அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 14, 2011

கனிமொழி ஜாமீன்: உச்சநீதிமன்றம் கேள்வி



கனிமொழி
கனிமொழி
கனிமொழியின் ஜாமீன் மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் மத்திய புலனாய்வுத் துறையிடம் மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தற்போது டெல்லி திகார் சிறையில் இருக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியில் ஜாமீன் மனுவை இந்திய உச்சநீதிமன்றம் திங்களன்று விசாரித்தது.
அப்போது, இந்த முறைகேட்டில் கனிமொழிக்கும், ஷரத்குமாருக்கும் தொடர்பு இல்லை என்றும், கடனாகப் பெற்ற 200 கோடி ரூபாய் திருப்பித் தரப்பட்டுவிட்டதாகவும் மூத்த வழக்கறிஞர் அல்டாஃப் அகமது வாதிட்டார்.
ஆனால், அந்தத் தொகை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளுக்காக லஞ்சமாகப் பெறப்பட்டது என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, சிபிஐக்கு நீதிபதிகள் மூன்று கேள்விகளை எழுப்பினார்கள்.
  • லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் 200 கோடி ரூபாய் இப்போது எங்கு இருக்கிறது? சிபிஐ பறிமுதல் செய்திருக்கிறதா?
  • முறைகேடாக வழங்கப்பட்ட 13 தொலைத் தொடர்பு உரிமங்களால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு எவ்வளவு?
  • அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை எந்த நிலையில் உள்ளது? கனிமொழியிடம் விசாரணை முடிந்துவிட்டதா?

ஆகிய கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், வரும் வெள்ளிக்கிழமைக்குள் அதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
சிபிஐ பதிலளித்த பிறகு, வழக்கு விசாரணை அடுத்த வாரம் திங்கட்கிழமை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது

"கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும்"


 
தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா
தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் திட்டமானது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் கடந்த திங்கள் கிழமையன்றுதான் இத் திட்டம் தூத்துக்குடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. துவக்க விழாவில் மாநில அரசு அதிகாரிகளும், அதிமுக எம் எல் ஏ வும் கலந்து கொள்ளவில்லை.
தூத்துக் குடியிலிருந்து திங்கள் மாலை புறப்பட்ட கப்பல் செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பு சென்றடைந்துள்ளது.
அதேபோல இலங்கையில் மீள் குடியேற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நேரில் கண்டறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர் குழுவை அங்கு அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.
ப சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டும்
மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது முறை கேடாக ஜெயித்தார் என்றும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் தற்போது டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
"சிதம்பரம் தேர்தலில் ஜெயிக்கவில்லை. உண்மையில் தேர்தலில் ஜெயித்தது எங்கள் கட்சி வேட்பாளர்தான். சிதம்பரம் தற்போது நாட்டை ஏமாற்றுகிறார்". என்றார் முதல்வர் ஜெயலலிதா.
தேர்தல் முடிவுகள் குறித்த விபரங்களை கணினியில் பதிவு செய்யும் நபர் செய்த மோசடியால் சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது என்றும் ஜெயலலிதா கூறினார். இது தொடர்பான ஒரு வழக்கு ஏற்கனவே அதிமுக சார்பில் தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அதே போல 2ஜி வழக்கில் தற்போது குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுவரும் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தாமாக முன்வந்து பதவி விலகாவிட்டால், அவரை பிரதமர் விலக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறினார்.
முன்னதாக பிரதமர் மன் மோகன் சிங் அவர்களைச் சந்தித்த ஜெயலலிதா, தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரத்தை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கூட்டணி உறவு பேணும் நிலையில் தாம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பது முறையாக இருக்காது என்றும் முதல்வர் தெரிவித்தார்
 

ஏழைகளுக்கு மறுவாழ்வு கிராமம் திறப்பு!

அஸ்ஸாம் மாநிலத்தில் வீடு இல்லாத ஏழை மக்களுக்காக ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் மறுவாழ்வு கிராமம் திறக்கப்பட்டது.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா நிறுவனம்தான் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன். அருகிலுள்ள கிராமங்களில் வாழும் வீடு இல்லாத 45 ஏழை குடும்பங்களுக்கு இந்நிகழ்ச்சியில் வீட்டிற்கான சாவி ஒப்படைக்கப்பட்டது.

1000 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதுதான் இத்திட்டம். இதில் 51 வீடுகளின் நிர்மாணம் பூர்த்தியாகிவிட்டது.  இத்திட்டத்திற்கு தேவையான அனைத்து நிலமும் வாங்கப்பட்டுவிட்டது.

வீடுகள் தவிர கல்வி நிலையம் மற்றும் மஸ்ஜிதும் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சியில் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் தலைவர் இ.அபூபக்கர் வீடுகளுக்கான சாவிகளை உரியவர்களுக்கு வழங்கினார்.

ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் பொது செயலாளர் கெ.எம்.அஷ்ரஃப் அமைப்பின் செயல்பாடுகளை விவரித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், பொன்கய்காவ் மாவட்ட கூடுதல் கலெக்டர் அப்துற்றஹீம் ஷேக், ரிஹாப் அறங்காவலரும் (trustee) மில்லி கஸட் பத்திரிகையின் ஆசிரியருமான டாக்டர் ஷஃபருல் இஸ்லாம் கான் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


நன்றி : தூது ஆன்லைன் 

சுஷ்மாவின் நள்ளிரவு நடனம் - நாட்டிற்கே அவமானம்!

ராஜ்காட்டில் காந்தி சமாதிக்கு முன்பு பா.ஜ.க நடத்திய உண்ணாவிரதப்போராட்டத்தில் மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜின் நடனமாடியது நள்ளிரவில் தூங்குவதற்காக பா.ஜ.க தலைவர்கள் நழுவியது என பா.ஜ.கவினர் அடித்த கூத்தினால் நாட்டிற்கே அவமானம் ஏற்பட்டுள்ளது.

பாபா ராம்தேவிற்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து தேசிய அளவிலான போராட்டத்திற்கு துவக்கம் குறிப்பதற்கு பா.ஜ.க நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தான் அக்கட்சிக்கு கடுமையான அவமானத்தை பெற்று தந்துள்ளது.

கோடிக்கணக்கான பணத்தை முடக்கி ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்திய ஹைடக் உண்ணாவிரத நாடகத்தின் இன்னொரு நகலாக மாறியது பா.ஜ.க நடத்திய உண்ணாவிரதப்போராட்டம். ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி முதல் திங்கள் கிழமை மாலை 7 மணிவரையிலான 24 மணிநேர சத்தியாகிரகத்தை பா.ஜ.க நடத்தியது.

திங்கள் கிழமை அதிகாலை இரண்டு மணி அளவில் மேடையில் மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் நடனம் ஆடினார்.இருகைகளையும் மேலே உயர்த்தி பாடலுக்கு தகுந்தவாறு ஆடினார் சுஷ்மா. முன்னாள் டெல்லி மேயர் ஆரதி மெஹ்ராவும், பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் விஜய் கோயலும் தாளத்துடன் கைக்கொட்டி சுஷ்மாவுடன் ஆடினர்.பா.ஜ.க வின் இளைஞர் பிரிவான யுவமோர்ச்சாவின் தேசிய தலைவர் அனுராக் தாக்கூர் விசில் அடித்து உச்சஸ்தாதியில் பாட்டு படித்து உற்சாகம் ஊட்டினார்.

இதற்கிடையே இன்னொரு கூத்தும் அரங்கேறியது.சத்தியாகிரக போராட்டம் நடத்திய பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் நள்ளிரவில் தூக்கம் கண்ணை கறக்கியவுடன் வசமாக ஏ.சி அறைகளுக்கு உறங்குவதற்காக நழுவினர். முரளி மனோகர் ஜோஷி தூங்குவதற்காக 12.30 மணிக்கே நழுவிவிட்டார்.

அதிகாலை இரண்டரை மணிக்கு அத்வானியும், அருண்ஜெட்லியும் நழுவினர். நடனமாடி தளர்ந்துபோன சுஷ்மா சுவராஜும் ஷானவாஸ் ஹுஸைனும் சற்றுநேரம் நழுவுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டு மூன்று மணிக்கு எஸ்கேப் ஆகினர். இறுதியில் பா.ஜ.கவின் தலைவர் நிதின்கட்கரியும் தூங்க சென்றுவிட்டார். குளித்து முடித்து காலை 8 மணிக்கு ஃப்ரஸ்ஸாக போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர் பா.ஜ.க தலைவர்கள்.

பா.ஜ.கவின் போராட்டத்தை கடுமையான வார்த்தைகளால் குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி. மகாத்மா காந்தியின் படுகொலைக்கு காரணமானவர்கள் அவருடைய சமாதிக்கு அருகில் போராட்டம் நடத்துகின்றனர். எதிர்கட்சி தலைவரும், அவருடைய தோழர்களும் நடனமாடியது எவ்வகையான போராட்டம்? என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்தனன் திரிவேதி கேள்வி எழுப்பினார். ராம்தேவின் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிக்கிறதா? அல்லது கொண்டாடுகிறதா? என மத்திய அமைச்சர் குலாம்நபிஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்

ஆர்.எஸ்.எஸ் யின் கள்ள காதலன்!பாபா ராம்தேவ் ,அன்னா ஹசாரே !!



ழலை ஒழித்து, சமூகத்தை சுத்தப்படுத்தும் படங்களை எடுக்கிற இயக்குனர் ஷங்கருக்கு  இன்னொரு கதாநாயகர் கிடைத்துவிட்டார். அவரைப் பார்த்து,  எல்லாம் வல்ல அரசே நடுநடுங்குகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவரைச் சுற்றி காமிராக்களைத் தூக்கியவாறு முண்டியடித்துக் கிடக்கின்றன ஊடகங்கள். இந்த தேசத்தின் 99 சதவீதம் மக்களுக்கு அவர் யார், அவர் என்ன செய்கிறார், அவரது கொள்கைகள் என்ன என்று தெரியாமல் இருக்கிறபோது, தேசத்தின் பிரதமர் முதற்கொண்டு  இந்த யோகா குரு ராம்தேவைப் பார்த்து பதறுவது விசித்திரமாயிருக்கிறது.

ரண்டு நாள் யோகா பயிற்சி ஒன்றிற்காக மதுரைக்கு சென்று வந்தார் நண்பர் ராமு. பார்க்கிறவர்களிடமெல்லாம், அந்த அனுபவங்களை ‘ஆஹா, ஓஹோவென’ பேசிக்கொண்டேயிருந்தார். என்னிடமும் சொன்னார். நான் வழக்கம்போல் முதலில் ஆர்வம் காட்டவில்லை. நடத்திய குருவின் பெயர் எதோ ‘சத்குரு’ என்று சொன்னதாக  ஞாபகம். ஆயிரம் ருபாய் கட்டணம் என்றபோது, அதிகமாகத் தெரிந்தது. கேட்டேன். “இதச் சொல்றீங்க. ஆயிரம் ருபாய் கொடுத்தாலும் நமக்கு பின்னால்தான் வரிசை. பத்தாயிரம் கொடுக்கிறவர்களுக்கு முன் வரிசை. எப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் வருவார்கள் தெரியுமா? ஒரே கார்களாய்த்தான் வெளியே நிற்கும்.” என்று நிறுத்தினார். பெரிய பெரிய போஸ்ட்ல இருக்குறவங்க, பிஸினஸ்மேன் எல்லாம் வருவார்கள். ஆனாலும் அவர்களுக்கு எந்த தனிப்பட்ட சலுகையும் கிடையாது. அவர்களும் எல்லோர் போலவும் தரையில்தான் உட்கார வேண்டும். தாமதமாக வந்தால் மொத்த மைதானத்தையும் இருமுறை சுற்றி வர வேண்டும். அங்கு டிஸிப்ளின்தான் முக்கியம். ...” இப்படி தனக்கே புல்லரித்துக்கொண்டு சொல்லிக்கொண்டேயிருந்தார்.

அப்படி என்ன சொல்லிக்கொடுப்பார்கள் என்று கேட்கிறபோது, பயிற்சிதான் என்றார். என்ன பயிற்சி என்றபோது, “அடுத்தமுறை நீங்களும் வாங்க. நேரில் பாருங்க. உடம்பும், மனசும் புதுசான மாதிரி இருக்கும். தொடர்ந்து அந்த பயிற்சிகளை விடாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் பலன் இருக்கும். எனக்கு இந்த முட்டு வலித்துக்கொண்டே இருந்தது ரொம்ப நாளாய். இப்போது ஒரு பிரச்சினையுமில்லை.” என்றார். 

“நீங்க நினைக்கிறது மாதிரி இல்லை” என்று நான் நினைத்துக்கொள்ளாததையெல்லாம் அவரே தத்து எடுத்துக்கொண்டு ராமு தொடர்ந்தார். “அவருக்கு எவ்வளவு விஷயங்கள் தெரிகிறது! உலகத்தில்  நடக்கிற விஷயங்களையெல்லாம்,  மனிதர் அந்தந்த இடத்துக்குப் பொருத்தமா வகுப்பில் பேசுகிறார். சிரிக்கவே மாட்டார். நம்மையெல்லாம் சிரிக்க வைக்கிறார். இந்த அரசியல்வாதிகளைக் கடுமையா பிடித்துச் சாடுகிறார். நம்மைப் பிடித்த பிசாசுகள் என்று சொல்கிறார். எல்லா அநியாயங்களுக்கும் அவர்களே காரணமாயிருக்கின்றனர் என்கிறார்.  அவர்கள் திருந்தினால் நாடே திருந்தும் என்கிறார். சாமியார் மாதிரி இருக்கிறார், ஆனால் இவ்வளவு நாட்டு நடப்புகளைப் பேசுகிறாரே என ஆச்சரியமாக இருந்தது” என்றார். நான் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.

இதுபோன்று பல நகரங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடந்துகொண்டு இருப்பதையும், அங்கங்கு இதுபோன்ற  ‘சத்குரு’க்கள் கிளம்பியிருப்பதையும் சாதாரண மக்கள் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்குத்  தங்கள் அன்றாட வாழ்க்கையை கடத்துவதற்கு பெரும்பாடாய் இருக்கிறது. நோய் நொடி என்று வந்தால், அருகிலிருக்கிற ஒரு டாக்டரைப் பார்த்து, ஊசி மருந்துகளை வாங்கிப் போட்டுக்கொண்டு, படுத்து எழுந்திரிக்கின்றனர். டீக்கடைகளில் பேப்பர் படித்து அரசியல் பேசி, போய்க்கொண்டு இருக்கின்றனர். நின்று நிதானமாய் இதையெல்லாம் அறிவதற்கு நேரமுமில்லை. வாழ்க்கையுமில்லை. அவர்களை அப்புறப்படுத்திய மைதானங்களில், ஆரோக்கியத்திற்காகவும், தனிமனித ஒழுக்கத்திற்காகவும் தாடிவாலாக்களான இந்த ரிஷிகளும், சத்குருக்களும் , ஆனந்தாக்களும் அவதரித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராமுக்கள் வசியம் செய்யப்படுகின்றனர்.

இந்த ராமுக்கள் யார்? பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றால் அப்படியே கன்னத்தில் போட்டுக்கொண்டு  கூட்டத்தோடு கூட்டமாய் தெரு வழியே ஒடுகிறவர்கள். தனக்கு எல்லாம் தெரியும் என நம்புகிறவர்கள். அவரை விட ஒருத்தருக்கு ஒன்று தெரியும் என ஏற்றுக்கொண்டால், அவரை கடவுளின் ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடுகிறவர்கள். தனிமனிதர்கள் திருந்தினால் சமூகம் திருந்திவிடும் என பகுத்தறியும் சிந்தனையற்று உறுதியாய் இருப்பவர்கள். எந்நேரமும் தன்னைப் பற்றியும், தன் வாழ்க்கைப் பற்றியும் நினைப்பவர்கள். அடுத்தவர்களின் குற்றங்களைக் கண்டு பொருமும் இவர்கள், தங்களிடமும்  அதே கோளாறுகள் இருப்பதை அறியாதவர்கள். அதற்கான காரணங்களையும் ஆராயதவர்கள். மேல்தட்டு வாழ்வின் மீது மோகமும், ஏக்கமும் கொண்டவர்கள். கீழ்த்தட்டு மக்களின் மீது வலிய ஒரு இரக்கத்தைக் காட்டி பெருமிதமும், திருப்தியும் அடைவார்கள். இவர்களே சத்குருக்களின் பக்த கோடிகளாகி பரவசமாகின்றனர். ஆயிரம் ருபாய் கொடுத்து கடைகோடியில் இருக்க வேறு யார் கிடைப்பார்கள்?

அமைப்பின் மீது மக்களின் கவனமும் கோபமும் திரும்பாமல், தனிமனிதர்களின் மீது மட்டும் வைத்திருக்க உதவும் இதுபோன்ற சத்குருக்களை அரசும், ஊடகங்களும் பேணி வளர்க்கின்றன. பொதுவாழ்வில் குற்றங்களும், கறைகளும் படிந்து போயிருக்கும்  பெரும்புள்ளிகள் தங்கள் முகங்களை மென்மையானதாய் காட்டிக்கொள்ள சத்குருக்களை அண்டுகிறார்கள். இவர் போன்றவர்களை பின்பற்றுவதாலேயே தாங்களும் தனிமனித ஒழுக்க ஸ்நானம் பெற்றுவிட்டதாய்க் கருதும் ராமு போன்ற பக்தகோடிகள் அவருக்காக கையுயர்த்தி நிற்கிறார்கள்.  சத்குருக்களின் பிம்பங்களை மெல்ல மெல்ல இந்த பெரும்புள்ளிகளும்,  ஊடகங்களும், ராமு போன்ற நண்பர்களும் சமூகத்திற்குள் செலுத்திக்கொண்டு இருக்கின்றனர். சத்குருக்கள் உயரத்திற்குச் செல்கிறார்கள். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு  புனிதர்களாகின்றனர்.‘தன் நாடு, தன் மக்கள்’ என்று இந்த சத்குருக்கள் ஒரு வட்டம், ஒரு மாவட்டம், ஒரு மாநிலம், ஒரு தேசம் என தங்கள் ஆளுகைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அங்கங்கு அவர்களது ஆசிரமங்களும், மடங்களும் ஏற்படுத்தப்பட்டு தொழில் அபிவிருத்தியடைந்து, அமோகமாய் நடக்கிறது. அதற்குத்தானே எல்லாக் கூத்துக்களும்!

ப்படியொரு ஒரு குருதான் ராம்தேவ் என்னும் யோகா குருவும். பெரிய பெரிய ஸ்டேடியங்களில் நடக்கும் அவரது பயிற்சிகளின் குறைந்த பட்சக் கட்டணம் ஐநூறு ருபாய் என்கிறார்கள். முதல் வரிசையில் பெரும்புள்ளிகளான கோடீஸ்வரர்களும், அமைச்சர்களும், ஊடக அதிபர்களும்  இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்துகிற ஷோவைத்தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கிறோம். டெல்லியில் இன்று ஆரம்பித்திருக்கும் அவரது உண்ணாவிரதத்திற்கு, இந்த பெரும்புள்ளிகள் எல்லாம் சேர்ந்து 18 கோடிக்கும் மேல் செலவழித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம். வெறும் பணம். எப்படியும் ஊழலையொழித்து சாதாரண மக்களுக்கு சுகவாழ்வைக் கொண்டுவந்து விடுவது என இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இது ‘ஊழல் ஒழிப்பு சீசன்’ போலும். ஏற்கனவே அன்னா ஹசாரே என்பவர் உண்ணாவிரதம் இருந்து தேசத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுப் போயிருக்கிறார். மக்களிடம் இந்த கோஷம் எடுபடுகிறது என்பதையறிந்து அடுத்து ஒருவர் கிளம்பி வந்திருக்கிறார். கடந்த நான்கைந்து நாட்களாக ராம்தேவ்தான் முதற்பக்கச் செய்தி. ஊழலை ஒழிக்கப் போகிறேன், கறுப்புப் பணத்தை மீட்கப் போகிறேன்’ என்று  உஜ்ஜையினிலிருந்து அந்த யோகா குரு தனி விமானத்தில் டெல்லி வந்ததிலிருந்து பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அவர் ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து அண்மையில் உச்சநீதிமன்றம் மாறி மாறி அவர் கன்னத்தில் அறைந்தபோதெல்லாம் கூட அசையாமல் இருந்த கல்லுளிமங்கரான மன்மோகன் சிங்கிற்கே பதற்றம் பற்றிக்கொண்டது. அமைச்சர்களை உடனே அனுப்பி அவரிடம் பேசச் சொல்கிறார். ராம்தேவ் பிடிவாதம் பிடிக்கிறார். அரசுக்கு நெருக்கடி என்று சொல்லப்படுகிறது. என்னய்யா நெருக்கடி? அதுதான் புரியவில்லை.

சென்ற பிப்ரவரி மாதத்தில் விலைவாசி உயர்வினை எதிர்த்து இலட்சக்கணக்கில் இடதுசாரிகள் டெல்லியில் திரண்டு போராட்டம் நடத்தினர். பெரும் மனிதத் திரளாகக் காட்சியளித்த அந்த கோலத்தை எந்த ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. பிரதமர் அமைச்சரவையை அவசரம் அவசரமாகக் கூட்டவில்லை. போலீஸ்களைக் குவித்து அடக்குமுறைதான் செய்தது அரசு. இப்போது அதே அரசு கையைப் பிசைகிறது. இந்திய முதலாளித்துவ அரசியல் இங்குதான் இருக்கிறது.

யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி நிபுணராக கருதப்படும் இந்த ராம்தேவ் ஹரித்துவாரில் நடத்தி வந்த திவ்ய யோகா பார்மஸியில் 2006ம் வருடம் ஒரு பிரச்சினை எழுந்தது நினைவிருக்கலாம். பனிரெண்டு மணி நேரத்துக்கும் மேலே வேலை பார்த்தும் ரூ.1200/- மட்டுமே ஊதியம் கொடுத்து வந்ததால், அங்குள்ள ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினர். அவர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டது பார்மஸி. அப்போது அந்த ஊழியர்கள்  பல உண்மைகளை  தெரிவித்தனர். தனது மருந்துகளை தயாரிப்பதற்கு மனிதக் கபாலங்களையும், மிருகங்களின் உடல் பாகங்களையும் ராம்தேவ் பயன்படுத்துகிறார் என்பது அதில் பிரதானமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான பிருந்தாகாரத் இதனை வெளியிட்டு எதிர்ப்புத் தெரிவித்தார். ராம்தேவின் பக்தகோடிகளும், ஆர்.எஸ்.எஸ்காரர்களும், வி.ஹெச்.பியினரும் பிருந்தாகாரத்தின்  உருவ பொம்மைகளுக்கு தீவைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிருந்தா காரத்தின் குற்றச்சாட்டுகளை பெரிதுபடுத்தாமல் மன்மோகன் அரசு ராம்தேவிடம் அப்போதும் குழைவாகவே நடந்துகொண்டது.

ஊழல் செய்யும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் ராம்தேவ். இதுதான் பாசிச சிந்தனையின் ஊற்றுக்கண். தனிமனிதர்கள் திருந்தினால் சமூகம் திருந்திவிடும் என்பது ஒரு தத்துவ ஹம்பக். ஹிட்லரும் இதுபோலவே பேசியிருக்கிறான். ஆர்.எஸ்.எஸ் மற்றும், வி.ஹெச்.பியினர் ராம்தேவை ஆதரிக்கும்  காரணம் இங்கு தெளிவாகிறது. ஊழல் பற்றி வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு நாறிப் போன பா.ஜ.க இப்போது ராம்தேவின் பின்னால் அடைக்கலம் கொள்கிறது. தங்கள் கோஷங்கள், புனித வேஷங்கள் எல்லாம் காணாமல் போய் அரசியல் செல்வாக்கு இழந்து போன இவர்கள்தான் ராம்தேவ் என்னும் புறவாசல் வழியாக மீண்டும் பிரவேசிக்க எத்தனிக்கின்றனர். ஆனால் ஊழல்களில் எந்த மாற்றங்களும் ஏற்படாது. இது வலதுசாரி வியூகம்.

தூக்கிலிடவேண்டியது மனிதர்களை அல்ல. ஊழல் செய்வதற்கென்றே  சகல அதிகாரமும், எல்லா வழிகளும்,  வழிவழியாய் முன்னுதாரணங்களும் கொண்டிருக்கிற இந்த அமைப்பைத்தான் முதலில் தூக்கியெறிய வேண்டும். மாற்றங்கள் படிப்படியாக உருவாகும். இது இடதுசாரி வியூகம்.

இடதுசாரிகளும், இடதுசாரி தொழிற்சங்கங்களும் ஊழலுக்கு எதிரான தீவிரமானப் பிரச்சாரத்தையும், தொடர்ச்சியானப் போராட்டங்களையும் முன்னெடுக்காத சமூகத்தில் இப்படித்தான் குருக்களும், ரிஷிகளும், ஆனந்தாக்களும் அலப்பறை செய்வார்கள் போலும்! அதோ உண்ணாவிரதப் பந்தல் ஆட்டமும் பாட்டமுமாய் இருக்கிறது,  ஒரு அரசியல் விபரீதத்தை முன்வைத்து.


ஆர்.எஸ்.எஸ் யின் கள்ள காதலன்!!

நம்நாட்டில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். 

ஒரு கால் நொண்டி ரெண்டு கால் நொண்டியை பார்த்து நொண்டி என்றானாம்

இது எப்படி இருக்கு?   இந்த கூத்துதான் இப்ப நம்ம நாட்டில் நடந்துகொண்டிருகிறது.

ஏற்கனவே ஒரு காந்தியவாதி ஊழலுக்கு எதிராக களத்திற்கு வந்தார் அவரை பற்றிய வண்டவாளங்கள் வெளிவந்த உடன் ஹிந்து பாசிஸ்டுகள் தங்களது நேரடி ஆதரவாளரை களத்திற்கு கொண்டு வருகிறார்கள். 

இவராவது நல்லவராக இருப்பாரா? என்று எண்ணு வதற்கு முன்பே இதோ வெளி வந்து வந்து விட்டது இந்த பாவப்பட்ட கோடீஸ்வரனின் ஜகஜால வண்டவாளங்கள் இதோ!

இந்த மகான் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அவுரங்காபாத் கிராமத்தில் பதஞ்சலி என்ற யோஹபீடம் நிறுவுவதற்கு உள்ள நான்கு ஹேக்டர் அரசுக்கு சொந்தமான விவசாய நிலத்தை கள்ளத்தனமாக பதிவு செய்து கையகப்படுத்தியுள்ளார். 

இது சம்மந்தமான ஆவணங்களை உத்தரகாண்ட் மாநில சப் டிவிசியன் மஜிஸ்ட்ரேட் கண்டு பிடித்துள்ளது. இதன் மூலம் இவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள அரசு சொத்துக்களை அபகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சாமியாருடைய திருட்டுத்தனத்திற்கு எதிராக முன்னால் பஞ்சாயத் தலைவர் எஸ். ஷவ்ஹானும்,  இப்போதைய தலைவர் சரண் சிங்கும் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். 

இதனால் ரூர்கி மாவட்ட மஜிஸ்ட்ரேட் ஹர்பீர் சிங் அவர்கள் நேரில் சென்று பத்திரங்களில் உள்ள கைரேகை, மற்றும் பட்டா, போன்ற ரெவேன்யு ஆவணகளை சோதித்து பார்த்து இவர் செய்துள்ள கள்ளத்தனத்தை நிருபித்துள்ளார். 

இந்த நிலத்தோடு அல்லாமல் மேலும் அதிகமான ஹேக்டர் அரசுக்கு சொந்தமான நிலங்களை இவர் களவாடி உள்ளார் என்று சப் டிவிசன் மஜிஸ்ட்ரேட் அவர்கள் கலக்டருக்கு புகார் செய்துள்ளார்.

இந்த பிரச்னை பெரிய விவாதமாக ஆனவுடன் இப்போது ஊழலுக்கு எதிராக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொண்டு வந்து இருக்கும் இரண்டாவது இறக்குமதியான  இந்த பண்டார, பரதேசி ராம்தேவ்தான் கைவசப்படுத்திய நிலத்திற்கு பதிலாக விவசாயிகளுக்கு வேறு நிலம் கொடுக்கிறேன் என்று கலக்டருக்கு பதில் அனுப்பி உள்ளார். 

இவருடைய நிறுவனம் ஹரித்துவாரில் மொத்தமாக ஆயிரம் ஏக்கரில் உள்ளது. இந்த சாமியார்களுக்கு  இவ்வளவு பணம் எப்படி வந்தது? ஏற்கனவே காந்தியவாதி கள்ள பணத்திற்கு எதிராக நடத்தின நாடகத்திற்கு ஐம்பது லட்ச ரூபாய் செலவானது. 

இப்போது இந்த பாவப்பட்ட கோடீஸ்வரன் நடத்தும் நாடகத்திற்கு பதினெட்டு கோடி செலவு செய்வதாக வெளிபடையாக சொல்கிறார்கள் என்றால் உண்மை நிலை என்னவாக இருக்கும். 


இவர் நடத்தும் இந்த நாடக மைதானத்தில் ஆயிரத்தி ஐநூறு ஏர் கூலர். முந்நூறு கழிப்பறைகள், நானூறு டிஜிட்டல் ஸ்க்ரீன், நானூறு படுக்கைகள், நூறு அம்புலன்சுகள் என்று பலகோடி ரூபாய்கள் செலவு செய்கிறார்கள்.

மேலும், உடனுக்குடன் செய்திகளை தெரிவிக்க பலகோடிகள் கோடிகள் செலவில் தனியாக டவர்கள் அமைக்கப்படுகின்றன


.இந்த நாடக மைதானம் முழுவதும் ஹிந்து பாசிடுகளால் நிரம்பி வழிவதில் இருந்தே தெரிகிறது இவரை ஆட்டுவிப்பது ஆர்.எஸ்.எஸ் தான் தெள்ளத் தெளிவாகிறது. நல்லவர்கள் ஒரு ஆள் கூட இந்த பாசிஸ்ட்களின் கூடாரத்தில் இல்லை.
 

தல்ஃபித் கிராமத்தில் 8 பலஸ்தீனர்கள் கைது


கடந்த வெள்ளிக்கிழமை (10.06.2011) அதிகாலை மேற்குக்கரை தல்ஃபித் கிராமத்தில் எட்டு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை நேரத்தில் மேற்படி கிராமத்தைச் சுற்றிவளைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், தேடுதல் வேட்டை என்ற பெயரில் பலஸ்தீன் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அவற்றைத் தலைகீழாகப் புரட்டி அட்டகாசம் செய்ததோடு, பெண்களையும் குழந்தைகளையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். அவர்களின் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை ஆட்சேபித்த பலஸ்தீனர்களை ஆக்கிரமிப்புப் படை கைதுசெய்துள்ளது என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேற்படி பலஸ்தீனர்கள் அனைவரும் கரங்கள் முதுகுப் புறமாகக் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்புப் படையினரால் வதை முகாம்களை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அதிகாலை அல்லது நள்ளிரவு வேளைகளில் பலஸ்தீன் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் வேட்டை என்ற போர்வையில் பெண்களையும் குழந்தைகளையும் ஆயுதமுனையில் அச்சுறுத்துவதையும், பலஸ்தீனர்களைக் கைதுசெய்து தடுப்பு முகாம்களுக்கு இழுத்துச் செல்வதையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை தன்னுடைய வழமையாகக் கொண்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஒஸாமாவின் உடலைத் தேடும் பணியில் அமெரிக்கர்

கடந்த மே 2 அன்று ஒஸாமா பின் லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் கமாண்டோக்கள் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் சுட்டுக் கொன்றதாகவும் பின்னர் ஒஸாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்து விட்டதாகவும் அமெரிக்க ராணுவம் அறிவித்தது. 
ஆனால் ஒஸாமா கடலில் அடக்கம் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆதாரங்கள் எதையும் அமெரிக்கா வெளியிடவில்லை. அனைத்து சோதனைகளையும் முடிந்த பின்னர் வடக்கு அரபிக்கடல் பகுதியில் முஸ்லிம் மத சடங்குகள் செய்யப்பட்ட பிறகு அதிக எடையுள்ள ஒரு பையில் வைத்து ஒஸாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஒஸாமாவின் உடலைக் கண்டு பிடிப்பதற்காக முன்வந்துள்ளார் பில் வாரன் என்ற அமெரிக்கர். இவர் கலிபோர்னியாவைச் சார்ந்தவர். கடலில் புதையலைக் கண்டுபிடிப்பதற்காகவும் மூழ்கிய கப்பல்களைக் கண்டு பிடிப்பதற்காகவும் உள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தத் தொழிலை இவர் 1972 முதல் செய்து வருகிறார். ஒபாமா அரசை தான் நம்பவில்லை என்றும் அதனால்தான் பின்லேடன் உடலைத் தேடும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிநவீன சாதனங்கள் உதவியுடன் இந்தப் பணியை செய்யவிருப்பதாகவும் இதற்கு ஏறத்தாழ 400,000 டாலர் செலவிட இருப்பதாகவும் பில் வாரன் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு அமெரிக்க தேசபக்தன் என்பதால் ஒஸாமாவின் உடலைக் கண்டறிந்து உலகுக்குக் காட்டி உண்மையை உணர்த்த இருப்பதாக சொல்கிறார் 59 வயதாகும் வாரன். ரஷ்யாவைச் சார்ந்த தனது நண்பி ஒருவர் ரஷ்யாவில் உள்ள உயர்நிலை காவல் அதிகாரிகள் ஒஸாமா கொல்லப்பட்டதை நம்பவில்லை என சொன்னதுதான் தனது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தயாநிதி மாறனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - ஜெயா கோரிக்கை!

பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா 2G ஊழல் குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் நீதிமன்றத்தின் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். 

ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி அந்நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தயாநிதிமாறன் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் அவ்வாறு விலகத் தவறினால் பிரதமர் தயாநிதிமாறனை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

2G ஊழல் வழக்கை மத்திய அரசின் அங்கமான  சி பி ஐ கையாண்டு வருவதாகவும், திமுகவினர் மீது வழக்கு போட தாம்  யாரையும் தூண்ட வில்லை என்றும் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

First India-Sri Lanka passenger ferry for 30 years


India and Sri Lanka have resumed ferry services after a gap of almost 30 years caused by the island's civil war.
An Indian passenger vessel carrying VIPs and several hundred others arrived in Colombo from the southern port of Tuticorin on Tuesday morning. It will leave for home later in the day.
The Scotia Prince will travel twice a week each way. A Sri Lankan vessel will soon ply the same route.
Ferries were suspended during the war with Tamil rebels, which ended in 2009.
The BBC's Charles Haviland in Colombo says stringent security measures had been taken to regulate the list of passengers on the Scotia Prince.
There is still much mistrust between Sinhalese-dominated Sri Lanka and the Tamil-dominated Indian state of Tamil Nadu, our correspondent says.
'Coming together'
Indian passengers disembarking told the BBC they were very pleased to be using the new service.One 28-year-old man said he had come on a day trip to see Sri Lanka for the first time. Another man was making his 10th visit, but said he found sailing much more convenient than flying.
Businessman V Velmurugam told the BBC: "You see the people from India? They started hating Sri Lankans because of this war.
"Now I think it's coming together. I can see that. This ferry I think will be the start of a good new relationship."
Another Indian Tamil man said he had never been to Sri Lanka but wanted to look at the historical links between his people and those on the island.
The Scotia Prince is a cruise vessel registered in the Bahamas but now chartered by an Indian company, Flemingo, which also owns a chain of duty-free shops.
It can carry more than 1,000 people and offers restaurants, bars and a casino.
Another boat, to start operating soon, is run by Sri Lanka's state-owned Ceylon Shipping Corporation.
"There will be an entertainment crowd we are trying to attract", said corporation spokesman Prasad Galhena, as well as "suitcase-carriers" - small-scale businessmen from India as well as from Sri Lanka.
Tuticorin to Colombo is an entirely new route.
The old ferry service, which stopped 30 years ago, linked the Indian temple town of Rameshwaram to Mannar, a part of northern Sri Lanka heavily affected by the war.
Officials say the ferries will be considerably cheaper than the planes that link Colombo with southern India - meaning less affluent people from both countries can now cross.
The ferry is resuming at a time of sour relations between Sri Lanka and authorities in Tamil Nadu.
Its state assembly is calling for economic sanctions against Sri Lanka over what it says is the island's mistreatment of its ethnic Tamil minority.

Nepal free of landmines five years after civil war

Troops have destroyed Nepal's last minefield, five years after the end of the country's civil conflict.
Nepal is now the second country in Asia after China to become landmine-free.
Clearing the mines was agreed under a 2006 peace deal with Maoist rebels. Since the end of the conflict, mines have caused 473 casualties in Nepal - 78 of which were fatal.
The remote location of many of the fields meant the task took far longer than the 60 days first anticipated.
With an explosion that shook the side of a mountain 2,000m (6,500ft) above the city of Kathmandu, the Nepalese army destroyed the last of 53 minefields it had been responsible for laying during the country's 10-year Maoist insurgency.
The BBC's Joanna Jolly in Kathmandu says the explosion was a symbolic end to this side of the conflict - but Nepal's political parties still have a long way to go before they secure peace.
In particular they need to agree on how to demobilise some 19,000 former Maoist soldiers, she says.
Despite their commitment to clearing these mines, the Nepalese government is yet to sign the international Ottawa treaty banning all landmines.

மதுரை அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை திருடி விற்ற புரோக்கரையும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அடிக்கடி குழந்தைகள் திருட்டு போவதாக எழுந்த புகாரை அடுத்து அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களாக அண்ணாநகர் போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த புரோக்கர் சுப்பிரமணி (65) போலீசிடம் சிக்கினார். விசாரணையில், சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி கற்பகம் என்ற பெண்ணிடம் ஆண் குழந்தை திருடி தருவதாக கூறி, ரூ.7 ஆயிரம் வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அரசு மருத்துவமனை பெண் ஊழியர் அமுதவல்லி என்பவருக்கும் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

25 ஆண்டுகளாக திருட்டு

குழந்தை கடத்தல் பற்றி சுப்பிரமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் குழந்தைகளை திருடி விற்று வந்து உள்ளேன். இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகளை வார்டில் இருந்து திருடி விற்றுள்ளேன்.

என்ஜினீயரிங் மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தையை திருடி கூடல்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு டாக்டருக்கு விற்றேன். சமீபத்தில் அந்த டாக்டர் இறந்து விட்டார். அதன்பின் அந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

யார் யார் சிக்குவார்கள் ? 

புரோக்கர் சுப்பிரமணியின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது வாக்குமூலத்தையடுத்து குழந்தைகளை வாங்கியவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

புரோக்கர்கள் ஓட்டம் 

போலீசார் தரப்பில் கூறும் போது, `இவர் ஒரு நபராக இத்தனை குழந்தைகளை கடத்தி விற்று இருக்க முடியாது. இவருக்கு உதவியவர்கள் யார், யார்? பின்னணி என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர். இதற்கிடையில், குழந்தைகள் திருட்டை ஒழிக்கவும், புரோக்கர்களை தடுக்கவும் ஆயுதப்படை போலீசார் 10 பேர் தினமும் மதுரை பெரிய மருத்துவமனையில் சாதாரண உடையில் ரோந்து சுற்றி வருகின்றனர். இதனால் புரோக்கர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

முக்காடு



நபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் :59]

அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர் அது கண்ட) நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு ‘அஸ்மாவே’ நிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு எதனையும் பிறர்) பார்த்தல் கூடாது’ என்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும் சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்

கீழ்கண்ட கட்டுரையில் வரும் சம்பவங்களும், நபர்களும் உண்மையே அன்றி கற்பனை அல்ல. இக்கட்டுரையில் வரும் சம்பவங்கள், நபர்கள் உங்களை போல் இருந்தால் அதற்கு தாங்களே பொறுப்பு. நாங்கள் அல்ல. நமது சகோதரிகளின் அலட்சியத்தால் அல்லது கவன குறைவால் இது கூட சரியான வார்த்தையாக தோன்றவில்லை. இப்படி கூட நடக்குமா? என்ற எண்ணத்தில் செயல்படுவதால் இப்படி நம்மை எண்ண வைக்கிறது. இதை படித்துவிட்டு சகோதரிகளிடம் இருந்து காரசாரமான அம்பு மழைகளை எதிர்பார்க்கிறோம். நாம் குறை சொல்வது நோக்கமல்ல. நம்மை நாமே பரிசோதனை செய்வதே நோக்கம்.

முக்காடு என்பது தமிழ் பேசும் சகோதரிகளால் பல வண்ணங்களில் துப்பட்டி, அரை துப்பட்டி, முழு துப்பட்டி, கூசாலி துப்பட்டி, புர்கா என்று அழைக்கப்படுகிறது. அதற்கு கற்பனையான வடிவம் கொடுத்து அதை அணிவதையே இஸ்லாமிய உடையாக கருதுகிறார்கள். உண்மையில் இஸ்லாமிய உடை என்று ஒன்று இல்லை. அந்தந்த நாடுகளில் சகோதரிகள் அங்குள்ள தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, இறைத் தூதர் சொன்ன வழியில் அணிவதே இஸ்லாமிய உடையாகும். முகம், இரு கைகள் மட்டும் தெரிய மற்ற உடல் உறுப்புகளை மறைப்பது, இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது அனைத்தும் இஸ்லாமிய உடையாகும். அது எந்த வண்ணத்தில், வடிவில் இருந்தாலும் சரியே. இக்கட்டுரையின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் அதே வார்த்தையை பயன்படுத்துகிறோம். உண்மை நிலையை உணர்த்தவே இவ்வாறு அழைக்கிறோம்.

முக்காடு இடுதலை பலவகையாக பிரிக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.

1.பார்த்தால் முக்காடு

இக்காட்சியை பெரும்பாலான இடங்களில் காணமுடியும். மாற்று மத நபர்களுடன் (ஆண்கள் உட்பட) பேசிக்கொண்டு இருப்பார்கள். முக்காடு இருக்காது. யாராவது ஒரு தாடியையோ, தொப்பியையோ, கைலியையோ அல்லது முஸ்லிம்களை பார்த்துவிட்டால் போதும். உடனே முக்காட்டை சரியாக இழுத்து போட்டுக் கொள்வார்கள். சகோதரிகளே! முக்காடு உங்களுக்கா!? மற்றவர்களுக்கா!? முக்காடு என்பது முஸ்லிம்களின் கண்களில் இருந்து பாதுகாக்க மட்டும் தானா!? மாற்று மத சகோதரர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க தேவை இல்லையா !!!

2.கிராமிய முக்காடு

முஸ்லிம் சகோதரிகள், உள்ளூரிலும், அண்டை வீடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும் போது முக்காடு இட்டு போவார்கள். கொஞ்சம் பெரிய நகரங்களுக்கு (திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை) போகும் போது முக்காட்டுக்கு மூட்டை கட்டி விட்டு மற்ற இன பெண்களுள் கலந்துவிடுகிறார்கள். தங்களது அடையாளத்தை அறியாத அப்பாவிகள். ஏன்!? முக்காடு கிராமங்களுக்கு மட்டும் தானா!?

3.கிழடு கட்டை முக்காடு

இக்காட்சியை நகர் புறங்களில் காணலாம். முக்காடு அவசியம் தேவைப்படும் இளம் சகோதரிகள் அதை மறந்துவிட்டு (!) ‘ஹாயாக’ போய்க்கொண்டு இருப்பார்கள். முக்காடு அவசியம் தேவைப்படாத வயதான பெண்மணிகள் முக்காடு இட்டு செல்வார்கள். அதற்கு இளம் நங்கையர் சொல்லும் காரணம். முக்காடு எல்லாம் பத்தாம் பசலி தனம். அது எல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது!

4.சீருடை முக்காடு (Uniform)

இது மார்க்க கல்வி, பள்ளிவாசல்கள், இறந்தவர்களின் வீடுகள் என செல்லும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். (குழந்தை பள்ளிக்கு செல்லும்போது மட்டும் அணியும் சீருடை போல) மற்ற நேரங்களில் அதை அப்படியே மாட்டி வைத்து விடுவார்கள். முக்காடும் சீருடையாகி விட்டதா!?


5.சவுதி முக்காடு

இவர்கள் சவூதி அல்லது மற்ற முஸ்லிம் நாடுகளில் வசிக்கும்போது அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு முக்காடிட்டு இருப்பார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த பழக்கத்தை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவார்கள், ஏன்? மன்னர் போடும் சட்டங்களுக்கு அடிபணியும் சகோதரிகள் அந்த மன்னனை படைத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது ஏனோ?

6.ஏர்போர்ட் முக்காடு

இது வெளிநாடு செல்லும் சகோதரிகளிடம் காணப்படுகிறது. சகோதரிகள் தங்களது சொந்த வீட்டை விட்டு (தமிழகத்தில்) புறப்படும் போது முக்காடு இட்டு ஏர்போர்ட் உள்ளே நுழையும் வரை போட்டு இருப்பார்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு முக்காட்டை அப்படியே கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும் வெளிநாட்டில் இருந்து வரும் போது முக்காடு ஏர்போர்ட்டில் இருந்து தொடங்கும். வெளிநாட்டில் முக்காடு இட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது இவர்கள் சொல்லும் காரணம்.

இப்படி முக்காடு இடுதலை பலவகையாக காணலாம். முக்காடு போடும் பெரும்பாலான பெண்கள் (அனைவரும் அல்ல) தாங்கள் முக்காடு போடாவிட்டால் கிழடு, கட்டைகள் ஏதாவது சொல்வார்கள், நினைப்பார்கள் என ஒரு சமுதாய அங்கீகாரத்துக்காகவே போடுகிறார்கள், முக்காடு தங்களது தற்காப்புக்காகத்தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள். உண்மையில் பாலியியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களில், முக்காடு இட்ட பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஒளிவு மறைவு அற்ற சுதந்திரமாக வாழும் நாடுகளில் ஒழுக்க கேடுகளின் பட்டியலை எழுதினால் அது நீண்டு கொண்டே போகும்.

கல்யாணமில்லா குடும்பங்கள், தகப்பன் இல்லா குழந்தைகள், தகப்பன் பெயர் அல்லா முகமறியாத குழந்தைகள், பாசத்திற்கு அழும் குழந்தைகள், பிஞ்சிலே பழுத்த கிழங்கள், மணமாவதற்கு முன்பே குடும்ப உறவு காதல் பெயரில், முதியோர் இல்லங்கள் இப்படி எத்தனை எத்தனையோ…..

முக்காடு என்பது நம்மை தனிமைப்படுத்தவோ, அடையாளம் காட்டவோ அல்ல. தன்னுடைய பாதுகாப்புக்கு இறைவன் வழங்கியுள்ள சாதனம் என்பதை நாம் ஏன் உணர தவறிவிட்டோம்.!?

படித்த நமது சகோதரிகள் அடிமை தனம், ஆண் வர்க்கத்தின் ஆதிக்கம், பத்தாம் பசலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

நவ நாகரீகமான சுதந்திரமான அமெரிக்க குட்டை பாவாடையுடன் வாழ்ந்த ஒரு பெண் இஸ்லாத்தை தழுவிய பின்பு, முக்காட்டை பற்றி கூறிய கூற்று:- குட்டை பாவாடையுடன் சுதந்திரமாக சுற்றி வந்த போது கிடைக்காத சுதந்திரம் முக்காடு போட்ட பின்பு தான் கிடைத்தது என கூறுகிறார்.

“உயர்ந்த பொருளைத்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். வைரத்தை தான் பட்டு துணியில் சுற்றிபாதுகாப்பாக வைப்பார்கள்.கற்களையோ ,கூலாங்கற்களையோ அல்ல. இஸ்லாத்தில் பெண்களுக்கு மிகுந்த சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.அதை உணர்ந்து, நீங்கள் வைரம் என்றால் முக்காடு இடுங்கள். இல்லை..இல்லை… நாங்கள் கூலாங்கற்கள் என்றால்… சகோதரிகளே நீங்கள் வைரமா ??? கூலாங்கற்களா !!!! “


பெண்ணே, முக்காடு என்பது உனக்காக, உன் பாதுகாப்புக்காக என்பதை நீ உணராத போது நீ ஏன் பிறருக்காக முக்காடு போடுகிறாய். அது உனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கொடை என்று நீ அறியாத வரை அதை போடாதே என சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் உணர்ந்து போடு என்று கூறத்தான் ஆசைப்படுகிறேன்.

இன்றைய பெண்களின் முக்காடு!
.


பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்திய இஸ்ரேலிய அராஜகம்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை ஹஷ்ரோன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் உள்ள நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை 'சோதனையிடல்' என்ற பெயரில் நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பலஸ்தீன் பெண்கள் அஹ்ரார் சிறைக் கைதிகளுக்கான கற்கைகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பிடம் தமக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி முறையிட்டுள்ளனர்.

இப் பெண் கைதிகளில் ஒருவரிடம் கைத்தொலைபேசி ஒன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனையிடுவதாகக் கூறிய ஆக்கிரமிப்புக் காவலர்கள், பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்தில் 10 பெண் காவலர்கள், 5 ஆண்காவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் புலனாய்வுத் துறையினர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைசாலை ஊழியர்கள் இப் பெண்கள் நால்வரையும் தனித்தனியே நிர்வாணப்படுத்தி, 'சோதனை'யிட்டுள்ளனர். இதன்போது சர்வதேச மனித விழுமியங்களுக்கு முற்றிலும் முரணாகத் தாம் பெரிதும் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி மேற்படி பெண்கைதிகள் நால்வரும் மனங்குமுறியுள்ளனர்.
மேற்படி பெண் கைதிகளைச் சோதனையிட்ட பின் அவர்கள், தொழுகைக்கு அணியும் ஆடைகள் மட்டும் அணிவிக்கப்பட்டு அங்கிருந்த விசாரணை அறைக்குள் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கொட்டடி ஆக்கிரமிப்புச் சிறைக்காவலர்களால் அங்குலம் அங்குலமாகச் சோதனையிடப்பட்டது.
இந்தத் 'தேடுதல் வேட்டை' சுமார் 6 மணிநேரம் தொடர்ந்தது. பலஸ்தீன் பெண் கைதிகளின் சிறைக்கொட்டடி தலைகீழாகப் புரட்டப்பட்டு சோதனையிடப்பட்ட போதிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் குற்றஞ்சாட்டியது போன்ற கைத்தொலைபேசியொன்று அங்கே காணப்படவில்லை.
தேடுதல் வேட்டை இடம்பெற்ற ஆறு மணிநேரமும் மேற்படி பலஸ்தீன் பெண்கள் நால்வரும் உண்ணவோ, தொழவோ, கழிவறைக்குச் செல்லவோ அனுமதியளிக்கப்படவில்லை என்பதும், அவர்கள் மிகக் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளமையும் மிகத் தெளிவான மனித உரிமை மீறலாகும் என அஹ்ரார் அமைப்பின் பணிப்பாளர் ஃபுவாத் அல் குஃப்பாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் பொய்யான குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆண்,பெண், சிறுவர் என்ற வேறுபாடின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் கைதிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படாமலும், தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படாமலும் மிக நீண்ட காலம் பல்வேறு சித்திரவதைகளையும் அவமானங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராம்தேவ் மிகப்பெரும் ஊழல்வாதி: காங்கிரஸ்!

மிகப்பெரும் ஊழல்வாதியான ராம்தேவ் கறுப்பு பணம் பற்றி பேசுவதற்கு முன் தனது சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஹரிபிரசாத் கூறியுள்ளார்.

பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஹரிபிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடக லோக் அயுக்தா நீதிபதியும் லோக்பால் சட்ட வரைவு குழு உறுப்பினருமான சந்தோஷ் ஹெக்டே ஊழல் பற்றி தேசிய அளவில் பேசி வருகிறார். செல்லும் இடமெல்லாம் ஊழல் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான ஆதாரங்களும் லோக்அயுக்தா நீதிபதியிடம் உள்ளது. முதலில் அவர் எடியூரப்பா மீது விசாரணை நடத்தட்டும். அதன் பிறகு அவர் லோக்பால் சட்ட மசோதா பற்றி பேச வேண்டும்.

பாபா ராம்தேவை சமரசப்படுத்தும் பணியில் காங்கிரஸ் கட்சியின் பங்கு எதுவும் இல்லை. அவர் சாமியார் அல்ல. மிகப்பெரிய ஊழல்வாதி. அவர் ரூ.1110 கோடிக்கும் அதிகமாக தன்னிடம் சொத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். அது எப்படி வந்தது. இது தொடர்பாக அவர் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தனது சொத்தை அரசிடம் ஒப்படைத்து விட்டு கறுப்பு பண பிரச்சினை பற்றி பேச வேண்டும்.

இவ்வாறு ஹரிபிரசாத் கூறினார்.

மூலிகை வளம் நிறைந்த குற்றால அருவிகள்

பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். அகத்தியர் கால் பதித்த திருத்தலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை அன்னையின் சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

குற்றால சீசன் காலம் 

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

மூலிகைகளும், பழவகைகளும் 

இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

ஒன்பது அருவிகள் 

குற்றாலத்தில் மொத்தம் சிறிதும் பெரிதுமாக 9 அருவிகள் உள்ளன. பழைய அருவி, மெயின் பால்ஸ் என்று இனிய தமிழில் அழைக்கப் படும் பேரருவி, புலி யருவி, ஐந்தருவி, சிற்றருவி, புது அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி என்று ஏழு அருவிகள் மலையைச் சுற்றி மலையடிவாரங்களிலும், தேனருவி, செண்பகதேவி என்று இரு அருவிகள் என்று மலையின் மேலேயும் அமைந்துள்ளன.

பேரருவியும், குற்றாலநாதரும்

மெயின் ஃபால்ஸ் எனப்படும் பேரருவி குற்றாலம் நகருக்குள் இருக்கிறது இந்த அருவி 91 அடி உயரத்தில் இருந்து மலையில் பாய்ந்து முதலில் பொங்குமாங்கடல் என்ற பள்ளத்தில் விழுந்து அதை நிரப்பி வழிந்து கீழே இறங்குகிறது. வெகு தூரத்தில் இருந்தே கண்களைக் கவரும் பேரருவி இது. தூரத்தில் இருந்து பார்க்க கண்களை அகலவெட்டாமல் லயிக்கச் செய்யும் எழில் மிகு அருவி இது. தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில் அந்த அருவி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காட்சியளிக்கும். பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருவிக்கரையில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயம் சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையாக திகழ்கிறது. இங்கு அகத்திய முனிவர் நிறுவிய பராசக்தி பீடமும் அமைந்துள்ளது.

சிற்றருவி- இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

செண்பகாதேவி அருவி

பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தேனருவி 

செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஐந்தருவி

குற்றாலம் நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ஐந்தருவி. அழகிய மலைச்சாரல், சிறு சிறு ஆறுகள், பழத்தோட்டங்கள், தங்குமிடங்கள், ஒரு சிறிய ஏரி எல்லாம் தாண்டி வருகிறது ஐந்தருவி. இங்கு அருவி ஐந்து பிரிவாக வந்து விழுவதால் ஐந்தருவி என்று பெயர். திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது. அடர்ந்த கானகங்கள் நிறைந்த மலைத்தொடர். மலையின் மேலே, உயரத்தில் எங்கேயோ, எங்கிருந்தோ பல நூறடிகளுக்கு வெள்ளிக் கம்பியாக ஒரு அருவி விழுந்து மீண்டும் கானகத்திற்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்) 

ஐந்தருவிக்கு போகும் முன்பாக ஒரு கிளைப் பாதை பிரிந்து மலையின் மேல் செல்கிறது. கொஞ்ச தூரம் சென்றதும் அரசாங்கத்தின் பழத்தோட்டத் துறை நடத்தும் ஒரு பழப்பண்ணை வருகிறது. அந்த பண்ணையின் உள்ளே நுழைந்தால் அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இரு அருவிகள் அங்கே உள்ளன. அதற்குப் பழத்தோட்ட அருவி என்று பெயர். ஆனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்க முடியாது. வி ஐ பிக்கள் மட்டுமே குளிக்க முடியும்.

புலியருவி

குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.

பழைய குற்றாலம் அருவி 

குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.

பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

சுற்றுலா மையங்கள்

குற்றாலத்தை சுற்றிலும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பல பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. தென்காசி கோவில் அதில் முக்கியமானது. திருமலைக் குமரன் கோவில் என்று ஒரு அழகிய குன்றத்துக் குமரன் கோவில் தவற விடக் கூடாத இடமாகும். குன்றின் மேல் உள்ள கோவிலில் நின்று பார்த்தால் சுற்றி பச்சை பசலேன வயற்பரப்பும் சுற்றிலும் மேகம் கவிந்த குற்றால மலைத்தொடருமாக இயற்கை அன்னையின் எழில் நமது கண்களையும் மனதையும் ஒருங்கே கொள்ளை கொள்ளும். அருகில் உள்ள இலஞ்சி என்ற கிராமத்தில் ஒரு அழகிய முருகன் கோவில் உள்ளது.

கேரளா எல்லை அருவிகள்

குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையைத் தாண்டினால் ஆரியங்காவுக் கணவாயும், கேரளாவும், அச்சன் கோவிலும் வந்து விடும். கேரள எல்லையிலும் சில அருவிகள் உள்ளன. ஆளரவமில்லாத அற்புதமான அருவிகள் அவை. இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால் குற்றாலத்தின் நெரிசலைத் தவிர்த்தப் பச்சைப் பசேல் என்று போர்த்திக் கொண்ட அற்புதமான பாலருவி இருக்கிறது. தமிழ்நாட்டுப் பகுதிகளில் பாபநாசம் அகத்தியர் அருவியும், பாபநாசம் அணையும், பரிசலில் சென்றால் வரும் பாண தீர்த்தத்தையும் கண்டு குளித்து அனுபவிக்கலாம். ஒரு வாரம் தங்கி, கண்டு, ரசித்து அனுவவிக்க எண்ணற்ற இடங்கள் குற்றாலத்தைச் சுற்றி அமைந்துள்ளன.

அமைவிடம்

தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது. தென்காசி ரயில் நிலையம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து குற்றாலத்திற்கு பேருந்து வசதி உண்டு. மதுரையிலிருந்து நிறைய பேருந்துகள் குற்றாலம் வரை செல்கிறது.

ஆஸ்துமா நோய் தீர்க்கும் கண்டங்கத்திரி

கண்டங்கத்திரி செடி நன்கு படர்ந்து தரையை ஒட்டி வளரும் குறுஞ்செடியாகும். இந்த தாவரம் முழுவதும் முட்கள் காணப்படும். நீல நிறத்தில் மலர்கள் கொத்து கொத்தாகக் காணப்படும். இந்த செடியின் இலைகள், தண்டு, மலர், கனி, விதை ஆகிய முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டவை. அர்வாதி என்னும் ஆயுர்வேத மருந்தின் பகுதியாக உள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் இருந்து பலவிதமான கரிம அமிலங்கள் மற்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டயோஸ்ஜெனின், சொலசோடைன், சொலனோகார்பைன், அரகிடிக்,லினோலியிக், ஒலியிக், பால்மிடிக், அமிலங்கள் காணப்படுகின்றன.

ஆஸ்துமா நீக்கும் வேர்

கண்டங்கத்திரி செடியின் வேர் ஆஸ்துமா எதிர்ப்பு குணம் கொண்டது. விதைகளை எரித்த புகை ஆஸ்துமா நோயில் சளி அகற்றுவியாக உதவுகிறது. பல்வலி போக்குகிறது.

இலைகளின் சாறு மிளகுடன் சேர்த்து மூட்டு வலிகளுக்கு மருந்தாகிறது. வாந்தி நிறுத்தக்கூடியது. சிறுநீர் போக்கு தூண்டுவி. மார்பு வலி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகும். தசமூலா என்னும் ஆயுர்வேத மருந்தின் பகுதியாக உள்ளது.

குழந்தைகளின் இருமல் நீக்கும் 

கனிகளின் சாறு தொண்டை வலியை போக்க வல்லது. குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு இதன் பொடி தேனுடன் கலந்து கொடுக்கப்படுகிறது.

முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. உடல்நலம் தேற்றக்கூடியது. மூச்சுக்குழல் அலர்ஜி, இருமல், மலச்சிக்கல், ஆகியவற்றினை போக்க உதவும். இதன் கசாயம் பால்வினை நோய்களுக்கு மருந்தாவதுடன் கருத்தரிக்கவும் ஊக்குவிக்கிறது. 

1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியைத் தொடர உத்தரவு

1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் என்று  தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சியின் போது கடந்த கல்வியாண்டில், முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு ஆகியவற்றில் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தலுக்குப்பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அதிமுக அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், பழைய கல்வி முறையே தொடரும் என்று அரசு அறிவித்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 1 மற்றும்  6ம் வகுப்புகளூக்கு இந்த ஆண்டும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதர வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல் செய்வது பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் இந்த நிபுணர் குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழுவின் அறிக்கை மீது உயர்நீதிமன்றம் தினமும் விசாரித்து ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

'Funding crisis' in brain research

Scientists say research into mental illnesses such as depression is facing a funding crisis.
They warn that new treatments will be delayed and that the next generation of neuroscience researchers will not be trained.
A report by the European College of Neuropsychopharmacology said private companies were pulling out due to the challenge of bringing drugs to market.
It called for more investment and changes to the way trials take place.
The report was the result of a summit of more than 60 representatives of governments, universities, the pharmaceutical industry and patient groups.
Higher failure rate
It said up to 80% of funding for brain research in Europe had traditionally come from the private sector. However, pharmaceutical companies were retreating from the field because of the cost of bringing drugs as far as the consumer.
The report said it took much longer to develop drugs for mental illness - 13 years on average. Those drugs had a higher failure rate and were harder to get licensed for use, it said.
Only one new anti-depressant has been approved in Europe, agomelatine, in the past 10 years.
Professor Guy Goodwin, from the University of Oxford, said a lack of funding could lead to a "generational crisis" in neuroscience research and training.
He said there should be more public money invested in brain research: "The cost and burden are really quite high, yet research attracts disproportionately low investment.
"Public investment in research should be somehow related to the burden of the disease."
The report suggested ways of encouraging more people to invest, such as increasing the patent length for psychiatric drugs - making them more profitable.
A European "medicines chest" was also suggested. Pharmaceutical companies would donate drugs they were no longer using for research, which could then be used by other organisations.
The report suggested that drugs discarded for treating Alzheimer's disease, for example, could be used in research for psychiatric disorders.
Professor David Nutt, of Imperial College London, described the current situation as "madness".
He said: "With Europe's extraordinary tradition in neuroscience innovation relying so heavily on private-sector investment, the consequences for the region's research base and public-health agenda are of major concern."