அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, February 4, 2012

குவைத் தேர்தல்:இஸ்லாமியவாதிகள் தலைமையிலான எதிர்கட்சியினருக்கு வெற்றி!!


Kuwait election  Islamist-led opposition makes gains
குவைத் சிற்றி:குவைத் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமியவாதிகளின் தலைமையிலான எதிர் கட்சியினர் மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளனர். மொத்தம் 50 இடங்களில் 23 இடங்களை கைப்பற்றிய இஸ்லாமியவாதிகள் தலைமையிலான எதிர்கட்சியினர் மொத்தம் 34 இடங்களை கைப்பற்றியுள்ளனர். முந்தைய பாராளுமன்றத்தில் 4 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இம்முறை ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.

ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்காக வாதாடியவா பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. அவர் இப்போது ராஜிவ் கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தப் பெறாமல், பல உண்மைகள் மூடி மறைக்கப் பட்டதை, வெளியே கொண்டு வரும் நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். விரைவில் அந்த நூல் வெளி வரவிருக்கிறது. இது தொடர்பாக ‘டெகல்கா’ வார ஏடு, வழக்கறிஞர் துரைசாமியின் பேட்டியை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேட்டியின் தமிழ் வடிவம் இது.
கேள்வி: ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்காக, நீங்கள் வாதாடியவர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனையும் உறுதி செய்யப்பட்டுஅனுபவித்து வரும்போது இவ்வளவு காலத்துக்குப் பிறகு ராஜீவ் கொலையின் பின்னணியில் மிகப் பெரும் சதித் திட்டம் இருப்பதாகவும், அந்த சதி அவர்களுக்குள்ளேயே உருவானது என்றும், நூல் எழுதியிருக்கிறீர்கள். உங்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, என்ன ஆதாரம்?
பதில் : ராஜீவ் கொலைக்கான சதி காங்கிரஸ் அணிக்குள்தான் உருவானது என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால், சி.பி.அய். விசாரணைக்கு தலைமையேற்று நடத்திய காவல்துறை அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன், சரியான கோணத்தில் இந்த விசாரணையை கொண்டு செல்லவில்லை என்றே கூறுவேன். ராஜீவ் கோரக் கொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளில், அதாவது 1991 மே 24 இல் சி.பி.அய். விசாரணைக்கான பொறுப்பை ஏற்றது. அந்த விசாரணைக் குழுவில் கார்த்திகேயன், நான்கு டி.அய்.ஜி.க்கள், 8 காவல்துறை மாவட்ட தலைமை அதிகாரிகள், 14 மாவட்ட துணை ஆய்வாளர்கள், 44 ஆய்வாளர்கள், 55 துணை ஆய்வாளர்கள் மற்றும்   காவல்துறையினர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரையுமே தேர்வு செய்தது கார்த்திகேயன் தான். இதில் பெரும் பாலோர், தங்களது பணிக் காலங்களில் திறம்பட செயல்பட்டவர்கள். புலன் விசாரணை சுமார் ஓராண்டு காலம் நடந்தது. 1992 மே 20 இல்தான் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். இவ்வளவு காலம் புலனாய்வுக்கு எடுத்துக் கொண்ட பிறகும் குற்றப் பத்திரிகையில் புலனாய்வில் பல ஓட்டைகள் வெளிப்பட்டன. சி.பி.அய். உண்மைகளை மறைத்தது. ஓராண்டு காலம் புலனாய்வுக்கான கால அவகாசம் கிடைத்த நிலையில், ஒரு சாதாரண போலீஸ்காரரால் கூட, இதைவிட சிறப்பாகவே புலனாய்வை நடத்தியிருக்க முடியும் என்பதே என் கருத்து. தடா நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்குமே தண்டனை வழங்கியது உச்சநீதிமன்றம் 19 பேரை விடுதலை செய்தது. சதியில் இவர்களுக்கு பங்கு உண்டு என்பதற்கு அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட சாட்சியங்கள், ஏற்கக்கூடியதாக  இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.
கேள்வி : இவையெல்லாம் பொதுவான கருத்துகள் தான். பின்னணியில் பெரிய சதி நடந்தது என்பதற்கு குறிப்பிடத்தக்க சான்றுகள் இருந்தால் சொல்லுங்கள்.
பதில் : காங்கிரஸ் கட்சிக்கான நாடாளுமன்ற வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்காக தேர்தல் பிரச்சாரத்துக்காகவே ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ்காந்தி வந்திருந்தார். ஏற்கனவே ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டவிட்டார். அதன் பிறகு, மே 18 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி, ராஜீவ் சுற்றுப் பயணத் திட்டத்தை இறுதி செய்த போது, அதில் ஸ்ரீபெரும்புதூரும், விசாகப்பட்டின மும் சேர்க்கப்பட்டது. ஆனால், ‘தினத்தந்தி’ நாளேட்டில் ஒரு நாளைக்கு முன் கூட்டியே, அதாவது மே 17 ஆம் தேதியே ராஜீவ் ஸ்ரீபெரும்புதூர் வருகை தரும் செய்தி வெளிவந்துவிட்டது. தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் எவருக்கும் ராஜீவ் ஸ்ரீபெரும்புதூர் வருகை பற்றி எதுவும் தெரியாது. ராஜீவ் சுற்றுப்பயணத்துக்கு பொறுப்பாளரும் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளருமான மார்கரட் ஆல்வா (தற்போது உத்தர்காண்ட் ஆளுநர்) மே 18 ஆம் தேதிதான், ராஜீவ் சுற்றுப்பயணத் திட்டத்தை இறுதி செய்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, இறுதி செய்வதற்கு முன்பே, ‘தினந்தந்தி’ நாளேட்டுக்கு ராஜீவ், ஸ்ரீபெரும்புதூர் வருகை தரும் செய்தி எப்படி கிடைத்தது?
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, ராஜீவ் ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கும் அங்கேயே தங்குவதற்கும் மே 19 ஆம் தேதி அன்று வாழப்பாடி ராமமூர்த்தி தனது எதிர்ப்பை பதிவு செய்கிறார். தடா நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி, இதை ஒப்புக் கொண்டுள்ளார். மரகதம் சந்திரசேகர் டெல்லியில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது தொகுதியில் ராஜீவ்காந்தி பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறார். ராஜீவ் வருகை உறுதியான நிலையில் உள்ளூர் காங்கிரசார், கூட்டத்தை பள்ளி மைதானம் ஒன்றில் நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதி கேட்டனர். ஆனால், கோயிலுக்கு சொந்தமான இடத்துக்கு பிறகு மாற்றப்பட்டது. இதற்கான காரணம் மரகதம் சந்திரசேகருக்குத்தான் தெரிந்திருக்க முடியும். பள்ளி விளையாட்டு மைதானத்திலிருந்து கோயில் இடத்துக்கு மாற்றப்பட்டதற்கு, காங்கிரசார் காவல்துறையின் அனுமதியையும் கேட்கவில்லை. அந்தக் கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி, ராஜீவ், ஸ்ரீபெரும்புதூரிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. அந்த ஊரில் இருந்தது, ஒரே சுற்றுலா மாளிகைதான். அதுவும் பழுதடைந்த நிலையிலேயே இருந்தது. அப்போது தமிழகஆளுநாக இருந்த பீஷ்ம நாராயண் சிங், ராஜீவ் ஸ்ரீபெரும்புதூரிலேயே தங்க வைப்பதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மரகதம் சந்திர சேகர், தனது கிராமத்திலேயே ஒரு அடகுக் கடைக்காரரின் பங்களாவில் ராஜீவை தங்க வைக்க ஏற்பாடு செய்துவிட்டார் என்று காங்கிரசாரிடம் கூறப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கருதி இத்திட்டத்தை ஏற்க மறுத்தனர்.
கேள்வி : இந்த காரணங்களால் மரகதம் சதிக்கு உதவினார் என்று கூற முடியுமா?
பதில் : மரதகம் அம்மையார் சதிக்கு உடந்தையாக இருந்ததாக நான் குற்றம்சாட்டவில்லை. ஆனால்,இந்த வழக்கின் சாட்சிகள் அவருக்கு எதிராக இருக்கின்றன. முக்கிய குற்றவாளியான சிவராசன் எழுதிய நாட்குறிப்பில் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக மரகதம் சந்திரசேகரன் மகன் லலித் சந்திரசேகரிடம் சிவராசன் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளதை சிவராசன் தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.  இந்த வழக்கில் தலைமை விசாரணை அதிகாரியாக செயல்பட்ட ரகோத்தமன் எழுதிய நூலில் சிவராசன் நன்கொடை வழங்கியதை குறிப்பிட்டுள்ளார். நான் ரகோத்தமனை குறுக்கு விசாரணை செய்தபோது இதுபற்றி எதுவும் அவர் கூறவில்லை. தடா நீதிமன்றத்தில் சிவராசன் எழுதிய நாட்குறிப்பையும், சாட்சி ஆவணமாக முன் வைக்கவில்லை. குண்டு வெடிப்பில் காயமடைந்த லலித், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ரகோத்தமன் அவரை மருத்துவமனைக்குப் போய் பார்த்தார். அப்போது ஒரு புகைப்படத்தைக் காட்டி, இதில், தாணுவை அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்டார், அதற்கு லலித், தனக்கு தாணு நினைவில் இல்லை என்று கூறிவிட்டார். அ ப்போது அங்கு இருந்த வாய் பேச இயலாத லலித்தின் மகள் தாணுவை அடையாளம் காட்ட முன்வந்த போது ஆத்திரமடைந்த லலித், அருகே இருந்த மனைவியிடம், தமது மகளை அறையை விட்டு வெளியே இழுத்துப் போகுமாறு கூறினார். ரகோத்தமன், தனது நூலில் இதையும் எழுதியுள்ளார். சிவராசன் தந்த 5 லட்சம் ரூபாய் நன்கொடை பற்றி சி.பி.அய். விசாரிக்கவில்லை. சிவராசனும் தாணுவும், மரகதம் குடும்பத்தினரோடு எப்படி நெருக்கமானார்கள் என்பதையும் விசாரிக்கவில்லை. லலித்தின் மனைவி அதாவது மரகதம் சந்திரசேகரன் மருமகள் ஒரு ஈழத் தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவராசன் எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல், ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியிருக்க மாட்டார் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அதற்கு கைமாறாக லலித்திடமிருந்து நிச்சயமாக சிவராசன் உதவிகளைப் பெற்றிருப்பார். ரகோத்தமன் எழுதிய நூலில், இந்த செய்திகள் இடம் பெற்றிருந்தாலும் அதற்காக லலித், மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை. ரகோத்தமன் மீது அதற்காக வழக்கும் தொடரவில்லை. நான் மரகதம் சந்திரசேகரை குறுக்கு விசாரணை செய்தபோது, குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவராசனையோ, தாணுவையோ தெரியுமா? என்று குறிப்பாகக் கேட்டேன். அந்தக் கேள்விக்கே மரகதம் எதிர்ப்பு தெரிவித்து, இதற்காக என் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியையும் கேட்டார். நீதிமன்றமும் அனுமதித்தது. ஆனால், என் மீது அவர் வழக்குப் போடாமல் தவிர்த்துக் கொண்டார்.
சிவராசனின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள தகவல்கள், இந்த வழக்கின் முக்கியமான சாட்சியங்களாகும். “ராஜீவ் பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படுகிறார். சென்னைக்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்கிறார்” - என்று எழுதியிருக்கிறார். ஆனால், திட்டமிட்டபடி 6 மணிக்கு ராஜீவ், ஸ்ரீபெரும்புதூர் வந்து சேர முடிய வில்லை. விமானத்தில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக மாலை 6.15 மணி வரை விசாகப்பட்டினத்திலிருந்தே ராஜீவ் புறப்படவில்லை. விமானம் கால தாமதமாகவே சென்னை வருகிறது என்ற தகவலும், சிவராசனுக்கு தெரிந்திருந்தது.  அப்போது ‘செல்’ பேசி வசதியோ ‘பேஜர்’ வசதியோ கிடையாது. ராஜீவ் விமானம் தாமதமாக வருகிறது என்று தெரிந்த காரணத்தினால் சிவராசன் 6 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூருக்குள் வராமல், அந்த நேரத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். ராஜீவ் தாமதமான வருகை, சிவராசனுக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, அவர், ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்துக்கு உறுதியாக வரப்போகிறார் என்பதும் தெரிந்திருந்தது. இதையெல்லாம் சிவராசன் தனது ‘6 ஆம் அறிவால்’ புரிந்து கொண்டார் என்றெல்லாம், நான் நம்பத் தயாராக இல்லை.
அது மட்டுமல்ல; ராஜீவ், விசாகப்பட்டினத்தில், விமானத்தில் ஏறும் நேரத்தில் திடீரென்று 3 பேர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி ராஜீவை சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் பெண். இந்தத் தகவலை அந்த விமான தளத்தின் பொறுப்பு அதிகாரியாக இருந்தவர் கூறியுள்ளார். ராஜீவை சந்தித்த அந்த மூன்று நபர்கள் யார் என்பதை காவல்துறை விசாரிக்க வில்லை. விமானம் புறப்பட்டவுடன், அந்த மூவரும், அங்கிருந்து மறைந்து விட்டனர். ராஜீவின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டு வந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்த கோணத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவில்லை.
கேள்வி : சிவராசன் போபால் நகரத்துக்குப் போனார் என்றும், ‘TaG’ க்கு ரூ.1.71 கோடி தந்ததாக வும் உங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளீர்கள். அது என்ன ‘TaG’?
பதில்: எனக்கும் தெரியாது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சிவராசன் நாட்குறிப்பில், 1991 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதியிட்ட நாளில் இவ்வாறு சிவராசனால் எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் தர வேண்டியது ரூ.45,000 என்றும் குறிப்பிடப்பட் டுள்ளது. (இந்த நாட் குறிப்பு, அரசு தரப்பு சாட்சி ஆவணம் எண்.எம்.ஓ.180) இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு எந்த விசாரணையும் நடத்தவில்லை. அப்படி நடத்தியிருப்பார்களேயானால், ராஜீவ் கொலைச் சதியில் மறைந்திருக்கும் பல சதிகாரர்களை கண்டறிந்திருக்க முடியும். அப்படி எந்த விசாரணை யும் நடக்காமல் போனது வேதனைக்குரியது.  இதனால் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டு விட் டார்கள். அந்தப் பணம் காசோலையாக தரப்பட வில்லை. ரொக்கமாக வழங்கப்பட்டிருக்கிறது. 1991 மார்ச் 8 ஆம் தேதி சிவராசன் ம.பி. மாநிலத்தில் இருந்ததாக தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக் கிறார்.
“மத்திய பிரதேச மாநிலம்
குணா மாவட்டம்
சந்தேரி ஹில்ஸ்
மாளிகை உரிமையாளர்குவாலியர் ராணி
பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளது”
- என்ற குறிப்புகள் சிவராசன் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
மற்றொரு செய்தியையும் குறிப்பிடவேண்டும். 1992 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி ஆதிரை என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆதிரையும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர். சிவராசன் பற்றி தனக்குத் தெரிந்த பல தகவல்களை தெரிவிக்க விரும்புவதாக, மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆதிரை தாக்கல் செய்த மனுவில்:
“நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது சிவராசன் என்பவரை சந்தித்தேன். அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, பிறகு அதிலிருந்து வெளியேறி, அடிக்கடி இந்தியா போய் வந்து கொண்டிருப்பவர். எனவே, இந்தியாவிலிருந்து நான் ஜெர்மனிக்குப் போவதற்கு அவரது உதவியைக் கேட்டேன். நான் இந்தியா வந்து, சிவராசனுடன் தொடர்பு கொண் டேன். அப்போது சிவராசன் என்னிடம், ‘ஒரு குறிப்பிட்ட பணியை காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் ஒப்படைத்துள்ளனர். அதற்காக பெரு மளவு பணம் தருவதாகவும், வெளிநாடு ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகவும் உறுதி கூறியிருக்கிறார்கள்’ என்று என்னிடம் கூறினார். இந்த வேலையை செய்து முடிப்பதற்கு, தன்னோடு இணைந்து கொள்ளுமாறும், என்னை கேட்டுக் கொண்டார். நான் மறுத்து விட்டேன். அதற்குப் பிறகு, அவர் ரகசியங்களை உடைத்து என்னிடம் பேசினார். ‘அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை யகத்தில் நிர்வாகியாக உள்ள கல்யாணசுந்தரம், என்னிடம், இந்த வேலையை செய்து முடிக்குமாறு ஒப்படைத்துள்ளார்’ என்று கூறியதோடு, (ராஜிவ் காந்தி மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் வர இருப்பதாகவும், ஸ்ரீபெரும்புதூரிலேயே அவர் தங்கப் போவதாகவும் தெரிவித்தார். மே 22 ஆம் தேதி (ராஜிவ் கொலை நடந்த அடுத்த நாள்) சிவராசன் என்னிடம் தொடர்பு கொண்டு தாணுவின் உதவியோடு வேலையை செய்து முடித்துவிட்டதாக தெரிவித்தார். என்னிடம் டெல்லியில் கல்யாணராமனை சந்திக்கச் சொன்னார். அவர், எனக்கு ஜெர்மன் போவதற்கான கடவுட் சீட்டு, விசாவை பெற்றுத் தருவார் என்றார்” - ஆதிரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மனுவை, எவரும் கவனத்தில் கொள்ளவில்லை. ஆதிரை கூறியது உண்மைதானா என்பதைக் கண்டறியும் முயற்சிகளிலும் சி.பி.அய். இறங்கவில்லை. ராஜிவ் சுற்றுப்பயணத் திட்டம் வகுத்தத்திலிருந்து கொலை செய்யப்படும் வரை சதித் திட்டத்தின் பின்னணியாக வெளியே தெரியாத மர்ம நபர்கள் இருந்துள்ளனர்.
கேள்வி: பெங்களூரில் நடந்த கைது நாடகங் களை உங்கள் நூலில் விவரித்துள்ளீர்கள். அவற்றை எல்லாம் ஏன் மக்களிடம் கொண்டு சொல்லவில்லை?
பதில் : நான் இப்போது, அது பற்றி விரிவாகக் கூறுகிறேன். 1991 ஜூலை 29 ஆம் நாள் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவருக்கு, பெங்களூர் காவல்துறை ஒரு தகவலைத் தெரிவித்தது. சிவராசனும் அவரது அணியினர் சுபா உட்பட 7 பேர் பெங்களூர் இந்திரா நகரிலுள்ள வீட்டில பதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் தமிழக காவல்துறைக்கு ஏற்கனவே தெரியும். கோவையில் சாலை விதிகளை மீறியதற்காக விக்கி என்பவரை கைது செய்து விசாரித்தபோது அவரே, பெங்களூரில் சிவராசனும், அவரது தோழர்களும் பதுங்கி இருப் பதைக் கூறிவிட்டார். ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள நான்கு நாட்கள் தாமதப்படுத்தியது. ஜூலை 29 ஆம் தேதியே நடவடிக்கையில் இறங்கியிருப்பார்களேயானால் அதிரடிப்படை உதவியுடன் சிவராசனை உயிருடன் பிடித்திருக்க முடியும். 
மற்றொரு முக்கிய கேள்வி - சிவராசனுக்கு பெங்களூரில் பாதுகாப்பான வீட்டை பெற்றுத் தருவதற்கு முன்வந்தது யார் என்பதாகும்.  சிவராசன், விடுதலைப்புலிகளிடம் அந்த அமைப்பில் இருந்த காலத்தில் பயிற்சிப் பெற்றவர் என்பதால், வேதாரண்யம் போய், அங்கிருந்து கடல்வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்லும் வழிமுறைகள் நன்றாகவே தெரிந்திருக்கும். வழக்கத்துக்கு மாறாக அவர், பெங்களூர் சென்றது ஏன்? யாரோ, சிலர், பெங்களூர் பாதுகாப்பாக இருக்கும் என்று சிவராசனுக்கு உறுதி தந்திருக்கிறார்கள். அந்த வீட்டில், சிவராசன் பிணமாகக் கிடந்த இடத்தின் அருகே 9 எம்.எம். கைத் துப்பாக்கி மற்றும் ஏ.கே. 47 துப்பாக்கி கிடந்தது. அந்த ஆயுதங்களை சிவராசனுக்கு வழங்கியது யார்? இது பற்றி சிறப்புப் புலனாய்வுக் குழு எந்த விசாரணையும் நடத்தவில்லை. இறந்து போனவர் நீதிமன்றத்தில் வந்து பேச முடியாது அல்லவா?
கேள்வி : அப்படியானால், சிறப்புப் புலனாய்வுக் குழுவும், காங்கிரசும், கொலைக்குப் பின்னால் நடந்த சதியை மறைப்பதாகக் கூறுகிறீர்களா?
பதில்: ஆம், அப்படித்தான் நான் நம்புகிறேன். ராஜிவ் குண்டுவெடிப்பில் இறந்ததிலிருந்தே சாட்சி களை முடக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன. இது ஏதோ தற் செயலாக நடந்தவை அல்ல; திட்டமிட்டே நடந் துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில்  காவல்துறை அரிபாபுவின் கேமிராவைக் கைப்பற்றியது. உடனே கேமிராவின் புகைப்படச் சுருளைக் கழுவிப் பார்த்தால், 5 மணி நேரத்துக்குள்ளேயே கொலை யாளிகளைக் கண்டறிந்திருக்க முடியும். அப்படி எதுவும் செய்யவில்லை. ஆனால், நான்கு நாட்கள் கழித்து இந்த புகைப்படம், மே 25 ஆம் தேதி ‘இந்து’ நாளேட்டில் வெளி வருகிறது. எப்படி கிடைத்தது என்பது மர்மம். அதிலும் அந்தப் புகைப்படத்தில் சிவராசன் உருவம் மறைக்கப்பட்டது. மே 29 வரை சிவராசன் படத்தை ‘இந்து’ வெளியிடவில்லை.  இந்த வழக்கில் மிகவும் முதன்மையான சாட்சி, ஆவணம், இந்தப் புகைப்படம் தான். இந்தப் படம், ‘இந்து’ ஏட்டுக்கு எப்படி கிடைத்தது என்பதை, எவருமே ஆராயவில்லை. அதற்குப் பிறகு என்ன நடந்தது? ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ச்சியை மூன்று பேர் தனித் தனியாக வீடியோவில் பதிவு செய்தார்கள். அந்த மூன்று வீடியோ பதிவுகளும் சிதைக்கப்பட்டு, காட்சிகள் நீக்கப்பட்டன. இதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தந்த விளக்கம் என்னவென்றால், எதோ தவறுதலாக காட்சிகள் அழிந்து விட்டன என்பதாகும். புலனாய்வுக் குழுவின் வலிமையே இல்லாத, இந்த விளக்கத்தை என்னால் ஏற்கவியலாது.
கேள்வி : சரி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது ஏன், இதை நூலாக எழுத முன் வந்துள்ளீர்கள்?
பதில்: எனக்கு இப்போது வயது 69. நான் 1970 ஆம் ஆண்டிலிருந்து வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறேன். ராஜிவ் வழக்கை முன் வைத்து ஒரு நூலை எழுத வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. இந்த வழக்கில் பல தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர்களுக்காக நான் வதாட முன் வந்தேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோத காவலில் இருப்பவர்களுக்காக ‘ஆட்கொணரும்’ (ஹேபியஸ் கார்பஸ்) மனுக்களை தாக்கல் செய்தேன். அந்த கட்டத்தில்தான், இந்த வழக்கில் என்னை இணைத்துக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. நான் தாக்கல் செய்த மனுவின் காரணமாக சட்டவிரோத காவலில் இருந்த தி.மு.க.வினர் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர், நளினி தனக்காக வாதாடுமாறு கேட்டுக் கொண்டார்.
நான் வழக்கை எடுத்துக் கெண்டபோதே இது வெற்றிப் பெற முடியாத வழக்கு என்று எனக்குத் தெரியும். காரணம், நீதிமன்றமே குற்றம்சாட்டப் பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்தது. சட்டங்களுக்கு எல்லாம் மேலான சர்வ அதிகாரம் கொண்ட அமைப்பாகக் கருதியே புலனாய்வுத் துறையும் செயல்பட்டது. ஊடகங்களும் மக்கள் மனநிலையும்கூட உண்மை களை பார்க்காமல், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவே இருந்தது. நளினி வழக்கில், நான் நேர் நின்றபோது, நாளொன்றுக் ரூ.50 மட்டுமே எனக்கு தருவதற்கு அரசு முன் வந்தது.நான் வழங்கும் சட்ட உதவிக்கு ஓரளவு நேர்மையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தேன்.
8 ஆண்டுகாலம் இந்த வழக்கிற்காக நான் போராடினேன். அனைத்து ஆவணங்களையும், சாட்சியங்களையும் முழுமையாகப் படித்தேன். 266 அரசு தரப்பு சாட்சியங்களையும் படித்தேன். இவை எளிமையான வேலைகள் அல்ல. இந்த காலத்தில் வேறு வழக்குகளில் நான் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு பிரபல வழக்கறிஞராக இருந்த நான், பெரும் தொகையை ஈட்டிருக்க முடியும். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது, எதிர்நீச்சல் போடவே முடிவு செய்தேன். இந்த வழக்கிற்காக எனது நேரத்தையும், உழைப்பையும் கடமையாக அர்ப் பணித்த நான், இந்த வழக்கு விசாரணையில் நடந்த முறைகேடுகளை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பியே இந்த நூலை எழுத முன் வந்தேன். 19 அப்பாவிகள் 8 ஆண்டுகாலம் பரோல் கூட மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டு, உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள். அதே நேரத்தில், ராஜிவ் கொல்லப் பட்டதில் எனக்கு இன்றளவும் உடன்பாடில்லை. அதை நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
(‘தெகல்கா’ 21.1.2012)

இஸ்ரேலை எதிர்ப்பவர்களுக்கு ஈரான் உதவும் – காம்ன


Iranian supreme leader Ayatollah Ali Khamenei
டெஹ்ரான்:உலகின் புற்றுநோயான இஸ்ரேலை எதிர்க்கும் எந்த நாடுகளுக்கும், போராட்டங்களுக்கும் ஈரானின் உதவி கிடைக்கும் என ஈரானின் ஆன்மீக உயர்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ தெரிவித்துள்ளார்.
1979-ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சியின் நினைவு தினத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

இந்திய அரசின் மின்சாரப் பொய்கள்!!!

கூடங்குளத்தில் அணு உலைகளை அகற்ற வலியுறுத்தி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடி மாவட்ட மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டம் ஏதோ கடந்த சில மாதங்களாக நடந்து வரும் போராட்டம் அல்ல. இந்திய அரசு எப்பொழுது கூடங்குளத்தில் அணுமின் உலைகளை கட்டுவதற்கு முடிவு செய்ததோ, அன்றிலிருந்தே மக்கள் போராட்டம் தொடங்கிவிட்டது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 10 இலட்சம் கையெழுத்துகளை மாணவர்களும், பொதுமக்களும் திரட்டினார்கள். இதை 1989 ஆம் அண்டு இந்தியா வர இருந்த அன்றைய சோவியத் கூட்டமைப்பின் அதிபரான மிக்கைல் கோர்பசேவிடம் கையளிக்க முடிவு செய்து இருந்தனர். ஆனால் அவரை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை. 1989 மே 1ஆம் நாள் மீனவர்களும், பொதுமக்களும் கன்னியாகுமரியில் அணு உலைக்கு எதிராக அமைதியான முறையில் நடத்திய பேரணியில் காவல்துறை கண்முடித்தனமாகச் சுட்டதில் இக்னாதிசு என்பவர் உயிரிழந்தார்.

ப.சிதம்பரத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்வேன்: சுவாமி!!

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மேல்முறையீடு செய்யவுள்ளதாக, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்கக் கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. 

இதுகுறித்து ஏமாற்றம் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, "இந்தத் தீர்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனாலும் இதுபற்றி நான் கவலைப்படவில்லை. 

ப.சிதம்பரத்துக்கு எதிராக இன்னும் அதிகமான ஆதாரங்களுடன் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடுவேன். அத்துடன், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவது பற்றி பரிசீலித்து வருகிறேன். 

முதலில் ப.சிதம்பரத்துக்கு எதிரான ஆதாரங்களைத் தருவேன். பிறகு, சோனியாவுக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிப்பேன். இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை நிச்சயம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பேன்," என்றார் சுப்பிரமணியன் சுவாமி. 

தெரிந்து கொள்வோம் வாங்க!!!


அறியாத சில விசயங்களை 
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-7


உலகில் மொத்தம் 180 வகையான குதிரைகள் இருக்கின்றன. மிகக் குட்டையான வகைக் குதிரையின் பெயர் பாலபெல்லா. இதன் உயர் 75 செ.மீட்டர். மிகப்பெரிய குதிரையின் பெயர் ஷயர். இதன் எடை 910கிலோகிராம். குதிரைக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. இன்பமான நிகழ்வு அல்லது மிகவும் துன்பமான நிகழ்ச்சி நடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அதை நினைவில் வைத்திருக்குமாம் குதிரைகள்
*அண்டார்டிக் பகுதியில் காணப்படும் நீலத் திமிங்கலத்துக்கு ஒரு நாளைக்கு பத்து லட்சம் கலோரி சத்து தேவைப்படுகிறது. மனிதர்களுக்கு தேவை 2,500 கலோரிதான். இதற்காக நீலத் திமிங்கலம், கிரில் எனப்படும் கடற்பாசியை விழுங்கி விடுகிறது. இந்தக் கடற்பாசியில் 56 சதவீதம் புரதச் சத்து இருக்கிறது. 

*உலகெங்கும் ஏப்ரல் முதல் தேதியை எல்லாநாடுகளும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுகின்றன. ஆனால் பிரான்ஸ் நாட்டில் மட்டும் அன்றைய நாள் மீன்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. 

*பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. எனவே அவை நெடுநேரம் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும் வியர்த்துக் கொட்டுவதில்லை. 

*பென்சிலின் என்னும் உயிர் காக்கும் மருந்து பென்சிலியம் என்னும் பூஞ்சையிலிருந்து எடுக்கப்படுகிறது. 

பெனிசிலியம் அழகிய அங்ககப் பொருட்களின் மீது வளரும். 

பாலினம் இல்லாத இனப் பெருக்கத்தின் மூலம் புதிய பெனிசிலியம் உருவாக்கப்படுகிறது. 

பெனிசிலியம் ஆல்கா பிரிவினத்தைச் சார்ந்ததாகும். 

பெனிசிலியம் பாலாடைக் கட்டி தயாரிக்க பயன்படுகிறது. 

பெனிசிலியம் எக்ஸ்பேன்சம் என்னும் பூஞ்சை ஆப்பிள், திராட்சையில் அழுகலை ஏற்படுத்தக் கூடியவை. 


*இந்தியாவில் முதன் முதலில் தபால் தலை 1852-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆரம்ப காலத்தில் இந்தியத் தபால் தலைகள் வட்டவடிவில் இருந்தன. 


முள்ளம் பன்றி காட்டுப்பிராணி. இதன் உடம்பு முழுவதும் விரைப்பாக நிறுத்தும் சக்தியை இதன் தசைகள் பெற்றுள்ளன. இவை பகல் நேரங்களில் புதர்களிலும் மரப் பொந்துகளிலும் ,பாறை இடுக்கு களிலும் மறைந்திருக்கும். இரவு நேரங்களில் வெளிப் பட்டு இரை தேடச் செல்லும். பகை மிருகங்கள் தாக்க வந்தால் உடம்பிலுள்ள முட்களை விரைப்பாக நிமிர்த்தி, பந்து போல் உருண்டையாக்கிக் கொள்ளும். பாம்புக்கடி விஷம் முள்ளம் பன்றியை ஒன்றும் செய்யாது. இது சுண்டெலி, தவளை போன்ற பறவைகளின் முட்டைகளைத் தின்னும். 

காண்டா மிருகம் மிகவும் பெரிய உருவமுடையது. 1.7 மீட்டர் உயரமும், 2 ஆயிரம் கிலோ எடையும் கொண்டது. 50 சென்டி மீட்டர் நீளமுள்ள ஒற்றைக் கொம்பை உடையது. (இரட்டைக் கொம்பு கொண்ட காண்டா மிருகங்களும் உண்டு) இதன் தோற்றம்தான் பயமுறுத்துவதாக இருக்கிறதே தவிர இது சாந்தமான மிருகம். சைவப் பிராணி. தழையையும் புல்லையுமே உணவாகக் கொள்கிறது. இதன் கொம்பு அடர்த்தியான ரோமங்களால் ஆனவை. இந்த கொம்பு எதிரிகளை விரட்டவும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது. காண்டா மிருகத்துக்கு கால்களில் மூன்று விரல்கள் உள்ளன. 


பறவை இனத்தில் மூன்றில் ஒரு பகுதி பாடக் கூடிய பறவைகள். அவைகளில் வானம்பாடி, இரவுப் பறவை ஆகியவை சிறந்த பாடும் பறவைகளாகும். ஐரோப்பாவில் பல வகையான பாடும் பறவைகள் உள்ளன.

பாடும் பறவைகள் பொதுவாக மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே பாடுகின்றன. வழி தவறிச் சென்ற பறவைகளை அழைப்பதற்காகவும் சில பறவைகள் பாடுகின்றன. தன் எல்லைக்குள் மற்ற பறவைகள் வரக் கூடாது என எச்சரிக்கை விடுப்பதற்காகவும் சில பறவைகள் பாடுகின்றன. 


விலங்குகள், பூச்சிகள், ஒரு வித வாசனையை வெளிப்படுத்தி அதன் மூலம் செய்திகளைத் தெரிவிக் கின்றன. இந்த வாசனைப் பொருளை `பெரமோன்'கள் என்றழைக்கிறார்கள். 

மான்கள் இனத்தில் ஒன்றான சிவப்பு மான், தன் கண்களுக்கு அருகே சுரக்கும் ஒரு வித நீரை புதர்கள் மீதும், மரங்களின் மீதும் வீசித் தெளித்து அதன் மூலம் அவற்றின் எல்லையை வரையறுத்துக் கொள்கின்றன. 


குழந்தைகள் இனிப்பை விரும்பிச் சாப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. பொதுவாக உடல் நலமாக உள்ள குழந்தைகள் எப்போதும் துருதுருவென்று இருக்கும். தூங்கும் நேரம் தவிர, எஞ்சிய வேளைகளில் ஓடியாடி விளையாடிக் கொண்டும் வேறு ஏதாவது செய்து கொண்டும் இருக்கும்.இவ்வாறு சுறுசுறுப்பாக இயங்கும்போது மிகுந்த ஆற்றல் செலவாகிறது. இதனை ஈடு செய்ய எளிதாக ஆற்றலையளிக்கும் சர்க்கரைப் பொருட்கள் தேவைப்படுகிறது. சுவை மிகுந்த இனிப்புப் பண்டங்களில் கார்போஹைடிரேட் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் இவற்றை பெரிதும் விரும்புகின்றன. 


பாபா வெஸ்ட்ரே ஐலண்ட் என்கிற அமெரிக்கப் பயணிகள் விமானம் வெஸ்ட்ரே ஐலண்டுக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையிலுள்ள ஒன்றரை மைலுக்காக பறக்கிறது. பயண நேரம் இரண்டே நிமிடங்கள்தான். 


ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வகைச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் டாலிம் என்ற பொருள் சர்க்கரையை விட 5 ஆயிரம் மடங்கு இனிப்பானது. 
 
தெருவிளக்கைக் கண்டு பிடித்தவர், முதன் முதலில் அரசியல் கார்ட்டூன் வரைந்தவர், வாடகை நூலகத்தை ஆரம்பித்தவர், ஆடும் நாற்காலி, ஸ்டவ், இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர், செய்தித்தாளை தபாலில் அனுப்பும் முறை, தெருவை சுத்தம் செய்யும் பிரிவை துவக்கியவர், நவீன தாபல்நிலையத்திட்டத்தை உருவாக்கியவர்- இப்படி பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர், பெஞ்சமின் பிராங்க்ளின்.  

இத்தாலியிலுள்ள ரெல்ரேன்கோ என்னும் சிறு நகரத்தில் ஒரு நாய் ஆறு குட்டிகளைப் போட்டது. அவற்றில் 5 கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்தன. ஒன்று மட்டும் பச்சை நிறத்தில் இருந்தது. இதுதான் உலகின் முதல் பச்சை நிற நாய்க்குட்டி. 25 நாட்களுக்குப்பின்னர் நாய்க் குட்டியின் நிறம் தனி பச்சை நிறமாகவே மாறிவிட்டது.  

இந்தியாவில் புகை பிடிக்கும் பழக்கத்தை போர்ச்சுகீசியர்கள்தான் அமெரிக்காவிலிருந்து 17-ம் நூற்றாண்டு வாக்கில் கொண்டு வந்தனர். 

அது மட்டுமல்ல, போர்ச்சுகீசியர்கள் பொடி போடும் பழக்கத்தையும் தங்களுடன் கொண்டு வந்தனர். புகையிலைச் செடியும் அமெரிக்காவிலிருந்துதான் இந்தியாவிற்கு வந்தது. 

சிகரெட் பிடிப்பவர்களுக்கு சுவாசப்பை புற்று நோயும், பைப் பிடிப்பவர்களுக்கு உதட்டுப் புற்று நோயும், சுருட்டு பயன்படுத்துபவர்களுக்கு நாக்கில் புற்றுநோயும் ஏற்படும். 
*தொடரும்...

Thanks.
Engr Sulthan...

கன்னியாஸ்திரி அபயா கொலைவழக்கும் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலமும்!

கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி அபயா கொலை சம்பவம்பற்றி பலர் அறிந்திருக்ககூடும். கோட்டயம் நகரில் 19வயது கன்னியாஸ்திரி அபயா, 27 மார்ச் 1992 அன்று தான் தங்கியிருந்த கான்வென்ட் ஹாஸ்டலின் கிணற்றில் பிணமாகக் கிடந்தார். முதலில் விசாரித்த உள்ளூர் காவல்துறை, இதை தற்கொலை என்று சொல்லி 1993 ஜனவரியில் வழக்கை மூடிவிட்டது. ஆனால் அபயாவுடன் படித்துவந்த கன்னியாஸ்திரிகளின் தொடர் போராட்டத்தினால் இந்த வழக்கு சி.பி.ஐ வசம் சென்றது.

abhayaமார்ச் 1993இல் தாமஸ் வர்கீஸ் (Varghese P. Thomas, DSP, CBI ) என்ற சி.பி.ஐ அதிகாரி விசாரணையை துவக்குகிறார். வர்கீஸ் தன்னுடைய விசாரணையில் இது தற்கொலை அல்ல கொலை என்று கண்டுபிடிக்கிறார். ஆனால் அவருடைய மேலதிகாரியோ அவரது விசாரணையில் குறுக்கிட்டு இதை தற்கொலை என்று பதிவு செய்யுமாறு உத்தரவிடுகிறார். இதனை ஏற்க மனமின்றி வர்கீஸ் 30 டிசம்பர் 1993’இல் தன்னுடையை வேலையை இராஜினாமா செய்கிறார். அப்போது அவருடைய பணி ஓய்விற்கு 7 ஆண்டுகள் இருந்தன. 19 ஜனவரி 1994இல் வர்கீஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்து, அபயாவின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்றும், அந்த உண்மையை வழக்கில் பதிவு செய்ய தனது மேலதிகாரி அனுமதிக்கவில்லை என்பதனால்தான் இராஜினாமா செய்ததாக அறிவிக்கிறார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகுதான், இந்த வழக்கு அகில இந்தியாவின் கவனத்தையும் பெற்றது. இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கபட்டது. கேரள சட்டமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டது. வர்கீஸை நேர்மையாக செயல்படவிடாமல் தடுத்த, குற்றவாளிகளை காப்பாற்ற முனைந்த அந்த மேலதிகாரியின் பெயர் தியாகராஜன் (V. Thyagarajan, Superintendent of CBI Cochin Unit).
 
தியாகராஜனை சி.பி.ஐயின் கொச்சின் பிரிவிலிருந்தும், அபயா கொலை வழக்கு விசாரணையிலிருந்தும் விலக்குமாறும் அபயா கொலைவழக்கினை தொடுத்த பொதுமக்கள் இயக்கம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதனை தொடர்ந்து 3 ஜூன் 1994இல், கேரளாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, தியாகராஜனை அபயா கொலைவழக்கிலிருந்து விழக்குமாறு சி.பி.ஐ இயக்குனரிடம் மனு கொடுத்தனர். இதன் விளைவாக தியாகராஜன் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கினை விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ துணை இயக்குனர் ஒருவரிடம் வழங்கப்பட்டது.
(DSP’s controversial resignation Surprisingly, on 30 December 1993, Varghese P. Thomas resigned from the service of CBI and from the investigation of Abhaya's death. He had seven more years in service to retire. Varghese P.Thomas was a brilliant and honest police officer and for his meritorious services he was awarded the prestigious President's National Medal. He had finally arrived at the conclusion that Abhaya's death was a clear case of murder and he had recorded it as such in the CBI Diary. Subsequently on 19 January 1994, he called a special press conference in Cochin and announced that he had resigned from CBI as his conscience did not permit him to comply with a strong directive given by his superior officer, V. Thyagarajan, the then Superintendent of CBI Cochin Unit, who had asked Varghese P. Thomas to record the death of Abhaya as suicide in the CBI Diary. With this press conference, the case of Sr. Abhaya caught media attention all over India and the matter was strongly debated in the parliament as well as in the Kerala state assembly on several occasions.

Moving to High CourtThe Action Council filed another Writ petition in the Kerala High Court asking the court to remove V. Thyagarajan from Cochin Unit of the CBI as well as from the investigation. Further on 3 June 1994 all the MP's from Kerala State jointly submitted a passionate petition to K. Vijaya Rama Rao, the Director of the CBI requesting him to disallow Thyagarajan to continue in the Abhaya's murder case. As a result M.L. Sharma, the Joint Director of the CBI, was given charge of the investigation into Abhaya's death.

The role of V. Thyagarajan in the distortion of Abhaya's case was apparent in the High Court when Varghese P. Thomas produced an original copy of a report sent by V. Thyagarajan to the Joint Director of the CBI suggesting that further investigation into the death of Sr. Abhaya should be dropped, despite the death being recorded in the CBI Diary as MURDER by Varghese P.Thomas after due consideration of the material facts of the case. As a result, Thyagarajan was transferred to Chennai Unit of CBI.

Reference :  http://www.insidekerala.com/n/index.php?mod=article&cat=specials&article=28454&page_order=1&act=print )

பல ஆண்டுகளுக்கு பிறகு 2008இல், இரண்டு பாதிரியார்களும் ஒரு கன்னியாஸ்திரியும் கைதுசெய்யப்பட்டு, வழக்கு விசாரணை இன்னும் கேரள நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
2008இல் CNN IBN தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த தாமஸ் வர்கீஸ், தன்னுடைய மேலதிகாரி தியாகராஜன் இந்த வழக்கினை தற்கொலை என்று முடிக்க நிர்பந்தித்ததை மீண்டும் பதிவு செய்கிறார். அதற்கான அழுத்தம் அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் அலுவலகத்தில் இருந்து வந்ததாகவும் குறிப்பிடுகிறார்.  

2
இராஜிவ் கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு இன்று தூக்கு கொட்டடியில் நிற்கிறார் அண்ணன் பேரறிவாளன். வெடிகுண்டை செயல்படுத்த இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழி.  பேரறிவாளன் காவல்துறை விசாரணையின்போது கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்தான் இதற்கு அரசுதரப்பு சாட்சி. கொடுமையான ஆள்தூக்கி சட்டமான தடா சட்டத்தின் கீழ் கைதுசெய்து நடந்த விசாரணை என்பதை நினைவில் கொள்க. பொதுவாக நீதிமன்ற விசாரணையின்போது கொடுக்கப்படும் வாக்குமூலமே ஏற்றுக்கொள்ளப்படும், காவல்துறை விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலம் செல்லாது. ஆனால் தடா சட்டத்தில் காவல்துறை விசாரணையில் கறக்கப்படும் வாக்குமூலமே போதுமான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த வழக்கில் வினோதம் என்னவென்றால், தடா சட்டம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்று அறிவித்த உச்சநீதிமன்றம், காவல்துறை விசாரணையில் கொடுக்கப்பட்ட வாக்குமூலமே போதுமான ஆதாரம் என்ற தடா சட்டத்தின் ஒரு விதியை மட்டும் ஏற்றுக்கொண்டது. அதுவே இன்று பேரறிவாளன் கழுத்தில் தூக்குக்கயிறாக நிற்கிறது.

தடா சட்டத்தின்படி, காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of police) அந்தஸ்த்தில் இருப்பவர் ஒருவர் முன்னிலையில் கொடுக்கப்படும் வாக்குமூலம் மட்டுமே போதுமான சாட்சியாக கோர்ட் ஏற்றுக்கொள்ளும். அந்தவகையில் பேரறிவாளனிடம் வாக்குமூலத்தைப் பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் வேறுயாருமல்ல, அபயாவைக் கொன்றவர்களை காப்பாற்ற துடித்த தியாகராஜனே தான். பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமல்ல, இந்த வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மொத்தம் 17 பேரின் வாக்குமூலத்தையும் "கறந்தவர்" இவரே. இராஜிவ் கொலைவழக்கில் முக்கியமான் அரசுதரப்பு சாட்சி எண்.52: தியாகராஜன், காவல்துறை கண்காணிப்பாளர், சி.பி.ஐ. 

காவல்துறை விசாரணை என்பது என்ன, அதில் பெறப்படும் வாக்குமூலம் என்பது எத்தகையது எனபதை நாம் அறிவோம். அறியாதவர்கள் பேரறிவாளன் எப்படி விசாரிக்கப்பட்டார் என்பதை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
"எனது கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் (DECE) என்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். நீதான் வெடிகுண்டு செய்தவனா? நான் மிரண்டு விட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன். அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் என்னை சரியான முறையில் கவனித்தால் ஒப்புக்கொள்வேன் என்று கூறி இரண்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

கீழ்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது ஆய்வாளர்கள் சுந்தரராசன் மற்றும் இருவர் (பெயர் நினைவில்லை) எனது வெற்றுடம்பில் உள்ளங்கையினால் அடித்தனர். ஒருவர் ஷீ காலால் எனது கால் விரல்களை மிதித்தார். திடீரென ஆய்வாளர் சுந்தரராசன் தனது முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டு துன்புறுத்தினர்.

அடுத்த நாள் காலை, மல்லிகை அலுவலத்தின் சித்ரவதைக் கூடம் என அழைக்கப்படும் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர்கள் ரமேஷ், மாதவன், செல்லத்துரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டேன். இவர்கள்தான் அப்போது மல்லிகையில் துன்புறுத்தலில் பெயர் பெற்றிருந்தனர். அங்கு சென்றவுடன் எனக்குக் குடிக்க நீர் மறுக்கப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது, சிறுநீர் கழிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்). அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர்கள் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு, என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூறவேண்டும். அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

perarivalan_360காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகை சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவற்றுடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிடமுடியாததாக இருந்தது.

ஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷீ கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இதுபோன்ற நுணுக்கமான கொடுமைகளைச் செய்வார்.

சிபிஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒருநாள் ஓர் ஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் திடீரென எனது இடதுபக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், ஏன்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்? என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான் என்றார். உடனே என்னைத் திரும்பவும் உள்ளே அனுப்பி விட்டனர்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், நான் யார் என்ற விவரம்கூடத் தெரியாமல், என்ன குற்றமிழைத்தார் என்றும் அறியாமல் யாரையாவது அப்பாவிகளைத் துன்புறுத்தி குற்றவாளிகளாக்கி பெயரெடுக்கும் மனப்பான்மையோடு காவல் துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு.

மல்லிகையின் கீழ்தளத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் அலுவலகம் இருந்தது. அவர் திடீரென இரவு 2 அல்லது 3 மணிக்குத்தான் அழைப்பார். எதையாவது கேட்பார். நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால் அடிப்பார். இதுபோல உடல்ரீதியான, மன ரீதியான இன்னல்களைக் கொடுத்தனர்.

ஒரு மனிதனை எந்தளவிற்குக் கேவலமான முறையில் நடத்த முடியுமோ, பேச முடியுமோ அவ்வாறு நடத்தினர், பேசினர். விசாரணைக்கென்று சட்டப்புறம்பாக அழைத்துச் சென்று நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய 19ஆம் தேதி வரை என்னைக் குளிக்கவும் பல் தேய்க்கவும் கூட அனுமதிக்கவில்லை. 19ஆம் தேதி ஆய்வாளர் ரமேஷ் என்னருகில் வரும்போது என்னிடமிருந்து வீசிய கெட்ட வாடையை பொறுக்க முடியாமலே குளிக்க அனுமதித்தார். மேலும் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததாலும் அனுமதி வழங்கப்பட்டது.

குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று கூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள். அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக் காவல் நாட்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.

இவ்வழக்கில் எவ்வாறு பல நிரபராதிகள் குற்றம் சாட்டப்பட்டனர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் கூற முடியும். எனது சட்டவிரோத காவலின்போது ஒருநாள் துணை தலைமை ஆய்வாளர் சிரிகுமார் என்பவர் என்னிடம் வந்து, டேய், உன் ஊருக்கு பக்கத்தில் உள்ள கோலார் தங்கவயல் தான் எனது ஊரும். நான் கூறும் மூன்று பொருட்களில் ஒன்றை இருக்கும் இடம் கூறு. உன்னை விடுதலை செய்துவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் எதை சார் கேட்கிறீர்கள் என்றேன். அவர் கூறினார், ஒன்று ஏ.கே.47 துப்பாக்கி அல்லது ஒயர்லெஸ் கருவி அல்லது தங்கக் கட்டிகள் புதைத்து வைத்துள்ள இடம், இவற்றில் ஒன்றை கொடுத்துவிட்டால் விட்டுவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் இருந்தால்தானே கொடுப்பேன். இல்லாமல் எவ்வாறு கொடுப்பது என்று கேட்டேன். அப்படியானால் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

இந்தத் துணைத் தலைமை ஆய்வாளர்தான் கோடியக்கரை சண்முகம் கொலையான சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்டவர் என்பதையும், இலண்டனில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை திருட விட்டுவிட்டேன் என்று கூறியவர் என்பதையும் இங்கு தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இரவு, பகல் 24 மணி நேரமும், காலைக் கடன்களை முடிக்கும்போதும் கூட கைகளில் விலங்குகளோடுதான் வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போது மட்டும் ஒரு கையை தளர்த்தி விடுவர். படுக்கும்போதுகூட விலங்கு பூட்டியே இருக்கும். இவ்வாறான கொடுமைகள் புரிந்தனர். மேலும் பல அதிகாரிகள் பல மாறுபட்ட பாணியில் துன்புறுத்தினர். அனைவரின் துன்புறுத்தலும் கடுமையானதாக, இரக்கமற்றதாக இருந்தது." 

                                         *************************** 
உண்மைக் குற்றவாளிகளை தப்ப விடும் தியாகராஜன் போன்ற நேர்மையற்ற அதிகாரிகள், காவலர்களின் துன்புறுத்தல்களினால் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் மடியப்போவது மூன்று உயிர்கள் மட்டுமல்ல; மனித உரிமையும் நீதியும்தான். இந்த நிரபராதிகளைக் காப்பாற்ற நாம் என்ன செய்யப்போகிறோம்?
References :
1. Ex-CBI man alleges Cong hushed up nun murder
http://ibnlive.in.com/news/excbi-man-alleges-cong-hushed-up-nun-murder/70344-3.html

2. Frontline - 20-dec-2008 - Twists & turns : The Abhaya case gets a fresh lease of life 16 years after the young nun’s death with the arrest of two priests and a nun.
http://www.hindu.com/fline/fl2526/stories/20090102252604100.htm

3. Wikipedia - Sister Abhaya murder case
http://en.wikipedia.org/wiki/Sister_Abhaya_murder_case

4. உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி : பேரறிவாளன்
http://perarivalan.blogspot.com/2007/01/blog-post.html

5.Judgement by Supreme Court (Justice Quadri)
http://cbi.nic.in/dop/judgements/quadari.pdf

6. Judgement by Supreme Court (Justice D P Wadhwa)
http://cbi.nic.in/dop/judgements/wadwa.pdf

7. Judgement by Supreme Court (Justice K T Thomas)
http://cbi.nic.in/dop/judgement/thomas.pdf