அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, December 16, 2009

லெபனான் : இது ஹிஸ்புல்லா தேசம்





லெபனான், பெய்ரூத். அமெரிக்கக் கடற்படைத் தலைமையகம். 23 ஒக்டோபர் 1983, அதிகாலை ஆறு மணி இருபது நிமிடங்கள். தலைமைக்கட்டட வாயிலை நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்தது ஓரு கனரக வாகனம். ஓட்டி வந்த சாரதியின் முகத்தில் புன்னகை. கட்டடத்தை வாகனம் மோதியதும் பெருத்த வெடியோசையால் நகரமே அதிர்ந்தது. உறுதியான நான்கு மாடிக்கட்டடம் சிலநொடிகளிலேயே தரைமட்டமாகியது.

மொத்தம் 240 அமெரிக்கக் கடற்படை வீரர்கள் அந்தத் தற்கொலைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியாகினர். ஆறாயிரம் கிலோ வெடிமருந்துப் பொருட்கள் பாவிக்கப்பட்டிருக்கலாமென புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன. இது நடந்த அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு வாகனம் பிரஞ்சுத் துருப்புகள் தங்கியிருந்த கட்டடத்தில் மோதி வெடித்ததில் 58 பிரஞ்சு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.





பிரான்ஸ் லெபனானின் முன்னாள் காலணியாதிக்க எஜமான். தள்ளாடிக்கொண்டிருந்த லெபனானுக்கு அமெரிக்கா உதவி செய்ய முன்வந்தது. இவ்விரண்டு நாடுகளுமே லெபனானின் உள்நாட்டு விடயத்தில் தலையிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டன. மிகவும் கவனமாகத் திட்டமிட்டு பாரிய விளைவுகளை உண்டாக்கிய அந்தத் தாக்குதலை நடாத்தியது "ஹிஸ்புல்லா" என்ற அதுவரை அறியப்படாதிருந்த ஒரு இயக்கம். ஹிஸ்புல்லா ( தமிழில்: அல்லாவின் கட்சி) லெபனான் ஷியா முஸ்லிம் இனத்தைப் பிரதிநிதிப்படுத்தியது. அந்த மக்களின் காவலனாக இன்றுவரை காட்டிக் கொள்கிறது.





மத்திய கிழக்கில் சிலுவைப் போரின் தழும்புகளைக் கொண்டுள்ள நாடுகளில் லெபனானும் ஒன்று. காலனித்துவக் காலகட்டத்தில் ஆக்கிரமித்த பிரான்ஸினால், பிரித்தாளும் நோக்கில் சிரியாவில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாகியதுதான் இந்த லெபனான் நாடு. லெபனானில் "மரோணியக் கிறிஸ்தவர்கள்" (கிறிஸ்தவ மதத்தின ஒரு பிரிவு) கணிசமான தொகையியல் வாழ்கின்றனர். உறுதியான கணக்கெடுப்பு இல்லாத போதும், மொத்தச் சனத்தொகையில் இவர்கள் நாற்பது அல்லது ஐம்பது வீதமானவர்கள் என்பது பரவலான கருத்து. இனரீதியாக அரபுக்களேயாயினும், காலனித்துவ விசுவாசத்தால் தம்மைப் அவர்கள் பிரஞ்சுக்காரர்களாகவும் கருதுவதுண்டு. இதனால், லெபனானுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டபோது அவர்களின் கைகளில் அரச பொறுப்பை வழங்கிய பின்னரே பிரான்ஸ் விலகிக்கொண்டது.





வெகுவிரைவிலேயே சிறுபான்மை இனங்களாகக் கருதப்பட்ட (சரியான கணக்கெடுப்பு நடாத்தப்படவில்லை) "ஷியா" முஸ்லீம்களும், "டுரூசியர்"களும் (இஸ்லாமின் ஒரு பிரிவு. இருப்பினும் தம்மைத் தனியான மத-இனமாகக் கருதுபவர்கள்) தமக்கு அரசாங்கத்தில் அங்கம் இல்லை என்பதையுணர்ந்தனர். முரண்பாடுகள் போராக வெடித்தன. ஒவ்வொரு சமுகமும் தமக்கென ஆயுதபாணிக் குழுக்களை ஏற்படுத்திச் சண்டையிட்டன. ஆரம்பத்தில் இக்குழுக்களிடையே சித்தாந்த ரீதியான வேறுபாடேயிருந்தது. மரோணியக் கிறிஸ்தவரின் ஆயுதக்குழு பாஸிசப் பிற்போக்கு அரசியலைக் கொண்டிருந்தது. மாறாக, ஷியா, டுரூசியரின் ஆயுதக்குழுக்கள் முற்போக்கானவையாக சோஸலிசத்தை முன்மொழிந்தன. பத்தாண்டுகளாக நடைபெற்ற யுத்தம் எந்தவகையான முடிவையும் தராதநிலையில், கம்யூனிச எதிர்ப்புப் போர்வையில் அமெரிக்க இராணுவம் வந்திறங்கியமை நிலைமையை மேலும் மோசமடைய வைத்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீன விடுதலை இயக்கங்களை அடக்கப்போகிறோம் எனும் போர்வையில் இஸ்ரேலியப் படையெடுப்பும் தலைநகர் பெய்றூத் வரைமுன்நகர்ந்தது. பின்னர், பின்வாங்கி தென் லெபனானை ஆக்கிரமிப்பில் வைத்துக்கொண்டது. இத்தகைய சூழலில்தான் முன்பு குறிப்பிட்ட அமெரிக்கக் கடற்படை முகாம்மீதான தற்கொலைத் தாக்கல் இடம்பெற்றது.





லெபனானின் உள்நாட்டுப் போரில் தலையிட்டு கையைச் சுட்டுக்கொண்ட அமெரிக்க இராணுவம் தாயகம் திரும்பியது. சமாதானம் வராது என்றிருந்த நிலையில் சிரியப்படைகள் லெபனானுக்குள் பிரவேசித்தன. லெபனானின் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த சிரியா போராடும் குழுக்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தியது. முடிவில் சிரியாவின் மத்தியஸ்தத்தில் அல்லது தலைமையில் எல்லாச் சமுகங்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டு புதிய அரசு அமைக்கப்பட்டு சமாதானம் கொண்டுவரப்பட்டது. இன்றுவரை ஆயுதம் தாங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா உறுப்பினர்கள்கூட பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.





யாரிந்த ஹிஸ்புல்லா இயக்கத்தினர்? அமெரிக்கா, இஸ்ரவேலைப் பொறுத்தவரையில் இவர்கள் பயங்கரவாதிகள். அதுமட்டுமல்லாது, அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இவர்களின் பெயரும் அடங்கியுள்ளது. ஆனால் லெபனான் மக்களைப் பொறுத்தவரையிலும் இவர்கள் விடுதலைப் போராளிகளாகவே கருதப்படுகின்றனர். லெபனானில் நடந்த ஒவ்வொரு இஸ்ரேலிய இராணுவ அடக்குமுறையின்போதும் ஹிஸ்புல்லா மீதான அனுதாப அலைகள் ஒங்கியெழுந்தன. கடந்த இருபது வருடங்களாக லெபனானின் தென்பகுதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தும், அப்பகுதிகளில் இராணுவ நிலைகள்மீதான ஹிஸ்புல்லா போராளிகளின் கெரில்லாத் தாக்குதல்கள் அதிகரித்ததால், இறுதியில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது உலகறிந்த விடயம். தற்கால உலகின் வெற்றிகரமான கொரில்லா இயக்கங்களாகக் கருதப்படுபவைகளில் ஹிஸ்புல்லாவும் ஒன்று.





இஸ்ரேலிய இராணுவம் வெளியேறியதும் அந்தப்பகுதிகளை ஹிஸ்புல்லா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. தென்லெபனான் தெருக்களில் ஆயுதமேந்திய போராளிகளின் நடமாட்டம், காணுமிடமெல்லாம் ஹிஸ்புல்லா என்ற பெயரில் துப்பாக்கி தூக்கும் கரத்தின் படத்தைக் கொண்ட மஞ்சள் வர்ணக்கொடிகள், நகர வீதிகளில் முக்கிய சந்திகளில் மரணித்த போராளிகளின் உருவப்படங்கள், எதிரிகளால் குண்டுவைத்துக் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவை உருவாக்கிய தலைவர் நஸ்ரல்லாவின் ஆளுயரக் "கட் அவுட்" டுகள், தேனீர்க் கடைகளில்கூட ஒலிக்கும் இயக்கப்பாடல்கள், பொது இடங்களில் சட்டம்-ஓழுங்கை பராமரிக்கும் சீருடையணிந்த ஹிஸ்புல்லா பொலிஸ்... இவையெல்லாம், தென்லெபனானை, இது லெபனானல்ல ஹிஸ்புல்லா தேசமெனக் கூறவைக்கும்.






இவற்றைவிடத் தமக்கெனத் தனியான வானொலி, தொலைக்காட்சிச் சேவைகளை நடாத்தி வருவதுடன் இலவச மருத்துவ மனைகள், பாடசாலைகள் என்பனவற்றையும் பராமரித்து வருகின்றனர் ஹிஸ்புல்லாக்கள். இவ்வியக்கத்தை உருவாக்கியவர்கள் மதத்தலைவர்கள் எனுங்காரணத்தால் ஆரம்ப காலங்களில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்கள் இஸ்லாமிய மத அடிப்படையிலமைந்த கலாச்சாரத்தைப் பின்பற்றுமாறு வலியுத்தப்பட்டனர். ஆனால், பெரும்பாலும் சுதந்திரப் போக்குடைய லெபனானிலிருந்து ஆதரவு கிடைக்காததால் இந்நிலையை அவர்கள் தளர்த்த வேண்டியவர்களாகினர். அதனால், மதப்பிடிப்பற்ற இளைஞர்கள் கூட இவ்வியக்கத்தில் இணைந்து போராட முன்வந்தனர்.





ஈரானில் நடைபெற்ற புரட்சியை முன்னுதாரணமாக்கி உருவாக்கப்பட்டதுதான் ஹிஸ்புல்லா என்பதால் இவர்கள் லெபனானையும் ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கமும் கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது இவற்றை தமது இறுதி இலட்சியமாகத்தான் கருதுகிறார்கள். தற்காலப் பிரச்சனைகளாள இஸ்ரேலிய இராணுவத்தின் வெளியேற்றம், மிக அண்மையில் கொண்டுவரப்பட்ட பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு என்பன பற்றித்தான் முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது.





ஹிஸ்புல்லா ஒரு மத அடிப்படைவாத இயக்கமெனச் சொல்லப்படுகின்றது. ஆனால், இந்தக் கூற்றில் அரைவாசிதான் உண்மை. மத்தியகிழக்கில் யாரும் "மத அடிப்படைவாதம்" என்ற சொல்லைப் பாவிப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, ஹிஸ்புல்லா தன்னை ஒரு அரசியல்-கொரில்லா இயக்கமாக வெளிப்படுத்திக் கொண்டமை மேற்கூறிய தரவுகளில் இருந்து தெளிவாகும். இதன்காரணமாகவே தற்போது தேசியவாத பலஸ்தீன இயக்கங்களுடனான கூட்டு சாத்தியமாகியுள்ளது. அதேவேளை மதச்சார்பற்ற சிரிய அரசின் பின்பலமும் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவருடைய நோக்கங்களும் வித்தியாசமாகவிருக்கலாம். ஆனால், சூழ்நிலை அவர்களைச் சேர்த்து வைத்துள்ளது. ஹிஸ்புல்லாவினர் ஷியா இஸ்லாமியர் என்பதால்தான் உலகின் ஒரேயொரு ஷியா அரசான ஈரான் இவ்வியக்கத்திற்கு உதவி வழங்குகின்றது. ஹிஸ்புல்லா தலைமையில் லெபனானிலும் ஷியா இஸ்லாமிய அரசு வரவேண்டுமென்ற எண்ணம் ஈரானுக்கிருப்பதை மறுப்பதற்கில்லை. சிரியாவோ, இஸ்ரேலுக்கும் தனக்குமிடையில் பாதுகாப்புக் கவசமாக ஹிஸ்புல்லாவை பயன்படுத்தும் நோக்குடையது.





ஹிஸ்புல்லாவின் ஒவ்வொரு தாக்குதலையடுத்தும் சிரியாவுக்கு அடிப்போமென இஸ்ரேல் காரணமில்லாமல் கர்ஜிக்கவில்லை. லெபனானை மட்டுமல்ல சிரியாவையும் பிடித்து தனது நாட்டுடன் இணைக்க வேண்டுமென்ற அவா நீண்டகாலமாகவே இஸ்ரேலுக்குண்டு. ஆறு நாட்போரென அழைக்கப்படும் 1973 யுத்தத்தில் இஸ்ரேல் சிரியாவின் கோலான் உயர்மேட்டுப்பகுதியை கைப்பற்றி இன்றுவரை ஆக்கிரமித்து வருகின்றது. இதனால் இன்றுவரை சிரியா இஸரேலின் பகைநாடாகவும் இருந்து வருகின்றது. மூன்றாம் உலகப் போர் நடக்கும்போது மேலும் பல பகுதிகளைக் கைப்பற்ற இஸ்ரேல் காத்திருக்கின்றது. அதற்கான தருணம் இப்போது வந்துவிட்டது என்ற அர்த்தத்தில் லெபனான், சிரியா மீது பயங்கரவாதத்திற்கெதிரான போரை அறிவிக்குமாறு அமெரிக்காவை இஸ்ரேல் கேட்டுள்ளது.

சட்டவிரோதமாக அமெரிக்க எல்லை கடக்க உதவும் சாதனம்


கலிபோர்னியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ரொட்ரிகோ டொமின்கேஸ், சட்டவிரோதமாக அமெரிக்க எல்லை கடக்க விரும்பும் குடியேறிகளுக்கு வழிகாட்டும் இலத்திரனியல் சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கடுமையாக பாதுகாக்கப்படும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை கடக்கும் குடியேறிகள் பல ஆபத்துகளை கடந்து வர வேண்டியுள்ளது. மேலும் வழிகாட்டும் நபர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை அள்ளிக் கொடுக்க வேண்டிய நிலை. புதிய சாதனம், மொபைல் தொலைபேசிகளை தொடர்பு படுத்தும் GPS வலையமைப்பை பின்பற்றி இயங்கும். எந்தெந்த இடத்தில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது, எந்தெந்த இடத்தில் சாதகமான வெப்பநிலை உள்ளது போன்ற தகவல்களை இந்த சாதனம் வழங்கும். சட்டவிரோதமாக குடியேறும் நோக்குடன் வரும் ஒருவர் நவீன சாதனத்தின் உதவியுடன் இலகுவாக எல்லை கடக்க முடியும். அமெரிக்க அரசின் மனிதாபிமானமற்ற குடியேற்றவாத சட்டத்தை எதிர்த்துப் போரிடும் நோக்குடன், இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க-மெக்சிக்கோ எல்லை கடப்பவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டாலும், ஐரோப்பாவிலும் இதற்கான தேவை இருக்கின்றது. எல்லை கடக்க வழிகாட்டும் சாதனத்திற்கான மென்பொருளை இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது


கொபென்ஹெகேன் நகரில் கலவரத்தீ பற்றிக் கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரை, இடதுசாரி இளைஞர்களுக்கும், போலீசுக்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.

டென்மார்க் தலைநகர் கொபென்ஹெகனில், ஐ.நா.கூட்டிய பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடும் பாதுகாப்புடன் வாரக்கணக்காக நடைபெற்று வருகின்றது. உலகத்தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டுக்கு வெளியே, சாமானியரின் மாநாடு வீதிகளில் கூட்டப்படுகின்றது. உலகம் முழுவதிலும் இருந்து வந்த இடதுசாரி ஆர்வலர்கள் கோபென்ஹெகன் நகரில் குழுமியுள்ளனர். பெரு வணிக நிறுவனங்கள் காலநிலை மாற்றத்தையும் லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாற்ற எத்தனிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்தனர். அனைத்து மக்களுக்குமான கருத்தரங்குகளில் Naomi Klein போன்ற தீவிர முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அனேகமாக ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் யாவும் கோபென்ஹெகன் நகரின் முக்கிய தெருக்களில் இடம்பெற்றுள்ளன.
அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் "கிறிஸ்டியானா" பகுதியில் இடம்பெற்றுள்ளன. இதனால் கோபென்ஹெகன் நகரின் கிறிஸ்டியானா வட்டாரம், டென் மார்க் போலிசால் முற்றுகை இடப்பட்டது. இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்படும் கிறிஸ்டியானா இளைஞர்கள் வீதித்தடைகள் போட்டு போலீசுடன் மோதினார்கள். (மோதலைக் காட்டும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.) கிறிஸ்டியானா பற்றி சில குறிப்புகள். 1970 ம் ஆண்டு, கோபென்ஹெகன் நகரின் மத்தியில் அரசாங்கத்தால் கைவிடப்பட்ட 34 ஹெக்டேயர் பகுதியில், டென் மார்க் இடதுசாரிகள் சென்று குடியேறினார்கள். இவர்களில் அநேகமானோர் ஹிப்பிகள். "கிறிஸ்டியானா" அல்லது "சுதந்திர நகரம்" என்று தமது பகுதிக்கு பெயரிட்டனர்.

வெளி உலகத்தில் இருந்து தம்மை துண்டித்துக் கொண்ட சுமார் 700 "கிறிஸ்டியானா பிரஜைகள்", அங்கே கம்யூன் ஒன்றை ஸ்தாபித்தனர். கூட்டுறவுப் பண்ணைகளை அமைத்தனர். தொழிலகங்கள், பாடசாலைகள், பொழுதுபோக்கு மையங்கள் எல்லாமே அதற்குள் இருந்தன. பணப்புழக்கம் இல்லை. முதலாளி, தொழிலாளி பேதமில்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும். முப்பது வருடங்களுக்கு மேலாக கிறிஸ்டியானா பிரதேசத்திற்குள் போலிஸ் நுழைவதில்லை. ஏனென்றால் அங்குள்ளவர்கள் அரசாங்க சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இருப்பினும் சில வருடங்களுக்கு முன்னர் கஞ்சா பாவனையை காரணமாக காட்டி, போலிஸ் நடவடிக்கை எடுத்தது. போலிஸ் கிறிஸ்டியானா குடியிருப்புகளை அப்புறப்படுத்த திட்டமிட்டது போல தோன்றியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இடதுசாரி கலகக்காரர்களின் புகலிடமாக திகழும் கிறிஸ்டீனா, அரச எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானா போராட்டங்கள் யாவும் அங்கிருந்து தான் வழி நடத்தப்படும்.

தற்போது நடைபெறும் காலநிலை மாநாட்டிற்கு போட்டி மாநாடு நடத்திக் கொண்டிருந்த கிறிஸ்டியானா பொலிசாரின் கெடுபிடிக்கு உள்ளானதில் வியப்பில்லை. டிசம்பர் 15 ம் தேதி, கிறிஸ்டியானா சுற்றுவட்டாரமெங்கும் போலிஸ் குவிக்கப்பட்டது. உள்ளே செல்வோர், வெளியே வருவோர் எல்லோரும் சோதிக்கப்பட்டனர். வீதிப் போக்குவரத்திற்கு தடை விதித்தனர். இதற்கு பதிலடியாக இடதுசாரி இளைஞர்கள் தமது குடியிருப்புகளை சுற்றி காவலரண்கள் அமைத்தனர். அங்கிருந்த படியே போலிஸ் மீது பெட்ரோல் குண்டுகள் வீசினர். வீதிகளில் நின்ற கார்களும் எரிக்கப்பட்டன.






லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு!!



லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு!!!

மீண்டும் உள்நாட்டுப்போரை நோக்கி நகர்கிறது லெபனான். மீண்டும் இஸ்ரேல், சிரியா, ஈரான், சவூதி அரேபிய, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய பல அந்நிய சக்திகள் மத்தியகிழக்கின் வாசலான லெபனான் விவகாரங்களில் தலையிடுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் போராடும் சக்திகளின் அரசியல் சித்தாந்தம் மட்டும் எழுபதுகளில் இருந்தது போன்றில்லாமல் மாறியிருக்கிறது. அப்போது முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள், பாசிஸ்டுகள்-சோசலிஸ்டுகள், என்று பிரிந்து சண்டையிட்ட காலம் அல்ல இது. இஸ்ரேலின் அதி நவீன இராணுவத்துடன் போரிட்டு வென்ற ஹிஸ்புல்லா(கடவுளின் கட்சி) என்ற விடுதலைப்படை, தற்போது லெபனான் அரசாங்கத்திற்கெதிராக தனது துப்பாக்கிகளை திருப்பியுள்ளது.



லெபனான் ஒரு சிறிய தேசமாயினும், பல்வேறு மதப்பிரிவினரை கொண்டுள்ளது. முஸ்லிம்களில் சுன்னி/ஷியா பிரிவினர்கள், தனித்துவமான டுரூசியர்கள், மறோனிய கிறிஸ்தவர்கள் போன்ற பல பிரிவுகள் நீண்ட காலமாக தமக்குள் ஒற்றுமையிலாமல் பிரிந்திருப்பதை, அந்நிய சகதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. அதேநேரம் லெபனான் அரசியல்நிர்ணய சட்டம், அனைத்து பிரிவினரும் பங்குபற்றும் ஜனநாயகத்தை கொண்டுள்ளது. இந்த சிக்கல் தற்போது முறுகிவரும் உள்நாட்டு போருக்கு காரணம்.



2006 ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பின் போது, கண்மூடித்தனமாக குண்டு வீசியும் ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்க முடியவில்லை. மேலும் அதுவே(ஹிஸ்புல்லாவின் அழிவு) அமெரிக்காவின் நோக்கமாகவும் இருந்தது. சர்வதேச கண்டனம் காரணமாக இஸ்ரேலிய படைகள் பின்வாங்கவே, ஹிஸ்புல்லாவை ஓரங்கட்ட வேறொரு வியூகம் வகுத்தது அமெரிக்கா. பொதுத்தேர்தலில் மேற்குலக சார்பு அரசியல் கட்சிகள் பெரும்பான்மை வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தது. தனக்கு சார்பான சாட் ஹரீரியின் கட்சி வெற்றி பெற பாடுபட்டது. லெபனானில் பணக்காரர்களும், வசதியான மத்தியதர வர்க்கத்தினரும் அனேகமாக சுன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். அந்த பிரிவை சேர்ந்த கோடீஸ்வரரான முன்னாள் பிரதமர் ஹரீரி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது வாரிசு சாட் தலைவரானார். இவருக்கு பக்கபலமாக லெபனான் முதலாளிகள், பணக்காரர்கள் மட்டுமல்ல சவூதி அரேபியா, அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் எல்லோரும் "சிரியாவின் ஆதிக்கத்திற்கு" எதிராக அணி திரண்டனர். மறுபக்கத்தில் கீழ் மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்கள் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்களை ஹிஸ்புல்லா, அமால், ஆகிய கட்சிகள் பிரதிநிதித்துவ படுத்துவதும், அவர்களுக்கு தொடரும் சிரியாவின் ஆதரவும் பலமான எதிர் சக்திகளாக இருந்தன. கடந்த தேர்தலில் யாரும் பெரும்பான்மை வாக்கு பலத்தை பெறவில்லை. இருப்பினும் ஓரளவு பெரும்பான்மையுடன் ஒரு கூட்டரசாங்கம், சாட் ஹரீரி தலைமையில் மேற்குலக சார்பு மந்திரிசபை, ஷியா கட்சிகளின் தயவிலேயே தப்பி பிழைத்தது. இந்த அரசியல் சிக்கல் யாரை ஜனாதிபதியாக்குவது என்ற சர்ச்சையில் கொண்டுவந்து விட்டது. மேற்குலக சார்பு ஜனாதிபதியா, அல்லது சிரியா சார்பு ஜனாதிபதியா? என்ற பிரச்சினைக்கு முடிவு காண முடியாது 17 மாத காலமாக இழுபட்டது.



அமெரிக்காவின் முழு நோக்கமும், லெபனானில் தனக்கு சார்பான ஒரு பலமான அரசாங்கம் உருவாகி, அது ஹிச்புல்லாவை நிராயுதபாணியாக்க வேண்டும். அதாவது இஸ்ரேல் ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி சாதிக்க முடியாததை, லெபனானின் நோஞ்சான் அரசாங்கம் செய்து காட்ட வேண்டும் என்று மனப்பால் குடித்தது. அப்படி அரசாங்கம் அதை செய்ய தவறினால், வகுப்புவாத பிரிவினையை தூண்டி விட்டு, உள்நாட்டு போர்(அல்லது கலவரங்கள்?) மூலம் அரசியல் வரைபடத்தை மாற்றுவது தான் தற்போது உள்ள திட்டம். ஒரு பக்கம் ஹிஸ்புல்லா இன்னமும் ஆயுதங்கள் வைத்திருக்கிறது என்று கொக்கரித்துக் கொண்டே, சுன்னி முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டன. "எமது நண்பர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க உரிமை உண்டு. எதிரிகளுக்கு அந்த உரிமை கிடையாது." என்பது அமெரிக்கா அடிக்கடி கூறும் நியாயம்.



மே மாதம் ஏழாம் திகதி நடந்த போது வேலை நிறுத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக நடந்தது. அதற்கு ஆதரவளித்த ஹிஸ்புல்லா தலைநகர் பெய்ரூட் செல்லும் சாலைகளை மறித்து தடைகள் போட்டது. அதற்கு ஒரு சில நாட்களிற்கு முன்னர் தான் லெபனான் அரசாங்கம் ஹிஸ்புள்ளாவின் தொலைபேசி இணைப்புகளை செயலிழக்க வைக்க முடிவு செய்திருந்தது. ஹிஸ்புல்லா தனது இயக்கத்தின் தனிப்பட்ட தொடர்புக்கு பிரத்தியேகமான தொலைபேசி இணைப்பை கொண்டிருப்பது புதிதல்ல. ஆனால் அது துண்டிக்கப்பட்டால் அந்த இயக்கத்தின் இரகசிய செயற்பாடுகளை கண்டுபிடிப்பது, மற்றும் தலைவர்களின் மறைவிடங்களை அறிவது இலகுவாகி விடும். இப்படியே போனால் தமது ஆயுதங்களும் விரைவில் களையப்படும் என்பதால் விழித்துக்கொண்ட ஹிஸ்புல்லா, அரசாங்கத்தின் முடிவானது, தம்மீதான போர் பிரகடனம் என்று அறிவித்தது.



"யார் எம்மை கைது செய்ய வருகிறார்களோ, அவர்களை நாம் கைது செய்வோம். யார் எம் மீது சுடுகிறார்களோ அவர்கள் மீது நாம் சுடுவோம்." இவ்வாறு மறைவிடத்தில் இருந்து கொண்டு ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உரையாற்றிய பின்னர், ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் ஆயுதபாணிகளாக தலைநகரில் நடமாடினர். அவர்கள் ஒரு சில மணிநேரங்களிலேயே பெய்ரூட் நகரத்தை மட்டுமல்லாது, விமான நிலையத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மேற்குலக சார்பு அரசியல் தலைவர் சாட் ஹரீரியின் வீடு ஆர்.பி.ஜி. ஷெல் வீச்சுக்கு இலக்கானது. அவர் குடும்ப சொத்தான தொலைக்காட்சி நிலையமும், பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப் பட்டன. பிரதமர், மந்திரிகள், அதாவது முழு அரசாங்கம், பலத்த பாதுகாப்புடன் கூடிய மாளிகை ஒன்றில் தம்மை தாமே சிறை வைத்துக் கொண்டனர். தேசிய இராணுவம் பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டது. அதற்கு காரணம், இராணுவத்தில் பெரும்பான்மையாக உள்ள ஷியா வீரர்கள் ஹிஸ்புல்லா அனுதாபிகளாக இருப்பதால், எந்தவொரு எதிர் நடவடிக்கையும் தேசிய இராணுவத்தை சீர்குலைப்பதில் போய் முடியும்.



இரண்டு நாட்கள் மட்டுமே தமது பலத்தை காட்டிய ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்தனர். நடந்த சம்வங்களைவைத்து பார்க்கும் போது, ஹிஸ்புல்லா ஒரு சதிப்புரட்சிக்கு முயன்றதாக தெரியவில்லை. இனி வரப்போகும் போருக்கு ஒத்திகை பார்த்ததாகவே தெரிகின்றது. லெபனான் அரசாங்கம், ஆப்பிளுத்த குரங்கு போல மாட்டிக்கொண்டு முழிக்கிறது. தனது அவமானகரமான தோல்வியை ஒத்துக் கொண்டு, பேசி தீர்ப்போமே என்று இறங்கி வந்துள்ளது. தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் முடிவை மாற்றி கொள்வதாக கெஞ்சியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் முகத்திலும் அசடு வழிந்ததால், ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நிலைமை தாம் எதிர்பார்த்ததுக்கு மாறாக போய் விட்டதால், அவசர அவசரமாக ஐ.நா. பாதுகாப்பு சபையை கூட்டி பிரச்சினைக்கு சுமுகமான முடிவு காணும் படி வற்புறுத்தப்பட்டது.



தற்போது சூடு தணிந்து விட்டாலும், வெகுவிரைவில் உள்நாட்டு போர் உருவாகும் சாத்தியகூறுகள் உள்ளன. ஏற்கனவே ஹிஸ்புல்லா தன்னை போருக்கு தயார்படுத்தி வந்துள்ளது. பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான இளம் ஆண்கள் மாயமாக மறைகின்றனர். அவர்கள் சிரியா அல்லது ஈரானுக்கு இராணுவ பயிற்சிக்கு அழைத்து செல்லப்படுவதாக ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

Tuesday, December 15, 2009

Deaths as car bombs hit Baghdad



Plumes of smoke rose above the sites of the explosions on Tuesday morning [AFP]

At least four people have been killed and several others injured in a series of car bombs in central Baghdad.

Three explosions went off in separate locations across the city on Tuesday, an Iraqi interior ministry official said.

A police source told Al Jazeera that the explosions were near the Iranian embassy, the foreign ministry and the entrance to the Green Zone.

Ahmed Rushdi, a journalist in Baghdad, told Al Jazeera: "The third [blast] was near a restaurant that is attended by officers from the police and the Iraqi army for breakfast in the early morning.

"It's just outside the Green Zone, which is a big challenge for the security [officials] who are inside the Green Zone and inside the parliament."

The heavily protected Green Zone houses key offices of the Iraqi government as well as the US and British embassies.

Security concerns

The blasts come a week after suicide bombers targeted government buildings in a series of attacks on December 8 that killed 127 people.

Nouri al-Maliki, the Iraqi prime minister, faced questions in parliament last week over those attacks.

He blamed the recent bombings on political discord, saying that disputes between political groups were putting the nation's security at risk.

He also criticised legislators for failing to provide enough money for security. Parliamentarians instead pointed to a lack of co-ordination between ministries.

Tuesday's bombings were the fourth wave of co-ordinated attacks in four months to target official buildings in the Iraqi capital despite the security measures in place.

On October 25, the justice ministry and a provincial office were attacked, with blasts killing 153 people and injuring more than 500.

On August 19, more than 100 people were killed and hundreds injured at the foreign and finance ministries.

கவனித்து திருமணம் செய்க - கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள்

கேரள கிறிஸ்தவர்களிடையே விவாகரத்துகள் அதிகரித்து வருகிறது. இது சம்பந்தமாக கேரள கத்தோலிக்க பாதிரியார்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 35 பாதிரியார்கள் கிறிஸ்தவர்களுக்கு திருமணம் செய்யும் முன் கவனித்து திருமணம் முடிக்கும்படி என கொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்மேளனத்தில் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த சைரோ மலபார்,சைரோ மலங்கரா மற்றும் லத்தீன் கதோலிக்க பிரிவினர் உள்ளனர். வெளிநாட்டில் உள்ள பெண்ணையோ அல்லது ஆணையோ திருமணம் செய்பவர்கள் அவர்களைப் பற்றி நன்கு விசாரித்து திருமணம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். வெளிநாட்டில் வசிக்கும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் பொய் சொல்லி மீண்டும் திருமணம் செய்வது அதிகரித்து வருவதை சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தேவாலயங்களில் திருமணத்திற்கு முன் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால் மணமகன் அல்லது மணமகள் பற்றிய விபரங்களை அறிந்து ஏதேனும் மோசடி நடைபெறுவதாக இருந்தால் தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வயோதிகப் பெண்மணி கைது - இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் மற்றுமொரு சாதனை(!?)

நப்லஸ்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.12.2009) அதிகாலையில் நப்லஸ் நகரில் திடீர் தாக்குதலொன்றை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, 65 வயதான உம்மு பாக்கிர் என்ற பெண்மணியின் வீட்டுக்குள் பலவந்தமாகப் புகுந்து அவரைக் கைதுசெய்துள்ளதாக கைதிகள் தொடர்பான கற்கை மற்றும் மனித உரிமைகளுக்கான அஹ்ரார் மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயோதிகப் பெண்மணியிடம் வீரம்(!?) காட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்
அஹ்ரார் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உம்மு பாக்கிர் எனும் வயோதிகப் பெண்மணியின் ஐந்து மகன்கள் ஏற்கெனவே இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, கடந்த மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அவருடைய மருமகள் நில்லி அல் ஸஃபாதியையும் இந்த மாதத் தொடக்கத்தில் அவரது எஞ்சியிருந்த ஒரே மகன் உமர் மற்றும் பேரன் பாக்கிர் பாக்கிர் (வயது 19) ஆகிய இருவரையும் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அஹ்ரார் மையத்தின் பணிப்பாளர் ஃபுவாட் அல் ஹஃப்ஷ் இதுபற்றித் தகவல் அளிக்கையில், இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா தடுப்புக்காவல் நிலையத்தில் தற்போது அடைத்துவைக்கப்பட்டுள்ள உம்மு பாக்கிர் (வயது 65) பலஸ்தீன் கைதிகளிலேயே மிகவும் வயது முதிர்ந்தவர் என்றும், அவருடைய மூத்த மகன் பாக்கிர், மருமகள் நில்லியின் கண்பார்வையற்ற கணவன் ஆகியோரும் இதே தடுப்புக்காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கொஞ்சம்கூட மனிதாபிமானமின்றி, மகன்களுக்கு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் துன்புற்றுக்கொண்டிருக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியை இப்படிக் கடத்திச் சென்று தடுப்புக் காவலில் வைத்திருக்கும் மிக இழிவான செயற்பாடானது அதன் மிலேச்சத்தனமான சுயரூபத்தை எடுத்துக்காட்டப் போதுமானதாகும் என்று கடிந்துரைத்த ஃபுவாட் அல் ஹஃப்ஷ், உம்மு பாக்கிரை உடனடியாக விடுவிப்பது தொடர்பில் விரைந்து செயற்படுமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளார்.
திடீர் சோதனை என்ற போர்வையில் தொடர் கைதுகள்
இதே தினத்தில் அல் ஹலீல் நகரத்தில் திடீர் சோதனை என்ற போர்வையில் களமிறங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை பலஸ்தீன் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்து அவரது வீட்டிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துள்ளது.

அவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞரின் பெயர் அக்ரம் அல் ஹத்தாத் என்பதாகவும் அவரது வீட்டிலிருந்த நகைகளே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் திருடப்பட்டுள்ளன என்றும் உள்ளூர் வட்டாரங்கள் பலஸ்தீன் தகவல் மையத்திடம் தகவல் தெரிவித்துள்ளன.

நன்றி: PIC

சரணடைய வந்த புலிகளைக் கொல்ல கோத்தபய உத்தரவிட்டார்: பொன்சேகா

சர ​ண​டைவதற்காக வந்த விடு​த​லைப் புலி​களின் தலை​வர்​களை சுட்​டுக் கொல்ல பாது​காப்​புச் செய​லர் கோத்​த​பய ராஜ​பக்ஷ உத்த​ர​விட்​டார் என அதி​பர் தேர்த​லில் எதிர்க்​கட்சி வேட்​பா​ள​ரா​கப் போட்​டி​யி​டும் முன்​னாள் ராணு​வத் தள​பதி சரத் பொன்​சேகா குற்​றம்​சாட்​டி​னார்.​

விடுதலைப் புலிகளுடனான சன்டையின்போது ராணு​வப் படை தள​ப​தி​யாக இருந்த சரத் பொன்​சேகா போர் முடிந்த பின்​னர் முப்​ப​டை​க​ளின் தள​ப​தி​யாக பதவி உயர்த்​தப்​பட்​டார்.​ பின்னர் ரா​ஜ​பக்ஷ சகோ​த​ரர்​க​ளு​டன் எழுந்த கருத்து வேறு​பாடு கார​ண​மாக தனது பத​வியை ராஜி​னாமா செய்த பொன்​சேகா,​​ ஜன​வரி 26-ம் தேதி நடை​பெ​றும் அதி​பர் தேர்த​லில் எதிர்க்​கட்​சி​க​ளின் பொது வேட்​பா​ள​ரா​கப் போட்​டி​யி​டு​கி​றார்.​ "சண்டே லீடர்' பத்​தி​ரி​கைக்கு ஞாயிற்​றுக்​கி​ழமை அளித்த பேட்​டி​யில் பொன்​சேகா கூறி​யுள்​ள​தா​வது:​

முல் ​லைத்​ தீவு மாவட்​டம்,​​ நந்​திக்​க​டல் பகு​தி​யில் விடு​த​லைப் புலி​க​ளின் சமா​தா​னக் குழு தலை​வர் சீவ​ரத்​தி​னம் பூலித்​தே​வன்,​​ அர​சி​யல் குழுத் தலைவர் சிங்​கம் நடே​சன்,​​ ராணுவ கமாண்​டர் ரமேஷ் ஆகி​யோர் சர​ண​டை​வ​தற்கு சில மணி நேரம் முன்​னர்,​​ தாங்​கள் முறை​யாக சர​ண​டைய உத​வு​மாறு நார்வே உள்​ளிட்ட சர்​வ​தேச சமூ​கத்​தி​டம் அவர்​கள் மூவ​ரும் வேண்​டு​கோள் விடுத்​த​னர்.​

தொ​லை​பேசி அழைப்​பு​க​ளும்,​​ இ-​மெயி​லும் தொடர்ந்து வெள்​ளம்​போல வந்​த​தை​ய​டுத்து,​​ மூவ​ரும் சர​ண​டைய இலங்கை அரசு ஒப்​புக் கொண்​டது.​ அச்​சு​றுத்​தும் வகை​யில் இல்​லா​மல்,​​ வெள்​ளைத் துணி​யு​டன் 58-வது டிவி​ஷன் படை​க​ளி​டம் சர​ண​டை​யு​மாறு அவர்​கள் கேட்​டுக் கொள்​ளப்​பட்​ட​னர்.​

எ​னி​னும்,​​ மூன்று தலை​வர்​க​ளும்,​​ அவர்​க​ளது குடும்​பத்​தி​ன​ரும் சர​ண​டை​யும்​போது அவர்​களை சுட்​டுக் கொல்ல அதி​பர் மகிந்த ராஜ​பக்ஷவின் சகோ​த​ர​ரும்,​​ பாது​காப்​புச் செய​ல​ரு​மான கோத்​த​பய ராஜ​பக்ஷ உத்​த​ர​விட்​டார்.​ அதன்​ப​டியே அவர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​ட​னர் என்​று பொன்​சேகா கூறியுள்ளார்.

ரா ​ணு​வத் தள​ப​தி​யாக பொன்​சேகா இருந்​த​ச​ம​யத்​தில்,​​ அவ​ரது சொந்த ஊரான அம்​ப​லன்​கோ​டா​வில் ஒரு நிகழ்ச்​சி​யில் பேசும்​போது,​​ "தனது தலை​மை​யில் விடு​த​லைப் புலி​க​ளுக்கு எதி​ரான போரில் புது​மை​யான,​​ மர​பு​சா​ராத முறை​யில் ராணு​வம் போரிட்​ட​து​டன்,​​ சர​ண​டைய வந்த புலி​க​ளைக் கூட ராணு​வம் சுட்​டுக் கொன்​றது' என்று கூறி​னார்.​

பொன்​சேகா கூறியுள்ள குற்​றச்​சாட்டு குறித்து மனித உரி​மை​கள் துறை அமைச்​சர் மகிந்த சம​ர​சிங்கே கூறி​ய​தா​வது:​
இது ​போன்​ற​தொரு உத்​த​ரவை கோத்​த​பய ராஜ​பக்ஷ பிறப்​பிக்​க​வில்லை.​ பு​லி​க​ளுக்கு எதி​ராக தான் கடு​மை​யான நட​வ​டிக்கை மேற்​கொள்​வ​தில் இருந்து கட்​டுப்​ப​டுத்​தப்​பட்​ட​தாக ஜூலை 10-ல் பொன்​சேகா கூறி​யி​ருந்​தார்.​ தற்​போ​தைய அவ​ரது குற்​றச்​சாட்டு இதற்கு முரண்​பா​டாக உள்​ளது.​

பி​ர​பா​க​ர​னின் பெற்​றோர் தவிர 4 டாக்​டர்​கள்,​​ புலி​கள் தலை​வர்​கள் தயா மாஸ்​டர்,​​ சார்​லஸ் மாஸ்​டர் ஆகி​யோர் வெள்​ளைக் கொடி​யு​டன் சர​ண​டைந்​த​னர்.​ அவர்​கள் இன்​ன​மும் உயி​ரு​டன் உள்​ள​னர்.​ கெளர​வ​மா​க​வும் நடத்​தப்​ப​டு​கின்​ற​னர் என்​றார்.​

மூன்று பேர் சர​ண​டை​வது தொடர்​பாக நார்வே மத்​தி​யஸ்​தர்​கள் தன்னை அணு​க​வில்லை என அதி​ப​ரின் மற்​றொரு சகோதரரும்,​​ அர​சி​யல் ஆலோ​ச​க​ரு​மான பாசில் ராஜ​பக்ஷ கூறியுள்ளார்.

வாக்குறுதியை பேணுதலும் மனித நேயமும்

ஹிரா என்றொரு தேசம். அங்கு நுஃமான் என்ற அரசர் ஆட்சிச் செய்து வந்தார்.ஒரு நாள் நுஃமான் தனது பாதுகாவலர்களுடன் காட்டுக்கு வேட்டைக்கு சென்றார்.வேட்டையின்போது காட்டில் தன்னந்தனியாக வெகு தூரம் சென்றுவிட்டார் நுஃமான். அந்தி சாயும் வேளையில் மேகம் கறுத்து கடும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.

அரசர் நுஃமான் ஒதுங்குவதற்கு ஏதாவது வாய்ப்புகளுண்டா என்று சுற்றும் முற்றும் அலைந்தபொழுது ஒரு ஏழை விவசாயியைக் கண்ணுற்றார். அவர் பெயர் ஹன்ழலா. அவரிடம் தன்னை அரசர் என்பதை காட்டிக்கொள்ளாத நுஃமான் தனக்கு இன்றிரவு தங்கிச்செல்ல ஒரு இடம் வேண்டும் என்று கோரினார். உடனே தனது வீட்டிற்கு அழைத்துச்சென்ற ஹன்ழலா அவருக்கு ஒரு ஆட்டை அறுத்து உணவை தயாரித்துக் கொடுத்ததுடன் சிறந்த முறையில் உபசரித்தார்.

மறுநாள் காலை துயிலெழுந்த நுஃமான் புறப்படத் தயாரான பொழுதுதான் கூறினார் தான் இந்நாட்டின் அரசர் என்றும் ஒரு நாள் தன்னை தனது அரண்மனையில் வந்துக்காணுமாறும் அப்பொழுது உதவிபுரிவதாகவும் ஹன்ழலாவிடம் கூறிவிட்டு சென்றார்.
ஏழை விவசாயியான ஹன்ழலாவுக்கு தனது குடும்பத்தோடு வாழ்க்கையை ஓட்ட போதிய வருமானமின்றி மிகுந்த சிரமத்திற்காளான நேரத்தில் முன்பு அரசர் கூறியதை நினைவுக்கூர்ந்து அரசரை காண அரண்மனைக்கு புறப்பட்டார்.
அரண்மனைக்குள் நுழைந்த ஹன்ழலாவைக் கண்டதும் அடையாளம் கண்டுக்கொண்ட அரசர் நுஃமானுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனெனில் வருடத்தில் ஒருநாள் காலையில் அரசர் யாரைப்பார்க்கிறாரோ அவரை கொலைச்செய்யவேண்டும் என்பது அந்நாட்டின் சட்டமாகவிருந்தது. அந்த நாளில் முதன்முதலில் ஹன்ழலாவைப் பார்த்துவிட்டுத்தான் தனக்கு இக்கட்டான வேளையில் உதவிய இந்த மனிதரையா நாம் கொலைச்செய்யபோகிறோம் என்று திடுக்கிட்டார் அரசர்.
ஹன்ழலாவைப் பார்த்துக்கேட்டார் அரசர், "இந்த நாளிலா நீ இங்கு வரவேண்டும்?" என்று கேட்டவாறு அந்த நாட்டின் நடைமுறையை விளக்கினார். இதனைக்கேட்ட ஹன்ழலா, "எனக்கு இந்த நாளைப்பற்றி தெரியாதே" என்று அப்பாவித்தனமாக பதில் கூறினார்.
வேறு வழியில்லை உன்னை கொன்றுத்தான் ஆகவேண்டும், எனவே உனக்கு சாகுமுன் ஏதாவது ஆசை இருக்கிறதா என்றுக்கேட்டார் நுஃமான். அப்பொழுது ஹன்ழலா, "என்னை நீங்கள் கொலைச்செய்வதற்கு முன் ஒரு ஆண்டு அவகாசம் தாருங்கள்" என்றார். உடனே அரசர், "உனக்கு பிணையாள் யாராவது இருக்கின்றார்களா? எனக்கேட்டார். ஹன்ழலா தனக்கு பிணை யார் தருவார் என்று தேடியபொழுது குராத் என்ற நபர் தான் ஹன்ழலாவுக்கு பிணைதருவதாக வாக்குறுதியளித்தார். இதற்கு சம்மதித்த அரசர் நுஃமான் ஹன்ழாவைச் செல்ல அனுமதியளித்தார். பின்னர் அவருக்கு 500 ஒட்டகங்களை அளித்தார்.
ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஹன்ழலா திரும்பி வரவேண்டிய நாள். நாட்டின் எல்லையில் அரசர் நுஃமானும் தண்டனையை நிறைவேற்றுபவரும் ஹன்ழலாவுக்காக காத்திருந்தனர். அரசருக்கோ ஹன்ழலா வராமலிருக்க வேண்டுமே என்ற எண்ணத்துடன் கவலையுடன் காணப்பட்டார்.
ஹன்ழலா வருவதற்கான நேரம் முடிவடையும் வேளை தூரத்தில் ஒரு உருவம் தென்பட்டது பக்கத்தில் வந்தவுடன்தான் அரசர் நுஃமானுக்கு தெரிந்தது அது ஹன்ழலா என்று. ஆடிப்போனார் அரசர், தன்னிடம் அவகாசம் கேட்டுவிட்டு தப்பிச்செல்வார் என்று எதிர்பார்த்தால் இவர் இவ்வாறு சரியான நேரத்திற்கு வந்துவிட்டாரே என வருத்தப்பட்டார்.
அருகில் வந்த ஹன்ழலாவிடம் மெல்லக்கேட்டார் அரசர் நுஃமான், "கொலையிலிருந்து தப்பியபிறகு மீண்டும் இங்கு வர உன்னைத்தூண்டியது எது?" என வினவினார். ஹன்ழலா சற்றும் தாமதிக்காமல் பதில் கூறினார், "வாக்குறுதியை பேணவேண்டும் என்பதாலேயே".
நுஃமானின் அடுத்த கேள்வி ஹன்ழலாவுக்கு பிணையளித்த குராதை நோக்கியிருந்தது, "ஹன்ழலா திரும்பி வருவார் என்பது உறுதியில்லாத நிலையில் நீ எதற்கு பிணை வழங்கினாய்?" எனக்கேட்டார். "மனிதநேயம்" என்று பதில் கூறினார் குராத். இந்த பதில்கள் அரசர் நுஃமானின் உள்ளத்தை உலுக்கியது. பின்னர் நுஃமான் அவ்விருவரையும் பார்த்துக்கூறினார், "இவ்விரு குணங்களில் எது சிறந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் மூன்றாவது ஒரு நபராக மாற என்னால் இயலாது" என்று கூறி அவ்விருவரையும் விடுதலைச் செய்தார்.
இச்சம்பவத்தைத்தொடர்ந்து அரசர் நுஃமான் தனது பிறரைக் கொலைச்செய்யும் தீய குணத்தை அடியோடு கைவிட்டார்.

Suicide blast rocks Afghan capital


The blast in Kabul came as officials gathered
for an anti-corruption conference [EPA]

At least eight people have been killed and 40 injured in a suicide bomb attack in Kabul, the Afghan capital, the country's interior ministry has said.

The blast occurred on Tuesday outside the Heetal hotel in Wazir Akbar Khan, the diplomatic district of Kabul, said Ahmed Bilal, a national security directorate officer at the scene.

"Eight people have been killed. Four are women. Four others are male and 40 other people have been wounded. It was a suicide bombing," Zamarai Bashary, an Afghan interior ministry spokesman, told AFP news agency.

Steve Chao, Al Jazeera's correspondent in Kabul, said: "This has happened in an area that has a lot of foreign offices - it is near the US embassy.

"We understand that, at the time of the blast, Afghanistan's former vice-president Ahmad Zia Massoud, was also in the area. We understand that he survived the attack."

Former leader 'targeted'

Shah Asmat, an aide to the former vice-president, said he believed that the bomber had intended to attack Massoud's home.

"Of course we were the target," Asmat said.


"Before, the Taliban killed [Ahmad Shah] Massoud. Now, they tried to kill his brother."

Reports say that the blast was heard by government officials, politicians and foreign representatives gathered in another part of the city for an anti-corruption conference hosted by Hamid Karzai, the Afghan president.

The three-day meeting, Karzai's first official act since he was sworn in as president for a second term, is a response to calls from his Western backers to make the country's government more transparent.

"Hamid Karzai stressed at the conference that he is committed to cleaning up government. He said that he will make every Afghan employee accountable, in terms of their earnings and their properties," Chao reported.

"Over the next year, there will be investigations of Afghan employees since 2001, in terms of how much they earn and what property they have."

US and members of the Nato military alliance, which both have thousands of troops in Afghanistan, have welcomed the conference, but have also expressed doubts as to what will be achieved.

"We think the conference is certainly a step in the right direction in that it's important to see the government of Afghanistan addressing corruption issues," John Groch, a US embassy spokesman, said.

"At the same time, however, we're eager to see the government move forward with action."

Crackdown urged

Karzai has come under growing international pressure to take a tough line against government officials suspected of corruption, particularly in the wake of the fraud-tainted presidential poll that took place in August.

Karzai was declared the winner by default when Abdullah Abdullah, his main challenger, pulled out, citing irregularities.

Kai Eide, the senior United Nations representative in Afghanistan, had said earlier in October that there had been "widespread fraud" during the elections.

The calls for the Afghan government to crack down on corruption comes as thousands more US troops prepare to deploy to the country to battle fighters loyal to the Taliban and al-Qaeda.

Barack Obama, the US president, last week ordered 30,000 more soldiers to be sent to the country, following a request by the senior commander of US and Nato forces for more boots on the ground.

Taliban fight

The US's senior military officer said on Monday he was increasingly concerned about the threat posed by Taliban and al-Qaeda fighters sheltering on the Pakistani side of the Afghan border.

Admiral Mike Mullen, chairman of the US joint chiefs of staff, said during a visit to Afghanistan that violence across the country was likely to become more severe in the coming months, with fighters holding the upper hand across about a third of Afghan provinces.

"I remain deeply concerned by the growing level of collusion between the Afghan Taliban and al-Qaeda and other extremist groups taking refuge across the border in Pakistan," Mullen said.

"Getting at this network, which is now more entrenched, will be a far more difficult task than it was just one year ago.

"The insurgency has grown more violent, more pervasive, more sophisticated," he said.

ஆந்திராவில் தெலுங்கானா "நவநிர்மாண் சேனா" துவக்கம்!

ஹைதராபாத்:மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமைகாகான வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரி வரும் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா போல, தீவிர தெலுங்கானா ஆதரவாளர்கள் சிலர், தெலுங்கானா நவநிர்மாண் சேனாவைத் துவக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, தெலுங்கானாவுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைய துவங்கியுள்ளன. இந்நிலையில், தெலுங்கானாவைத் தீவிரமாக ஆதரிக்கும் ஆந்திர வழக்கறிஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, தனித் தெலுங்கானாப் போராட்டத்தை இன்னும் கடுமையாக கொண்டு செல்வதற்காக, தெலுங்கானா நவநிர்மாண் சேனாவை உருவாக்க போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், தெலுங்கானாப் போராட்டத்தை தீவிரமாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம். ஜெய் தெலுங்கானா என்று சொல்வதற்கு விருப்பமில்லாதவர்கள் மகாராஷ்டிராவில் எம்.என்.எஸ்., கூறிவருவது போல, தெலுங்கானாவை விட்டு வேறு எங்காவது போகட்டும். 50 ஆண்டுகளாக இந்தப் போராட்டம் நடக்கிறது. எங்கள் குறிக்கோளை எட்டாமல் ஓயமாட்டோம்' என்று தெரிவித்தனர்.
ஆனால் ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் வழக்கறிஞர்கள், "மத்திய அரசின் முடிவு ஒருதலைப் பட்சமானது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். டி.என்.எஸ்., உருவானால் வன்முறை தலையெடுக்கும்' என்று தெரிவித்தனர்.

தெலுங்கானா கொள்கையைப் பரப்பி வரும் பேராசிரியர் என். கோதண்ட ராமன் டி.என்.எஸ்., பற்றிக் கூறுகையில் எம்.என்.எஸ்., சின் கொள்கைக்கும் தெலுங்கானா போராட்டத்துக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது. நமது போராட்டம், தெலுங்கானா உருவாவதைத் தடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம். தெலுங்கானா பகுதிகளில் வாழ்ந்து வரும் ஆந்திர, ராயலசீமா மக்களுக்கு எதிரான போராட்டமல்ல' என்று தெரிவித்தார்.
source:inneram

துபாய்க்கு அபுதாபி 10 பில்லியன் டாலர் கடனுதவி!

துபாய் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து துபாய் அரசாங்கம் இன்று கொடுக்க வேண்டிய 4.1 பில்லியன் டாலர் மதிப்பிலான இஸ்லாமிய சுகூக்குக்கான நிதியை கொடுக்குமா என்பது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. இச்சூழலில் 10 பில்லியன் டாலர் நிதியை துபாய் அபுதாபியிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் துபாய் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் மீதமுள்ள 5.9 பில்லியன் டாலர் 2010 ஏப்ரல் வரையான துபாய் வேர்ல்டின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்று கூறிய ஷேக் அஹமத் பின் சயீத் அல் மக்தூம், துபாய் எப்போதும் தன் வாக்குகளையும் சர்வதேச சட்டங்களையும் மதித்து நடக்கும் நாடு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறோம் என்றார்.

துபாய் முன்பிருந்ததைப் போன்று எப்போதும் பிரகாசமான பொருளாதார மையமாக விளங்கும். எங்கள் சிறப்பான காலம் இனி மேல் தான் வரவிருக்கின்றது என்றும் அஹ்மத் கூறினார். இவ்வறிப்பின் காரணத்தால் துபாய் மட்டுமல்லாது வளைகுடா சந்தைகளும் இன்று ஏறுமுகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சோபியான் சம்பவம்: கற்பழிப்பு, கொலை இல்லை - மத்திய புலனாய்வுத் துறையின் அறிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சிபிஐ இன்று அம்மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது.
அதில் கற்பழித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலோபர் ஜான் (22), அவரது மைத்துனி ஆசியா ஜான் (17) ஆகியோர் மே 30ம் தேதி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.இவர்கள் இருவர் மரணம் குறித்து விசாரித்ததில் இருவரும் கற்பழிக்கப்படவோ அல்லது கொலை செய்யப்படவோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. மாறாக இருவரும் நீரில் மூழ்கி இறந்துள்ளது தெரிய வந்தது. இவர்களை பாதுகாப்புப் படையினர் கற்பழித்துக் கொலை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தக் கொலைகள் தொடர்பாக 6 டாக்டர்கள், ஐந்து வக்கீல்கள், 2 பொதுமக்கள் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இவர்கள் அனைவரும் சாட்சியங்களை கலைத்ததாகவும், சாட்சிகளை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சோபியான் கொலைகள் தொடர்பாக விசாரணை முறைப்படி நடக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில், சிபிஐ இப்படி ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து நிலோபரின் கணவர் ஷகீல் அகங்கர் கூறுகையில், எனது நீதிக்கான போராட்டம் ஓயாது. நீதி கிடைக்கும் வரை போராடுவேன். சிபிஐயின் கண்டுபிடிப்புகளை நாங்கள் நம்பவில்லை. அனைவரும் வேண்டும் என்றே வழக்கை திசை திருப்புகின்றனர். நான் சிபிஐயை நம்ப மாட்டேன். ஷகீலின் மனைவி மற்றும் சகோதரி மட்டும் கற்பழிக்கப்படவில்லை. மாறாக ஒட்டுமொத்த காஷ்மீர் பெண்களும் கற்பழித்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை மத்திய அரசுக்குப் புரிய வைப்பேன். எனது போராட்டம் தொடரும். என்றார்.
இதற்கிடையே, சிபிஐ அறிக்கை குறித்து மக்கள் ஆத்திரப்பட்டு வன்முறையில் இறங்க வேண்டாம் என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முசாபர் பெய்க் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை அறிக்கைக்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரு பெண்களின் கொலைகள் தொடர்பாக சோபியானில் பெரும் வன்முறை வெடித்தது. 47 பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை செப்டம்பர் மாதம் முதல் விசாரித்து வந்தது சிபிஐ.
source:inneram

கால் 'தடுக்கி' விழுந்தவரும் காணாமல் போன பாபரி மஸ்ஜித் கோப்புகளும்!

பாபரி மஸ்ஜித்நீண்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர், பாபரி மஸ்ஜித் வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணைக் கமிஷன், கடந்த 30 ஜூன் 2009இல் தன் இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இதற்கு முன்னரும் பல்வேறு கலவரங்கள் தொடர்பாக விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்டன. அவற்றில் எல்லாம் சிறுபான்மை சமுதாயங்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் தொடர்பான விசாரணைக் கமிஷன்களின் அறிக்கைகள் அனைத்தும், இந்த மதசார்பற்ற நாட்டில் பரணில் தூங்குகின்றன. சிறுபான்மை சமுதாயங்களுக்கு நீதி என்பது எட்டாக் கனிதான் போலும்!

குறிப்பாக, பாபரி மஸ்ஜித் தகர்ப்புக்குப்பின் மும்பையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை! "மும்பைக் கலவரத்தில் பால் தாக்கரே முக்கிய குற்றவாளிதான்" என்று அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. ஆனால், இந்த நிமிடம்வரை பால் தாக்கரேக்கு எதிராக மத்திய-மாநில அரசுகளும் நீதிமன்றங்களும் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடத் துணியவில்லை. எனவேதான் இந்திய நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடும் அளவிலான பால் தாக்கரேயின் சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை பால்தாக்கரேயை மும்பைக் கலவரக் குற்றவாளி என மிகத் தெளிவாகக் கூறியதைப் போலவே, "அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, வாஜ்பாய், ஆகிய மூவரும் பாஜகவின் முக்கியத் தலைவர்களும் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் குற்றவாளிகள்தாம்" என லிபரான் கமிஷன் அறிக்கை மிகத் தெளிவாகக் கூறுகிறது. முறித்தெறியப் பட்ட தடை வேலிகள் முதற்கொண்டு முதுகுசவாரிக் கேவலம்வரை எல்லாத் தொலைக்காட்சிகளும் உலகம் முழுக்க ஒளிபரப்பிய இந்திய தேசிய அவமான ரகசியத்தைச் சொல்வதற்குத்தான் 17 ஆண்டுகளில் மக்களின் வரிப்பணம் 8கோடி ரூபாய் இந்தக் கமிஷனுக்குச் செலவழிக்கப் பட்டது.

"வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூவரும் பா.ஜகவின் போலி மிதவாதிகள். அவர்கள் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு, தங்களுக்கே தெரியாமல் நடந்து விட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது, பாபரி மஸ்ஜித் தகர்ப்பு என்பது திடீரென்று நடந்ததல்ல; மாறாக, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று தெரிகிறது".

"பாபரி மஸ்ஜிதைத் தகர்க்க வேண்டும் என்ற சங்பரிவாரின் முடிவுகளுக்கு இவர்கள் மூவரும் உடன்பட்டுள்ளனர். சங்பரிவாரின் திட்டம் அவர்களுக்குத் தெரியாது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.இன் கைப்பாவைகளாக செயல் பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.இன் கட்டளைகளை மீற முடியாதவர்களாக இருந்துள்ளனர் என்பது எவ்விதச் சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. எனவே, சட்டச் சலுகையான சந்தேகத்தின் பலனை அளித்து அவர்களைக் குற்றத்திலிருந்து விடுவிக்க முடியாது".

"தங்களது அரசியல் லாபத்துக்காக, மிகப்பெரிய நாடான இந்தியாவைக் காட்டுமிராண்டித் தனத்துக்கும் சகிப்பற்றத் தன்மைக்கும் ஆளாக்கி உள்ளனர்".

"இதைவிடப் பெரிய துரோகம், ஜனநாயகத்தில் கிடையாது. அவர்கள் தெரிந்தே செய்த குற்றங்களைக் கண்டனம் செய்ய இந்தக் கமிஷனுக்குத் தயக்கமே கிடையாது. அவர்கள் அயோத்தி விவகாரத்தில் நாட்டை மத மோதலுக்கு இட்டுச் சென்றுள்ளனர்"

என்று லிபரான் கமிஷன் விளக்கியுள்ளதோடு,

"அவர்கள், வாக்காளர்கள் (மக்கள்) வைத்திருந்த நம்பிக்கையையும் மீறி விட்டனர். இதைவிடப் பெரிய துரோகம், ஜனநாயகத்தில் கிடையாது. அவர்கள் தெரிந்தே செய்த குற்றங்களைக் கண்டனம் செய்ய இந்தக் கமிஷனுக்குத் தயக்கமே கிடையாது. அவர்கள் அயோத்தி விவகாரத்தில் நாட்டை மத மோதலுக்கு இட்டுச் சென்றுள்ளனர்".

எனக் கூறும் லிபரான் கமிஷன் அறிக்கை, ஊடகங்கள் கையில் கிடைக்காமல் நேரடியாகப் நாடாளுமன்ற விவாதத்துக்கு வந்திருந்தால் அன்றைக்கே பாஜக எனும் கட்சி, இந்திய அரசியலில் இருந்து துடைத்து எறியப் பட்டிருக்கும். அத்தகைய இழிவு நிலையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அறிக்கை வெளிவந்ததைத் தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியாகத் திசை திருப்பும் நாடகத்தில் பாஜக இறங்கி விட்டது. இந்தத் திசை திருப்பல் வெற்றி அடைந்து விட்டால், பால் தாக்கரேயைப் போலவே அத்வானி வகையறாக்களும் நிம்மதியாக அடுத்தக்கட்ட மதக்கலவரங்களை உருவாக்கும் வழிமுறைகளைக் குறித்து ஆலோசிக்கத் தலைப்படக் கூடும்.

அறிக்கை வெளியானதற்கே இந்த நிலைமை எனில், லிபரான் கமிஷனின் விசாரணைக் காலகட்டத்தில் இதனை விட சுவாரசியமான அநியாயங்கள் அதிகார, இந்துத்துவக் கூட்டணியால் நடத்தப்பட்டன. அவற்றுள் ஒன்று:

-o-

பாபரி மஸ்ஜித் வழக்குத் தொடர்பான லிபரான் விசாரணைக் கமிஷனின் அறிக்கையும் வழக்கமான கண்துடைப்பு ஏமாற்று நாடகம்தான் என்று ஐயங் கொள்வதற்கு இடம்பாடாக, இறுதி அறிக்கையை நீதிபதி லிபரான், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்த ஒருவார காலத்துக்குள் சான்றுகள் வெளிவந்தன.

உத்தரப் பிரதேச உள்துறைத் தலைமைச் செயலாளர் அதுல் குமார் குப்தா, கடந்த 7 ஜூலை 2009 அன்று லக்னவ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், "பாபரி மஸ்ஜித் தொடர்பான 23 கோப்புகள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்டன" எனக் குறிப்பிட்டிருக்கிறார். உள்துறைச் செயலர் ஜாவித் அஹ்மது தயாரித்த அந்த அறிக்கையில், "கோப்புகளின் எண்ணிக்கை, பதிவு செய்யப் பட்ட பட்டியிலில் மட்டுமே உள்ளது; கோப்புகளைக் காணவில்லை" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணைக் கமிஷன், காணாமல் போய்விட்டதாகச் சொல்லப் படும் 23 கோப்புகள் பற்றிக் கண்டு கொள்ளாமல் 48 தடவை கால அவகாச நீட்டிப்புப் பெற்று, 17 ஆண்டுகளாக நடந்த விசாரணையைக் கெட்டிக்காரத் தனமாக மூட்டை கட்டி விட்டது.

பாபரி மஸ்ஜித் தொடர்பான 23 கோப்புகள் காணாமல் போய்விட்டதாகச் சொல்லப் படும் கதையாவது:

உத்தரப் பிரதேச உள்துறை அமைச்சகத்தின் வகுப்புக் கலவரக் கட்டுப்பாட்டுத் துறையில் சிறப்புப் பணி அலுவலராகப் பணிபுரிந்த சுபாஷ் பன் சத் (Subhash Bahn Sadh), ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார். சுபாஷின் பொறுப்பில்தான் பாபரி மஸ்ஜித் தொடர்புடைய, காணாமல் போய்விட்டதாகச் சொல்லப் படும் 23 கோப்புகளும் இருந்தன!

2000ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி, உத்தரபிரப் தேசத்திலிருந்து டெல்லிக்குக் காசி-விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்ட சுபாஷ், "ரயில் டெல்லி திலக் ப்ரிட்ஜ் ரயில் நிலையம் வந்து சேர்ந்தபோது, கால் தடுமாறி ரயிலிலிருந்து கீழே விழுந்து காயமடைந்து, இரு நாள் சிகிச்சைக்குப்பின் இறந்தார்" என்று காவல்துறை அறிக்கை கூறுகிறது. பாபரி வழக்குத் தொடர்பாக லிபரான் விசாரணைக் கமிஷன் முன்னிலையில் 1.5.2000 அன்று வாக்குமூலம் கொடுப்பதற்காக டெல்லிக்கு வந்த சுபாஷ், அன்றைய தினம் டெல்லியிலுள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் பாதி உயிருடன் படுத்திருந்தார்.

தன் பொறுப்பில் இருந்த 23 கோப்புகளையும் சுபாஷ் எங்கு வைத்திருந்தார் என்பதும் தனது இறுதி டெல்லிப் பயணத்தின்போது அவற்றைத் தன்னுடன் எடுத்துச் சென்றாரா இல்லையா என்பதும் கேள்விக்குறிகளாகவே தொங்குகின்றன.

உத்தரப் பிரதேச உள்துறையின் சிறப்புச் செயலாளரான கே.பி. அகர்வால், டெல்லி காவல்துறையின் தலைமையக இணை ஆணையாளர் ட்டீ என் மோகனிடம் கடந்த 6.7.2000 அன்று சமர்ப்பித்த அஃபிடவிட்டில், "டெல்லிக்குப் போகும்போது கோப்புகளை உடன் கொண்டு செல்ல வேண்டும் என சுபாஷுக்குக் கட்டளை ஏதும் இடப் படவில்லை" என்று குறிப்பிட்டதோடு, 'விபத்து' நடந்த பின்னர் "சுபாஷின் உடமைகளைப் பரிசோதித்த வகையில் கண்டெடுக்கப் பட்டவை பயணத்துக்கான ரயில் டிக்கெட்டும் சில விசிட்டிங் கார்டுகள் மட்டுமே" என்று பதிவு செய்திருக்கிறார்.

சுபாஷின் ரயில் 'விபத்து'க்குப் பின்னர் மருத்துவமனையில் அவர் சேர்க்கப் பட்டிருந்தபோது அங்கு அவரைப் பார்க்கச் சென்ற உத்தரப் பிரதேச உள்துறையின் அன்றைய தலைமைச் செயலாளரும் தற்போது பண்டல்கண்ட் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான வீ.கே. மிட்டல் கூறும்போது, "ஒரிஜினல் கோப்புகளை அவரோடு எடுத்துச் சென்றிருக்க வாய்ப்பில்லை. அப்படி எடுத்துச் செல்வதாயின் அதற்கு முன்னர் எனக்குத் தகவல் சொல்லப் பட்டிருக்கும். அப்படியே எனக்குத் தகவல் தராமல் ஒரிஜினல் கோப்புகளை எடுத்துச் சென்றிருந்தால் ஆவணக் காப்பகத்தில் அவற்றின் பிரதிகள் இருக்க வேண்டும். பிரதிகளை எடுத்துச் சென்றிருந்தால் ஒரிஜினல் இருக்க வேண்டும். ஆனால், காப்பகத்தில் ஒரிஜினலும் இல்லை; பிரதிகளும் இல்லை" என ஃப்ரண்ட் லைன் பேட்டியின்போது வியப்புத் தெரிவித்தார்.

இத்தனைக்குப் பிறகும் செத்துப் போனவர் திரும்பி வந்து மறுக்கப் போவதில்லை எனும் துணிவில், "பாபரி மஸ்ஜித் தொடர்பான 23 ஒரிஜினல் கோப்புகள் 9 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டன. அவற்றை டெல்லிக்குப் போகும்போது சத் எடுத்துச் சென்றிருக்க வேண்டும்" என்று உத்தரப் பிரதேச அரசின் தலைமைச் செயலர் அதுல் குமார் குப்தா உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 7 ஜூலை 2009 விளக்கத்தில் பூடகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், "அன்று வீட்டிலிருந்து புறப்பட்டபோது அவனது டெல்லிப் பயணத்துக்குத் தேவையான மாற்று உடைகளை மட்டுமே சிறு சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்றான். கோப்புகள் எதையும் எடுத்துச் செல்லவில்லை" என்று சுபாஷின் தந்தையான பீர்பான் ஸத் கூறுகிறார்.

மேலும், "என் மகன் 'விபத்து'க்குள்ளானான் என்ற செய்தியறிந்து லக்னவிலிருந்து 1.5.2000 இரவு முழுக்கப் பயணம் செய்து அடுத்தநாள் டெல்லியை அடைந்தேன். நான் மருத்துவமனைக்குச் சென்று என் மகனைப் பார்த்தபோது தன்னினைவுடன் இருந்தான். தனக்கு அறுவைச் சிகிச்சை செய்வதில் ஆட்சேபணை இல்லை என மருத்துவமனை விண்ணப்பத்தில் கையெழுத்திட்டதாக என்னிடம் சொன்னான். 'விபத்து' நடந்து ஒரு நாள் முழுக்கக் கடந்தும் அவனிடம் டெல்லிக் காவல்துறையினர் எந்த விசாரணையும் செய்யாமல் அலட்சியப் படுத்தியது, நடந்தது 'விபத்து' அல்ல; அவனுக்கெதிரான அரசியல் சதியின் ஓர் அங்கமே என்பதை உறுதிப் படுத்துகிறது" என்று கூறினார்.

"அப்போது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பிஜேபியும் அதன் தலைவர்களும் என் மகனுடைய சாவின் பின்னணியில் இருந்தது உறுதி"நீதி வேண்டும்

"அப்போது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பிஜேபியும் அதன் தலைவர்களும் என் மகனுடைய சாவின் பின்னணியில் இருந்தது உறுதி" என்றும் பீர்பான் ஸத் கூறினார். அத்துடன்,

"ஓடிக் கொண்டிருந்த ரயிலிலிருந்து தன் மகன் சுபாஷை தண்டவாளத்தில் தள்ளிக் கொலை செய்து விட்டனர்" என்றும் டெல்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், அவ்வழக்குத் தொடர்பான மேல் விசாரணை வேளைகளில் சுபாஷின் இறப்புத் தொடர்பாக மட்டுமே நடந்த தொடர் விசாரணைகள், ரகசிய கோப்புகளைக் குறித்துக் கண்டு கொள்ளவே இல்லை.

'விபத்து' நடந்தபோது சுபாஷிடம் ரகசிய கோப்புகள் இருந்தனவா?

என்னென்ன ரகசியக் கோப்புகள் இருந்தன?

தற்போது காணாமல் போனதாகத் தலைமைச் செயலர் அதுல் குப்தா கூறியுள்ள இந்த ரகசியக் கோப்புகள்தாம் சுபாஷிடம் இருந்தனவா?

அல்லது அவரது மரணத்தைச் சாக்கிட்டு, காணாமல் 'ஆக்கப்பட வேண்டிய' ரகசிய கோப்புகளும் சுபாஷோடு சேர்த்துப் புதைக்கப் படுகின்றனவா?

சுபாஷின் மரணம் மிக மிக அசாதாரணமானது. திலக் பிரிட்ஜ் நிலையத்தில் ரயில் நிற்பதற்கு முன்னர் இறங்க முயன்று, ஊர்ந்து கொண்டிருந்த ரயிலுக்கும் ரயில் ப்ளாட்ஃபாரத்திற்கும் இடையில் விழுந்து அடிபட்டு, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டு, அடுத்த நாள் அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப் பட்டார்.

சுபாஷின் தந்தையின் புகார் அடிப்படையில் வழக்கை விசாரித்து 2000 ஆகஸ்ட் 22 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறையினருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உத்தரவின்படி காவல்துறை சமர்ப்பித்த அறிக்கையில் திருப்தியடையாத நீதிமன்றம், மீண்டும் மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டது. மறுவிசாரணைக்காக இரண்டு ஆண்டுகள் பொறுத்திருந்த நீதிமன்றம், 2002இல் சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், 9 ஆண்டுகள் கடக்கும் நிலையிலும் இதுவரை மறு விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. சி.ஐ.டி விசாரணையும் இந்த நிமிடம்வரை நடைபெறவில்லை!

பாபரி மஸ்ஜித் வழக்குத் தொடர்பான ஆவணங்களைக் கோரி, 2002 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலுள்ள சுன்னி வக்ஃப் போர்டும் மற்றும் சில அமைப்புகளும் இணைந்து சமர்ப்பித்த மனுவின் மீதான விசாரணையின்போதுதான் உத்தரப் பிரதேச மாநில அரசு முதன்முதலாக, "பாபரி வழக்குத் தொடர்பான முக்கிய 23 கோப்புகள் காணாமல் போய் விட்டன" என நீதிமன்றத்தில் தெரிவித்தது.

"சுபாஷின் மரணம் வெறும் 'விபத்து'தான் என்ற முடிவுக்குக் காவல்துறை வந்ததற்கான காரணமாகக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், 'விபத்தில்' படுகாயம் அடைந்தபோதும் தன்னினைவுடன் இருந்த சுபாஷிடம் வாக்குமூலம் பெறாமல் எதிர் ப்ளாட்ஃபார்மில் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு வியாபாரியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்த ஒரு வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து, சுபாஷின் மரணத்தை வெறும் 'விபத்து'தான் என்ற முடிவுக்கு அவசரகதியில் வந்தக் காவல்துறை, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்கூட, மிக முக்கிய ரகசிய ஆவணங்களுடன் வந்ததாகச் சொல்லப் படும் ஓர் உயர் அதிகாரி இறந்து, அவர் வைத்திருந்த ரகசிய ஆவணங்களும் காணாமல் போனதாகக் கூறப்படும் நிகழ்வைச் சந்தேகக்கண் கொண்டு பார்த்து, மறு கோணத்தில் விசாரிப்பதற்கு முன்வராமல் அடம்பிடிக்கிறது. இதுவே சுபாஷின் மரணத்தில் மிகப் பெரிய சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது" என அவருடைய குடும்ப வழக்கறிஞர் ரன்தீர் ஜெய்ன் கூறுகிறார்.

சுபாஷின் மரணம் தொடர்பாகக் காவல்துறை எழுதி வைத்துள்ள கதையில் பல முரண்பாடுகள் உள்ளன. சுபாஷ் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்திருந்ததாகக் காவல்துறை கூறுகிறது. ஆனால், அவருடன் பிரயாணம் செய்த சக பிரயாணிகளில் ஒருவரது வாக்குமூலத்தைக்கூட காவல்துறை பதிவு செய்யவில்லை. ரயில் நிற்பதற்கு முன்னரே அவர் இறங்க முயன்றாரா? இல்லையா? என்பது அவருடன் பிரயாணம் செய்த சக பிரயாணிகளால் மட்டுமே உறுதிப்படுத்த இயலும். சாதாரண ஒரு பாமரனுக்குக்கூட தோன்றும் இந்தச் சிந்தனை, காவல்துறைக்குத் தோன்றாதது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

1.5.2000 அன்று லிபரான் கமிஷன் முன்னிலையில் ஆஜராகச் சென்ற சுபாஷ், டெல்லியில் தான் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள், தன் குடும்ப வழக்கறிஞர் என முக்கியமான அனைத்துத் தொடர்பு எண்களையும் தன் வசம் வைத்திருந்தார். ஆனால், அவரது கைவசம் இருந்த தொலைபேசி எண்களில் எவரையும் காவல்துறை தொடர்பு கொண்டு அவரது மரண விவரத்தைத் தெரிவிக்கவில்லை. யாரோ ஒருவர் அழைத்த தொலைபேசி அழைப்பினூடாகவேதான் அவரது மரணச் செய்தியை அறிந்ததாக சுபாஷின் வழக்கறிஞர் ஜெய்ன் கூறுகிறார். அழைத்த நபர், சுபாஷை மருத்துவமனையில் சேர்த்தவர் என்று தன்னை அவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால், சுபாஷின் கையிலிருந்த அதி முக்கிய ரகசிய ஆவணங்களும் காணாமல் போன நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்ததாகக் கூறிய அந்த நபரைக் கண்டுபிடிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் காவல்துறை செய்யவில்லை என்பது எல்லாவற்றிலும் மிகப் பெரிய ஆச்சரியம்!

சுபாஷின் மரணம் தொடர்பான காவல்துறையின் முதல் விசாரணை அறிக்கையில், இது போன்ற பதிலில்லாத எண்ணற்ற கேள்விகள் எஞ்சி நின்ற காரணத்தினாலேயே டெல்லி உயர்நீதி மன்றம் மறு விசாரணைக்கும் பின்னர் சி.ஐடி. விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது என்பது திண்ணம். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்கூட, சுபாஷின் மரண வழக்கும் அவர் கைவசமிருந்து காணாமல் போன ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணையும் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை.

இவை அனைத்திலிருந்தும், ரகசிய ஆவணங்கள் லிபரான் கமிஷன் கையில் கிடைக்காமல் இருப்பதற்காக ஏதோ சதிவேலை நடந்துள்ளது என்பதும் அதன் ஒரு பாகமாகவே சுபாஷ் கொல்லப்பட்டுள்ளார் என்ற சந்தேகமும் வலுப்பெறுகிறது. நீதிமன்றம் இரு முறை உத்தரவிட்ட பின்னர்கூட, காவல்துறையோ சி.ஐ.டி பிரிவோ இவ்வழக்கில் மேல்விசாரணை நடத்தாமல் இருந்ததிலிருந்து இவ்வழக்கில் மேல்மட்டத் தலையீடுகள் இருந்ததுள்ளன என்பது உறுதியாகிறது.

சுபாஷின் மரணம் குறித்த வழக்கு ஆரம்பித்துக் கிடப்பில் போடப்பட்ட நிலையில், அவர் கையிலிருந்த ரகசிய ஆவணங்கள் எங்கே சென்றன? என்ற ஓர் அதி முக்கிய கேள்வி இறுதியில் எஞ்சி நிற்கின்றது. மிக முக்கியமான அரசு ஆவணமாக இருந்த போதிலும்கூட, அவற்றைக் கண்டு பிடிக்க அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததும் லிபரான் கமிஷனின் விசாரணைக்கான முக்கிய ஆதாரம் ஒரு மரணத்தின் பின்னணியில் மறைக்கப்பட்டது குறித்து அரசு கண்டுகொள்ளாததும் வியப்பின் உச்ச கட்டமாகும். 17 ஆண்டுகளுக்குப் பின்னர், லிபரான் கமிஷன் தன் அறிக்கையைச் சமர்ப்பித்து விட்ட போதிலும் சுபாஷின் மரணத்திற்கான நீதி தேடி நீதிமன்றம் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றது சுபாஷின் குடும்பம். அவர் கைவசமிருந்து காணாமல் போன ரகசிய ஆவணங்களோ கேட்பார் எவருமின்றி எங்கோ மாயமாய் மறைந்து விட்டன.

இறுதியாக சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின்னர், பாபரி மஸ்ஜித் வழக்குத் தொடர்பான முக்கியக் கோப்புகள் காணாமல் போன நிகழ்வைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த அலஹாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்புகள் காணாமல் போனதை மிகவும் மோசமான நிகழ்வாகச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், சி.பி.ஐ விசாரணையைப் பூர்த்தி செய்து அறிக்கை சமர்ப்பிக்க 2 மாத காலம் நிர்ணயித்தது. இதற்குள் ஆகஸ்டு 24 ஆம் தேதியன்று இடைக்கால அறிக்கையும் சி.பி.ஐ தாக்கல் செய்திருக்க வேண்டும்.

விசாரணைக்கிடையில் கோப்புகள் காணாமல் போனதில் "முக்கிய குற்றவாளியாகக் கருதப் படும் எத்தகைய உயர்ந்த அதிகாரியையாவது கைது செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ கருதினால், புதிய வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய எவ்விதத் தயக்கமும் காட்ட வேண்டாம்" எனவும் "இவ்வழக்கில் சி.பி.ஐக்கு முழு சுதந்திரம் வழங்குவதாகவும்" உயர்நீதி மன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. "விசாரணைக்கிடையில் ஏதாவது தடைகளோ, இடையூறுகளோ ஏற்பட்டால் நீதிமன்றத்திற்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்" எனவும் கூறியுள்ளது.

முக்கிய ரகசியக் கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விட்டு, மேல் விசாரணை நடத்தாமல் சி.பி.ஐக்கு அதனை ரெஃபர் செய்த மாநில அரசின் செயல்பாடு, காலம் கடத்துவதற்கான தந்திரமாகும். இத்தனை முக்கியமான ஒரு நிகழ்வைக் குறித்த பல ரகசிய கோப்புகள், தலைமைச் செயலகத்திலிருந்து மாயமான சம்பவம் சாதாரண விஷயமல்ல. மாநில அரசு, சர்வ சாதாரணமாக, "தலைமைச் செயலகத்திலிருந்து முக்கிய ரகசிய ஆவணங்கள் காணாமல் போய் விட்டன" எனக் கூறுவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது எனவும் உயர்நீதி மன்றம் கடுமையாகத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

காணாமல் போன 23 கோப்புகளில், 1949ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில அரசுக்கும் பைஸாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்துகள், "பாபரி மஸ்ஜிதினுள் இரவோடு இரவாக அத்துமீறித் திருட்டுத் தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும்" என அன்றைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மாநில அரசுக்கு அனுப்பிய டெலக்ஸ் செய்தி முதலான முக்கிய ஆவணங்கள் அடங்கியிருந்தன. சி.பி.ஐயின் இந்த விசாரணையில் அரசும் அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கடுமையாக உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-o-

இந்நிலையில் முக்கிய ஆதாரமான காணாமல் போன ஆவணங்களின் உதவி இல்லாமலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ள லிபரான் கமிஷன் அறிக்கை, லிபரான் விசாரணை வேளையில் விசாரிக்கப் படாத ஒருவரையும் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் குற்றவாளியாகச் சேர்த்துள்ளது.

"பிரச்சனைக்குரிய இடத்தில் புதிதாகக் கட்டுமானப் பணிகளைச் செய்யத்தான் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அங்குக் கரசேவைக்குத் தடையில்லை, பஜனை நடத்தவும் கீர்த்தனைகள் பாடவும் தடையில்லை. நீங்கள் நடமாடாமல் அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது".

"அங்கு (அயோத்தியில்) சும்மா நின்று கொண்டே இருக்க முடியுமா?. கற்களும் பாறைகளும் உள்ள அந்த இடத்தில் எப்படி உட்காருவது?. எனவே, அந்த இடத்தை நாம் சமப்படுத்தியே ஆக வேண்டும். அப்போதுதான் நாம் அங்கே அமர முடியும்".

"நாளை (டிசம்பர் 6ஆம் தேதி) என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. அதைத் தீர்மானிக்கப் போவது கர சேவகர்கள்தாம்"

என்றெல்லாம் வன்முறையைத் தூண்டி விட்டு, லக்னவில் 5.12.1992இல் கரசேவகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு ஊக்கமளித்துப் பேசிய ஒருவரது வீடியோ பதிவைக் கடந்த 4.2.2004இல் வழக்கறிஞர் ஐ.பி. சிங், லிபரான் கமிஷன்முன் சமர்ப்பித்து, அவரை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.

"நன்கு திட்டமிடப் பட்ட பாபரி மஸ்ஜித் தகர்ப்பு நடவடிக்கை குறித்து பாஜகவின் முன்னோடித் தலைவர்களுக்கு முழுமையாகத் தெரியும் - What is going to be most damaging for the BJP is that the Liberhan Report indicts its top leadership of being fully aware of 'the tailor- made exercise' that resulted in the demolition of the Babri Masjid"

அப்போது அவரை விசாரிக்க மறுத்த லிபரான் கமிஷன், பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் பட்டியலில் 51ஆவதாக இப்போது அவரது பெயரைக் குறிப்பிட்டுள்ளது, " முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேய்" என்று.

மேலும், பாராளுமன்றத்தில் வைக்கப்படும் முன்னரே NDTV கைவசம் சென்று விட்ட லிபரான் கமிஷன் அறிக்கை, "நன்கு திட்டமிடப் பட்ட பாபரி மஸ்ஜித் தகர்ப்பு நடவடிக்கை குறித்து பாஜகவின் முன்னோடித் தலைவர்களுக்கு முழுமையாகத் தெரியும் - What is going to be most damaging for the BJP is that the Liberhan Report indicts its top leadership of being fully aware of 'the tailor- made exercise' that resulted in the demolition of the Babri Masjid" என்று கூறுகிறது.

"விசாரணைக் கமிஷன் என்றாலே மக்களின் வரிப் பணத்தைக் கோடி கோடியாகக் 'கொட்டிக் கொள்வதற்கு' மட்டும் அமைக்கப் படும் அமைப்பு; குற்றவாளிகளுக்கு என்னவகை தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்குக் கையாலாகாத அமைப்பு" எனும் இழிவுகள் இனியேனும் மாற்றப் படுமா?

பாபரி மஸ்ஜிதைத் தகர்த்த குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்களா?

பதினேழு ஆண்டுகளாக இந்திய நீதிபீடங்களின் மீது நம்பிக்கை வைத்து, நாட்டுக்கு இழைக்கப் பட்ட அவமானத்துக்கும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கும் நீதி தேடி அலையும் முஸ்லிம் சமுதாயத்திற்கு நீதி கிடைக்குமா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

Blood bank- Pass this information it is very helpfull...

Dear Friends,

There is a site:
www.friends2support.org

where you can search for a Particular blood group, you will get thousand of donor addresses.

Pass this message 2 all you know. It will help many. Plz don't delete it without forwarding ...

You will really help some 1 without your knowledge.







முஸ்லிம் - நிராகரிப்போர் இருவருக்கான அல்லாஹ்வின் அழகிய உதாரணம்!

மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன்: 6:122)

மனிதனை மரணத்திற்குப் பின் எழுப்புதல் படைத்தவனுக்கு பாரமான செயலா?

மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 11:7)

இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள்




(கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் முன்னாள் பொதுச் செயலாளர் )


பெயர் : அசோக் கோலன் யாங்

நாடு : சூடான்

பதவி : கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் பொதுச் செயலாளர்


இவர் கடந்த 2002 ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவர் மதங்களைப் பற்றிய மதிப்பீடுகள் குறித்து ஒப்பு நோக்கி ஆய்வு செய்த பொழுது, இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்பதைப் பற்றிய தெளிவுக்கு வந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

இவரை குவைத்திலிருந்து வெளிவரும் அல் முஜ்தமா என்ற அரபுப் பத்திரிக்கை பேட்டி கண்டது. அந்தப் பேட்டியின் தமிழாக்கமே இது.

நான் ஏன் முஸ்லிமானேன்..! ஏனென்றால்,

திருமறைக் குர்ஆனை எந்த தனிப்பட்ட மனிதரும் எழுதவில்லை, அதேநேரத்தில் பைபிளுக்கு பல்வேறு நூலாசிரியர்கள் இருக்கின்றார்கள்.

திருமறைக் குர்ஆன் அல்லாஹ்வின் சத்திய வாக்கியங்களாகும்.

இஸ்லாம் அழைக்கின்ற ஓரிறைத் தத்துவத்தின் பாலே அனைத்து நபிமார்களும் மக்களை அழைத்தார்கள்.

இஸ்லாமே இறுதி மார்க்கம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள்.

இவரது முயற்சியின் காரணமாக 1,50,000 பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள், இவர்களில் 2500 பேர் தேவாலயங்களின் தலைவர்களாவார்கள்.

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களிடையே கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கு பல்விதமான தந்திரங்களைக் கையாளுகின்றன. இது பற்றி அவர் மேலும் கூறியதாவது :

மனித உதவி மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையின் கீழ் செயல்படுகின்றன

உதவிகளை வழங்குவதன் மூலம்

தங்களது அரசாங்கத்தின் வழியாக அரபுக்களின் மீதும், இன்னும் முஸ்லிம்களின் மீதும் பலப்பிரயோகத்தைத் திணித்தல் மூலமாக

இன்னும், தனிநபர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன, அவை : பணம், பதவி, பெண் ஆகியவற்றின் மூலமாக.

மேலும், அவர் கூறும் பொழுது, இஸ்லாத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்னவென்றால், ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் கிடையாது, இன்னும் சாதி அமைப்புகளும் கிடையாது, முஸ்லிம்கள் அனைவரும் சமமே. ஆனால், கிறிஸ்துவத்தில் கறுப்பு நிற நீக்ரோ கிறிஸ்தவர்கள் வெள்ளைக்கார கிறிஸ்தவர்களின் சர்சுக்குச் சென்று வழிபாடு நடத்த இயலாது, ஏன்.., (முன்னாள்) அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலின் பவலைக் கூட வெள்ளைக்காரர்களின் சர்ச்சிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.

இஸ்லாத்திற்கு எதிராக எத்தனை கிறிஸ்தவ அமைப்புகள் உலகெங்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கேட்கப்பட்டதற்கு, ஆயிரக்கணக்கான அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இவற்றில் சூடானில் மட்டும் 500 அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

பரமரகசியக் கூட்டங்கள் :

கடந்த 1981 ல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பரம ரகசியமானதொரு கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டேன், அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கி, அதன் மூலம் முஸ்லிம்களிடையே கிறிஸ்தவத்தைப் பிரச்சாரம் செய்வதென்று அதில் கலந்து கொண்டவர்கள் தீர்மானித்தார்கள்.

மேற்கு நாடுகளில் மக்கள் தங்களது வருமானத்தில் 5 சதவீதத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றார்கள்.

முஸ்லிம் நாடுகளில் முதலீடு செய்கின்ற மேற்கு நாடுகளின் நிறுவனங்கள், தங்களது முதலீட்டின் மீது வருகின்ற வருமானத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றன.

மேலும் அவரிடம், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் சொல்வது உங்களது உயிருக்கே ஆபத்தாகவல்லவா முடியும் போலிருக்கின்றது? என்று சொன்ன பொழுது, ஆம்..! நான் சொல்வது என்னுடைய உயிருக்கே ஆபத்தானது என்பதை நான் நன்கறிவேன், எப்பொழுது கிறிஸ்தவ அமைப்புகள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து கொண்டனவோ அப்பொழுதே என்னைத் தீர்த்துக் கட்ட முனைந்தன, ஆனால் என்னுடைய இனத்தவர்கள் எனக்கு அளித்திருக்கும் பாதுகாப்பின் காரணமாக அவர்களது முயற்சியில் அவர்கள் தோல்வியையே கண்டார்கள். இன்னும் நான் சாவினைக் கண்டு பயப்படவில்லை, இஸ்லாத்திற்காக என்னுடைய உயிரை அற்பணிக்கவும் நான் தயாராகி விட்டேன், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற சதிகளை அம்பலப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றேன்.

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன?

இதற்கு அவர் பதிலளிக்கையில், இவர்கள் சரியான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடுதல்களின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள். குறிக்கோளின்றி அவர்கள் செயல்படுவதில்லை, ஆனால் அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலமாகத் தங்களது செயல்பாடுகளைத் திட்டமிடுகின்றார்கள். உதாரணமாக, தாங்கள் குறி வைத்திருக்கும் நாடு அல்லது பகுதியைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள், அதில் அவர்களது மதம், மக்கள் தொகை, அவர்கள் மதத்தைப் பின்பற்றுகின்றவர்களா அல்லது அல்லவா, பால் - ஆண், பெண், மக்களது தேவைகள் அதாவது பணம், உணவு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் இன்ன பிற தேவைகள் என்று ஒவ்வொன்றாகத் திட்டமிட்டுச் செயல்படுகின்றார்கள்.

எகிப்தில் செயல்பட்டு வரும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பிற்கு எதிராகவும், முடியுமானால் அதன் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்வதற்கும், எனக்கு 1 மில்லியன் 800 ஆயிரம் (18 லட்சம்) சம்பளமாகக் கொடுக்கப்பட்டது,

என்னருமை முஸ்லிம் சகோதரர்களுக்கு :

அல்லாஹ் இஸ்லாம் என்ற அருட்கொடையை உங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான், அதனை நீங்கள் மறுக்க முடியாது, ஏனென்றால் அதுவே நம்முடைய உண்மையான சொத்து, அதை நம்மிடம் இருந்து அழித்து விடத்தான் மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகள் நம்மைக் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது வாழ்வில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பலசாலியாவீர்கள், இன்னும் மேற்கத்தியர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்வார்கள். உங்களுக்கு எதிராகக் கிளப்பி விடப்படும் எந்தவிதமான குழப்பங்களையும் எதிர்கொள்வதற்கு அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கான அடித்தளமான கல்வி நம்மிடம் தேவையாக இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்களது வாழ்வில் 10 சதவீதமாவது இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைத் தங்களது வாழ்வில் கடைபிடிப்பார்களென்றால், மேற்கத்தியர்களை விட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், இன்னும் அதுவே நம்முடைய அநேகமான பிரச்னைகளையும் தீர்த்து விடக் கூடியதாக இருக்குமென்று கருதுகின்றேன். இந்த ஒரு முன்னேற்றத்தை வெறும் 10 சதவீத இஸ்லாத்தை நம்முடைய வாழ்வில் அமுல்படுத்தியதன் விளைவாகப் பெற முடியுமென்றால், இஸ்லாமிய வாழ்வை முழுமையாக நாம் கடைபிடிப்போமென்றால், நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும்? என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று கூறினார்.

புதிதாக உருவாகிறது - நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்!


றைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை உரிய ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆவணமாக பெரும் பொருட்செலவில் புதியதோர் ஆங்கிலத் திரைப்படம் உருவாகிறது.

"இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முன்பு துவங்கி, நபியவர்களின் மரணம் வரையிலான முழுமையான தொகுப்பான இத்திரைப்படம், நபியவர்கள் பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எண்ணங்களையும், காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வரும் அனைத்து அவதூறுகளையும் களையும்!" என்கிறார் அஹ்மது அப்துல்லாஹ் அல் முஸ்தஃபா. இவர் கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் அல் நூர் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவராவார்.

வளைகுடா நாட்டின் முக்கிய நாடுகளில் ஒன்றான கத்தரிலுள்ள முன்னணி ஊடக நிறுவனமான அல்நூர் ஹோல்டிங் இந்தத் திரைப்படத்தினைத் தயாரிக்கிறது. சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு துவங்கவிருக்கும் இத்திரைப்படம், 25 முதல் 30 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" - அப்துல்லாஹ்.

திரைப்படத் தயாரிப்புக் குழுவிற்கான தேவைக்காக அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள திறமையான படத் தயாரிப்புக் நிறுவனங்களைத் தேர்வு செய்து கொண்டு வருகிறது அல் நூர் ஹோல்டிங் நிறுவனம். இப்படத்தைத் தயாரிக்க அமெரிக்கத் தயாரிப்பாளரான பேர்ரி எம். ஆஸ்போர்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், உலகமெங்கும் சிறார்கள் மனதையும் பல ஆஸ்கர் பரிசுகளையும் அள்ளிச் சென்ற “The Lord of the Rings: The Return of the King”படத் தயாரிப்பாளராவார். இத்திரைப்படத்திற்காக இவருக்கு Academy Award for Best Picture விருது கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் புகழ் பெற்ற The Matrix படத்தினைத் தயாரித்தவரும் இவரே.

"ஆங்கிலம் பேசும் முஸ்லிம்களை மட்டுமே கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படும். இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" என்கிறார் அப்துல்லாஹ்.

இத்திரைப்படம் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள டாக்டர். யூஸுப் அல் கர்ளாவி, "இத்திரைப்படம் ஒரு இஸ்லாமிய தஃவா (அழைப்பு) ஆகும்" என்று தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத் தயாரிப்பின் டெக்னிக்கல் கன்ஸல்டண்ட் மற்றும் முழு மேற்பார்வையையும் இவரே கவனிக்கிறார்.

இத்திரைப்படத்தின் உரைகள் (ஸ்க்ரிப்ட்), படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின் மேற்பார்வையாளராக டாக்டர் யூஸுப் அல் கர்ளாவியும், அவர் தலைமையில் ஒரு இஸ்லாமியக் குழுவும் அமைக்கப் படவுள்ளது என்கிறார் அப்துல்லாஹ்

இத்திரைப்படம், உலகெங்கும் தவறான புரிதல்களுக்குப் பதிலடியாக பெரும் தாக்கத்தையும் கூடவே மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் என்கிறார் சர்வதேச முஸ்லிம் அறிஞர்களுக்கான ஒன்றியத்திற்குத் தலைவரான டாக்டர். யூஸுப் கர்ளாவி

கடந்த 2005 ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஜில்லண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை 12 கார்ட்டூன்களை தனது தினசரியில் வெளியிட்டிருந்தது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் அங்கீகாரத்திற்கும் சற்றும் தொடர்பில்லாத அவதூறுகளைச் சுமத்தி இழிவு படுத்தும் எண்ணத்துடன் அப் பத்திரிகை கார்ட்டூன்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து உலகமெங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர்.

பெரும் எண்ணிக்கையிலான பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் சர்வதேச மீடியா சாதனங்கள் மூலம் முஸ்லிம்களின் கண்டனங்களும், எதிர்ப்புகளும் பதிவு செய்யப் பட்டன. அது நாள் வரை இஸ்லாத்திற்கு எதிராக திரைமறைவில் இருந்து நடந்து வந்த சூழ்ச்சிகளும், உலகெங்கும் இஸ்லாம் மீது வலிந்து பரப்பப் பட்டு வந்த இஸ்லாமோஃபோபியாவின் ஒட்டுமொத்த உருவமும் வெளியானது. அத்துடன் இஸ்லாத்தின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து, இஸ்லாம் பற்றிய அறிவை முழு அளவில் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம்கள் மீது சாட்டப் பட்டிருப்பதை உணர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்த உலகமெங்கும் "இறைத்தூதரை அறிந்து கொள்" எனும் வகையிலான இஸ்லாமிய பிரச்சாரங்கள் பெருமளவில் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட டென்மார்க்கிலேயே 27 பெரும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுகூடி European Committee for Honoring the Prophet என்ற பெயரில் வலுவான ஒன்றியத்தை அமைத்திருக்கிறது.

இஸ்லாத்தின் மீதும் இறைத்தூதர் மீதும் உலகமெங்கும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் தவறான எண்ணங்களுக்கான ஒரு சரியான மறுமொழியாக இத்திரைப்படம் அமையும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.

- அபூ ஸாலிஹா