அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 15, 2009

துபாய்க்கு அபுதாபி 10 பில்லியன் டாலர் கடனுதவி!

துபாய் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து துபாய் அரசாங்கம் இன்று கொடுக்க வேண்டிய 4.1 பில்லியன் டாலர் மதிப்பிலான இஸ்லாமிய சுகூக்குக்கான நிதியை கொடுக்குமா என்பது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. இச்சூழலில் 10 பில்லியன் டாலர் நிதியை துபாய் அபுதாபியிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் துபாய் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் மீதமுள்ள 5.9 பில்லியன் டாலர் 2010 ஏப்ரல் வரையான துபாய் வேர்ல்டின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்று கூறிய ஷேக் அஹமத் பின் சயீத் அல் மக்தூம், துபாய் எப்போதும் தன் வாக்குகளையும் சர்வதேச சட்டங்களையும் மதித்து நடக்கும் நாடு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறோம் என்றார்.

துபாய் முன்பிருந்ததைப் போன்று எப்போதும் பிரகாசமான பொருளாதார மையமாக விளங்கும். எங்கள் சிறப்பான காலம் இனி மேல் தான் வரவிருக்கின்றது என்றும் அஹ்மத் கூறினார். இவ்வறிப்பின் காரணத்தால் துபாய் மட்டுமல்லாது வளைகுடா சந்தைகளும் இன்று ஏறுமுகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: