அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 28, 2011

சாய்பாபா – நறுமண சாமியாரின் சொகுசு வாழ்க்கை விபரங்கள்


புட்டபர்த்தி : சாய்பாபாவின் ஆசிரமத்தில் சோதனை செய்யும் அதிகாரிகள் அவரது தனி அறையான யஜுர் மந்திரில் கிலோ கணக்காய் தங்கம், வெள்ளி எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரின் அன்றாட பயன்பாட்டுக்காக பயன்படுத்திய அழகு சாதன பொருட்களை பார்த்து திகைத்து போய் உள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட ஷேவிங் செட்கள், விலை உயர்ந்த சர்வதேச செண்டுகள், ஷாம்புகள், சோப்கள் மற்றும் நாப்கின்கள் அவரின் அறை முழுக்க இருந்ததாக தெரிகிறது. எப்போது உபதேசம் செய்ய வரும் போதும் நறுமணங்களை பூசிக் கொள்ளும் பழக்கம் உடையவராக சாய்பாபா இருந்ததாக தெரிகிறது. மேலும் உலகின் முண்ணணி பிராண்டுகளின் கைக்கடிகாரங்களும் உயர்ந்த ரக உலர் பழங்களின் பாக்கெட்டுகளும் ஏராளமாய் இருந்துள்ளது.
அது போல் பக்தர்கள் நன்கொடையாய் கொடுத்த ஏராளமான பொருட்கள் திறக்கப்படாமலேயே உள்ளது. 7 கிலோ எடை கொண்ட தங்க மாலைகள், 75 வெள்ளி டம்ளர்கள் உள்ளிட்ட பல அன்பளிப்புகள் அப்படியே திறக்கப்படாமல் உள்ளன. உலகில் வாழும் சாமியார்களில் வேறு யாருக்கும் பக்தர்கள் இது போல் கொடுத்ததை தாங்கள் கண்டதில்லை என்று சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறினர்.
அது போல் 10,000 க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த சேலைகள், பிராண்டட் சட்டைகள், வேட்டிகளும் சாய்பாபாவின் அந்தரங்க அறைக்குள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. 2005-லிருந்தி இவ்வறையில் வசிக்கும் சாய்பாபா இவ்வறையில் டிரஸ்டின் மூத்த உறுப்பினர்களை கூட இவ்வறைக்குள் அனுமதித்ததில்லை என்பதும் அவரின் அந்தரங்க உதவியாளர் சத்யஜித்க்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: