அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 14, 2011

தயாநிதி மாறனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - ஜெயா கோரிக்கை!

பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா 2G ஊழல் குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் நீதிமன்றத்தின் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். 

ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி அந்நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தயாநிதிமாறன் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் அவ்வாறு விலகத் தவறினால் பிரதமர் தயாநிதிமாறனை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

2G ஊழல் வழக்கை மத்திய அரசின் அங்கமான  சி பி ஐ கையாண்டு வருவதாகவும், திமுகவினர் மீது வழக்கு போட தாம்  யாரையும் தூண்ட வில்லை என்றும் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

No comments: