அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 15, 2009

கவனித்து திருமணம் செய்க - கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள்

கேரள கிறிஸ்தவர்களிடையே விவாகரத்துகள் அதிகரித்து வருகிறது. இது சம்பந்தமாக கேரள கத்தோலிக்க பாதிரியார்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 35 பாதிரியார்கள் கிறிஸ்தவர்களுக்கு திருமணம் செய்யும் முன் கவனித்து திருமணம் முடிக்கும்படி என கொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்மேளனத்தில் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த சைரோ மலபார்,சைரோ மலங்கரா மற்றும் லத்தீன் கதோலிக்க பிரிவினர் உள்ளனர். வெளிநாட்டில் உள்ள பெண்ணையோ அல்லது ஆணையோ திருமணம் செய்பவர்கள் அவர்களைப் பற்றி நன்கு விசாரித்து திருமணம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். வெளிநாட்டில் வசிக்கும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் பொய் சொல்லி மீண்டும் திருமணம் செய்வது அதிகரித்து வருவதை சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தேவாலயங்களில் திருமணத்திற்கு முன் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால் மணமகன் அல்லது மணமகள் பற்றிய விபரங்களை அறிந்து ஏதேனும் மோசடி நடைபெறுவதாக இருந்தால் தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

No comments: