அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, November 12, 2009

கோவா குண்டு வெடிப்பு மேலும் ஒரு இந்துத் தீவிரவாதி கைது!

கோவா காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு படை மேலும் ஒரு ஹிந்து தீவிரவாத சனதன் சன்ஸ்த்தா அமைப்பை சேர்ந்த எலக்ட்ரானிக் இஞ்ஜினியரை கோவா குண்டு வெடிப்பு சம்மந்தமாக கைது செய்துள்ளது.
பிடிபட்டவர் தனான் ஜை ஆஷ்டெகர்(20) எலக்ட்ரானிக் இஞ்ஜினியர் மாணவர். கெத் ரத்தனகிரியை சேர்ந்தவர். தென்டாம் என்ற ஊரில் சனதன் சனஸ்த்தா உறுப்பினர்களுடன் சேர்ந்து ஜெலட்டின் குச்சிகளை கோவாவில் அக்டோபர் 16 அன்று பல இடங்களில் வெடிக்க செய்வதற்கு திட்டம் தீட்டி உள்ளார் என்று போலீஸ் கமிஷ்னர் அட்மரம் தெரிவித்துள்ளார்.

ஜை ஆஷ்டெகர் 12 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் கமிஷ்னர் அட்மரம் தெரிவித்துள்ளார்.
இதுவரை கோவா குன்டு வெடிப்பு சம்பந்தமாக 3 நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். இதற்கு முன் கைது செய்யப்பட்டுள்ள வினைதலெக்கர் & வினாயக் பாட்டில் இருவரும் இதே சனதன் சன்ஸ்த்தாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
source: sahilonline

No comments: