அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, November 13, 2009

ஆணின் வயிற்றில் இரும்புச் சாமான்கள்

pinsபெரு நாட்டில் மருத்துவர்கள ஓர் ஆணின் வயிற்றிலிருந்து ஒன்றரை பவுண்டு உலோகப் பொருட்களை அறுவை சிகச்சை மூலம் எடுத்துள்ளனர். ஆணிகள், காசு, துருப்பிடித்த செம்பு கம்பி ஆகியன அவர் வயற்றில் பதுங்கியிருந்தன.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், ”குடல் அழற்சி நோய் என்று நினைத்துத் தான் ஆரம்பித்தோம். ஆனால் இதைப் போல் ஒன்றை நான் இதுவரை பார்த்ததே இலலை” என்று பேட்டியளித்துள்ளார். ரெக்கொமெ அபான்தோ (Requelme Abanto) என்ற 26 வயது கட்டுமானத் தொழிலாளர் "அவர்கள் என்னை உலோகக் கடை என்று அழைத்தனர்”என்றார்.

”ஒரே நாளில் 17 ஐந்து அங்குல ஆணிகளை பிப்ரவரி மாதம் நான் சாப்பிட்டேன். ஆனால் சாகவில்லை. இனிமேல் இதை ஒரு விளையாட்டாக பொதுமக்கள் மத்தியில் செய்து காட்ட நாடியுள்ளேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: