அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, March 21, 2009

அத்வானியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக பிரபல குச்சுப்பிடி மற்றும் பரதநாட்டியக் கலைஞர் மல்லிகா சாரபாய் அறிவித்துள்ளார்.

Subject: அத்வானியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக பிரபல குச்சுப்பிடி மற்றும் பரதநாட்டியக் கலைஞர் மல்லிகா சாரபாய் அறிவித்துள்ளார்.



காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக பிரபல குச்சுப்பிடி மற்றும் பரதநாட்டியக் கலைஞர் மல்லிகா சாரபாய் அறிவித்துள்ளார்.

பழம்பெரும் பாரம்பரிய நடனக் கலைஞர் மிருநாளினி சாராபாயின் மகள்தான் மல்லிகா சாராபாய். குச்சுப்பிடி மற்றும் பரதநாட்டியத்தில் நிபுணர். இவர் அத்வானியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்தவரான சாராபாய் கோத்ரா கலவரத்திற்குப் பின்னர் பாஜகவுக்கு எதிராக மாறினார் மல்லிகா. முதல்வர் நரேந்திர மோடியையும், அவரது அரசையும் எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்.

உச்சநீதிமன்றத்தில், மோடிக்கு எதிராக பொது நல வழக்கையும் தொடர்ந்தார். இந்த நிலையில் அத்வானியை எதிர்த்துப் போட்டியிட முடிவு செய்துள்ளார் மல்லிகா.

இதற்கிடையே, அத்வானிக்கு எதிராக நிறுத்தப்படும் வேட்பாளரின் பெயரை காங்கிரஸ் கட்சி நாளை அறிவிக்கவுள்ளது.

இதுவரை குஜராத் மாநிலத்தில் போட்டியிடும் 12 பேரின் பெயர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. காந்தி நகருக்கு இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

காந்திநகர் உள்ளிட்ட மீதம் உள்ள 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை டெல்லியில் வெளியிடப்படுகிறது.

No comments: