அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, March 21, 2009

உலக மகளிர் தினம் -- ஜம்இய்யத்துன்நிஷா சுவரொட்டி


மார்ச் 8 -- உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களின் உரிமைகளுக்காக போராடி வரும் ஜம்இய்யத்துன்நிஷா என்ற பெண்கள் கூட்டமைப்பின் சார்பாக தமிழகம் முழுவதும் போஸ்டர் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது


மார்ச் 8 --- உலக மகளிர் தினம்
சபதம் ஏற்போம் !
பெண்களின் கண்ணியம் காப்போம் !
பெண்களுக்கெதிரான வன்கொடுமை ஒழிப்போம் !
ஜம்இய்யத்துன்நிஷா -- தமிழ்நாடு

இன்றும் தொடரும் அவதூறு பிரச்சாரம்


குர்ஆன் விடுத்த சவால் பாகம் 2

இந்த சம்பவம் 1425 வருடத்திற்கு முன்பு மட்டும் எடுத்த முடிவல்ல, அன்று வலீதின் தலைமையில் ஒன்றுகூடி எடுக்கப்பட்ட முடிவை இன்றும் அதன் பின் வாரிசுகளாக வரக்கூடிய மேற்குலகிற்கு டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவர் போன்று, தமிழ் உலகிற்கு நேசகுமாரும் அவருடைய பரிவாரங்களும் செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் வெற்றிதான் அடையமுடியவில்லை. அவர்களால் முடியாது, உலகம் அழியும் நாள்வரை முயற்சித்தாலும் அவர்களால் வெற்றியடைய முடியவே முடியாது.




வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை - ஒரு பார்வை டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவரின் கட்டுரையைத் தழுவி தமிழில் நேசகுமார் என்பவன் மொழிபெயர்த்துள்ளான். அதற்கு பதில் இங்கு உள்ளது


அவன் கூறிய அதன் சுருக்கத்தை இங்கே தருகின்றேன்.

ஆழ்மனது பற்றிய கண்டுபிடிப்புக்களே இது போன்ற விஷயங்களை இன்று நாம் புரிந்து கொள்ள வழிவகை செய்கின்றன மனோதத்துவ பாடப்புத்தகங்களை படித்துப்பார்த்தால், இது போன்று எண்ணற்ற சம்பவங்களைக் காணலாம். தன்னையறியாமல் தன்னுள்ளே உருவாக்கிக் கொண்ட மனோபிம்பங்களில் ஆழ்ந்துவிட்ட பலர் தமக்கு நிஜமாகவே குரல்கள் கேட்கின்றன, தீர்க்க தரிசனங்கள் கிட்டுகின்றன என்றும், இவற்றை இதற்கு முன்னர் கேட்டதில்லை என்றும் உரைப்பதை இந்நூல்களில் காணலாம்.

ஆனால், இவற்றை மனோவியல் நிபுணர்கள் ஆழ்ந்து ஆய்ந்தபோது, எப்போதே கேட்ட, பார்த்த சம்பவங்களே இந்த கற்பனைக்குரல்களில், அக-புற தரிசனங்களில் வெளிப்படுகின்றன என்பதை அறிந்தனர். இவற்றை நமது மேல்மனம் மறந்திருக்கலாம், ஆனால் நாமறியா நமது ஆழ்மனம் இவற்றைப் பதிவு செய்து இதுபோன்ற பிரமைகளின்மூலம் மேலே கொணர்கின்றது." ஒரு கனவினைப் போலவே இது போன்ற 'வெளிப்பாட்டுகளின்' போதும், மனமானது தான் முன்னர் கண்டு, கேட்ட சம்பவங்களின் பதிவுகளை நமது உணர்வின் மேல் மட்டங்களுக்கு கொண்டுவந்து காட்டுகிறது. "

ஆகவே, கிறிஸ்துவர்களிடமிருந்தும் யூதர்களிடமிருந்தும் கண்டு
கேட்டறிந்தவற்றையே இதுபோன்ற இறைவெளிப்பாடுகளின் மூலம் முகம்மது கண்டுணர்ந்தார் என்கிற முடிவுக்கு நம்மால் வர இயலுகிறது. ஆகவே, முகம்மது முன்னர் கண்டுணர்ந்தவை,
கேட்டறிந்தவை, ஆழ்மனதின் பிம்பங்கள் ஆகியவை அவரது எண்ணங்களோடும், யூகங்களோடும், தீர்மானங்களோடும், நியாயங்களோடும் ஒன்றிணைந்து, பின்னிப் பினைந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதைக்கப்பட்டு தீர்க்க தரிசனங்களாகவும், இறைச் சத்தியங்களாகவும், உலக உண்மைகளாகவும் 'வஹி' மூலம் அவரே தீர்மானமாக நம்பும்படி வெளிப்பட்டன.

இதனாலேயே, அவரது மனதின் அடியாழத்தில் இருந்த இவை மற்றவர்களுக்கு வெளிப்படாமல் அவருக்கு மட்டுமே வெளிப்பட்டன." …… அதற்கு சில அறிவிலிகளின் ஆதாரமும்
கூட ராடின்ஸன் கூறுகிறார்: சூனியத்தில் முகம்மதுவின் ஆன்மா ஆழ்ந்தெழுந்தபோது ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொள்வதையும், அதற்கு தான் அடிபணிவதையும் தனது உத்வேக நிலையிம் முகம்மது உணர்ந்தார். அப்போது அவரின் தனித்துவம் விடைபெற்றுக் கொண்டு அவ்விடத்தில் இந்த அமானுஷ்ய சக்தி இறங்கி ஆக்கிரமித்துக் கொண்டது இத்தருணங்களில் அவருக்கு மேலே விவரித்த அனுபவங்கள் ஏற்பட்டன - அவருக்கு சில தரிசனங்கள் கிட்டின,
குரல்களைக் கேட்டார், இவை வெளிமுகமாகவோ சில சமயங்களில் மனதிற்குள்ளாகவோ அல்லது கற்பனை வெளிகளிலோ அவருக்கு வெளிப்பட்டன.

இது போன்று ஏற்படும் உணர்ச்சிவயப்பட்ட ஆவேச நிலைகளும், புலணுணர்வுகளும் பொதுவாக அனைவராலும் ஒப்புக் கொள்ளப்ப்பட்ட ஹிஸ்டீரியா, ஸ்கிசோப்ரெனியா, கட்டுப்பாடற்ற குழறல்கள் போன்ற மனப்பிறழ்வுகளின் தன்மைகளுடன் ஒத்திருக்கின்றன."


அட அநியாயக்காரனே நீ இப்படித்தான் சொல்வாய், சொன்னாய் என்பதை இன்று நீ எங்களுக்கு சொல்லவேண்டிய தேவையில்லை இதோ பார் உன்னையும், என்னையும் படைத்த அந்த அல்லாஹ்வே 1427 வருடங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டான். இதோ அந்த பொன்வசனங்கள்

25:3. (எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள் (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள் தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள் மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.

25:4. இன்னும் இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களுக்கு ஓர் அநியாயத்தையும் பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.

25:5. இன்னும் அவர்கள் கூறுகிறார்கள் இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் ஆகவே அவை அவருக்கு முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.

25:6. (நபியே!) வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான் நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான் என்று கூறுவீராக!

25:7. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?

25:8. அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக்காரர்கள் (முஃமின்களை நோக்கி) சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை என்றும் கூறுகிறார்கள்.

25:9. (நபியே!) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழிகெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.

அட மனிதனே இவன் இப்படித்தான் செய்வான் என்று 1427 வருடத்திற்கு முன்னாலே சொல்லி இருந்தும், அதையே அப்படியே நீ இன்றும் சொன்னால் உன்னை பைத்தியக்காரன் என்பதா? மடையன் என்பதா?? என்பதை நீயே யோசித்துப்பார். (அதுசரி!! அதுஎப்படி அன்றிலிருந்து இன்றுவரை அடிபிரலாமல் அப்படியே வெட்கமின்றி சொல்கின்றீர்கள். அதுவும் சொன்னதையே சொல்கின்றீர்கள்.)

உலகிற்கு அவனுடைய அறிவுரை (சிரிப்பதற்கு) தனிப்பட்ட சம்பாஷணைகளில், நாகரிகமான முறையில் இஸ்லாத்தின் இந்த அடிப்படை நம்பிக்கை குறித்த நம் சந்தேகங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். என் மதமே எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று யாராவது அவ்வப்போது சொன்னாலும், இதைத் தெளிவாய் எடுத்துச் சொல்லலாம். இஸ்லாமியராய்ப் பிறந்தவர்களுக்குச் சில எல்லைகள் உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைக் குறித்து விமர்சனம் செய்வது கிட்டத்தட்ட அவர்களால் இயலாத காரியம்.

சில நாடுகளில் இது தெய்வகுற்றமென்று மரணதண்டனையும் காத்திருக்கும். இருந்தாலும், இஸ்லாத்தை விட்டு வந்த சில தைரியசாலிகள்தான் அவர்களின் சகோதர சகோதரிகளுக்குக் கதவைத் திறந்து விட வேண்டும். நம்மைப் போன்ற இஸ்லாமியர் அல்லாதவர் அவர்களின் அடிப்படை பிரச்னைகளை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அதற்குச் செவி கொடுக்கும் இஸ்லாமியர் குறைவாகவே இருப்பார்கள்.

'இஸ்லாத்தின் அமானுட அடிப்படை'யை நாம் ஒரு பார்வை பார்த்தது போல், அறிவியல் ரீதியான தகவல்களை, குறைந்தபட்சம் அரசாங்கப் பள்ளிகளில், பள்ளிக் குழந்தைகளுக்குப் பொதுப்பாடமாய் வைக்க நாம் முயல வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமியக் குழந்தைகளுக்கு இது ஒரு வகையில் தீர்க்கமாய் யோசிக்க உதவும். ஆனால் அவர்களின் பெற்றோர் இதையெல்லாம் 'நம்பிக்கை அற்றவர்கள்' சொல்வது என்று புறந்தள்ளி விடலாம்.

யோசித்துப் பார்த்தால், ஒரு முஸ்லிமாய்ப் பிறந்து வளர்ந்தவர் ஆழமாய்ச் சிந்தித்து தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள மாயவலையை உடைத்துக் கொண்டு வெளியே வந்து, தன்னைச்
சார்ந்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதே சிறந்தவழி.

அதனால்தான் மனம் திறந்து பேசுவதையே அவர்கள் அபாயமாகக் கருதுகிறார்கள் போலும். இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை.

சமீபத்தில் பிரபலமாகி வரும், செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு, இண்டர்நெட் என்ற தடைகளை உடைத்து வரும் ஊடகப் புரட்சி, இவை எங்கோ அரேபியாவின் மூலைமுடுக்கில் இருக்கும் ஒரு கிராமத்தைக் கூட சென்றடையும் வாய்ப்பு இதையெல்லாம் நினைக்கும்போது எனக்கு நம்பிக்கை துளிர்க்கிறது. இஸ்லாமிய மனநிலையில் பரவலாய் ஒரு மாற்றம் வரும். அது இடைக்காலத்திய சிந்தனைகளை விட்டு வெளியே வரும்.

கடவுளுக்கு மகன் உண்டு என்று கருதுவோர் தீயோர் என்பது வஹி மூலம் அல்லாஹ் அறிவித்த ஒன்று. கிறிஸ்துவர்களை துன்புறுத்தும் சவுதி அரசை குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும், சுதந்திரமாக செயல்படக்கூடாது என்பது தாலிபான்களின் தீர்ப்பு அல்ல, வஹி மூலம் அல்லாஹ் மனிதகுலத்துக்கு இட்ட கட்டளை.

நடத்தை தவறியவர்கள் என்று கருதும் பெண்களை கல்லால் அடித்துக் கொள்வது ஈரான் அரசின் கண்டுபிடிப்பு அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் ஒரு சமூகத்தையே தாம் கல்லால் அடித்துக் கொன்றதாக அல்லாஹ் வஹி மூலம் அறிவித்துள்ளார்.

பெஸ்லானில் குழந்தைகளைக் கொன்றதற்காக தீவிரவாதிகளைக் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. குழந்தைகளும் எதிரிகளே என்பது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தவொன்று.

ஜிஹாத் செய்து எதிரிகளை அழிக்கும்போது அவர்களின் பெண்களை கற்பழிக்கலாம் என்பது நபிகள் நாயகமோ, அல்லது 1400 வருடங்களுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சமூகங்களின்
வழக்கமோ அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது. தெளிவாக இப்படிப் பிடித்து அடிமைகளாக்கப் படும் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதை வஹி மூலம் அல்லாஹ் ஹலாலாக்கியிருக்கின்றார்.

மேலும், இதெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஷயங்கள், அப்போது இதுதான் அனைத்து சமூகங்களிலும்
வழக்கமாயிருந்தது ஆகவே இப்போது அதெல்லாம் தவறு என்று கருதுவோர்களுக்கும் அல்லாஹ் தெளிவாக அப்போதே வஹி மூலம் அறிவித்திருக்கின்றார், இதெல்லாம் மாற்றமுடியாத
கட்டளைகள் - இறுதித்தீர்ப்பு நாள் வரைக்கும் இவற்றை முஃமீன்கள்(நம்பிக்கையுள்ளோர் - முஸ்லிம்கள்) பின்பற்றப்பட வேண்டியவை,

இவற்றை மறுப்பது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப் பட்ட ஒன்று, அப்படி மாறுபாடு செய்வோர் தலையில் கொதிக்கும் தண்ணீர் ஊற்றப்படும், உருக்கும் செம்பை குடிக்க வைக்கப் படுவார்கள், தீயில் வறுத்து எடுக்கப் படுவார்கள் என்று கூறி மக்களை ஒருவகையான பிரம்மையில் மிதக்கச் செய்துவிட்டார்.

அதனால் இவை எல்லாம் மன பாதிப்பின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களாகும் வஹியல்ல என வாதிடுகின்றான் மன நோயாலியான கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவனும், அவனுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய தமிழக வந்தேரிகளின் கைப்பாகையான நேசகுமாரும். தும்பைவிட்டு வாலைப்பிடிக்கின்றான் என்பார்கள் அதுபோல் குர்ஆனின் சவாலை ஏற்க சக்தியற்றவர்கள் நபியை கேலி செய்தும், குர் ஆனை எரித்தும் தம் இயலாமையை ஏற்றுக் கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் எதிரிகளே இதோ உங்களின் அழுகிப்போன மூலையில் உதிக்கும் சிந்தனைக்கு சாவுமணி அடிக்கின்றது அல் குர்ஆன்.

61:8 அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர் ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

இதற்கான சான்றுகள் உலக சரித்திரத்தின் வழி எங்கும் மடிந்து கிடக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை எதிர்நோக்கும் த.மு.மு.க



மனித நேய மக்கள் கட்சி இன் நிர்வாகிளை தேர்வு செய்வதற்காக கோவை வந்திருந்த .மு.மு. வின் மாநில தலைவர் ஜவாஹிருள்லாஹ் அவர்கள் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் இருந்து...


தமிழகத்து மனித நீதி பாசறை கேரளா, கர்நாடக முஸ்லிம் அமைப்புகளூடன் இணைந்து 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்று உருவாகியிருக்கிறதே, தேர்தல் களத்தில் அவர்களையும் இணைத்துக் கொள்வீர்களா?

அவர்களுக்கும் எங்களுக்கும் நேரடித் தொடர்பு எதுவுமில்லை. ஆனால், அவர்களுடைய குறிக்கோளும் சிறுபான்மையினர் நலனாகத்தான் இருக்கிறது. இந்தத் தேர்தலில் எங்களை ஆதரிக்க அவர்கள் முன்வந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்..

இலங்கையில் மனித வெடிகுண்டு --- பாப்புலர் ப்ரண்ட் கண்டனம்


ரேகிங் கொடுமை -- மாணவன் கொலை -- USF கண்டனம்


மதவெறி ABVP -- யை விரட்டுவோம் -- USF முழக்கம்



மங்களூர் பஞ்சா கிராமத்திலுள்ள அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளிடம் புர்கா அணிந்து வரக்கூடாது என வன்முறையில் ஈடுபட்ட ABVP யை கண்டித்து தமிழகம் முழுவதும் USF சார்பாக போஸ்டர் ட்டப்பட்டுள்ளது..




இது தொடர்பாக USF பொதுசெயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு






செய்தி : USF தலைமையகம்

மதவெறி ABVP -- யை விரட்டுவோம் -- USF முழக்கம்



மங்களூர் பஞ்சா கிராமத்திலுள்ள அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளிடம் புர்கா அணிந்து வரக்கூடாது என வன்முறையில் ஈடுபட்ட ABVP யை கண்டித்து தமிழகம் முழுவதும் USF சார்பாக போஸ்டர் ட்டப்பட்டுள்ளது..




இது தொடர்பாக USF பொதுசெயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு






செய்தி : USF தலைமையகம்

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து USF கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்



இலங்கையில் கொல்லப்படும் அப்பாவி மக்களை காக்க கோரி USF சார்பாக திருச்சியில் 06.03.09 அன்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. வெஸ்ட்ரி ஸ்கூல் அருகே தொடங்கி கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.. ஏராளமான மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.. பேரணியை USF திருச்சி மாவட்ட தலைவர் திரு.ஆ.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் ஒருங்கிணைத்தார்.. USF மாநில செயலாளர் S.முஹம்மது ஷாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார்.. Z.முஹம்மது தம்பி நன்றியுரையாற்றினார்..



பேரணியின் முடிவில் USF மாநிலச் செயளாலர் S.முஹம்மது ஷாஃபி அவர்கள் D.R.O திரு.தட்சினாமூர்த்தியிடம் மனு அளித்தார்...




செய்தி : USF தலைமையகம்

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து USF கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்



இலங்கையில் கொல்லப்படும் அப்பாவி மக்களை காக்க கோரி USF சார்பாக திருச்சியில் 06.03.09 அன்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. வெஸ்ட்ரி ஸ்கூல் அருகே தொடங்கி கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.. ஏராளமான மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.. பேரணியை USF திருச்சி மாவட்ட தலைவர் திரு.ஆ.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் ஒருங்கிணைத்தார்.. USF மாநில செயலாளர் S.முஹம்மது ஷாஃபி அவர்கள் கண்டன உரையாற்றினார்.. Z.முஹம்மது தம்பி நன்றியுரையாற்றினார்..



பேரணியின் முடிவில் USF மாநிலச் செயளாலர் S.முஹம்மது ஷாஃபி அவர்கள் D.R.O திரு.தட்சினாமூர்த்தியிடம் மனு அளித்தார்...




செய்தி : USF தலைமையகம்

குமரி யில் ஈவ் டீஸிங் -- USF கண்டன பேரணி




கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து வரும் மாணவிகளுக்கு எதிரான ஈவ் டீஸிங் கொடுமையை எதிர்த்து USF சார்பாக கண்டன பேரணி நடத்தப்பட்டது..


இது தொடர்பாக USF குமரி மாவட்ட தலைவர் மாஹீன் வெளியிட்டுள்ள செய்தி




இது தொடர்பாக தக்கலை கோட்டாட்சிர் அவர்களிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு..


செய்தி : USF தலைமையகம்

குமரி யில் ஈவ் டீஸிங் -- USF கண்டன பேரணி




கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து வரும் மாணவிகளுக்கு எதிரான ஈவ் டீஸிங் கொடுமையை எதிர்த்து USF சார்பாக கண்டன பேரணி நடத்தப்பட்டது..


இது தொடர்பாக USF குமரி மாவட்ட தலைவர் மாஹீன் வெளியிட்டுள்ள செய்தி




இது தொடர்பாக தக்கலை கோட்டாட்சிர் அவர்களிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு..


செய்தி : USF தலைமையகம்

முஸ்லீம்கள் தலையை வெட்டுவேன்: வருண் காந்தி பேச்சு-ஆணையம் நோட்டீஸ்

பிலிபித் (உ.பி.): மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும் என்று அவர் பேசியதால் தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. வருண் காந்தி பேச்சால் பாஜகவுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது.

மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி, பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். தனது மகனுக்காக தான் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும் பிலிபித்தை விட்டுக் கொடுத்துள்ளார் மேனகா காந்தி.

இந்த நிலையில் பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வருண் காந்தி அங்கு பேசுகையில், இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெயம் ஸ்ரீராம் என்று பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்.

ஒரு இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால், அவரது கையை இந்த வருண் காந்தி வெட்டுவான்.

வருண் காந்தி ஒரு புயலைப் போல. அடுத்த சஞ்சய் காந்திதான் இந்த வருண் காந்தி என்றார் வருண் காந்தி.

வருண் காந்தி புயலோ என்னவோ அவரது பேச்சு பெரும் புயலைக் கிளப்பி விட்டு விட்டது.

முஸ்லீம்கள் குறித்து அவர் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் பேசியிருப்பது உண்மையாக இருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிபித் தொகுதியில் மேனகா காந்தி ஐந்து முறை எம்.பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரித்து விட்டனர்-வருண் காந்தி:

இதற்கிடையே தான் பேசியது வேறு, அதைத் திரித்து செய்திகள் வெளியாகி விட்டன என்று வருண் காந்தி கூறியுள்ளார். வருண் காந்தி விவகாரம் குறித்து பாஜக கருத்து ஏதும் கூறவில்லை.

காங்கிஸ் பாய்ச்சல்:

வருண் காந்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது மோசமான பேச்சு மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட. ஆனால் இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. அந்தக் கட்சியின் கொள்கையே இதுதான். அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் வருண் காந்தி. அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது, கடும் கண்டனத்துக்குரியது இது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

தென்காசி டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்




தென்காசியில் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

நெல்லை, மார்ச் 21: நெல்லை மாவட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயலாளர் மஹ்பூப் அன்சாரி கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

மத துவேச செயல்களில் ஈடுபடும் தென்காசி டி.எஸ்.பி., மயில்வாகனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகரையில் அப்பாவி முஸ்லிம்கள் 9 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக காவல்நிலையத்தில் வைத்து ஜமாத்தார்கள், பொதுமக்கள் மத்தியில் அப்பாவி முஸ்லிம்களை மததுவேசத்துடன் பேசி கொலை வெறி தாக்குதல் நடத்திய ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் இதில் தொடர்புடைய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி உட்கோட்டத்துக்குட்பட்ட முஸ்லிம்களை குறிவைத்து வீண்பழி சுமத்துவதையும், அவர்களுக்கு பாஸ்போர்ட் தரமாட்டோம் என காவல்துறையினர் மிரட்டுவதையும் கைவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : தினகரன் (21.03.2009)

9/11 தாக்குதலின் பின்னணியில் மொஸாத்!


2001 செப்டம்பர் 11 -ல் நடந்த அமெரிக்க இரட்டைக் கோபுர தீவிரவாதத் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான 'மொஸாத்' -க்கு பங்கிருப்பதாக புதிய செய்தி வந்துள்ளது.

9/11 நிகழ்வின் விமானக் கடத்தியாகக் கூறப்படும் ஸியாத் அல் ஜர்ராஹ் (Ziad al-Jarrah) நெடுங்காலமாக மொஸாத் ஏஜண்டாகப் பணியாற்றி வந்துள்ளதாக இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருப்பதுதான், அச்சம்பவத்தில் மொஸாத்துக்கு பங்கிருப்பதற்கான நிரூபணம் என அமெரிக்க வார இதழான "அமெரிக்கன் ப்ரீ பிரஸ்" (American Free Press weekly) கூறுகிறது.

பாலஸ்தீனியர்களுக்குத் தன் விசுவாசமான ஆதரவைத் தந்து கொண்டிருந்த, லெபனான் நாட்டைச் சார்ந்த அலி அல்
ஜர்ராஹ் (Ali al-Jarrah) உண்மையிலேயே உயர்மட்ட இஸ்ரேலிய உளவாளியாக சென்ற இருபது ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருக்கும் இரகசியம் இப்போது அம்பலமாகியுள்ளது. இதனை அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ்(New York Times) வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களின் கூட்டத்தில் ஒருவராக மறைந்திருந்து, வேவு பார்த்தல் போன்ற செயல்களில் பாலஸ்தீனியர்களுக்கும்
லெபனான் நாட்டு ஹிஸ்புல்லாவுக்கும் எதிராக செயல்பட்டதாக அல் ஜர்ராஹ் ஒத்துக்கொண்டுள்ளார்.

இது இஸ்லாமியர்களுக்கு எதிராக
ஜர்ராஹ் குடும்பத்தினரின் முதல் துஷ்டச் செயல் அல்ல. இக்குடும்பத்தின் மற்றொரு அங்கத்தினரான ஸியாத் அல் ஜர்ராஹ் (Ziad al-Jarrah) 2001 செப்டம்பர் 11 -ல் நடந்த தாக்குதலில் பங்கெடுத்த 19 விமானக் கடத்திகளில் ஒருவர் என டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது.

