அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 14, 2011

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் - ஜெயலலிதா!


மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மோசடி செய்து மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றார் என்றும் அவர் உடனடியாக தம் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். 

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சிதம்பரம் தோல்வியைத் தழுவியதாகவும் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனே வெற்றி பெற்றதாகவும் மோசடி செய்து சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது என்றும் அது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

மோசடி செய்து வெற்றி பெற்ற சிதம்பரம் தம் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments: