அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, December 24, 2008

mumbai

மும்பை : "இந்தியா - பாகிஸ்தான் இடையே நட்பு தொடர்ந்து வந்த நிலையில், திடீரென பெரும் இடைவெளி விழுந்துவிட்டது; எதற்கெடுத்தாலும், இரு நாடுகளும், அமெரிக்காவை அண்டியிருப்பதை கைவிட வேண்டும்; பரஸ்பரம் பேசித்தீர்க்க வேண்டும்'-முஷாகித் உசேன்; பாகிஸ்தானில் மூத்த பத்திரிகையாளர்; அரசியலில் புகுந்து முஷாரப் கட்சியில் தலைவர்; கோல்கட்டாவில் இருந்து வெளிவரும் டெலிகிராப் உட்பட சில முக்கிய இந்திய பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வருபவர்.மும்பை பயங்கரம் நடந்ததை அடுத்து, பாகிஸ்தானில் இருந்து வந்த முதல் அரசியல் தலைவர் இவர்.
பேட்டியில் கூறியதாவது:இந்தியாவும் பாகிஸ்தானும் வார்த்தைபோரில் இறங்கியிருப்பது துரதிருஷ்டமானது; இரு நாடுகளும் அண்டை நாடுகள் என்ற நட்போடு இருக்க வேண்டும். மும்பை பயங்கரத்துக்கு முன், இஸ்லாமாபாத் மேரியாட் ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்; மும்பை பயங்கரத்துக்கு பின், பெஷாவரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தியுள்ளனர். இப்படி பயங்கரவாதிகள், இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் பரவி தாக்குதல் நடத்தித் தான் வருகின்றனர். அவர்களை ஒடுக்க வேண்டுமானால், இந்திய , பாக்.,கில் அமைதி நிலவ வேண்டுமானால், முதலில் இருநாடுகளும் எதற்கெடுத்தாலும் அமெரிக்காவிடம் போய் கெஞ்சுவதை நிறுத்த வேண்டும்; தங்கள் பிரச்னைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். மும்பை பயங்கரத்தை தொடர்ந்து, பயங்கரவாதிகள் தொடர்பான ஆதாரங்களை அமெரிக்கா, ஜெர்மனியிடம் சொல்ல இந்தியா தீவிரமாக இருக்கிறது;
ஆனால், பாகிஸ்தானிடம் நேரடியாகவே தெரிவித்து, விசாரணை செய்து, அதன் ஒத்துழைப்பையும் பெற்று தீர்த்துக்கொள்ளலாம். அப்போது தான் பாகிஸ்தானும் பொறுப்புடன் செயல்படும். மும்பை பயங்கரத்தில் சிக்கிய பயங்கரவாதியின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன், பாகிஸ்தானிடமே கூறி, விளக்கம் பெற்றிருக்கலாம். அதன் மூலம் உலகுக்கும் எடுத்துக்காட்டலாம். எதற்கும் போர் உதவாது; அமைதிக்கு தொடர்ந்து முயற்சிக்கும் பேச்சு தான் உதவும். இவ்வாறு உசேன் கூறினார்.

vatti

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (al quran 2:275)

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (alquran2:276)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(alquran2:278)

வட்டி விகிதத்தை அடியோடு குறைத்தது அமெரிக்கா!
புதன்கிழமை, டிசம்பர் 17, 2008, 14:11 [IST]
வாஷிங்டன்: வட்டி விகிதத்தை அடியோடு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது அமெரிக்க நிதித்துறை.

பெருமந்தச் சூழலில் தவிக்கும் தனது பொருளாதாரத்தை எப்படியாவது சீராக்கிவிடும் முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்கா.

அதன் ஒரு கட்டமாக, வங்கி வட்டி விகிதங்களை அடியோடு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை 1 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதத்தை 0 முதல் 0.25ஆகக் குறைத்துவிட்டது. பல வகைக் கடன்களுக்கு இனி வட்டியே கிடையாது. அடுத்த ஆண்டு இறுதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும் நிதித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.



அதேபோல, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பு முழுமையாக அரசின் வசம் இருந்தாக வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பதாகவும் நிதித்துறை அறிவித்துள்ளது.

இனி அனைத்து பணவியல் காரணிகளையும் ஒருங்கிணைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான், அமெரிக்காவின் இன்றைய நெருக்கடியைத் தீர்க்கும் என்றும் நிதித்துறை கூறியுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தையில் மிகவும் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. டோவ் ஜோன்ஸில் இன்று மட்டும் 4.2 சதவிகிதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.

புதிய சிக்கல்:

ஆனால், என்னதான் வட்டி விகிதக் குறைப்பை அமல்படுத்தினாலும் கூட அடுத்த ஆண்டு இறுதி வரை பொருளாதார மந்த்த்திலிருந்து மீளும் வாய்ப்பே இல்லை என்றும், இன்னும் நிலைமை மோசமாவதைத் தடுக்க முடியாது என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, பொராதாரத்தில் அரசின் பிடிமானம் மேலும் அதிகரிக்க வழிசெய்யும் முயற்சியில் புதிய அதிபர் ஒபாமா இறங்க வேண்டும் என்றும் அவர்கள் யோசனைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கான முயற்சிகளில் ஒபாமா ஏற்கெனவே தீவிராமாக இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பொருளாதாரம் முழுக்க முழுக்க தனியார் மயமானது. முதலாளித்துவத் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவது என்பதால், அரசின் தலையீடு இதுவரை மிக்க் குறைவாகவே இருந்துவந்தது. மேலும் இத்தகைய பொருளாதாரச் சுழறஅசி நிலை அமெரிக்காவுக்கு புதிதும் அல்ல.

ஆனால் 1940-களில் நடந்த உலகப் பெருமந்தத்துக்கு இணையான நெருக்கடி இப்போது ஏற்பட்டுள்ளதால், தங்கள் பொருளாதாரத்தின் அடிப்படைச் சித்தாந்தத்தையே ஓரளவு மாற்றிக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது அமெரிக்கா. தொழில்துறை மற்றும் நிதித்துறையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ரவுடிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த சாமியார் கைது

ரவுடிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த சாமியார் கைதுதிருச்சி: திருச்சி அருகே பிரபல ரவுடிகளுக்கு வெடி குண்டு சப்ளை செய்த சாமியார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி உறையூர் தொழில் அதிபர் பாலகிருஷ்ணன், புத்தூர் ஒட்டல் ஊழியர் கருணாகரன், உறையூர் ஜவுளி தொழில் அதிபர் ஆதிமூலம் ஆகியோரை கடந்த சில திங்களுக்கு முன்பு பிரபல ரவுடிகள் கண்ணாடி ஆனந்த், எடமலைப்பட்டி புதூர் பிரதாப், சறுக்குப்பாறை ஆனந்த், ஒத்தக்கை வினோத் ஆகியோர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது.

தகவல் அறிந்த போலீசார் துரித கதியில் செயல்பட்டு அந்த ரவுடிகளை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீசார் கண்களில் இருந்து தப்பிச் சென்ற மணச்சநல்லூர் குணாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ரவுடி கும்பல்களுக்கு வெடி குண்டு தயாரித்துக் கொடுத்த மணச்சநல்லூர் அண்ணாநகர் கீழ காமாட்சித் தெரு சாமியர் அழுக்கு சித்தன் என்கின்ற சரவணனை திருச்சி கோட்டை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் ரவுடிகளுடன் ஏற்பட்ட தொடர்பு, வெடி குண்டு தயாரிப்பு பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

"இஸ்லாமிய கேள்வி பதில

"இஸ்லாமிய கேள்வி பதில்" - 1 new article

  1. "ஸல்" "அலைஹி" உங்களுக்கும் தான்.
  2. More Recent Articles
  3. Search இஸ்லாமிய கேள்வி பதில்

"ஸல்" "அலைஹி" உங்களுக்கும் தான்.

ஸலாமுன் அலைக்கும்.
பொதுவாக முஸ்லிம்கள் இஸ்லாமிய கட்டுரைகள் எழுதும் போது இறைத்தூதர்களையோ முஸ்லிம் பெரியார்களையோ குறிப்பிடும் போது பெயருக்கு பக்கத்தில் சுருக்கமாக சில எழுத்துக்களை எழுதுவார்கள். பலருக்கு இது குறித்து சந்தேகம் மற்ற சிலர் விரும்பியவாரு விளக்கங்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள். எனவே அது குறித்த விளக்கத்தை தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு வைக்கிறோம்.

முஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.

பிற நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

நபித்தோழர்களைப் பற்றி எழுதும் போது ரலி என்று வரும். ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு (ஆண்பால்) அல்லது ரலியல்லாஹு அன்ஹா (பெண்பால்) என்பதன் சுருக்கம். இவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது இதன் பொருள்.

ரஹ் என்பது ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதன் சுருக்கம். அல்லாஹ்வின் அருள் இவருக்கு ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

சுருக்கமாக இப்படி எழுதுவது சரியல்ல என்றாலும் எழுதுபவர்கள் அதே பழக்கத்திற்கு ஆட்பட்டு விட்டார்கள். ஆனாலும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்

எழுதும் போது சுருக்கத்திற்காக இப்படி எழுதினாலும் வாசிக்கும் போது முழுமையாக வாசிக்க வேண்டும்.

குறிப்பிட்ட இந்த நான்கு வகையான சொற்களையும் குறிப்பிட்ட சிலருக்குதான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. பொதுவாக அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

(ஸல்)

இறைத்தூதர் முஹம்மத் அவர்களுக்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மாதிரியே இதர நபிமார்களுக்கும் இதர முஸ்லிம்களுக்கும் கூட இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்த்தாலே இது புரியும் என்றாலும் பிறர் தப்புப்பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால் கூடுதலாக விளக்குவோம்.

ஸலவாத் எனும் அருளை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காக கேட்க வேண்டும் என்று 33:56 வசனம் கூறுகின்றது.

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள் (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனம் பற்றி பஷீர் இப்னு ஸஃது (ரலி) இறைத்தூதரிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இறைவன் உங்களுக்காக ஸலவாத் சொல்லுமாறு கூறுகின்றானே நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் 'அல்லாஹும்ம ஸல்லி..... என்ற ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்த விட்டு உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது போன்று ஸலாம் கூறுங்கள் என்றார்கள். (அபூ மஸ்வூத் (ரலி) முஸ்லிம்)

நபிக்காக ஸலவாத் கூற வேண்டும் என்று இறைவன் கூறினாலும் நபி(ஸல்) கற்றுக் கொடுத்த ஸலவாத் தொழகையின் இருப்பிற்குரிய ஸலவாத் என்றே நபித்தோழர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஏனெனில் நபி(ஸல்) தொழுகை இருப்பில் ஓதுமாறு இதைக் கற்றுக் கொடுத்ததாகவும் அறிவிப்புகள் உள்ளன.

உங்களில் ஒருவர் தொழுதால் இறைவனை மகிமைப்படுத்தி போற்றி புகழ்ந்து பின்னர் நபிக்காக ஸலவாத் கூறி பின்னர் தன் தேவைகளைக் கேட்கட்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஃபளாலா இப்னு உபைத்(ரலி) நஸயி திர்மிதி)

என்னைப் பற்றி நினைவுக் கூறும்போது ஸலவாத் கூறுங்கள். ஸலவாத் கூறாதவன் கஞ்சன் என்றெல்லாம் அறிவிப்புகள் வருகின்றன (இப்னுமாஜா)

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நபித்தோழர்கள் நபியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதை சேர்த்தே பயன்படுத்தி வந்தார்கள்.

எனவே நபியைப் பற்றிக் குறிப்பிடும் போது இறையருளைப் பெற்றுக் கொடுக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற வார்த்தையும் பொருத்தமானதுதான் என்றாலும் காலாகாலமாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தை நிலைப் பெற்று விட்டது.

நபிக்காக ஸலவாத் கூறுவது இறைவன் இட்ட கட்டளை என்பதால் முஸ்லிம்கள் மீது அது கடமையாகும். ஆனாலும் இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். இறைவன் நபிக்காக அருள் புரிகிறான். வானவர்கள் அருளை வேண்டுகிறார்கள். இறைநம்பிக்கையார்களே நீங்களும் இந்த தூதருக்கு ஸலாம் சொல்லி அவருக்காக ஸலவாத் கூறுங்கள் என்ற வசனம் ஜும்ஆ மேடைகளில் தவறாமல் நினைவுக் கூறப்படும். அந்த வசனத்தின் அர்த்தம் புரியாதவர்களும் அர்த்தம் புரிந்தவர்களும் கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இறைவனே நேரடியாக இந்தக் கட்டளையை இடுவதால் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது.

(அலை)

இதர நபிமார்கள் அனைவரையும் குறிப்பிடும் போது அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூறும் மரபு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வருகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர்த்து பிற நபிமார்களுக்கு எந்த அடைமொழியும் (வாழ்த்தும்) சேர்ந்து வர வேண்டும் என்ற எந்தக் கட்டளையும் குர்ஆனில் இல்லை.

இறை நம்பிக்கையாளர்களே இந்த நபிக்காக பிரார்த்தித்து ஸலாமும் கூறுங்கள் என்ற இறைக் கட்டளையை நாம் அறிந்தோம். இதர நபிமார்களுக்கு இத்தகைய கட்டளையை இறைவன் இடவில்லை. இதர நபிமார்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது அந்தந்த நபிமார்களின் பெயர்களை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார்களேத் தவிர அவர்களின் பெயர்களோடு அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற அடைமொழியை குறிப்பிட்டதில்லை.

நல்லப் பண்பின் அடையாளமாக இத்தகைய அடைமொழிகள் இந்த உம்மத்தில் நீடித்து நிற்கின்றது.

ஆனாலும் இந்த அடைமொழிகளை நபிமார்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியும் இல்லை. இறை நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இத்தகைய அடைமொழியை பயன்படுத்தினாலும் அதை தவறென்று சொல்லி தடுக்கும் எந்த ஆதாரமும் இல்லை.

அனுமதிக்கும் ஆதாரத்தைப் பார்ப்போம்.

هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا

(இறை நம்பிக்கையாளர்களே) இறைவன் உங்களுக்காக (ஸலவாத்) அருள்புரிகிறான். அவனுடைய வானவர்களும் (உங்களுக்காக) பிரார்த்திக்கிறார்கள் (அல்குர்ஆன் 33:43)

நபி(ஸல்) அவர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தைகள் இங்கும் பிற முஃமின்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் அருள் புரிகிறான் வானவர்களும் அருளை வேண்டுகிறார்கள் என்று.

ஸல்லல்லாஹு அலைஹி என்றால் அல்லாஹ் அவருக்கு ஸலவாத் அருள் புரிகிறான் என்பது பொருள். அனைவருக்குமே அல்லாஹ்வின் ஸலவாத் உண்டு என்பதால் ஸல்லல்லாஹு அலைஹி என்பதை அனைவருக்குமே பயன்படுத்தலாம். வஸல்லம் (அல்லாஹ் அவருக்கு (சாந்தி) வழங்கட்டும்) என்பதையும் அனைவருக்கும் பயன்படுத்தலாம். அல்லாஹ்வின் ஸலாம் அனைவருக்கும் இருப்பதாலேயே ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுகிறோம். கூறவேண்டுமெனறு முஹம்மத் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அல்லாஹ் அவருக்கு ஸலவாத்தும், ஸலாமும் வழங்கட்டும்'' என்பது ஸல்... என்பதன் பொருள். இவருக்கு ஸலவாத்தும் ஸலாமும் ஏற்படட்டும் என்பது அலை என்பதன் பொருள். அல்லாஹ் என்பது இங்கே கூறப்படவில்லை என்பதைத் தவிர இரண்டும் ஒரே கருத்தைக் கூறும் இரண்டு வார்த்தைகள் தாம்.

இதிலிருந்து பிரார்த்திக்கும் எண்ணத்தில் பிற நம்பிக்கையாளர்களுக்கு இத்தகைய அடைமொழியை இட்டால் அதை தடுக்க முடியாது.

ஆனாலும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

நபிமார்களுக்கென்று அடைமொழியாகி விட்ட ஒரு வார்த்தையை பிறருக்கு பயன்படுத்தும் போது போலி நபி போன்ற குழப்ப நிலையும் வீண்மனக் கஷ்டங்களும் தோன்றும். சர்ச்சைகளும் அவதூறுகளும் கிளம்பும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

(ரலி)

நபித்தோழர்களைக் குறிப்பிடும் போதெல்லாம் ரலியல்லாஹு அன்ஹு என்பதை நாம் பயன்படுத்துகிறோம். இதற்கு காரணம் இறைவனின் இந்த வசனங்கள் தான்.

وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللّهُ عَنْهُمْ وَرَضُواْ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். (அல்குர்ஆன் 9:100)

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். (அல் குர்ஆன் 48:18)

முதல் வசனத்தில் ரளியல்லாஹு அன்ஹும் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்) ரளு அன்ஹு (அவனை அவர்கள் பொருந்திக் கொண்டார்கள்)

இரண்டாவது வசனத்தில் ரளியல்லாஹு அனில் முஃமினீன் (முஃமின்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்) என்று கூறப்பட்டுள்ளது. முஃமின்கள் என்று இங்கு (இந்த இடத்தில்) கூறப்பட்டுள்ளது நபித்தோழர்களைத் தான் ஏனெனில் அவர்கள் தான் நபியுடன் மரத்தடியில் இருந்தவர்கள்.

சரி, நபித்தோழர்களல்லாத பிறருக்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாதா.. அடுத்து வரும் வசனங்களைப் பார்ப்போம்.

لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءهُمْ أَوْ أَبْنَاءهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُوْلَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُوْلَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் 58:22)

قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللّهِ وَاللّهُ بَصِيرٌ بِالْعِبَادِ

நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.(அல் குர்ஆன் 3:15)

جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ

அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும். (அல்குர்ஆன் 98:8)

மற்ற நல்லடியார்கள் அனைவருக்கும் ரலி என்பதையும் அதிலிருந்து பிறந்த ரில்வான் என்பதையும் இவ்வசனங்களில் இறைவன் பயன்படுத்தியுள்ளான். இதை நபிமார்களுக்கும் நபித்தோழர்களுக்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் பயன்படுத்தலாம். மார்க்க அடிப்படையில் இதைத் தடுக்க முடியாது. ஆனாலும் நாம் மேற் கூறிய அதே அடிப்படையில் பிறருக்கு ரளி என்பதை பயன்படுத்தும் போது அப்படி ஒரு நபித்தோழர் இருந்தாரோ... என்ற சந்தேகம் வரலாம். இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

ரஹ்மதுல்லாஹி அலைஹி

அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்யட்டும் என்பது இதன் பொருள். அல்லாஹ்வின் ரஹ்மத்தை யாருக்காகவும் கேட்கலாம். கேட்க வேண்டும். காலம் சென்ற மகான்கள் என்று நம்பப்படுபவர்களுக்குத் தான் இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அல்லாஹ்வின் ரஹ்மத் அனைவருக்கும் பொதுவானதாக என்பதற்கு நூற்றுக்கணக்கான வசனங்கள் சான்றுகளாக உள்ளன. அது ஒரு பிரார்த்தனை என்பதாலும், இதை பயன்படுத்துவதில் எத்தகைய குழப்பமும் ஏற்படவாய்ப்பில்லை என்பதாலும் இதை பயன்படுத்தலாம்

மேற்கொண்டு விளக்கம் தேவைப்படுவோர் எழுதவும்.

--

பம்பாய் கலவரத்திற்கு மூல காரணகர்த்தா இந்திய பயங்கரவாதி மோடி.

பம்பாய் கலவரத்திற்கு மூல காரணகர்த்தா இந்திய பயங்கரவாதி மோடி.
To:


ஆதாரத்தை கொடுங்கள் நடவடிக்கை எடுபக்கின்றோம் என்று பாகிஸ்தான் பலமுறை கூறிய பின்னரும் இதுவரை தகுந்த ஆதாரத்தை இந்தியா சமர்ப்பிக்காமல் இருந்து வருகிறது.
மும்பை கலவரம் இந்திய பங்கரவாதி மோடியும், இஸ்ரேலிய பயங்கரவாத மொஸாதுடைய செட்டப் தான் என்பதை நன்றாக அறிந்திருந்தும் இந்திய சங்பரிவார ஊடங்கங்களும் உலக யூத, சியோனிஸ ஊடகங்களும் பாகிஸ்தானில் தீவிரவாதம் என்று ஒப்பாரி இடுகின்றன போதாக்குறைக்கு ஐநா பொதுச் செயலர் காண்டலிஸா ரைஸை இந்தியா – பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பல்லவியை பாட விட்டிருக்கின்றனர்.

Monday, December 22, 2008

advani matter

 
அத்வானியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தான் கோரிக்கை
 
தாவூதுக்கு அத்வானியை கேட்கும் லஷ்கர்!!

சனிக்கிழமை, டிசம்பர் 6, 2008,

Advani
இஸ்லாமாபாத்: தாவூத் இப்ராகிமை ஒப்படைக்கக் கோரும் இந்தியா முதலில் அத்வானி உள்ளிட்டோரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என லஷ்கர் இ தொய்பா அமைப்பும், சில பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் குதர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தான் இந்தக் கோரிக்கையை அரசியல்வாதிகள் சிலர் வைத்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள், தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவர், ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோருவது போல, எல்.கே.அத்வானி போன்றோரை நாமும் கேட்க வேண்டும்.

இவர்கள் பாகிஸ்தானின் மோஸ்ட் வான்ட்டட் பட்டியலில் உள்ளவர்கள். இவர்களை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இந்தியா முன்வர வேண்டும் என்று கோரினார்களாம்.

sivakasi matter

சிவகாசியில் விஸ்வ இந்து பரிஷத் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

டிசம்பர் 06,2008,00:00  IST




சிவகாசி : சிவகாசியில் விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி அமைப்பினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். சிவகாசியில் த.மு.மு., மனித நீதி பாசறை அமைப்பினர் டிச.,6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதே போல் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் "ராமர் ஆலயம் மீட்போம், மீண்டும் ஆலயம் அமைப்போம்' என்ற வாசங்களுடன் போஸ்டர்கள் ஒட்டினர்.



நேற்று முன்தினம் இரவு விஸ்வ ஹிந்து பரிஷத் போஸ்டர்கள் மீது முஸ்லிம் அமைப்பினர் போஸ்டர் ஒட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் வெள்ளச்சாமி சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார்.போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்யக் கோரி, நேற்று மாலை வெள்ளச்சாமி, இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் திருநாவுக்கரசு, ஆர்.எஸ். எஸ். தாலுகா செயலாளர் சிவலிங்கம், பா.ஜ., மாவட்ட பொருளாளர் கனகராஜ் உட்பட 50 பேர் ஒரு மணிநேரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். எஸ்.ஐ., மணிவண்ணன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதன்பின் கலைந்து சென்றனர்.வி.ஏ.ஓ., அலுவலக சுவரில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய முஸ்லிம் அமைப்பினர், விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் மீது, வி.ஏ.ஓ., மணிமுத்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

mumbai attack

மும்பைத் தாக்குதல் வெளிப்படுத்தும் சந்தேகங்கள் - அமரேஷ் மிஸ்ரா!  
சனி, 06 டிசம்பர் 2008
வரலாற்றாசிரியரும் சிறந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. அமரேஷ் மிஸ்ரா, உலகை நடுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மொஸாதும் ஹிந்துத்துவமுமே என்றும் அவ்வாறு இருப்பதற்கான சாத்தியங்கள் என்ன என்பதையும் முன்னர்தெரிவித்திருந்தார். அவரின் அக்கட்டுரை வெளியான நாளிலிருந்து அவருக்கு எதிராகப் பல மிரட்டல் குரல்களும் ஏளன குரல்களும் உயர்ந்திருந்தன. மும்பைத் தாக்குதல் குறித்து தான் ஏன் அவ்வாறான நிலைக்கு வர வேண்டி இருந்தது என்பதையும் தான் முன்னர் கூறிய "மொஸாதும் ஹிந்துத்துவமுமே" மும்பை தாக்குதலில் செயல்பட்டுள்ளன என்பதற்கான உறுதியான மேலும் பல கேள்விகளையும் தொடுத்து பதிலளித்துள்ளார்.

 

"மும்பைத் தாக்குதலின் பின்னணியில் மொஸாதும் ஹிந்துத்துவத் தீவிரவாதிகளும் செயல்பட்டுள்ளனர்" என்ற என்னுடைய குற்றச்சாட்டைக் குறித்துச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். எதனைக் குறித்து வேண்டுமானாலும் சந்தேகப்படவும் கேள்வி எழுப்பவும் அனைவருக்கும் முழு உரிமை உண்டு. சரியான பாதைக்கான எல்லா சிந்தனைகளின் பிறப்பிடம் சந்தேகம்தான். 

மும்பைத் தாக்குதலைக் குறித்து இணையம் வழியாக இந்தக் கருத்தைத் தெரிவித்த எனக்கு, கொலை மிரட்டல்கள், வசவு மெயில்கள் போன்றவற்றிற்கு மேலாக என்னுடைய தைரியத்தையும் பகுத்தறிவினையும் கேலிக்குள்ளாக்கிய எச்சரிக்கைகளும் கிடைக்கப் பெற்றன.

சிலர் என்னைக் கேலிக்குள்ளாக்குவதை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், பிரபல அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளின் கிரிமினல் முகங்களையும் அவர்களின் இலட்சியங்களையும் மறைத்து வைப்பதற்கான தந்திரம்தான் இக்கேலிகள் என்ற உண்மையை நான் சற்று முக்கியத்துவத்துடனே எதிர் கொள்கிறேன். சங் பரிவார தலைமையிடங்களே மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டுள்ளன என்ற சந்தேகத்திற்குத் தற்பொழுது வலு கூடியுள்ளது. யதார்த்தத்தில் சங் பரிவாரம் என்பதை விட மோடி என்பதே சரியானது. அவர் ஹிந்துத்துவ 'ஃபாஸிசத்தின் நவீன முகமாவார். இந்தியாவிற்கு எதிரானவரும் நெறிகெட்ட வியாபாரிகளில் ஒருவருமான ரத்தன் டாடாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்தான் இந்த மோடி. 19 ஆம் நூற்றாண்டில் சைனாவிற்குப் போதைப்பொருள் கடத்தித்தான்  டாடாவின் குடும்பம் பணம் சம்பாதித்தது. 

ஆங்கிலேயர்களுடன் போராடி 10 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த வேளையில், 1857இல் ஆங்கிலேயர்களுடன் இணைந்து தங்களுக்கான வருமானத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள்தான் இவரது குடுப்பத்தினர்.

பலவிதத்திலும் மோடி ஆர்.எஸ்.எஸ்ஸைப் பின் தள்ளி இருக்கின்றார். இவர் இந்தியாவுக்கான மொஸாத் குழுவின் முதல் நபராவார். சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முதிர்ந்த தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார்: "அமரேஷ், கேடர்களின் மீது எங்களுக்கான கட்டுப்பாடு தற்பொழுது கைவிட்டுப் போய் விட்டது. ஒரிஸ்ஸாவிலும் கர்நாடகாவிலும் காரியங்கள் கைமீறிச் சென்று விடக்கூடாது என்பதில் எங்களுக்கு தீர்மானம் இருந்தது. ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவத் தலைவர்களுடன் ஒரு கூட்டு அறிக்கைக்கே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால், கீழ்மட்டத்திலிருந்து அதற்கெதிராக எதிர்ப்பு உருவானது. பஜ்ரங்தளும் வி.ஹெச்.பியும் இதனை அங்கீகரிக்கத் தயாராயில்லை. மோடியின் இரகசிய ஆதரவு இவர்களுக்கு இருந்ததே அதற்கான காரணம். தெளிவாகக் கூறினால் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தோம்".

உண்மையில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அவர்கள் உருவாக்கி விட்டுள்ள 'ஃப்ராங்கஸ்டைன்' பூதத்தைக் கட்டுப்படுத்த இயலாத நிலையே உள்ளது. மோடியின் உருவத்தில் இந்த ப்ராங்கஸ்டைன் மொஸாதுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரிவினை தலைவிரித்தாடும் ஐ.எஸ்.ஐயுடன் மொஸாதிற்குத் தொடர்பு உண்டு என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். மொஸாதோ சிஐஏயோ ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் மத்திய வர்க்க மக்கள் வாழும் பகுதிகளில் சில ஜிஹாதி குழுக்களை வழிநடத்துகின்றன என்பதையும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ஓமானில் உள்ள ஒரு ஜிஹாதி இயக்கம் மொஸாதின் உருவாக்கம் என்பது சமீபத்தில் கண்டறியப் பட்டிருந்தது. 

அதனால்தான் மும்பையை ஆக்ரமித்த இளைஞர்கள் பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுபவர்களாக இருப்பதற்குச் சாத்தியம் உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் நாடுகள் வெவ்வேறாகும்.சிலர் பிரிட்டீஷ் முஸ்லிம்களாவர். இவர்களில் ஒருவருக்காவது மொரீஷியஸ் பாஸ்போர்ட் உண்டு என்பது உறுதியாகும். இந்த  ஜிஹாதிகளை ஒன்றிணைத்து அனுப்பியது சௌதி அரேபியக்காரன் என்ற(மௌலானா பேதி என்று அந்த நபர் இப்பொழுது அழைக்கப்படுகிறார்) செய்தி இப்பொழுது உயர்ந்து வருகிறது.

இந்நபருக்கு ஏதாவது இந்திய/மோடி ஏஜண்டுகள் பணம் கொடுத்திருக்கலாம். இந்தச் சூத்திரதாரிகளுக்குத் தனியாக மதமோ நம்பிக்கையோ எதுவும் கிடையாது. இவர்கள் அமெரிக்காவின் சிருஷ்டிகளாவர்; பணத்திற்காக வேலை செய்பவர்கள். சிலவேளைகளில் அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிராகவும் இவர்கள் செயல்படுவர். இது ஏற்றுக் கொள்வதற்குச் சற்று கடினமான, ஆனால் வெளிப்படையான உண்மையாகும். 

ஒபராய் ஹோட்டலின் உரிமையாளர் நந்தாவும் மோடியின் நெருங்கிய நண்பராவார். இவருக்குக் குஜராத்தில் கோடிகணக்கான ரூபாய்களுக்கான முதலீடுகள் உள்ளன. 

இத்தாக்குதலுக்குப் பல நாட்களுக்கு முன்பே தாஜிலும் ஓபராயிலும் தீவிரவாதிகள் மறைந்திருந்தது எப்படி?. 

இரண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் நாட்கணக்காக ஆயுதங்களும் வெடிபொருட்களும் பாதுகாத்து வைக்க முடிந்தது எப்படி?

அறிந்தோ அறியாமலோ ஹோட்டல் நிர்வாகிகளின் உதவியில்லாமல் இதெப்படி சாத்தியமாகும்?

அறிந்தோ அறியாமலோ தங்களின் கட்டிடத்தைத் தகர்ப்பதற்கு உரிமையாளர்கள் உதவி செய்தனர் எனக் கருதுவது அவ்வளவு கடினமான காரியமா?

தாஜ் நமக்கு மஹத்தான ஒன்றாக இருக்கலாம். ஆனால், டாட்டாவைப் பொறுத்தவரை தனிப்பட்ட வகையிலோ பொருளாதார ரீதியிலோ அதிலுள்ள பயன் என்ன?. மிக இலகுவான நிபந்தனைகளுடன் 'நானோ ப்ளாண்'டிற்கு மோடி வழங்கிய அனுமதி டாட்டாவிற்கு இதனைவிட முக்கியமாகும். இவ்விஷயத்தை நான் உங்களுடைய சிந்தனைக்கு விடுகிறேன்.

நரிமான் ஹவுஸிற்கு வரும்பொழுது, மொஸாதின் உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில் யூதரைக் கொல்வதற்கான காரணம் என்ன? என்ற சிலரின் கேள்வி என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!.
ஏன் அவ்வாறு நடக்கக் கூடாது? தீவிரமான சியோனிஸத்தையே மொஸாத் பின்பற்றுகிறது. அது, ஹிந்துத்துவத்திற்குச் சமமான மத ஃபாஸிஸ தத்துவ சாஸ்திரமாகும். சனாதன தர்மத்துடன் ஹிந்துத்துவதிற்கு யாதொரு தொடர்பும் இல்லாதது போன்று, சியோனிஸம் என்பதும் யூத மதத்தின் ஓர் அங்கமல்ல.

ஹிந்துத்துவவாதிகள் (தீவிர இராம பக்தரான) மஹாத்மா காந்தியைக் கொலை செய்தது போன்று, மொஸாதும் சியோனிஸவாதிகளும் சாதாரண யூதர்களைக் கொலை செய்கின்ற விஷயம் புறந் தள்ளக் கூடிய ஒன்றல்ல. பரவலான முஸ்லிம்-விரோத, இந்திய-விரோதக் கலவரத்திற்கான சூழலை ஏற்படுத்துவதற்காக கோத்ரா ரயில் தீ வைப்பின் மூலம் தங்களின் கூட்டத்தில் உள்ள பலரைக் கொலை செய்யத் துணை நின்றவர்தான் இந்த மோடி!

அத்வானி மற்றும் மோடியின் ஆதரவாளர்கள் எனத் தன்னைத் தானே பெருமையுடன் கூறிக் கொள்பவர்கள், காந்தியைக் கொலை செய்தக் கயவர்களின் ஆதரளவாளர்களுமாவர். மத சார்பற்ற இந்தியா என்ற கொள்கைக்குத் துவக்கம் முதலே ஹிந்துத்துவ அரசியலும் அவர்களின் கொள்கைகளும் எதிராகவே இருந்து வந்துள்ளன. இவர்கள் 1947இல் இந்தியாவிற்கு எதிராகக் கலவரத்தை முன் நின்று நடத்தியவர்களாவர். முஸ்லிம்களுக்கு எதிரானத் தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் முக்கியமானவரான கோல்வார்க்கர் ஆங்கிலேயப் படைகளுடன் இணைந்துச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு. யுனைட்டட் ப்ரோவின்ஸஸில் (இன்றைய யு.பி) உள்துறை செயலராக இருந்த ராஜேஷ்வர் தயாளின் கவனத்திற்கு இவ்விஷயம் வந்திருந்தது. அன்றைய முதலமைச்சர் கோவிந்த் வல்லப பந்திடம் இவ்விஷயத்தை அவர் தெரிவித்துமிருந்தார்.

இனி கார்கரே கொல்லப் பட்ட நிகழ்வை எடுத்துக் கொள்வோம். இரண்டு விதமான அபிப்பிராயங்கள் இதற்குள் வெளியாகி விட்டன. அவர் எவ்விதம் கொல்லப்பட்டார் என்ற விஷயம் இதுவரை தெளிவாகவில்லை. இதில் ஏதோ சதி நடந்துள்ளது என்ற சந்தேகம் நிலை நிற்கின்றது. தன் மகன் கொல்லப்பட்டது எப்படி என்பதைத் தெளிவிக்க வேண்டும் என கார்கரேயின் அன்னை ஆக்ரோசத்துடன் தொலைகாட்சியின் முன்னிலையில் கோரிக்கை வைத்த சம்பவமும் நடந்துள்ளது. மற்றொரு அதிகாரியான ஸலஸ்கரின் மைத்துனரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதாவது (நாட்டிற்காக உயிர்நீத்த) தீரமான உயிர் தியாகிகளின் உறவினர்கள் நீதி தேடுகின்றனர். தாங்கள் அறிந்தவற்றிற்கும் பின்னால் அறியாத பல விஷயங்கள் தீரமிக்கக் காவலர்களது கொலையின் பின்னணியில் உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். கார்கரே, காந்தே, ஸலஸ்கர் ஆகியவர்களின் மரணத்திற்கும் மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். 

மோடி அறிவித்த ஒரு கோடி ரூபாயைக் கார்கரேயின் மகன் நிராகரித்தது எதனால்?. சிந்தித்துப் பாருங்கள்; குஜராத் அரசின் துணையில்லாமல் மும்பையை நோக்கிய தீவிரவாதிகளின் படகு பிரயாணத்திற்கு எந்த ஒரு சாத்தியமும் இல்லை. 

கார்கரேயும் காந்தேயும் மும்பைக் காவல்துறையில் உள்ளவர்களுள் மிகச் சிறந்த மதச்சார்ப்பற்றவர்களும் சனாதன இந்துக்களுமாக இருந்தனர். நடுநிலைமையின் மனித உருவங்களாக அவர்கள் இருந்தனர். குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்த கார்கரே எவ்விதம் குண்டு துளைத்து இறந்தார்?. அவருக்குக் குண்டு துளைத்தது நெஞ்சிலா? அல்லது கழுத்திலா?. அநேகமாக இவை எதுவுமே நமக்குத் தானாக வெளிவரப்  போவதில்லை. ஆனால், நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்படி அறிவதற்கான உரிமை நமக்கு உண்டு. மாலேகோன் குண்டு வெடிப்பு வழக்குடன் ப்ரவீண் தொகாடியா, சோட்டா ராஜன் போன்றவர்களின் பெயர்கள் வெளியான வேளையிலேயே கார்கரே தொலைத்துக் கட்டப் பட்டுள்ளார்.

பாகிஸ்தானையும் சீனாவையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க, இந்தியாவைத் தங்களின் கூட்டணியினுள் கொண்டு வருவதே அமெரிக்க-இஸ்ரேல் முயற்சிகளாகும். அதற்காகவே அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் மும்பையில் குறி வைக்கப்பட்டனர். நரிமன் ஹவுஸில், சந்தேகத்திற்கிடமான வகையில் அதிகமான இஸ்ரேலிகள் வந்து சென்று கொண்டிருந்ததாக அண்டைவாசிகளின் சாட்சியங்களை வைத்து அதிகமான செய்திகள் வெளியாகியிருந்தன. கொலையாளிகள் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு, தங்களைச் சார்ந்தோரைக் கொலை செய்திருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.

அபாயகரமானதும் தற்கொலைக்கு ஒப்பானதுமான இஸ்ரேல்-அமெரிக்க அணியில் இந்தியாவை இணைப்பதற்காக முயலும் இந்திய அரசாங்கத்தில் உள்ள ஒரு கூட்டத்திற்கும் பாகிஸ்தான், சீனா, இரான் போன்ற நாடுகளுடன் நல்ல தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு செல்லும் சுதந்திர நாடாக இந்தியா தொடர வேண்டும் என விரும்புகின்ற எதிர்க் கூட்டத்திற்கும் இடையிலான சண்டைதான் மும்பையில் அரங்கேறியிருக்கின்றது. 

எனவே, இது இந்திய தேசியம் புனர் நிர்மாணிக்கப்பட வேண்டிய தேவையான காலகட்டமாகும். அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் ஹிந்துத்துவத்திற்கும் அனுகூலமான நாட்டின் செயல்பாடுகளே இதுபோன்ற அக்கிரமங்களுக்கான அடிப்படைக் காரணம். 1857இல் நிலைபெற்றிருந்த, ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதும் இந்து-முஸ்லிம் ஒற்றுமையில் உறுதியானதுமான தேசியத்திற்கு நாடு திரும்பிச் செல்ல வேண்டிய நேரம் இது.

tammamil haj





ஹஜ் பணிவிடையாளர்களுக்கு தம்மாமில் சிறப்பான வரவேற்பு

 

உலகமெங்கும் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வரும் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வதற்கு வேண்டி இந்தியா ஃபிரடெர்னிடி பாரம் சார்பாக பணிவிடையாளர்கள் செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய செயலை செய்கின்றனர். அதுபோலவே இந்த ஆண்டும் சுமார் 900 பேர் ஹாஜிகளுக்கு உதவுவதற்காக வேண்டி மக்காவின் அனைத்து பகுதிகளிலும் அதிலும் குறிப்பாக மினா பகுதியிலும் பணியில் ஈடுபட்டனர்.

 

மொழிநிறம்கலாச்சாரம் முதலிய எல்லா விதத்திலும் வேறுபட்டு காணப்படும் ஹாஜிகள் அனைவரும் ஒரே நிற உடையணிந்து இறைவனுக்காக ஹஜ்ஜை நிறைவேற்ற வருகின்றனர்.

 

புதிய இடம்லட்சக்கணக்கான மக்கள்தள்ளாமை போன்ற பலவித காரணங்களினால் பல நேரங்களில் அவர்கள் தங்களது உடன் வந்தவர்களை விட்டு பிரிந்து என்ன செய்வதென்றே தெரியாமல் தத்தளிக்கும் சூழலை ஹஜ் சென்றவர்கள் அனுபவித்திருப்பார்கள்.

 

இத்தகைய சூழலில் அவர்களுக்கு உதவுவதற்காக வேண்டியே தன்னார்வத்துடன் ஆண்டு தோறும் இந்தியா ஃபிரடெர்னிடி ஃபாரம் சார்பாக அதன் தொண்டர்கள் தங்களது வேலைஓய்வுபொருளாதாரம் அனைத்தையும் மறந்து முழுமையாக இறைவனின் விருந்தாளிகளுக்கு உதவி செய்ய செல்கின்றனர். அந்த அடிப்படையில் இந்த வருடம் சவுதி அரேபியா முழுவதிலிருந்தும் சுமார் 900 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள இதன் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த பணியை செய்கின்றனர்.

 

(பணிகளை குறித்து வகுப்பு நடத்தப்படுகிறது)

 

 

 

 

 

(சில புகைப்படங்கள்)

 

(வாலண்டியர்கள் தொழுகை நடத்துகின்றனர்)

 

அதில் 54 பேர் கிழக்கு மாகாணம் தம்மாம் மற்றும் ஜூபைல் பகுதியில் இருந்து சென்றனர். இவர்கள் திரும்பி வரும்போது இந்தியா ஃபிரடெர்னிடி பாரம் - தம்மாம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹைதராபாத் அப்துல் வஹீத் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஹம்மது பைசல்கேரளாவின் அப்துல் ஸலாம்பீகார் ஸஹதாப்கர்நாடகா ஷரீஃப் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

 

(வரவேற்பு நிகழ்ச்சியில்)

 

ஹஜ் வாலண்டியர்கள் தங்களது அனுபவங்களை பற்றி குறிப்பிடும் போது ஹாஜிகள் பலர் தங்களது உறவினர்களை பிரிந்து அழுத போது தாங்கள் அவர்களுக்கு உதவியதையும்உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு எடுத்து சென்றது போன்ற பல அனுபவங்களை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார்கள். வயதானவர்கள் கொண்டு வந்திருந்த மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு அவர்களின் கைகளை பிடித்து தங்கியிருக்கும் டெண்ட்-ஐ தேடி கொண்டு போய் விட்டபோதும்,உறவுகளை பிரிந்தவர்களை மீண்டும் அவர்களிடம் கொண்டு போய் சேர்த்த போது அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்ததையும்,இருகரம் ஏந்தி இவர்களுக்காக பிரார்த்தித்ததையும் மகிழ்ச்சியுடன் விவரித்தார்கள்.

 

(தம்மாம் வாலண்டியர்களில் சிலர்)

 

சவுதி அரசின் அலுவலர்களும்மருத்துவர்களும் இவர்களது தன்னார்வ பணியை கண்டு ஆச்சரியம் தாளமுடியாமல் ஒவ்வொருவரையும் அழைத்து பாராட்டியதோடு நில்லாமல் ஜூஸ்பழம்கேக் போன்றவற்றை கொடுத்து மகிழ்ந்தார்கள். தங்களது இருப்பிடங்களை சென்றடைய வழி தெரியாமல் சவுதி அரேபியாவின் காவல்துறையிடம் சென்றவர்களை காவல்காரர்களே கையை பிடித்து கொண்டு வந்து நமது சகோதரர்களிடம் ஒப்படைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

 

இவற்றையெல்லாம் கேட்ட மற்றவர்களுக்கு தாங்கள் இந்த பணியில் பங்கெடுத்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டதையும் காணமுடிந்தது.

 

வரும் வருடங்களில் கண்டிப்பாக மீண்டும் செல்வதற்கு உறுதி பூண்டிருப்பதாகவும்அதற்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறினார்கள். சரியான நேரத்திற்கு உணவுபோதிய உறக்கம் இவையெல்லாம் கிடைக்காவிட்டாலும் ஹாஜிகளுக்கு உதவுவதற்கு கிடைத்த வாய்ப்பே இறைவனின் மிகப்பெரிய அருட்கொடையாகும் என ஆனந்தத்துடன் குறிப்பிட்டார்கள்.

 

அல்லாஹ் இவர்களது பணியை ஏற்று நிரம்ப நன்மைகளை தருவதற்கு பிரார்த்திப்போமாக!