அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, September 4, 2009

Nato pledges Afghan strike probe

Aftermath of the blast in Kunduz province

Nato has promised a full investigation into an air strike on two fuel tankers that killed up to 90 people in Afghanistan's northern Kunduz province.

The alliance said many Taliban insurgents who had hijacked the tankers were killed but it admitted it had reports of many civilian casualties.

The Nato-led forces said they regretted "any unnecessary loss of human life".

President Hamid Karzai said targeting civilians was "unacceptable" and announced his own investigation panel.

A statement from his office said the president expressed "deep sorrow for the loss of our compatriots" and "emphasised that innocent civilians must not be killed or wounded during military operations".

Sensitive issue

Gen Stanley McChrystal, issued new guidelines recently saying much more still needed to be done to avoid civilian casualties.


The number of those killed in the Kunduz strike is still not confirmed, with reports varying from 56 to 90.

The reports of the number of militants and civilians killed also varies.

Pictures from Kunduz showed members of the local community preparing some of those who died for burial, while others showed images of the injured being treated in hospitals.

The Nato attack occurred about 7km (four miles) south-west of Kunduz city at about 0200 on Friday (2130 Thursday GMT), 40 minutes after German and Afghan forces called in an air strike.

They reported the two tankers had been hijacked by insurgents as they travelled from Tajikistan to supply Nato forces in Kabul.

One of the drivers of the tankers told the BBC that two of his colleagues had been beheaded when the Taliban carried out the hijacking.

Witness Mohammad Daud, 32, told AFP the militants had been trying to transport the tankers across a river to villages in Angorbagh.

"They managed to take one of the tankers over the river. The second got stuck."

Locals in Kunduz prepare the dead for burial after the airstrike
Locals in Kunduz prepare the dead for burial after the air strike

The insurgents apparently opened valves to lighten the load and called in villages to help themselves to fuel.

At this point, the Nato air strike hit the tankers. Nato insists its commanders believed only militants were present.

When day broke, clothing, shoes, jerry cans and other debris could be seen strewn around the two stricken tankers.

Mr Daud said: "Everyone around the fuel tankers died. Nobody was in one piece. Hands, legs and body parts were scattered everywhere."

International Security Assistance Force (Isaf) spokesman Brig Gen Eric Tremblay was later quoted by Reuters as saying: "It would appear that many civilian casualties are being evacuated and treated in the local hospitals.

The air strike came shortly before UK Prime Minister Gordon Brown delivered a key speech defending the Afghan strategy.

He said the aims of Britain and its allies there were "realistic and achievable".

தலைவர்கள் செய்த பாவம் பாஜகவை சீரழிக்கிறது - லாலு


தலைவர்கள் செய்த பாவம் பாஜகவை சீரழிக்கிறது - லாலு பாட்னா: பாஜக தலைவர்கள் செய்த பாவம்தான் இன்று அக்கட்சி சீரழிய காரணம் என்று கூறியுள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாபர் மசூதியை இடித்தது, குஜராத்தில் கலவரம் நடத்தியது, நாட்டின் பிற பகுதிகளில் பாஜகவினர் செய்த கலவரங்கள் ஆகியவற்றால் எண்ணற்ற அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயின.
மக்கள் விட்ட சாபமும், தலைவர்கள் செய்த பாவமும்தான் இன்று பாஜக இந்த நிலைக்கு சீரழிந்து போக காரணம். இந்த பாவத்தால் விரைவில் பாஜக அழிந்தே போகும். அக்கட்சியின் தலைவர்கள் செய்த பாவத்திற்கு உரிய தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள்.
குஜராத் கலவரத்திற்குப் பின்னர் நரேந்திர மோடியை பதவியிலிருந்து நீக்காமல் காத்தவர் அத்வானிதான். இதை நான் அன்றும் சொன்னேன். மீண்டும் திட்டவட்டமாக சொல்கிறேன்.
இப்போது அத்வானியின் நிலையைப் பாருங்கள். விதியின் சாபம் இப்போது அவர் மீதே வந்து விடிந்துள்ளது. பாஜக தலைவர்கள் நாட்டுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர் என்றார் லாலு.
thatstamil

தூதின் ரமலான் சிந்தனைகள்


"என் அறியாமைக்காலத்தில் நான் ஏராளமான நூல்களைப் படித்துள்ளேன். புராதன புதிய தத்துவங்கள், விஞ்ஞானம், அரசியல், மனித வாழ்வு என்பன பற்றிய ஒரு நூல் நிலையமே என் மூளைக்குள் அமைந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு நூல்களைப்படித்துவைத்தேன். ஆனால் என்று நான் என் கண்களைத்திறந்து குர் ஆனைப்படிக்கத்தொடங்கினேனோ அன்றுதான் அதற்கு முன்னர் படித்தவைகள் அனைத்தும் குறையுள்ளவை என்பதை உணரலானேன்.
காண்ட்(Kant 1724-1804) ஹைக‌ல்(Hegal 1770-1831)நீஷே(Nietzshe 1844- 1890)கார்ல் மார்க்ஸ்(Karl Marx 1818-1883)போன்ற பெரும் பெரும் மேதாவிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் இப்பொழுது பச்சிளம் குழந்தைகள் போன்று தோற்றம் தருகின்றனர்! அவர்கள் மீது இப்பொழுது எனக்கு அனுதாபமே ஏற்படுகின்றது;பாவம்.வாழ்க்கை முழுவதும் எந்த இருட்குகைகளை ஒளி மயமாக்கவென இரவு பகலாய் பாடுபட்டார்களோ. எந்த பிரச்சனைகளை தீர்க்கவென பெரும் பெரும் நூல்களை எழுதி வைத்தார்களோ, அவற்றை தீர்த்துவைத்து உலகை ஒளிமயமாக்கும் கருத்துகளை இவ்வேதப்பெருநூல் ஓரிரு வரிகளில் தந்துவிடுகின்றது. இந்த அரிய நூலை படிக்கும் வாய்ப்பை நான் பெறாதிருந்திருப்பின் என் நிலையும் மேற்காணும் மேதாவிகளின் நிலையாகவே இருந்திருக்கும்.நானும் குழம்பிப்போய் வாழ்நாளை கழித்திருப்பேன்.
வாழ்த்துக்குரியது;என் வாழ்வை மாற்றியமைத்த இவ்வேத நூல்!போற்றுதற்கிரியது;விலங்கின வாழ்விலிருந்து என்னை மனிதனாக்கிய இப்புனித நூல்!ஏழை என் நன்றிக்குரியது;இருட்குகையிலிருந்து ஒளிப்பூங்காவுக்கு என்னைக் கொணர்ந்த இவ்விறை நூல்! அல்குர் ஆன் எனக்கு அருளியிருக்கும் ஒளியின் துணைக்கொன்டு, வாழ்வின் எந்த பிரச்சனை மீது நான் கருத்தை செலுத்தினாலும் அப்பிரச்சனைக்கான அழகிய தீர்வு எத்தகைய திரையுமின்றி தெளிவாகக் கிடைத்து விடுகின்றது.
எல்லா வகையான பூட்டுகளையும் திறக்கும் திறவுக்கோலுக்கு ஆங்கிலத்தில் "மாஸ்டர் கீ"(Master Key) என்று சொல்வார்கள்.அது போன்று வாழ்வின் எத்தகைய சிக்கலான பிரச்சனைகளாயினும் அவற்றை தீர்த்து வைத்து அமைதியை தரும் "மாஸ்டர் புக்"(Master Book)குர் ஆன் என்று நான் கூறுவேன்!"
கூறிய‌வ‌ர்:அல்குர் ஆனுக்குத்"த‌ஃப்ஹீமுல் குர் ஆன்" என்ற‌ பெய‌ரில் அழ‌கிய‌ விள‌க்க‌ உரை எழுதிய‌ மெள‌லான‌ செய்யித் அபுல் அஃலா மெள‌தூதி (ர‌ஹ்...)அவ‌ர்க‌ள்.
வ‌ழிகாட்டி மாசிகை ‍ இல‌ங்கை ஜ‌மாத்தே இஸ்லாமி வெளியீடு, 1961 ஜுலை மாத‌ இத‌ழ்

ந‌ன்றி:உங்க‌ள் இத‌ய‌த்துட‌ன் இஸ்லாம் பேசுகின்ற‌து, இல‌க்கிய‌ சோலை வெளியீடு

நெல்லை அருகே தொழுகைக்கு வந்தவர்கள் மீது கல்வீச்சு

சேரன்மகாதேவி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பள்ளிவாசலில் இரவில் தொழுகை முடிந்து வந்தவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சேரன்மகாதேவி அடுத்துள்ள உலகன்குளம் அருகே பள்ளிவாசல் உள்ளது. அங்கு நேற்றிரவு 11 மணிக்கு முஸ்லிம்கள் தொழுகை முடிந்து வெளியில் வந்தனர்.அப்போது அவர்கள் மீது அங்கு மறைந்திருந்த சிலர் கல்வீசி தாக்கினர். இதில் இரு பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். பள்ளிவாசல் முன்பியிருந்த டியூப் லைட்டுகள் கல்வீச்சில் சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் .
சம்பவ இடத்திற்கு நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க், சேரன்மகாதேவி டிஎஸ்பி அருண், இன்ஸ்பெக்டர் சங்கர், களக்காடு இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.பதட்டம் நிலவியதைத் தொடர்ந்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒய்.எஸ்.ஆர் – மக்களின் நாடித்துடிப்பை அறிந்த டாக்டர்


ஹைதராபாத்:யதுகூரி சன்டிண்டி ராஜசேகர ரெட்டி படித்தது மருத்துவம் என்றாலும் மக்களின் நாடித்துடிப்பை புரிந்த முதல்வராக விளங்கினார்.
5 வருடம் முழுமையாக ஆட்சி புரிந்தது மட்டுமல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம் நிர்வாகத்திலும் ஆட்சியிலும் ரெட்டியின் திறமையை.இன்னொருவகையில் கூறினால் காங்கிரஸ் கட்சியில் மக்கள் செல்வாக்குப்பெற்ற அபூர்வமான சில தலைவர்களில் ஒருவர் ரெட்டி.
1949 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் நாள் ஆந்திரபிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்திலிலுள்ள புலிவெண்டுலு கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் ரெட்டி.ஒய்.எஸ்.ராஜரெட்டியின் 5 ஆண்மக்களில் மூத்தவர் ராஜசேகரரெட்டி.காங்கிரஸ் கட்சியில் மண்டலத்தலைவராகயிருந்த தந்தையின் அரசியல் பாரம்பரியத்தை பின்பற்றி அரசியலில் இறங்கிய ராஜசேகரரெட்டி மருத்துவம் படிக்கும்போதே மண்டல அரசியலில் பிரபலமானார்.மருத்துவ பட்டம் பெற்ற பிறகு ஜம்மாலமாடுகு மிஷன் மருத்துவமனையில் மெடிக்கல் ஆஃபீஸராக பணியைத்துவக்கினார்.1973 ஆம் ஆண்டு 70 படுக்கை வசதிக்கொண்ட விசாலமான மருத்தவமனையாக மாற்றி சாதித்துக்காட்டினார்.
1978 ஆம் ஆண்டு ரெட்டி முழு அரசியலில் களமிறங்கினார்.புலிவெண்டுலு சட்டசபைத்தொகுதியிலிருந்து உறுப்பினராக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.1980 முதல் 1983 வரை மாநில அமைச்சராக பணியாற்றினார்.1983 ஆம் ஆண்டு என்.டி.ராமராவ் பெரும் பெரும்பாண்மை பெற்று சாதனை படைத்து முதல்வராக பதவியேற்றக்காலக்கட்டத்தில் கூட புலிவெண்டுலு சட்டமன்றம் ரெட்டியை கைவிடவில்லை.ரெட்டியின் திறமையை கண்டுக்கொண்ட இந்திராகாந்தி ரெட்டியின் 34 ஆம் வயதில் ஆந்திரமாநிலத்தின் காங்கிரஸ்தலைவராக நியமனம் செய்தார்.
1989 ஆம் ஆண்டு கடப்பா மக்களவைத்தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1999 வரை இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராகயிருந்த ரெட்டி பின்னர் மாநில அரசியலில் கவனத்தை திருப்பினார்.இந்தக்காலக்கட்டத்தில் அவர் மாநில காங்கிரஸ் தலைவராகயிருந்தார்.தேர்தல்களில் கட்சியை முன்னணியில் வழி நடத்தியவர் ரெட்டி.சட்டசபையில் எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றினார்.2003 ஆம் ஆண்டு தெலுங்குதேசத்தின் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து சுட்டெரிக்கும் கடும்வெயிலில் மாநிலம் முழுவதும் 64 நாள்கள் நீண்ட 1400 மைல்கள் கொண்ட யாத்திரையை ரெட்டி மேற்க்கொண்டார்.இது அவரது அரசியல் வாழ்வில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியது.இந்த யாத்திரை மூலம் பொதுமக்களின் யதார்த்த பிரச்சனைகள் என்ன என்பதை ரெட்டி புரிந்துக்கொண்டார்.தொடர்ந்து முதல்வராக பதவியேற்ற ரெட்டி விவசாயிகளுக்கு சலுகையில் மின்சாரம்,கடன் தள்ளுபடி,ரெண்டு ரூபாய் அரிசி,கம்யூனிடி ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்கீம் ஆகிய ஏழைகளுக்கு நலன்பயக்கும் திட்டங்களின் மூலம் மக்கள் மனங்களில் ஆழமான இடத்தை பிடித்தார் ரெட்டி.முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதில் தீவிரம் காட்டியவர் ரெட்டி.

இந்தோனேசியாவில் பூகம்பம்:44 பேர் மரணம்


இந்தோனேசியாவிலிலுள்ள ஜாவா தீவின் மேற்கிலிலுள்ள தஸிக்மலயா நகரத்தில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்நகரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.பூகம்பத்தின் அளவு ரிக்டர் ஸ்கேலில் 7 ஆக பதிவுச்செய்யப்பட்டுள்ளது.

Monday, August 31, 2009

புகைப்பிடித்தலை விட்டொழிப்பவருக்கு பத்தாயிரம் திர்ஹம் பரிசு


ஷார்ஜா:புகைப்பிடித்தலை விட்டொழிப்பவருக்கு பத்தாயிரம் திர்ஹம் பரிசுத்தொகையாக வழங்கப்படுமென ஷார்ஜா இஸ்லாமிய விவகாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த புனித ரமலான் மாதத்தில் புகைப்பிடித்தலை கைவிட்டு புதிய வாழ்க்கையைத்தொடங்குவதாக நூற்றுக்கணக்கானோர் தங்களது பெயர்களை பதிவுச்செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடமும் புகைப்பழக்கத்தை கைவிடுவதை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு பிரச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடுச்செய்யப்பட்டிருந்தது.2008 ஆண்டு முதல் புகைபிடிப்பதற்கு தடை அமுலில் வந்தது. புகைப்பழக்கத்தை விட்டொழிப்பவர்கள் மருத்துவ பரிசோதனை மூலம் நிரூபிக்கவேண்டும். ரமலானில் 30 தினங்களிலும் புகை பிடிக்காதவர்களை தேர்ந்தெடுத்து குலுக்கல் மூலம் தேர்வுச்செய்யப்படுபவருக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் திர்ஹம் பரிசாக வழங்கப்படும்.

துபை:டாக்டர் ஜாஹிர் நாயக் கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது இஸ்லாத்தை தனது வாழ்க்கைநெறியாக ஏற்ற ஐரோப்பிய பெண்மணி



பிரபல இஸ்லாமிய அறிஞரும் உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கும் பிறமதங்களுக்கிடையேயான விவாதங்களை வெற்றிகரமாக நடத்தி வரும்இந்தியாவின் மும்பை நகரத்தைச்சார்ந்த டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்கள்துபை அரசு சார்பில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் நடத்தி வரும்புனித குர்ஆன் விருது நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்ட சிறப்புரை நிகழ்ச்சியில்பங்கேற்று கடந்த ஆகஸ்ட் 27,28 தினங்களில் உரை நிகழ்த்தினார்.

இவ்வுரை நிகழ்ச்சிகள் துபை ஏர்போர்ட் எக்ஸ்போ என்ற பிரமாண்டஅரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சுமார் 22 ஆயிரம் பேர்கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் முஸ்லிம்கள்மட்டுமல்லாது பல்வேறு சமயங்களைச்சார்ந்தோறும் கலந்துக்கொண்டனர்.
முதல் நிகழ்ச்சியில் "அழைப்பு பணியா அல்லது அழிவா”(“Dawaah or Destruction”) என்ற தலைப்பில் தாஃவாவின் முக்கியத்துவம் குறித்துகுர்ஆன்,சுன்னா ஆதாரங்களுடன் உதாரணங்களையும் கூறி சிறப்பானதொருஉரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்கலந்துக்கொண்டு ஐரோப்பாவைச்சார்ந்த பெண்மணி ஒருவர் இஸ்லாம்குறித்து தர்க்கரீதியான(Logic) கேள்வியொன்றை எழுப்பினார்.அவருடையகேள்விக்கு அறிவுப்பூர்வமான பதிலை டாக்டர்.ஜாஹிர் நாயக் அவர்கள்கூறியதைக்கேட்டு திருப்தியடைந்த அப்பெண்மணி சத்தியம் இதுதான் என்றுதெளிவானதும் ஷஹாதா கலிமா சொல்லி இஸ்லாத்தைஒப்புக்கொண்டார்.(அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தில் அவருடைய பாதங்களை உறுதிப்படுத்துவானாக).

டாக்டர் ஜாஹிர் நாயக்கின் நிகழ்ச்சியின் காரணமாக துபாய் ஏர்போர்ட்டெர்மினல் 3க்கு செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்காணப்பட்டது.

புவி நிலையத்துடன் தொடர்பு இழந்தது சந்திரயான்!


நிலவைச் சுற்றிக் கொண்டு அது குறித்த பல்வேறு தகவல்களை கடந்த 312 நாட்களாக அளித்துக் கொண்டிருந்த சந்திரயான் 1 விண்கலம், நேற்று நள்ளிரவு புவி நிலையத்துடனான தொடர்பை இழந்தது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கூறியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 1 விண்கலம், நேற்றுவரை 3,400 முறை நிலவைச் சுற்றி வந்து பல தகவல்களை பெங்களூருவிற்கு அருகிலுள்ள பயலாலு புவி நிலையத்திற்கு அளித்து வந்தது. இறுதியாக நேற்று இரவு 12.25 மணிக்கு அது கடைசியாக தகவல் அனுப்பியது. அதன் பிறகு புவி நிலையத்துடனான தொடர்பை சந்திரயான் விண்கலம் இழந்துவிட்டதாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
புவி நிலையத்துடனான தொடர்பை இழந்ததையடுத்து சந்திரயான் 1 திட்டம் முடிவிற்கு வந்துவிட்டதாக, அத்திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுக் காலத்திற்கு திட்டமிடப்பட்ட சந்திரயான் 1 விண்கலத்தின் பணி 10 மாத காலத்திற்குள் முடிந்துவிட்டாலும், அது சாதிக்கவேண்டிய 90-95 விழுக்காட்டுப் பணிகளை துல்லியமாக நிறைவேற்றிவிட்டது என்று அண்ணாதுரை கூறினார்.
சந்திரயான் அனுப்பிய தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படுகிறது என்றும், அதன் துணை அமைப்புகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை அதனைக் கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன் விண்கலத்தில் நிலவின் மேற்பகுதியை ஆராயும் டெர்ரைன் மேப்பிங் கேமிரா, நிலவின் பரப்பில் உள்ள கனிமங்களை ஆராயும் கருவி, அதன் காற்று வெளியை ஆராயும் ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜர் உள்ளிட்ட பல கருவிகள் பொறுத்தப்பட்டு ஆய்வு செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் சுஷ்மா சுவராஜ்? RSS சமரசத் திட்டம்!



பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசலை முடிவிற்குக் கொண்டுவர அத்வானியை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகச் செய்துவிட்டு, அவருக்கு பதிலாக சுஷ்மா சுவராஜை நியமிப்பது என்று (RSS)ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் ஒரு சமரசத் திட்டத்தை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.
புது டெல்லியில் தங்கியுள்ள ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கின் தலைவர் மோகன் பகவத், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். அதனடிப்படையில் பா.ஜ.க. கட்சி அமைப்பிலும், நாடாளுமன்றத்திலும் பொறுப்பிலுள்ளவர்களை மாற்றும் ஒரு சமரசத் திட்டத்தை தயாரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மோகன் பகவத் தாயாரித்துள்ள அந்த சமரசத் திட்டத்தின்படி, இந்த ஆண்டு இறுதியில் பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகும் ராஜ்நாத் சிங்கிற்கு பதிலாக தற்போது மாநிலங்களவையில் அக்கட்சியின் தலைவராக உள்ள அருண் ஜெய்ட்லி கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து தற்போது அக்கட்சியின் துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடு, மாநிலங்களவைக் கட்சித் தலைவராவார் என்றும் கூறப்படுகிறது.மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அத்வானி அப்பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள, அவருக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித் தலைவராவார் என்று கூறப்படுகிறது. பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அத்வானிக்கு எதிராக கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளதையடுத்து அவரை அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விடுவிப்பது என்பது முடிவாகிவிட்ட ஒன்று என்று கூறப்படுகிறது. கட்சியின் உள்கட்சிப் பூசலிற்கு முடிவு கட்ட மோகன் பகவத் உருவாக்கியுள்ள சமரசத் திட்டம் இறுதி செய்யப்ட்டுள்ள நிலையில், இன்று மாலை அவரை அத்வானி சந்தித்துப் பேசுகிறார்.இந்தச் சந்திப்பிற்குப் பிறகு எடுக்கப்படும் சில முடிவுகளின்படி அனைத்துத் தலைவர்களும் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு:வகுப்புக்கலவரத்தில் இளைஞர் படுகொலை, 5000 போலீசார் குவிப்பு



பெங்களூரு:கடந்த வியாழக்கிழமை இளைஞர் படுகொலைச்செய்யப்பட்டு கல்வீச்சு சம்பவம் நடந்ததையடுத்து கிழக்கு பெங்களூரிலிலுள்ள கெ.ஜி.ஹள்ளி மற்றும் ஃப்ரேசர் நகர் ஆகிய பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டு கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து நகர காவல்துறை 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஃப்ரேசர் நகர், டி.ஜெ.ஹள்ளி, கெ.ஜி.ஹள்ளி, ஹன்னூர்,நகவரா, பனஸ்வாடி, டன்னேரி சாலை மற்றும் சம்பிகெஹள்ளி ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். வன்முறைகள் நடைபெறுவதற்கு காரணம் என்னவெனில் கெ.ஜி.ஹள்ளி பகுதியிலிலுள்ள மஸ்ஜிது ஒன்றின் வழியாக மாலை 6.30 மணியளவில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் சென்றுள்ளது.இதில் கலந்துக்கொண்டவர்கள் மோசமான கோசங்களை எழுப்பியுள்ளனர்.அவ்வேளையில் முஸ்லிம்கள் மஸ்ஜிதில் நோன்பு திறந்துவிட்டு மஃரிப் தொழுகைக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் மஸ்ஜிதிலிருந்த முஸ்லிம்கள் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்களிடம் சத்தம் போடாதீர்கள் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து பிரச்சனை உருவாகியுள்ளது.நிலைமை மோசமடையவே கெ.ஜி.ஹள்ளி இன்ஸ்பெக்டர் டி.ரங்கப்பா தலைமையிலான படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை சமாளித்து அமைதி ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
இருந்த போதிலும் இப்பிரச்சனை வியாழக்கிழமை இரவிலிருந்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.இந்நிலையில் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட கிறிஸ்டோபர் வினித்(வயது 22) என்ற இளைஞருக்கு(கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்ட இவர் ஆண்டுதோறும் விநாயக விஜர்சன ஊர்வலத்தில் தவறாமல் கலந்துக்கொள்பவர்) உடனடியாக லிங்கராஜபுரத்திற்கு வருமாறு அழைப்புவரவே கிறிஸ்டோபர் தனது நண்பர் விக்ரமுடன் லிங்கராஜபுரத்திற்கு புறப்பட்டு செல்ல எத்தனித்து சில அடிகளை தாண்டிய வேளையில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து வினித்தை வழிமறித்து தாக்கி கத்தியால் குத்தியுள்ளது.வினித்தை காப்பாற்ற முயன்ற விக்ரமையும் ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.இந்நிலையில் விக்ரம் வினீத்தின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கவே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வினீத்தை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிட்சை பலனளிக்காமல் வினீத் இறந்துவிட்டார். இச்செய்தி வெளியே பரவியதும் சம்பிகெஹள்ளி மற்றும் நகவரா ஆகிய பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது.இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை 144 தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. பெங்களூரு ஒன்றின் முக்கிய பகுதியில் கடைகளும் ஏ.டி.எம் செண்டர்களும் மூடப்பட்டன.

Dalits – Hindu or Muslim – are non-existent in Bihar Media: Study


A survey by media researchers has revealed that Dalit Hindus are only 1% in Bihari media. But senior journalists and editors are all upper caste Hindus.

Study conducted by Pramod Ranjan and published in a book, ‘Partnership in Media’- a study of Media in Bihar, looked at the caste affiliation of all journalists who occupy positions of influence in their respective organizations. Caste background of editors, news editors, bureau chiefs, senior journalists of Bihari media and media organizations with a presence in Bihar was documented for this study. They looked at journalists working in Hindi and English print publications and Hindi and English electronic media, a total of 78 journalsits working in 42 media organizations based in Patna. They found that almost all journalists with editorial influence in Hindi and English newspapers and electronic media are upper caste Hindu males.

Upper caste Hindus

OBCs

Ashraf Muslims

Dalit Muslims

Dalit Hindus

Hindi Print

87%

9%

1%

0%

3%

English Print

75%

19%

4%

0%

0%

Urdu Print

8%

66%

26%

0%

Electronic

90%

7%

3%

0%

0%

Total

73%

10%

12%

4%

1%

When Urdu newspapers were included and all journalists were considered i.e. 230 journalists in 47 media organizations, situation was only a bit better.

For all combined, upper caste Hindus are 73% in these 47 organizations. OBCs occupy 10%, Ashraf Muslims are 12% and Dalit or Pasmanda Muslims are 4%. Dalit Hindus are only 1% of the total jobs and that too all of them are in Hindi print journalism.

Dalit Musilms’ high number is because of their higher representation in Urdu newspapers. Three of the five Urdu newspapers published from Patna- Sangam, Pindar, and Farooqi Tanzeem are owned by Dalit Musilms and this gives the skewed figures for them otherwise they are not in Hindi, English, and electronic Media.

Ashraf Muslims are 1% in Hindi, 4% in English and 3% in electronic media. Muslim women are nowhere to be found in any media organization. Even Urdu newspapers have not given them position of influence.

Talking to TwoCircles.net, Pramod Ranjan, author of the study said that Dalits and OBCs exist in media structure but at a lower level and even there it is not proportional to their share in the population. He said that these marginalized people exist overwhelmingly in labour jobs e.g. machine operators, computer operators, news hawkers, etc.

Though a majority of Urdu newspapers are owned by Dalit and they seem to have more editorial control but still Ranjan laments that their coverage of issues is not much different than Qaumi Tanzeem and Roznama Rashtriya Sahara- the other two Urdu dailies.

Another interesting data is that there are 19% OBCs in English print but only 9% in Hindi print publications. Electronic media and English print is also better for women where they are 7% and 10% of total jobs, respectively.

The survey was conducted in June 2009 and looked at only those journalists who are directly associated with main news department. Journalisst doing sports, features etc. were not included in this survey. For bigger publications only 20 journalists starting from top most positions were included in this survey and all journalists from smaller publications.