பெயரளவில் முஸ்லிம்களாக வாழ்பவர்களைக் கண்டுபிடித்து, தேர்வு செய்து, அவர்களைப் பொக்கிஷமாக இஸ்ரேலியர்கள் பாதுகாத்து வருகின்றனர் என்ற ஒரு சந்தேகம் இருந்தது.

ஸியாத் அல் ஜர்ராஹ்வுக்கும் திட்டமிடும் தீவிரவாதத் தலைவர் ஒருவருக்கும் இருந்த தொடர்பு, மேலும் அந்தச் சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது.

இரண்டு விமானங்கள், (விமான எண் 11 மற்றும் 175) உலக வணிக மையத்தின் மீது மோதியபோது அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஐந்து இஸ்ரேலியர்கள் துள்ளிக் குதித்து நடனமாடி, மகிழ்ச்சியுடன் நக்கலாக ஓலமிட்டது, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் கூற்றுப்படி தெளிவாகிறது. இது 9/11 சம்பவத்தில் இஸ்ரேலுக்கு இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்க காவல்துறை இந்த ஐந்து இஸ்ரேலியர்களையும் கைது செய்து 71 நாட்களுக்குப் பின்னர் எந்த ஆரவாரமும் இன்றி விடுதலை செய்தனர். அதற்கு, அவர்கள் இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான 'மொஸாத்
தின் அங்கத்தினர்கள் என்று சந்தேகம் ஏற்பட்டதே காரணம்.

அமெரிக்க உளவு ஸ்தாபனமான CIA -ன் பழைய உறுப்பினர்கள் இருவரின் தொடர்பு இதில் இருப்பதை பார்வார்டு வீக்லி (Forward weekly) பத்திரிக்கை கண்டுபிடித்தது. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு இஸ்ரேலியர்கள் மொஸாத்தின் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் என அதே பத்திரிக்கை கூறியது,

"வெள்ளை மாளிகையிலிருந்து விசாரணைகளை நிறுத்தும்படி உத்தரவு வந்தது. இஸ்ரேலியர்களுக்கும் வணிக வளாக தீவிரவாதத் தாக்குதலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மூடி மறைப்பதற்காகத்தான் இந்த உத்தரவு வந்தது என்பதை அமெரிக்க உளவு ஸ்தாபனமான CIA புரிந்து கொண்டது" என பார்வார்டு வீக்லி (Forward weekly) கூறுகிறது.

செப்டம்பர் 11 அன்று நடந்த தாக்குதலில் குறைந்த பட்சம் 2970 பேர் இறந்தார்கள். அதில் அதிக அளவில் இறந்தது சாதாரண மக்கள்தான் என்பது நினைவிருக்கலாம்.

CIA-யும் மொஸாதும் பின்னணியிலிருந்து இயக்கிய செயல் இது என இந்த நிகழ்வைப் பற்றி முந்தைய இத்தாலியப் பிரதமர் பிரான்ஸெஸ்கோ கொஸிகா (Francesco Cossiga) கூறினார்.

இந்தப் பேரழிவை CIA-யும் மொஸாதும் சேர்ந்து அரங்கேற்றினார்கள் என்று அமெரிக்க ஐரோப்பிய உளவு நிறுவனங்கள் அனைத்திற்கும் இப்போது தெரியும். அவர்களின் குறிக்கோள், அரபு நாடுகளின் மீது பழி போடுவதற்கும் மேற்கத்திய நாடுகளை இராக், ஆப்கானிஸ்தான் போர் நடடிக்கைகளில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும் என்பதுதான். இவ்வாறு முந்தைய இத்தாலியப் பிரதமர் கூறியதாக இத்தாலிய பத்திரிக்கையான Corriere della Sera குறிப்பிடுகிறது.

உடனடி செய்தி சேவை (instant messaging services) வழங்கும் இஸ்ரேலிய தொலை தொடர்பு நிறுவனமான "ஓடிகோ" (Odigo)
வுக்கு இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக செய்தி வந்து, அது உடனடியாக யூதர்களை எச்சரித்துள்ளது. இது இத்தாலியப் பிரதமரின் வாதத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

உலக வணிக மையத்திலிருந்து இரண்டு கட்டிடங்களுக்கு அப்பால்தான் இந்த இஸ்ரேலிய தொலை தொடர்பு நிறுவனமான "ஓடிகோ" (Odigo)வின் தலமையகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழாக்கம்: