:

பரிணாமம் குறித்த டார்வினின் இரண்டாவது புத்தகமான "The Descent of Man, and Selection in Relation to Sex" மனித பரிணாமம் குறித்து பேசுகின்றது. இதில் ஆண், பெண் வித்தியாசம் குறித்து விரிவாக விவரித்திருகின்றார் டார்வின்.

பெண்களை சொந்தமாக்கி கொள்ள ஆதிகால ஆண்கள் போராடி வந்ததாக குறிப்பிடும் டார்வின், பெண்களை கவர வெறும் உடல் வலிமை மட்டும் போதாது என்பதால் காலப்போக்கில் ஆண்கள் அறிவுத்திறனில் வளர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகின்றார் (Sexual Selection Hypothesis).

மேலும், தங்களுடைய மனைவியரை அடுத்தவர் கவருவதிலிருந்து காக்கவும், தன் குடும்பத்திற்கு தேவையான உணவையும் இடத்தையும் கொடுப்பதில் ஆண்கள் மும்முரமாக செயல்பட்டதால் அறிவிலும், உடல் வலிமையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களாக பரிணமித்து விட்டதாக கூறினார் டார்வின்.

பெண்களுக்கு இந்த தேவைகள் இல்லாததால் அவர்கள் ஆண்களை விட தாமதமாகவே  பரிணமித்ததாக குறிப்பிடுகின்றார் டார்வின்.

We may also infer, from the law of the deviation of averages, so well illustrated by Mr. Galton, in his work on 'Hereditary Genius,' that if men are capable of decided eminence over women in many subjects, the average standard of mental power in man must be above that of woman.
The half-human male progenitors of man, and men in a savage state, have struggled together during many generations for the possession of the females. But mere bodily strength and size would do little for victory, unless associated with courage, perseverance, and determined energy. With social animals, the young males have to pass through many a contest before they win a female, and the older males have to retain their females by renewed battles. They have, also, in the case of man, to defend their females, as well as their young, from enemies of all kinds, and to hunt for their joint subsistence. But to avoid enemies, or to attack them with success, to capture wild animals, and to invent and fashion weapons, requires the aid of the higher mental faculties, namely, observation, reason, invention, or imagination. These various faculties will thus have been continually put to the test, and selected. --- Charles Darwin,The Descent of Man, and Selection in Relation to Sex, 1871, Page No.327.

மொத்தத்தில், ஆண்கள் உயர்ந்தவர்கள் பெண்கள் தாழ்ந்தவர்கள். டார்வினுடைய இந்த கருத்தில் ஆச்சர்யமொன்றுமில்லை. அவரால் பிரபலமான பரிணாம கோட்பாட்டை பொறுத்தவரை, மனிதர்கள் என்பவர்கள் முன்னேறிய விலங்குகள். அவ்வளவே.

[இங்கு  மற்றொரு முக்கிய செய்தியையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பரிணாமத்தின் ஆணிவேரான இயற்கை தேர்வை கண்டுபிடித்ததில் டார்வினுடன் சேர்ந்து பெருமையை பகிர்ந்து கொள்பவர் அல்ப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் அவர்கள். அறிவியலாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் வாலஸ், டார்வினுடைய மனித பரிணாமம் குறித்த கருத்துக்களோடு உடன்படவில்லை. அதற்கு காரணம், ஒழுக்கம் மற்றும் அற்புத அறிவுத்திறனை மனித இனம் கொண்டிருந்ததுதான்.

மனிதனின் இந்த தன்மைகள் இயற்கைத் தேர்வால் வந்திருக்க வேண்டுமென்ற விளக்கத்தை நிராகரித்தார் வாலஸ். இவற்றை விளக்க இயற்கை தேர்வு ஒத்துவராது என்றும், நம்மை மீறிய ஒரு சக்தியே இவற்றிற்கு காரணமாக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார் வாலஸ். அதுமட்டுமல்லாமல், உலகின் முதல் உயிரினத்தையும் அந்த சக்தி தான் உருவாக்கியிருக்க வேண்டுமென்றும் கூறினார். வாலசின் இந்த கருத்துக்கள் டார்வின் மற்றும் அவரது ஆதரவாளர்களை மிகுந்த சங்கடப்படுத்தியது]

டார்வினுடைய ஆண் பெண் குறித்த கருத்துக்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் அமையாதவை. எப்படி இன்றளவும் பரிணாமத்திற்கு ஆதாரங்களில்லையோ, அதுபோலேவே அவர் கூறிய ஆண், பெண் வித்தியாசத்திற்கும் ஆதாரங்களில்லை.

டார்வின் தன் இளமை பருவத்தில் கூறிய கருத்து, பெண்கள் குறித்த அவரது பார்வையை இன்னும் மோசமாக்குகின்றது. திருமணத்தில் உள்ள நன்மைகளை பட்டியலிடும் அவர், மனைவியின் தன்மைகள் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"...Constant companion (and friend in old age) who will feel interested in one - Object to be beloved and played with. Better than a dog anyhow - Home, & someone to take care of house..." --- Darwin Letters, Cambridge University Library.
நிரந்தரமான உடனிருப்பவர் ( வயதான காலத்தில் நண்பர்) - விரும்பப்படுவதற்கும், விளையாடுவதற்கும் ஏற்றவர். எப்படியானாலும் நாயை விட மேலானவர் - வீட்டை கவனித்து கொள்பவர்" --- (Extract from the original quote of) Darwin Letters, Cambridge University Library.



டார்வினின் இது போன்ற கருத்துக்கள் அதிர்ச்சி அளிப்பவை. தன்னுடைய கோட்பாட்டை முன்வைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை. அவர் முன்வைத்த கோட்பாடு, அவருடைய இது போன்ற எண்ணங்களை மாற்றாமல், ஆண் பெண் உயர்வு தாழ்வுக்கு அறிவியல் ரீதியாக சாயம் பூசியது.

பரிணாம கோட்பாடு சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்:

பிறப்பிலேயே தாழ்ந்தவர்கள் பெண்கள் என்ற கருத்தை உருவாக்கியது பரிணாமம். பெண்களை காட்டிலும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அறிவியலாளர்களிடையே உருவாக்கியது பரிணாமம். "அறிவியலே கூறிவிட்டது, நாங்கள் அறிவில் குறைந்தவர்களே" என்று உளவியல் ரீதியாக நம்பவைக்கப்பட்டார்கள் பெண்கள்.

சமூகத்தில் பரிணாமம் ஏற்படுத்திய விளைவு எந்த அளவு என்றால், உளவியல் ரீதியாக ஆண்கள் ஒரு இனமாகவும், பெண்கள் வேறு இனமாகவும் பார்க்கப்பட்டார்கள்.
"The year 1884 saw the publication of scientific book in which woman is called Homo parietalis and man is called homo frontilis" --- The history of science and technology: a browser's guide to the great discoveries, inventions, and the people who made them, from the dawn of time to today, Bryan H. Bunch, Alexander Hellemans, 2004, Page No:419. 
1884 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிவியல் புத்தகத்தில் பெண்கள் Homo parietalis எனவும், ஆண்கள் homo frontilis எனவும் அழைக்கப்பட்டார்கள் --- The history of science and technology: a browser's guide to the great discoveries, inventions, and the people who made them, from the dawn of time to today, Bryan H. Bunch, Alexander Hellemans, 2004, Page No:419.  

பெண்கள் தாழ்ந்தவர்களாக சித்தரிக்கப்பட டார்வினுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பால் ப்ரோகா (Paul Broca) என்ற பிரபல பிரெஞ்சு விஞ்ஞானிக்கும் உண்டு. இவர் என்ன செய்தாரென்றால், மனிதர்களின் மூளையை எடை போட்டு பெண்களை விட ஆண்களே உயர்ந்தவர்கள் என்று கூறினார்.

இவருடைய இந்த ஆய்வு சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

பாரிசில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்தினார் ப்ரோகா. சுமார் 292 ஆண் மூளைகளை ஆய்வு செய்த அவர், அந்த மூளைகளின் சராசரி எடை சுமார் 1,325 கிராம்கள் என கண்டறிந்தார். பின்னர், சுமார் 192 பெண் மூளைகளை ஆராய்ந்த ப்ரோகா, அவற்றின் சராசரி எடை சுமார் 1,144 கிராம்கள் என கண்டறிந்தார். ஆக, ஆண்களுடைய மூளைக்கும், பெண்களுடைய மூளைக்கும் சுமார் 181 கிராம்கள் வித்தியாசம். தன்னுடைய ஆய்வு முடிவுகள் 'ஆண்களே அறிவுத்திறனில் உயர்ந்தவர்கள்' என்ற கூற்றை நிரூபிப்பதாக கூறினார் ப்ரோகா.

1873 ஆம் ஆண்டு, L'Homme Mort என்னும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆதிகால மனித மண்டையோடுகளை ஆராய்ந்தார் ப்ரோகா. இந்த ஆய்வின் மூலம் அவர் கண்டறிந்தது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்த மண்டையோடு கொள்ளளளவு வித்தியாசம் சுமார் 99.5 cubic centimeters. இன்றைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கக்கூடிய கொள்ளளவு வித்தியாசம் சுமார் 129.5  to  220.7 cubic centimeters.

ஆக, கொள்ளளவு வித்தியாசங்கள் அதிகரித்திருப்பது, பெண்களை விட ஆண்கள் வேகமாக பரிணமித்திருப்பதற்கு ஆதாரம் என எண்ண தொடங்கினர் ப்ரோகாவின் குழுவினர். இதனை தெளிவாக அறிவிக்கவும் செய்தனர்.

'அறிவுத்திறனில் தாங்கள் தாழ்ந்தவர்களே' என்று அறிவியல் ரீதியாக நம்பவைக்கப்பட்டார்கள் பெண்கள்.

ப்ரோகாவின் குழுவில் இருந்த L.Manouvrier என்பவர், பெண்கள் குறித்த ப்ரோகாவின் கருத்துக்களை நிராகரித்தார். இந்த ஆய்வு குறித்து வேதனையுடன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் L. Manouvrier,

"The  theologians  had  asked  if women had a soul. Several centuries later, some scientists were  ready  to  refuse  them  a  human intelligence" ---  L.Manouvrier, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.    
பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என்று கேட்டனர் வேத விற்பன்னர்கள். பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, சில விஞ்ஞானிகள், பெண்களுக்குண்டான அறிவுத்திறனை மறுக்க தயாராக இருக்கின்றனர் ---  (Extract from the original quote of) L.Manouvrier, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.

ப்ரோகா தோற்றுவித்த பள்ளியின் தலைமை அறிவியலாளர்களில் ஒருவரான ல பான் (Le Bon) வரலாற்றில் முக்கிய விஞ்ஞானியாக அறியப்படுபவர். ப்ரோகாவின் ஆய்வு தகவல்களை உபயோகப்படுத்தி இவர் எழுதிய கட்டுரையை பிரான்சின் மதிப்புமிக்க அறிவியல் ஆய்விதழ் 1879 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் மிக மோசமான, அப்போதைய அறிவியல் உலகம் காணாத நச்சு கருத்தை தெரிவித்திருந்தார் ல பான்.

(பின்வரும் பத்தி மிக மிக சென்சிடிவான தகவல்களை கொண்டது. விரும்பாதவர்கள் பின்வரும் பத்தியை தாண்டி செல்லவும்)
"In  the  most  intelligent  races,  as  among  the Parisians,  there  are  a  large  number  of  women whose  brains  are  closer  in  size  to  those  of gorillas than to the most developed male brains. This  inferiority  is  so  obvious  that  no  one  can contest it for a moment; only its degree is worth discussion. All psychologists who have studied the intelligence of women, as well as poets and novelists, recognize today that they represent the most inferior forms of human evolution and that they are closer to children and savages than to an adult,  civilized  man.  They  excel in  fickleness, inconstancy, absence of thought and logic, and incapacity to reason. Without doubt there exist some distinguished women, very superior to the average man, but they are as exceptional as the birth  of  any monstrosity,  as,  for  example,  of  a gorilla  with two  heads;  consequently,  we  may neglect them entirely" --- Le Bon, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159. 
"பாரிஸ் மக்களை போன்ற அறிவில் சிறந்த இனத்தில், நிறைய பெண்களின் மூளைகள், நன்கு வளர்ந்த ஆணின் மூளையை விடவும், கொரில்லாக்களின் மூளையையே ஒத்து வருகின்றது. இது எதிர்க்க முடியாத உண்மை. பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்த உளவியல் நிபுணர்கள் அனைவரும் இன்று உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருப்பது என்னவென்றால், பரிணாமத்தின் படி அவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதைத்தான்.
பெண்களின் அறிவுத்திறன், நாகரிகம் அடைந்த மனிதனை ஒத்திருப்பதை காட்டிலும், குழந்தைகளையும் காட்டுமிராண்டிகளையுமே ஒத்திருக்கின்றது. சபலத்திலும், நிலையாமையிலும், சிந்திக்க தெரியாமல் இருப்பதிலும், கேள்வி கேட்பதில் திறமையில்லாமல் இருப்பதிலும் பெண்கள் மேம்பட்டிருக்கின்றனர்.
நிச்சயமாக, சராசரி மனிதனை விட (அறிவில்) உயர்ந்த சில பெண்கள் இருக்கின்றனர். எப்படி இரண்டு தலை கொண்ட கொரில்லாக்கள் பிறக்கின்றனவோ அதுபோலவே இவர்களும் விதிவிலக்கானவர்கள். ஆகையால், இவர்களை முற்றிலுமாக நிராகரித்து விடலாம்" --- Le Bon, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.

ல பானின் இந்த கருத்துக்கள் எரிச்சலூட்டுபவை. ஆனால் இதே போன்றதொரு கருத்தை தான் டார்வினும் கொண்டிருந்தார். பெண்களின் சில பழக்க வழக்கங்கள் கீழ்நிலை இனங்களோடு ஒத்துபோவதாக கூறியவர் அவர்.  அதுமட்டுமல்லாமல், நாகரிகத்தில், தாழ்வான நிலையிலேயே பெண்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டவர் டார்வின்...
"It is generally admitted that with woman the powers of intuition, of rapid perception, and perhaps of imitation, are more strongly marked than in man; but some, at least, of these faculties are characteristic of the lower races, and therefore of a past and lower state of civilisation" --- Charles Darwin, The Decent of Man, 1871, Page No. 326-327.
ல பான் இதோடு நிறுத்தவில்லை. பெண்களுக்கு உயர் கல்வி தரும் அமெரிக்க சீர்திருத்தவாதிகள் சிலரது திட்டத்தையும் கேள்வி கேட்டார். இயற்கை பெண்களுக்கு கொடுத்துள்ள தாழ்வான நிலையை தவறாக புரிந்து கொள்ள கூடாதென்றும், ஆண்களுக்கு நிகராக அவர்களுக்கு கல்வி கொடுக்கப்பட்டால் சமூக புரட்சி நடந்து குடும்ப பிணைப்புகள் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

பான் போல தங்களது சொந்த கருத்துக்களுக்கு ஆதரவாக அறிவியலை வளைத்து கொண்ட அறிவியலாளர்கள் அன்று இருந்தனர்.

உதாரணத்திற்கு, மனிதனுடைய புத்திசாலித்தனம், மூளையின் "frontal lobe" பகுதியை சார்ந்தே அமைந்திருக்கின்றது என சில விஞ்ஞானிகள் எண்ணினர். பின்னர், பெண்களுடைய frontal lobe பகுதி ஆண்களை விட பெரியது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தங்களுடைய எண்ணத்தை மாற்றி கொண்டனர். அதாவது, புத்திசாலித்தனதுக்கு Frontal Lobe காரணமல்ல, Parietal Lobe பகுதியே காரணமாக இருக்க வேண்டுமென்று தங்களது எண்ணத்தை மாற்றி கொண்டனர்.

(ஒருவேளை, பெண்களின் மூளை ஆண்களை விட பெரியது என்று கண்டுபிடித்திருந்தால், புத்திசாலித்தனத்துக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லை என்று முடிவு கட்டியிருப்பார்கள் போல...)

பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் டார்வின் முதற்கொண்டு அன்றைய விஞ்ஞானிகள் பலருக்குள்ளும் நன்கு பதிந்திருந்ததால், தங்களது எண்ணங்களுக்கு ஏற்றவாறு தான் அறிவியலை அணுகினார்களே தவிர தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல.          

இன்றைய சூழல்: 

உயரம், பருவம் ஆகியவையை சார்ந்து(ம்) மூளையின் அளவு வேறுபடும். இன்றைய மனிதர்களிலேயே கூட மூளையின் அளவில் நிறைய வேறுபாடு உண்டு. ஆக, மூளையின் அளவை கொண்டு அறிவுத்திறனை கணக்கிடுவதெல்லாம் இன்றைய அறிவியலுக்கு ஒத்துவராதது. அவை தவறென நிரூபிக்கப்பட்டவை. ப்ரோகா முதற்கொண்டு பல விஞ்ஞானிகளின் பெண்கள் குறித்த ஆய்வுகளை "non-sense" என்று கூறுகின்றது இன்றைய அறிவியல்.

அதுபோல, ஆண் பெண் வித்தியாசம் குறித்த டார்வினின் கூற்றுக்கும் ஆதாரங்கள் இல்லை.  இருந்தாலும், டார்வின் அறிமுகப்படுத்திய Sexual Selection Hypothesis இன்றளவும் ஆண், பெண் வித்தியாசங்களுக்கான சிறந்த விளக்கமாக பார்க்கப்படுவதாக விக்கிபீடியா கூறுகின்றது.

அவ்வப்போது அறிவுத்திறன் குறித்த சர்ச்சைகள் தோன்றி கொண்டுதான் இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் தலைவர் லாரான்ஸ் சம்மர்ஸ் (Lawrence Summers) மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். அறிவியல் மற்றும் கணக்கு துறைகளில் பெண்கள் (அதிக அளவில்) வெற்றி பெற முடியாததற்கு காரணம், அவர்கள் பிறப்பிலேயே அப்படித்தான் என்று அவர் கூறினார். ஆம், அன்று டார்வின் கொண்டிருந்த அதே கருத்துக்கள் இன்று சம்மர்ஸ் வாயிலிருந்து வந்து விழுந்தன. 

டென்மார்க்கை சார்ந்த பிரபல மனோதத்துவ நிபுணரான ஹெல்முத் நைபோர்க் (Helmuth Nyborg) பெரும் சர்ச்சையை சில ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தினார். சர்ச்சைக்கு காரணம், "Personality and Individual Differences" என்ற அறிவியல் ஆய்விதழில் வெளிவந்த அவருடைய ஆய்வு கட்டுரை. அந்த கட்டுரையில், பெண்களை விட ஆண்களே அறிவில் சிறந்தவர்கள் என்று தன்னுடைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது மிகுந்த எதிர்ப்புகளை சந்திக்க, தன்னுடைய பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார் நைபோர்க். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நைபோர்க்கின் ஆய்வில் எந்த தவறுமில்லை என்று அவருக்கு ஆதரவாக பல ஆய்வாளர்கள் திரண்டது தான்.

நைபோர்க் சர்ச்சைகளில் சிக்கியது இது முதல் முறையல்ல. கருப்பினத்தரை விட வெள்ளை இனத்தவரே அறிவில் சிறந்தவர்கள் என்று ஏற்கனவே கருத்து கூறியிருந்தவர் நைபோர்க்.

நைபோர்க்கின் கருத்துக்களை உற்று நோக்குங்கள். டார்வினின்  பார்வைகளும் இப்படித்தான் இருந்தன.  

ஆக, இன்றளவும் இந்த சர்ச்சைகள் குறையவில்லை. பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறும் பிரபல ஆய்வாளர்கள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆணாதிக்கத்திற்கு துணை போய் கொண்டு தான் இருக்கின்றனர்.

முடிவாக: 

வரலாற்றை ஆழ்ந்து நோக்கும் யாருக்கும் தெரியவரும் உண்மை என்னவென்றால், பெண்ணடிமைத்தனத்திற்கு சமூகம் மட்டுமே காரணமல்ல, விஞ்ஞானிகளும் காரணம் என்பதுதான். 

அந்த விஞ்ஞானிகளுக்கு உறுதுணையாக இருந்து, பெண்களை உளவியல் ரீதியாக காயப்படுத்தியது பரிணாமம் என்ற ஆதாரமில்லாத கோட்பாடு தான்.

உண்மைகள் வரலாற்றில் மறைத்திருக்கப்படலாம். ஆனால் அவை நிரந்தரமாக மறைந்திருக்காது.

ஆணாதிக்கத்தை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தி, ஆணாதிக்க சமூகத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்தது பரிணாம கோட்பாடு. பெண்ணடிமைத்தனத்தை போற்றி வந்த மனிதர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது பரிணாம கோட்பாடு.

"Charles darwin believed in general female inferioty in reasoning, creative imagination, and so on...A refinement of the 'inferiority' theme took shape with the development  of evolutionay theory in the mid-19 century" - Judith Worell, Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender, Volume 1, 2001, Page No.595.
படைப்பு திறன், கேள்வி கேட்கும் திறன் என இன்னும் பல பிரிவுகளில் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை டார்வின் கொண்டிருந்தார்...  
பரிணாம கோட்பாடு வளர்ச்சி பெற ஆரம்பிக்க '(பெண்கள்) தாழ்ந்தவர்கள்' என்ற கருத்தும் வடிவம் பெற ஆரம்பித்தது" -  (Extract from the original quote of) Judith Worell, Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender, Volume 1, 2001, Page No.595.  

எப்படி தன் இனவெறிக்கு பரிணாமத்தை காரணமாக காட்டி நியாயம் கற்பித்தாரோ ஹிட்லர், அதுபோலவே, பெண்கள் குறித்த தங்களது பாரபட்சமான கருத்துக்களுக்கு காரணமாக ஆய்வாளர்கள் கை நீட்டியது பரிணாம கோட்பாடை நோக்கி தான்.

அறிவியல் கருத்துக்கள் மாறக்கூடியவை. மூளையின் அளவை கொண்டு அறிவுத்திறனை(??) கணக்கிட்டார்கள் என்றால் அது அன்றைய தவறான புரிதல். அதுபோலவே, பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரங்கள் இருப்பதாக அன்று நம்பினர். பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அந்த ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் ஆகி, இன்றோ, அதற்கு நேர்மாறான நிலைமையல்லவா இருக்கின்றது!!!

பரிணாம ஆதரவாளர்களிடம் மீண்டும் நான் கேட்டு கொள்வதெல்லாம், திறந்த மனதோடு பரிணாம கோட்பாட்டை ஆராய முன்வாருங்கள் என்பதுதான். பரிணாமத்தால் மனித சமுதாயம் அடைந்த பயன் என்று ஒன்றுமில்லை. அறிவியல் போர்வையில் தவறான தகவல்கள், இனவெறி, பெண்கள் தாழ்த்தப்பட்டது (and etc) என இவைதான் பரிணாம கோட்பாடு நமக்கு கொடுத்த பரிசுகள்.

பெண்ணுரிமை ஆர்வலர்கள் எதிர்த்து போராட வேண்டியது ஆணாதிக்க சமூகத்தை மட்டுமல்ல, அவர்களுக்கு துணை போய் கொண்டிருக்கும் ஆய்வாளர்களை எதிர்த்தும் தான்...

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான் - (குரான் 33:35)

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்
 
Sourse: ethirkkural.
 

வீட்டு புரோக்கர்களுக்கு வருகிறது பெரிய ஆப்பு!


அருமையான ஸ்பேஸ் உள்ள 2 பெட்ரூம் வீடு ஸார்... சிட்டிக்குள்ளே ப்ரைம் லொக்கேஷனில் வாடகைக்கு கிடைக்கிறது என்று ஷாப்பிங் மால்களில், லோக்கல் நியூஸ்பேப்பர்களில் மின்னும் விளம்பரங்களைக் கண்டு ஃபோன் செய்தால் அனைத்தையும் விவரிப்பார் அந்த நபர்.
சரி வீட்டைப் பார்க்கணும் என்றால் உடனே வரச் சொல்லி அழைத்துச் சென்று காட்டுவார். ஓக்கே... பிடித்திருக்கிறது. காண்ட்ராக்ட் போடலாமே? என்று சொன்னால் வீட்டு ஓனருக்கான கூடுதல் விபரங்களைத் தரும் முன், ஒருமாத அல்லது பாதிமாத வாடகை வேணும். அது "கம்பெனி செலவுக்கு / ஆபீஸ் சார்ஜ் ஸார்!" என்பார்.

அவருக்கான அந்தப் பெருந்தொகையினை கமிஷன்(!) கொடுத்த பின்னரே அவருக்கும் அந்த வீட்டு ஓனருக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என்ற விபரமே தெரியவரும். வெறுமனே ஓனரின் தொலைபேசி எண்களை மட்டுமே வைத்துக் கொண்டு உரிமையாளர் போன்று விளம்பரங்கள் செய்து பல லட்சம் சம்பாதித்துக் கொழிக்கும் பெரும் கூட்டமே உள்ளது.

இதில் பல ரகங்கள் உள்ளன. ஒரு பங்களா டைப் வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, உரிமையாளருக்குத் தெரியாமல் அந்தக் கட்டிடத்தை பத்தாக கூறு போட்டு அதில் பதினைந்து குடும்பங்களை வாடகைக்கு விட்டு பணம் கொழிப்பது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், வீடு கிடைக்காத திண்டாட்டத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, வீட்டின் உரிமையாளருக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஆசாமிகள், இவ்வாறு இடைத்தரகர்களாக மாறி பணம் கொழிப்பது வளைகுடா நாடுகளில் வழக்கமாகி விட்ட ஒன்று.

தமது சம்பளத்தில் பாதிக்கு மேற்பட்ட தொகையினை வாடகைக்கே செலவிடும் வயிற்றெரிச்சலுடன் வேறு வழியில்லாமல் கிடைக்கும் ஒட்டு ஒடைசல் இடத்தில் ஒதுங்கிக் கொள்ளும் குடும்பங்கள் பற்றி ஒரு பெரிய டாக்குமெண்டரி படமே எடுக்கலாம். அத்தனை சோகங்கள் ஒளித்துள்ளன. இதில் உச்சகட்டமாக அதிக பட்ச வீட்டு வாடகை விலைகள் உள்ள சிறிய நாடான கத்தரில் பல வருடங்களாக இத்தகைய புரோக்கர்களின் ஆட்டம் இருந்து வந்தது. பொதுமக்கள் மிகவும் துன்பத்திற்குள்ளாக்கி வந்த இந்த ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஆம். கத்தர் அரசு இத்தகைய இடைத்தரகர்களுக்கு QR. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டமொன்றை (Law No 13 of  2011) நேற்று 26-07-2011 உருவாக்கி வெளியிட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி ஏஜண்ட்/புரோக்கர் தொழில் செய்யும் தனிநபரோ, நிறுவனமோ அரசு பதிவு பெற்றபின்னரே செய்ய இயலும். இதற்கான லைசென்ஸை அரசே முன்னின்று வழங்குகிறது.

லைசென்ஸ் உரிமம் பெற்ற ஏஜெண்ட் எந்த அளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை இதன் விண்ணப்பத்தில் காணப்படும் விதிகள் தெளிவு படுத்துகின்றன.

இந்த லைசென்ஸைப் பெற அரசிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனைப் பரிசீலித்தபின்னர் 30 நாட்களுக்குள் இதற்குண்டான பதிலை அரசு தெரிவிக்கும். இந்த லைசென்ஸ் இருவருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பின்னர் மீண்டும் ரினிவலுக்காக அப்ளை செய்யவேண்டும்.

லைசென்ஸ் பெற்று இதிலுள்ள விதிகளை மீறும் ஏஜெண்ட்டின் உரிமம் Articles 9, 8, 11 and 12 படி உடனடியாக ரத்து செய்யப்படும்.

இந்த லைசென்ஸ் இல்லாமல் விளம்பரம் செய்து "கம்பெனி செலவு" அல்லது "ஆபிஸ் பீஸ்" என்று சம்பாதிக்கும் இடைத் தரகர்களுக்கு உடனடியாக ஐம்பதாயிரம் ரியால்கள் (கிட்டத்தட்ட ஆறு இலட்சம் இந்திய ரூபாய்கள்) அபராதம் விதிக்கப்படும். கட்ட இயலாதவர்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

இது நாள் வரை புரோக்கர்களின் கொட்டத்தில் மாட்டித் தவித்து வந்த பொதுமக்கள், அரசின் இந்த அறிவிப்பு கண்டு நிம்மதிப் பெருமூச்சுடன் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

100 மருத்துவக் குறிப்புகள்



1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.


2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.


3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.


4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.


5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.


6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.


7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.


8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.


9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.


பெண்களுக்காக...

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.


11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.


12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.


13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.


கர்ப்பக் கால கவனிப்பு!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!


15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.


16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.


17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.


18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.


19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.


20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.


21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.


22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.


23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.


24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.


25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.


26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.


27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.


28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.


29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.


30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.


31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.



உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!


33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.


34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.


35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.


36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.


37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.


38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.


39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.


40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.


41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.


42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.


43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.


44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.


45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.


46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.


47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.


48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.




மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.


50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.


51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.


52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.


லப்... டப்..!


53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.


54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.


55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.


56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.


57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.



கிட்னியைக் கவனியுங்கள்


58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.


59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!


60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.


61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.



பல்லுக்கு உறுதி!


62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.


63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.


65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.


66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.


67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.


68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.


69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.


70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.


71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.


72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.


73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.


74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்


75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.



ஜெனரல் வார்டு!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.


77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.


78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.


79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.


80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.


81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.


82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.


83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.


85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.



நில்... கவனி... செல்!


86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது... தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.


87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.


88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.


89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்... அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.



90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.


91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.


92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.


93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.


94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.


எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.


96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.


97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.


98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.


99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.


100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

நன்றி: விகடன்.

மகி, தமிழ் கருத்துக் களம்

http://tamil.darkbb.com/t99-topic