அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, November 13, 2009

ஆணின் வயிற்றில் இரும்புச் சாமான்கள்

pinsபெரு நாட்டில் மருத்துவர்கள ஓர் ஆணின் வயிற்றிலிருந்து ஒன்றரை பவுண்டு உலோகப் பொருட்களை அறுவை சிகச்சை மூலம் எடுத்துள்ளனர். ஆணிகள், காசு, துருப்பிடித்த செம்பு கம்பி ஆகியன அவர் வயற்றில் பதுங்கியிருந்தன.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், ”குடல் அழற்சி நோய் என்று நினைத்துத் தான் ஆரம்பித்தோம். ஆனால் இதைப் போல் ஒன்றை நான் இதுவரை பார்த்ததே இலலை” என்று பேட்டியளித்துள்ளார். ரெக்கொமெ அபான்தோ (Requelme Abanto) என்ற 26 வயது கட்டுமானத் தொழிலாளர் "அவர்கள் என்னை உலோகக் கடை என்று அழைத்தனர்”என்றார்.

”ஒரே நாளில் 17 ஐந்து அங்குல ஆணிகளை பிப்ரவரி மாதம் நான் சாப்பிட்டேன். ஆனால் சாகவில்லை. இனிமேல் இதை ஒரு விளையாட்டாக பொதுமக்கள் மத்தியில் செய்து காட்ட நாடியுள்ளேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விரட்டியடித்த மைக்ரோசாஃப்ட் - திருப்பியடித்த நெட்ஸ்கேப்

மைக்ரோசாஃப்ட் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத அதிர்ச்சி 2004 ஆம் ஆண்டு வாக்கில் ஃபயர் ஃபாக்ஸ் மூலம் கொடுக்கப்பட்டது. பேரரசர்கள் சிற்றரசர்களைச் சிறைப்பிடித்து கப்பம் கட்ட வைத்தது போல் தனக்கு முன்பே சிறிதும் பெரிதுமாக செயல்பட்டு வரும் நிறுவனங்களை காசு கொடுத்து வாங்கி காலடியில் போட்டு வைப்பது அல்லது காலை ஒடித்து முடக்கிப் போட்டு சந்தையிலிருந்தே விரட்டியடிப்பது என்ற முரட்டு முதலாளியாகக் களமிறங்கியது மைக்ரோசாஃப்ட்.

தனக்கு முன் செயல்பட்டு வந்த நெட்ஸ்கேப் குழுமத்தின் நேவிகேட்டர் என்ற உலாவியை, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற இணைய உலாவியை தனது விண்டோஸ் இயங்குதளத்துடன் இலவச இணைப்பாக வழங்கி ஆப்படித்தது. ஓசியில் ஏசி கிடைக்கும்போது யார்தான் காசு கொடுத்து விசிறி வாங்குவர்? சொல்லாமல் கொள்ளாமல் அனேக நெட்ஸ்கேப் பயனர்களை வலையில் வீழ்த்தியது மைக்ரோசாஃப்ட்.

மைக்ரோசாஃப்டுடன் கெஞ்சியும் பயனில்லை; மிஞ்சவும் முடியவில்லை என்றான பிறகு, போகும்போது ஏன் சும்மா போகனும். இரு, வைக்கிறேன் ஆப்பு என்று சற்றே பிரபலமாகத் தொடங்கிய ஓபன் சோர்ஸ் என்ற இணையப் பொது உடமைக் கொள்கைக்கு மாறி, ஏழைக்கேற்ற ப்ரவ்சராக நுழைந்து மைக்ரோசாஃப்டுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பஞ்ச தந்திரங்களையும் கையாண்டு மைக்ரோசாஃப்ட்டால் பாதிக்கப் பட்டவர்களையும் மரணடி வாங்கி வீதிக்கு வந்தவர்களையும் ஓரணியில் திரட்டி, 25% சதவீத இணைய உலாவி சந்தையை ஃபயர்ஃபாக்ஸ் பெற்றுள்ளது. மைக்ரோசாஃப்டின் கண்ணில் விரல் விட்ட கூகிலும், பர்சனல் கம்யூட்டரின் பிதாமகன் ஆப்பிலும்கூட மைக்ரோசாஃப்டுக்கு ஆப்படிக்க மைக்ரோசாஃப்டின் தீராத தலைவலியாகிவிட்ட ஃபயர் ஃபாக்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளன.

மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸை கடந்த ஐந்தாண்டுகளில் 330 மில்லியன் பயனாளர்கள் ஒரு பில்லியனுக்கும் அதிகமாக தரவிறக்கம் செய்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் அதிவிரைவாக முன்னேறும் இணையத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் வேகமான உலாவியாக இருந்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளோம் என்கிறார் மோஸில்லா ஃபவுண்டேசனின் க்ரிஸ் ப்ளிஸார்ட்.

95% இணையப் பயனர்களைக் கொண்டிருந்த மைக்ரோஸாஃப்டை மெல்ல மெல்ல பின்னுக்குத் தள்ளி, விரைவான செயல்பாடு, தொடர்ந்த ஒத்துழைப்பு, மேம்பட்ட சேவைகள், தளையறு உலாவி தடையின்றி கிடைக்க வேண்டும் என்று இயங்கி வரும் ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவிக்கு இன்றோடு ஐந்து வயது பூர்த்தியாகிறது. ஆறாவது பிறந்த நாளுக்குள் கைப்பேசிகளுக்குமான ப்ரவ்சர் சந்தையையும் கலக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். மைக்ரோசாஃப்டின் வயிற்றையும் சேர்த்துக் கலக்குவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

பாஜகவின் பவர் ஜெனரேட்டர் ஆர்.எஸ்.எஸ்.: பாஜக

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பதவி குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியது பாரதீய ஜனதா கட்சியில் குழப்பத்தையோ, பிரச்சனையையே ஏற்படுத்தவில்லை என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு மற்றும் ஆனந்த் குமார் ஆகியார் பாரதீய ஜனதா கட்சித் தலைவராக வரமாட்டார்கள் என்றும் டில்லிக்கு வெளியிலிருந்து ஒருவர்தான் பாஜகவின் தலைவராக இருப்பார் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலின்போது குறிப்பிட்டார்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பாஜகவின் விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ். தலையிடுவதாகத இதன்மூலம் தான் கருதவில்லை என்று கூறிய அவர், மோகன் பகவத்தின் கருத்து கட்சியில் குழப்பத்தையோ, பிரச்சனையையே ஏற்படுத்தவில்லை என்று கூறினார். பாஜக தன்னுடைய முடிவுகளை சுயமாகவே எடுத்துக் கொள்ளும் என்று மோகன் பகவத் கூறியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை ஒரே சிந்தனைக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்று கூறிய ஜவதேகர், பாஜக உள்பட ஆர்.எஸ்.எஸ்.சின் அனைத்து துணை அமைப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சக்தி அளிக்கும் மையமாகச் செயல்படுவதாகவும் கூறினார்.

பகத்தின் கருத்துகள் உண்மையான பொருளில் புரிந்து கொள்ளப்படவில்லை என்று கூறிய ஜவதேகர், மோகன் பகவத் கூறிய கருத்துகள் பாஜக தலைமைக்கு அதிகாரம் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக தனிப்பட்ட முறையில் கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்றும் கூறினார்.

Thursday, November 12, 2009

மிஸ்டு காலா? பெண்களே!

உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா.

அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன் ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.

ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.

2-வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும்.

3-வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள்.

பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும்.

திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும். சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்.

இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி (வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார்.

ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லா மேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை. 2-வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லா மேரி தொடர்பு கொண்டால் எதிர் முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது.

அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என கூறிக்கொண்டது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல்போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது.

ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார். மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார். கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார்.

ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட.. போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார்.

இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி... இப்போது சிறைக்கும் கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார். நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள்.

பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர். ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீசார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார்.

அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது. நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார்.

இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார். எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு.

ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது.

கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட... கணவரை உதறிவிட்டு அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி. காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து.

இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர். பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர்.

ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..

எனவே மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.

கோவா குண்டு வெடிப்பு மேலும் ஒரு இந்துத் தீவிரவாதி கைது!

கோவா காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு படை மேலும் ஒரு ஹிந்து தீவிரவாத சனதன் சன்ஸ்த்தா அமைப்பை சேர்ந்த எலக்ட்ரானிக் இஞ்ஜினியரை கோவா குண்டு வெடிப்பு சம்மந்தமாக கைது செய்துள்ளது.
பிடிபட்டவர் தனான் ஜை ஆஷ்டெகர்(20) எலக்ட்ரானிக் இஞ்ஜினியர் மாணவர். கெத் ரத்தனகிரியை சேர்ந்தவர். தென்டாம் என்ற ஊரில் சனதன் சனஸ்த்தா உறுப்பினர்களுடன் சேர்ந்து ஜெலட்டின் குச்சிகளை கோவாவில் அக்டோபர் 16 அன்று பல இடங்களில் வெடிக்க செய்வதற்கு திட்டம் தீட்டி உள்ளார் என்று போலீஸ் கமிஷ்னர் அட்மரம் தெரிவித்துள்ளார்.

ஜை ஆஷ்டெகர் 12 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் கமிஷ்னர் அட்மரம் தெரிவித்துள்ளார்.
இதுவரை கோவா குன்டு வெடிப்பு சம்பந்தமாக 3 நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். இதற்கு முன் கைது செய்யப்பட்டுள்ள வினைதலெக்கர் & வினாயக் பாட்டில் இருவரும் இதே சனதன் சன்ஸ்த்தாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
source: sahilonline