அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, December 22, 2008

sivakasi matter

சிவகாசியில் விஸ்வ இந்து பரிஷத் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

டிசம்பர் 06,2008,00:00  IST




சிவகாசி : சிவகாசியில் விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி அமைப்பினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். சிவகாசியில் த.மு.மு., மனித நீதி பாசறை அமைப்பினர் டிச.,6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதே போல் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் "ராமர் ஆலயம் மீட்போம், மீண்டும் ஆலயம் அமைப்போம்' என்ற வாசங்களுடன் போஸ்டர்கள் ஒட்டினர்.



நேற்று முன்தினம் இரவு விஸ்வ ஹிந்து பரிஷத் போஸ்டர்கள் மீது முஸ்லிம் அமைப்பினர் போஸ்டர் ஒட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் வெள்ளச்சாமி சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார்.போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்யக் கோரி, நேற்று மாலை வெள்ளச்சாமி, இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் திருநாவுக்கரசு, ஆர்.எஸ். எஸ். தாலுகா செயலாளர் சிவலிங்கம், பா.ஜ., மாவட்ட பொருளாளர் கனகராஜ் உட்பட 50 பேர் ஒரு மணிநேரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். எஸ்.ஐ., மணிவண்ணன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதன்பின் கலைந்து சென்றனர்.வி.ஏ.ஓ., அலுவலக சுவரில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய முஸ்லிம் அமைப்பினர், விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் மீது, வி.ஏ.ஓ., மணிமுத்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments: