அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, April 25, 2009

ஒரு கன்னியாஸ்திரியின்கைத!


எதன்மீதும் புனிதம் கற்பிக்கப்பட்டால்தான் அதனை முன்னிறுத்தி மக்களை மதவாதிகளாக ஆக்கமுடியும். இதனை உணர்ந்திருந்த மதங்கள், மடங்களையும் திருச்சபைகளையும் உருவாக்கின. அதன் தலைவர்கள் புனிதர்களாகி வழிபாட்டுக்-குரியவர்கள் ஆனார்கள். இவர்கள் இயற்கைக்கு மாறாக இல்லறம் தவிர்த்து மனித சமுதாயத்தில் தம்மை உயர்ந்தவர்களாக, தனித்தவர்களாக அடையாளப்-படுத்திக் கொண்டனர். ஆனாலும், இவர்களது வாழ்வியலோ மிக உயரிய வசதிகள் உடையதாக இருக்கும். எல்லாவிதமான சத்து நிறைந்த உணவுகளையும் புசிப்பார்கள். தமக்கென தனிச் சீருடையை அணிந்து கொண்டு காட்சி தருவார்கள். அப்போதுதான் மக்களின் கவனம் இவர்கள்மீது படியும் அல்லவா? இந்தியாவில் முன்காலத்தில் உருவான பல சமுதாயங்களின் கூட்டுக்கலவையான இந்து மதத்தில் மடங்களும், சாமியார்களும் உண்டு. அதுபோலவே கிறித்துவ மதத்திலும் உலகளாவிய அளவில் திருச்சபைகளும் உள்ளன. அதன் நீட்சியாக இந்தியாவிலும் திருச்சபைகள் அமைக்கப்பட்டு தேவாலயம் அதனையொட்டிய பள்ளிகளிலும், மருத்துவமனை ஆகியவற்றை நிருவகிக்க பாதிரியார்-கள் பொறுப்பேற்றிருப்பார்கள்.



கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள் மணவாழ்வில் ஈடுபடக்கூடாது என்பதும் இல்லறம் துறந்து இறைப்-பணிஆற்றவேண்டும் என்பது மதக்-கட்டளை. அதேபோல வேத ஊழியம் செய்யவரும் பெண்-களும் கன்னியாஸ்திரீகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கும் மேற்சொன்ன புலனடக்கவிதிகள் பொருந்தும். ஆனால், இவ்வாறு இயற்கை உணர்வு-களுக்கு எதிராக மனிதர்-களால் இருக்க முடியுமா என்பதை பாதிரியார்களாக இருந்து பகுத்தறிவாளர்-களாக மாறியவர்களில் தொடங்கி, உலகியல் கற்ற, உடலியல் கற்ற அனைவரும் கேள்வி எழுப்புவதுண்டு.



மனித உடலில் ஏற்படும் வேதி-மாற்றங்-களால் உடல் இச்சை என்பது தவிர்க்க முடியாதது; மாற்றுப் பாலினத்தின் மீதான ஈர்ப்பு என்பது இயற்கையானது. அதனைத் தவிர்ப்பது இயலாதது. ஆனால், இதனைக் கடந்து மனதை ஆண்டவனுக்கு அர்ப்பணித்து இறைப்பணி செய்வோர் இவர்கள் என்றே மதபீடங்கள் மார்தட்டுகின்றன. என்றாலும் அவ்வப்போது மதப்பீடங்களில் திருச்சபை-களில் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து மதக்கட்டுகளை அறுத்தெறிந்து வருகின்றன.



இப்படித்தான் அண்மையில், கேரளாவில் ஒரு கன்னியாஸ்திரீ ஆமென் - ஒரு கன்னியாஸ்-திரியின் ஆத்ம கதை என்ற நூல் பல உண்மைகளை உரைத்துவிட்டது. ஒரே மாதத்தில் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்த நூலை எழுதியவர் கன்னியாஸ்திரீ ஜெஸ்மி (வயது 53).
இவரது இயற்பெயர் மியாமி ரபேல். தனது 25ஆம் வயதில் காங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்னல் (CMC) என்னும் திருச்சபையில் இணைத்துக் கொண்ட ஜெஸ்மி, இங்கிலீஷ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரியில் விரிவுரையாளர், முதல்வர் எனப் பணியாற்றிய இவர் தமது 30 ஆண்டுகால கன்னியாஸ்திரீ வாழ்வில் தமக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து இந்நூலில் எழுதியுள்ளார்.



புனித மடங்கள் எனச் சொல்லப்படும் மதச்சபைக்குள் நிகழ்ந்து வரும் பாலியல் எல்லை மீறல்களை விவரித்துள்ளார் கன்னியாஸ்திரீ ஜெஸ்மி. கன்னியாஸ்திரீ-களிடையே ஓரினச் சேர்க்கை தடைகளின்றி இருக்கிறது. கன்னியாஸ்திரீகள் பாதிரியார்-களுடனும் வெளியாட்களுடனும் பாலியல் உறவு வைத்திருப்பது தொடர்புடைய பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன என்று கூறும் ஜெஸ்மி, பாதிரியார்கள் தன்மீது நிகழ்த்திய பாலியல் வன்புணர்ச்சியையும் கூறுகிறார்.



நான் பெங்களூருக்குச் சென்றபோது வரவேற்க வந்த பாதிரியார் என்னை இறுக அணைத்து அதிர்ச்சி கொடுத்தார். அங்கு லால் பூங்காவுக்கு அழைத்துச் சென்று மரங்-களின் அடியில் அந்தரங்கமான நிலையில் அமர்ந்திருந்த ஜோடிகளைக் காண்பித்தார். பின்னர் உடல் ரீதியான காதலின் தேவை குறித்தும், பெண்களுடன் முறைகேடான உறவு வைத்-திருந்த பாதிரியார்கள் மற்றும் பிஷப்பு-களின் கதைகளையும் சொன்னார். பிறகு தனது படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று அவரது கட்டிலில் அமரவைத்து என்னை இறுக அணைத்தார். ஓர் ஆணை முழுமையாய் பார்த்திருக்கிறாயா எனக்கேட்டு விட்டு ஆடைகளைத் துறந்தார் இதைத் தொடர்ந்து ஜெஸ்மி எழுதியுள்ள சில வரிகளை நாம் இங்கு எழுதமுடியாது.



கன்னியாஸ்திரீகளின் மடத்தில் பல கன்னியாஸ்திரீகள் ஜோடியாகவே இருப்பார்-கள்; வேறு சிலரிடையே பாலியல் நடவடிக்-கைகள் இருந்தது என்று எழுதியுள்ள ஜெஸ்மி, சிஸ்டர் லிமி என் மீது ஈர்ப்பு கொள்ளத் தொடங்கினார். எனக்கு காதல் கடிதங்கள் எழுதினார். அதற்கு நான் பதில் எழுதவில்லை. சிஸ்டர் லிமி எனக்கு எதிராகத் திரும்பவே அவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் வேறு வழியில்லாமல் அவரின் பாலியல் இச்சை-களுக்கு நான் சிலகாலம் பலியாக நேர்ந்தது என்று எழுதியுள்ளார்.



புனிதமானவர்கள் என்றும் இறைப்-பணியாளர்கள் எனவும் கூறப்படும் கிறித்துவ திருச்சபையின் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்-திரீகள் மீதான ஜெஸ்மியின் இந்தக் குற்றச்-சாட்டுகளைக் கண்டு கேரள கிறித்துவ அமைப்பு-கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. ஜெஸ்மியின் குற்றச்சாட்டுகளுக்கு சி.எம்.சி. அதிகாரபூர்வமான எந்தப் பதிலையும் இதுவரை கூறாமல் மவுனம் காக்கிறது. ஆனால் அதன் செய்தித் தொடர்பாளர் பாதிரியார் பால் தேலக்காட், ஜெஸ்மி எழுப்பியுள்ள பிரச்சினைகளை புறக்கணித்து-விட முடியாது. சர்ச்சும், சி.எம்.சியும் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளிடையேயான பாலியல் உறவுகள் உண்மையாக இருக்கலாம்; திருச்சபைகளில் ஆங்காங்கே இருக்கலாம் என்று கூறியுள்ளார்.



ஆணும் - பெண்ணும் இணைந்து வாழ்தல் என்பது உலகியல் இயல்பு. இதற்கு எதிராக புனிதத் தன்மையை கற்பித்து மதங்கள் செயல்படும்போது அதன்மீதான இயற்கையின் தாக்குதலே இதுபோன்ற குற்றச்சாட்டுகளாக எழுகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை வேண்டும் என்று 400 பாதிரியார்கள் போப் ஆண்டவருக்கு விண்ணப்பம் போட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.
அவர்கள் வலியுறுத்தும் கொள்கைக்கும் அவர்-களது நடத்தைக்கும் இடையே மிகப்-பெரிய இடைவெளி நிலவுகிறது. எனக்குத் தெரிந்த பெரும்பாலான கன்னியாஸ்திரீகளும் பாதிரியார்களும் கள்ள உறவு வைத்திருந்-தார்கள் அல்லது மோசமான ஊழலில் ஈடுபட்டிருந்தனர் - இப்படிக் கூறுவது நாம் அல்ல; - கன்னியாஸ்திரி ஜெஸ்மி. நாம் என்ன சொல்வது? ஆமென் என்று சொல்லலாம்; ஆமென் என்பதற்கு எனவே அது இருக்கிறது என்று பொருளாம்.
- மணிமகன்(படம் : இந்தியா டுடே]


நன்றி;உண்மை இதழ்.




நமது கருத்து; உலகைப்படைத்தது முதல் உங்களையும் என்னையும் படைத்ததுவரை அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்த அல்லாஹ், தன் தூதர் மூலம் அற்புதமான வழியை காட்டி துறவறத்தின் வாசலை அடைத்து விட்டான். இதோ நபிகளாரின் பொன்மொழி;


அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.


நூல்;புஹாரி,எண் 5063

கள்ளும், முள்ளும் (ஒட்டகத்தின் ) காலுக்கு மெத்தை.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاء الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். திருக்குர்ஆன்: 59:24.


ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !

இதற்கு முன் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதற்காக ஒட்டகத்தினுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் அதனுடைய உண்மையான அளவை விட விரிந்து இடமளித்து அதிக நீரை தேக்கிக் கொள்வதற்காக மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதை விட ஒட்டகத்திற்கு இரத்தத்தின் சிகப்பணுக்களை பெரிய அளவில் இறைவன் வடிவமைத்தான்.

அதேப்போன்று அதனுடைய தாகத்திற்காகவும், பசிக்காகவும் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்வதற்காக அதனுடைய முதுகில் மிகப்பெரிய அளவிலான திமிலை இறைவன் வடிவமைதான்.

இன்னும் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் வித்தியாசமான முறையில் ஒட்டகத்தின் உட்புற, வெளிப்புற அமைப்புகளை வடிவமைத்து ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்றுக் கூறி அதை ஆய்வு செய்யும்படி இறைவன் கூறுகிறான்.

பாலைவன மக்களுடைய வெளிஉலகப் பயணத்திற்காக பிரத்தியேகமாக உயிரிணத்தில் வடிவமைக்கப்பட்ட 680 kg வரை எடையுள்ள ஓட்டக(வாகன)ம், 450 kg வரை உள்ள சுமையை சுமந்து கொண்டு சீரமைக்காத சாலைகளில் பயணிக்கும் போது சிறு சிறு கற்கள் அதனுடைய கால்களில் குத்தி வலித் தாங்க இயலாமல் விழுந்து விட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ?

அதேப்போன்று அதனுடைய காலும் சதைப்பகுதி என்பதால் ஒரு குறிப்பிட்ட தூரமே நடக்க இயலும் அதன் பிறகு காலின் சதைப்பகுதித் தேய்ந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டால் அதில் பயணிப்பவருடைய நிலை என்னாவது ?

இதனால் தான் பாரம் சுமக்கும் நமது ஊர் மாடுகளின் கால்களின் குளம்புகளில் லாடம் அடித்து விடுவார்கள். அதற்கென்று நமது ஊர் நெடுஞ்சாலைகளில் ஆலமர, அரச மரத்தடியில் லாடம் அடிப்பவர்கள் அமர்ந்திருப்பார்கள் லாடம் தேய்ந்து மாடுப் படுத்துவிட்டால் மீண்டும் லாடம் அடித்தப்பின்னரே சுமைகளை சுமந்து செல்லும்.

ஆனால் அன்றைய பாலை வெளிப் பிரதேசத்தின் நெடுந்தூரப்பயண வழிகளின் நிலை அவ்வாறில்லை. கரடு முரடான பாதைகள், ஒதுங்குவதற்கு அறவே நிழலில்லாத வனாந்திரம் ( எங்காவது பலநூறு மைல்களுக்கப்பால் மட்டுமே கிராமங்கள் தென்படலாம் ) ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு செல்லும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒட்டகத்தின் முதுகில் அமர்நதிருப்பார்கள் ஒட்டகம் வழியில் எங்காவது மக்கார் பண்ணி விட்டால் அவர்களுடைய நிலை அந்தோப் பரிதாபமே !

இதனால் தான் ஒவ்வொருவரும் தனது இல்லத்தை விட்டு வெளி ஊர் கிளம்புவதற்கு முன் இறைவனிடம் பாதுகாப்புக் கோரும் விதமாக இரண்டு அமர்வுகள் பயணத் தொழுகை தொழுது விட்டு வாகனத்தில் அமர்ந்து கொண்டு மீண்டும் பயண துஆவை ஓதிக் கொண்டு செல்வார்கள்,

அதேப்போன்று பயணத்திலிருந்து திரும்பியதும் இறைவனுக்கு நன்றிக் கூறி துஆ ஓதி இரண்டு அமர்வுகள் தொழவும் செய்வார்கள்.

இதை எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதனுடைய தட்ப வெட்ப நிலைக்கொப்பவே ஒட்டகத்தை வடிவமைத்தான்.

ஒட்டகம் பயணிக்கும் வழிகள் சீரமைக்காத சாலைகள் என்பதால் ஒட்டகம் இலகுவாக ஓடுவதற்கு அதனுடைய கால்களில் மூன்று மடக்குகளை வைத்துப் படைத்தான்.

குட்டிப் போட்டு பால் கொடுக்கும் (மனிதன் உட்பட) பிராணிகள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (Ankle Joint) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால்தான் ஒட்டகத்தால் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்ல முடிகின்றது.

மனிதன் கண்டுப்பிடித்த மோட்டார் வாகனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கியர்கள் இருக்கும் ஒன்றிலிருந்து அடுத்த கியர் மாற்றும் பொழுது வாகனத்தின் வேகம் அதிகரிக்கும் அதேப் போன்று வேகத்தைக் குறைப்பதற்கும் டாப் கியரிலிருந்து அடுத்த கீழ் கியருக்கு மாற்றுகிறோம்.

பாரங்களை சுமந்து கொண்டு ஓட்டகம் மேடானப் பகுதிகளில் இலகுவாக ஏறுவதற்கும், அதிலிருந்து பள்ளாமானப் பகுதிக்கு மெதுவாக இறங்குவதற்கும் அதனுடைய கால்களில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மடக்குகளே உதவுகின்றன. சுப்ஹானல்லாஹ் அவனே சிறந்த படைப்பாளன். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலிரியாவான். 23:14

அதேப்போன்று கற்கள் நிறைந்தப் பகுதிகளில் சிறு சிறு கற்கள் காலில் குத்தி கிழே விழுந்து விடாமல் இருப்பதற்காக மற்ற மிருகங்களுக்கு இருப்பதைப் போல் வெடித்த இருக் குளம்புகளாக அல்லாமல் அவற்றை இணைத்து ஒரேக் குளம்பாக மாற்றி அதனுடைய உயரத்தையும் அதிகப்படுத்தினான்.

மற்ற மிருகங்கள் வெடித்த இருக் குழம்புகளைக் கொண்டு நடக்கும், ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த ஒரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது. (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் Snow Shoes ஆகும்).

மிருகங்களின் கால் குளம்புகளைப் பார்த்தே வாக்கிங், ரன்னிங் சூ உருவாக்கப்பட்டிருக்குமோ ?

மேல்படி ரன்னிங் சூ வில் மட்டும் மற்ற சூ வில் இல்லாத அளவுக்கு அதனுடைய அடிப் பாகத்தில் அரை அல்லது ஒரு இஞ்ச் அளவுக்கு தடித்த ரப்பரால் உயரம் அமைக்கப் பட்டிருக்கும் காரணம் அதனுடைய தடித்த ரப்பர் போன்ற அடிப் பாகங்கள் அதை அணிந்து ஓடுபவர்களுடைய கால்களை எவ்விக் கொடுக்கும் அதனால் அதிக களைப்பில்லாமல் ஓடுவதற்கு, வாக்கிங் செய்வதற்கு இலகுவாக இருக்கும்.

இன்று மனிதன் கண்டுப்பிடிக்கும் அதி நவீன கண்டுப் பிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது பெரும்பாலும் இறைவனின் படைப்புகளேயாகும்.

உதாரணத்திற்கு விண்ணில் பறக்கும் பறவைகளின் இடைவெளி இல்லாத இறக்கைகளின் அசைவுகளே உயரேப் பறப்பதற்கு காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்த ரைட் சகோதரர்களுக்கு விமானம் உருவாக்குவதற்கு தூண்டுதலாக இருந்தது.

கள்ளும், முள்ளும் காலுக்கு மெத்தை என்றுப் பாடியதைக் கேட்டிருக்கிறோம் அது யாருக்குப் பொறுந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக ஒட்டகத்திறகுப் பொருந்தும்.

அந்தளவுக்கு 680 kg வரை எடையுள்ள ஒட்டகம், 450 kg வரை சுமையை சுமந்துக் கொண்டு கற்கள் நிறைந்த பகுதிகளில் ஓடும் பொழுது கற்கள் அதனுடைய கால்களில் குத்துவதால் எந்த பாதிப்பும் தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பதற்கு அதனுடைய இணைக்கப்பட்ட கால்களின் குளம்பும், ரப்பர் போன்ற உயரமான அமைப்புமேயாகும். சுப்ஹானல்லாஹ் அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். 23:14

சுட்டெரிக்கும் வெயில்

ஒட்டகத்தின் முதுகின் மீது பயணிப்பவர் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் கண்களை துணியைக் கொண்டு மறைத்துக் கொள்வார். அதேப் போன்று திடீரென அடிக்கின்ற சுழல் காற்றினால் கடுமையான தூசு விண்ணை முட்டும் அளவுக்கு மேல்நோக்கி கிளம்பிவிடும் அது மாதிரி நேரத்தில் யாரும் ரோட்டில் நடக்கவே முடியாது கண்களைத் திறந்தும் பார்க்க முடியாது, மூச்சு விடக் கூட முடியாது அன்றும் இதே நிலை தான் இன்றும் இதே நிலை தான். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அவைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அது மாதிரி நேரத்திலும் கூட எதுவும் நடக்காதது போல் ஒட்டகம் ஓடிக் கொண்டே இருக்கும்.

அதற்கு காரணம்.

  • மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு.

  • அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் அடர்த்தியான முடிகள் மணலோ, தூசியோ, காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது.

  • அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது.

  • அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு, பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கிவிடாமல் தடுத்து விடுகிறது ( sun glass)

  • கண்ணிற்கு கீழே உள்ள இமைப்போன்ற அமைப்பு, கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாலை சூரியனின் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது. ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை.

  • அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்.

  • பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.

  • ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளும் ஆற்றலை அதற்கு இறைவன் வழங்கினான்.

Mjhu E}y;fs;:

The Deserts – A. Starker Leopold – Page 98 – 99
Desert – Susan Arritt Page – 125
The Desert Realm, National Geography Society – Page – 289
Deserts a Miracle of Life - Jim Flegg, Page 62
The Guiness Encyclopedia, Page 159
The World Book Encyclopedia Ref: Camel
Encyclopedia Americana , Vol -5 Page 262
Chambers Encyclopedia, Vol 2 Page 795
Camel – Caroline Amold, Page 30 / 34
Mammals of the southern Gulf – Christangross – Page 11
Amazing Animals – The life Book, Page 22
Life Sense – John Downer – BBC- Page 100 – 103

அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். திருக்குர்ஆன்: 59:24.

இறை நம்பிக்கையை விதைப்பது மட்டுமே நமது நோக்கமன்றி வேறில்லை
இனம், மொழிக் கடந்தும் இறை நம்பிக்கையைப பரப்புவோம்.

இனவெறி, மொழி வெறி கடவுள் அருளிய மாரக்கத்தில் இல்லை.

'அறிந்து கொள்ளுங்கள் அறியாமைக் காலப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன'.

'ஓர் அரபியருக்கு, அரபியரல்லாதவரை விடவோ, ஓர் அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியரை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை,

நீங்கள் அனைவரும் ஆதமின் (முதல் மனிதரின்) வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்' என்று இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி இனவெறி, மொழி வெறியை தடை செய்தார்கள். நபிமொழி

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

__._,_.___

.

ேகள்விபதில்:

ேகள்வ எண்: 8

'பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்' என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா?.

பதில்:

1. பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.

மேற்படி கேள்வி அருள்மறை குர்ஆனின் 71வது அத்தியாயம் ஸுரத்துன் நூஹ்வின் 19வது வசனத்தை அடிப்பைடயாக கொண்டது. மேற்படி அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

'அன்றியும்இ அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.'

மேற்படி வசனம் அத்தோடு முடிந்து விடவவில்லை. அதனை அடுத்த வசனத்தில் முந்தைய வசனத்திற்கான காரணத்தையும் சொல்கிறது.

'அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்'.(அல்குர்ஆன் 71:20)

மேற்படி வசனத்தில் உள்ள செய்தியை மற்றொரு வசனத்தின் மூலமாகவும் அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. குர்ஆனின் 20வது அத்தியாயம் ஸுரத்துத் தாஹாவின் 53வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்.....'(அல்குர்ஆன் 20:23)

பூமியின் மேல் பகுதி முப்பது மைல்களுக்கும் குறைவான தடிமனைக் கொண்டது. மூவாயிரத்து எழுநூற்றம்பைது மைல்கள் 'ஆரம'; (பூமியின் மையப் பகுதிக்கும் மேல் பறப்புக்கும் உள்ள தூரம் - Radius) கொண்ட பூமியின் அடிப்பகுதியோட ஒப்பிடும்போது - முப்பது மைல் தடிமன் என்பது மிகவும் மெல்லியதுதான். பூமியின் அடிப்பகுதியானது வெப்பமான -திரவநிலையில் உள்ளது. பூமியில் மேல் பகுதியில் வாழக்கூடிய எந்தவிதமான உயிரினமும் - பூமியின் அடிப்பகுதியில் வாழ முடியாத அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும். ஆனால் பூமியின் மேல் பகுதி உயிரினங்கள் வாழக்கூடிய நல்ல கெட்டியான நிலையில் இருக்கிறது. பூமியை விரிப்பாக்கி அதில் நாம் பயணம் செய்யக் கூடிய அளவுக்கு பாதைகளை அமைத்து தந்திருக்கிறோம் என்று அருள்மறை குர்ஆன் சரியாகத்தான் சொல்கிறது.

2. விரிப்புகளை சமமான தரை மாத்திரம் இல்லாமல் - மற்ற இடங்களிலும் பரப்பலாம்.

பூமி தட்டையானது என்று சொல்லும் அருள்மறை குர்ஆனின் வசனம் ஒன்று கூட கிடையாது. அருள்மறை குர்ஆனின் வசனம் - பூமியின் மேற்பகுதியை ஒரு விரிப்புடன் ஒப்பிடுகிறது. சில பேர் விரிப்புக்கள் சமமான தரையில் மாத்திரம்தான் விரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விரிப்புக்களை பெரிய பூமி போன்ற கோளத்தின் மீதும் விரிக்கலாம் அல்லது பரப்பலாம். ஒரு பெரிய பூமி உருண்டையின் மாதிரி ஒன்றை எடுத்து - ஒரு விரிப்பை அதன் மீது பரப்பிப் பார்த்தால் - மேற்படி கருத்து உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக விரிப்புகள் - நடந்து செல்வதற்கு வசதியாகத்தான் விரிக்கப்படுகின்றன. அருள்மறை குர்ஆன் ஒரு விரிப்பை பூமியின் மேல் பகுதிக்கு உதாரணமாக காட்டுகிறது. பூமியின் மேல் பகுதியில் உள்ள விரிப்புப் போன்ற பகுதி இல்லை எனில் பூமியின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத்தின் காரணமாக பூமியின் மேல் பகுதியில் உள்ள எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாமல் போயிருக்கும். இவ்வாறு அருள்மறை குர்ஆனின் மேற்படி கூற்று அறிவு ரீதியானதோடு, அருள்மறை குர்ஆன் இவ்வுலகிற்கு வந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு புவியியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையைப் பற்றியும் குறிப்பிடுகிறது குர்ஆனின் மேற்படி வசனம்.

3. பூமி விரிக்கப்பட்டிருக்கிறது:

அதேபோன்று அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் பூமி விரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிடுகின்றன.

'இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்: எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாம் மேம்பாடுடையோம்.' என்று அருள்மறை குர்ஆனின் 51வது அத்தியாயம் ஸுரத்துத் தாரியாத்தின் 48வது வசனம் குறிப்பிடுகின்றது.

அதுபோன்று அருள்மறை குர்ஆனின் 78வது அத்தியாயம் ஸுரத்துந் நபாவின் 6 மற்றும் 7வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

'நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?. இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?'. பூமி தட்டையானது என்று நாம் சிறிதேனும் பொருள் கொள்ளும் வகையில் அருள்மறை குர்ஆனின் எந்த வசனமும் குறிப்பிடவில்லை. அருள்மறை குறிப்பிடுவதெல்லாம் பூமி விசாலமானது என்றுதான். அருள்மறை குர்ஆன் பூமி விசாலமானது என்று குறிப்பிடக் காரணம் என்ன? என்று அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 29 ஸுரத்துல் அன்கபூத்தின் 56வது வசனம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

'ஈமான் கொண்ட என் அடியார்களே!. நிச்சயமாக என் பூமி விசாலமானது: ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.'

சுற்றுப்புற - சூழலின் காரணமாகத்தான் என்னால் நல்லது செய்ய முடியவில்லை, நான் குற்றங்களையேச் செய்து வந்தேன் என்று மேற்படி வசனத்தை தெரிந்த எவரும் மன்னித்துக் கொள்ளச் சொல்ல முடியாது.

4. பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:

அருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.

'இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான

மேற்படி வசனத்தில் 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தை 'துஹ்யா' என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி 'துஹ்யா' என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில்தான் உள்ளது.

இவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான்.

-டாக்டர் ஜாகிர் நாய்க்

__._,_.___

ேகள்விபதில்:

ேகள்வ எண்: 8

'பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்' என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா?.

பதில்:

1. பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.

மேற்படி கேள்வி அருள்மறை குர்ஆனின் 71வது அத்தியாயம் ஸுரத்துன் நூஹ்வின் 19வது வசனத்தை அடிப்பைடயாக கொண்டது. மேற்படி அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

'அன்றியும்இ அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.'

மேற்படி வசனம் அத்தோடு முடிந்து விடவவில்லை. அதனை அடுத்த வசனத்தில் முந்தைய வசனத்திற்கான காரணத்தையும் சொல்கிறது.

'அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்'.(அல்குர்ஆன் 71:20)

மேற்படி வசனத்தில் உள்ள செய்தியை மற்றொரு வசனத்தின் மூலமாகவும் அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. குர்ஆனின் 20வது அத்தியாயம் ஸுரத்துத் தாஹாவின் 53வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது.

'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்.....'(அல்குர்ஆன் 20:23)

பூமியின் மேல் பகுதி முப்பது மைல்களுக்கும் குறைவான தடிமனைக் கொண்டது. மூவாயிரத்து எழுநூற்றம்பைது மைல்கள் 'ஆரம'; (பூமியின் மையப் பகுதிக்கும் மேல் பறப்புக்கும் உள்ள தூரம் - Radius) கொண்ட பூமியின் அடிப்பகுதியோட ஒப்பிடும்போது - முப்பது மைல் தடிமன் என்பது மிகவும் மெல்லியதுதான். பூமியின் அடிப்பகுதியானது வெப்பமான -திரவநிலையில் உள்ளது. பூமியில் மேல் பகுதியில் வாழக்கூடிய எந்தவிதமான உயிரினமும் - பூமியின் அடிப்பகுதியில் வாழ முடியாத அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும். ஆனால் பூமியின் மேல் பகுதி உயிரினங்கள் வாழக்கூடிய நல்ல கெட்டியான நிலையில் இருக்கிறது. பூமியை விரிப்பாக்கி அதில் நாம் பயணம் செய்யக் கூடிய அளவுக்கு பாதைகளை அமைத்து தந்திருக்கிறோம் என்று அருள்மறை குர்ஆன் சரியாகத்தான் சொல்கிறது.

2. விரிப்புகளை சமமான தரை மாத்திரம் இல்லாமல் - மற்ற இடங்களிலும் பரப்பலாம்.

பூமி தட்டையானது என்று சொல்லும் அருள்மறை குர்ஆனின் வசனம் ஒன்று கூட கிடையாது. அருள்மறை குர்ஆனின் வசனம் - பூமியின் மேற்பகுதியை ஒரு விரிப்புடன் ஒப்பிடுகிறது. சில பேர் விரிப்புக்கள் சமமான தரையில் மாத்திரம்தான் விரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விரிப்புக்களை பெரிய பூமி போன்ற கோளத்தின் மீதும் விரிக்கலாம் அல்லது பரப்பலாம். ஒரு பெரிய பூமி உருண்டையின் மாதிரி ஒன்றை எடுத்து - ஒரு விரிப்பை அதன் மீது பரப்பிப் பார்த்தால் - மேற்படி கருத்து உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக விரிப்புகள் - நடந்து செல்வதற்கு வசதியாகத்தான் விரிக்கப்படுகின்றன. அருள்மறை குர்ஆன் ஒரு விரிப்பை பூமியின் மேல் பகுதிக்கு உதாரணமாக காட்டுகிறது. பூமியின் மேல் பகுதியில் உள்ள விரிப்புப் போன்ற பகுதி இல்லை எனில் பூமியின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத்தின் காரணமாக பூமியின் மேல் பகுதியில் உள்ள எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாமல் போயிருக்கும். இவ்வாறு அருள்மறை குர்ஆனின் மேற்படி கூற்று அறிவு ரீதியானதோடு, அருள்மறை குர்ஆன் இவ்வுலகிற்கு வந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு புவியியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையைப் பற்றியும் குறிப்பிடுகிறது குர்ஆனின் மேற்படி வசனம்.

3. பூமி விரிக்கப்பட்டிருக்கிறது:

அதேபோன்று அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் பூமி விரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிடுகின்றன.

'இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்: எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாம் மேம்பாடுடையோம்.' என்று அருள்மறை குர்ஆனின் 51வது அத்தியாயம் ஸுரத்துத் தாரியாத்தின் 48வது வசனம் குறிப்பிடுகின்றது.

அதுபோன்று அருள்மறை குர்ஆனின் 78வது அத்தியாயம் ஸுரத்துந் நபாவின் 6 மற்றும் 7வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

'நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?. இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?'. பூமி தட்டையானது என்று நாம் சிறிதேனும் பொருள் கொள்ளும் வகையில் அருள்மறை குர்ஆனின் எந்த வசனமும் குறிப்பிடவில்லை. அருள்மறை குறிப்பிடுவதெல்லாம் பூமி விசாலமானது என்றுதான். அருள்மறை குர்ஆன் பூமி விசாலமானது என்று குறிப்பிடக் காரணம் என்ன? என்று அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 29 ஸுரத்துல் அன்கபூத்தின் 56வது வசனம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

'ஈமான் கொண்ட என் அடியார்களே!. நிச்சயமாக என் பூமி விசாலமானது: ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.'

சுற்றுப்புற - சூழலின் காரணமாகத்தான் என்னால் நல்லது செய்ய முடியவில்லை, நான் குற்றங்களையேச் செய்து வந்தேன் என்று மேற்படி வசனத்தை தெரிந்த எவரும் மன்னித்துக் கொள்ளச் சொல்ல முடியாது.

4. பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:

அருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.

'இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான

மேற்படி வசனத்தில் 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. 'தஹாஹா' என்னும் அரபி வார்த்தை 'துஹ்யா' என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி 'துஹ்யா' என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில்தான் உள்ளது.

இவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான்.

-டாக்டர் ஜாகிர் நாய்க்

__._,_.___