அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, September 27, 2010

பரிந்துப்பேச உனையன்றி ..

eye-crying.jpg


அஸ்ஸலாமு அலைக்கும்,

வழிமேல் விழிவைத்துக்

காத்திருந்தாலும்

வலி மட்டுமே மிஞ்சும்;

உன் நினைவுகள் எப்போதும் கெஞ்சும்!

ஒருமாத விடுப்பில்

ஒய்யாரமாய் வந்தாய்;

மணம் முடித்தாய்

கனம் கொடுத்தாய்;

கடல் தாண்டினாய்!

புதுமுகமாய் எல்லோரும்

உன் வீட்டில் -என்

புத்தம் புது ஆடைகளெல்லாம்

எனைப் பார்க்க வந்த

உன் உறவினருக்காக!

முதல் மாதத்தில் கேட்டேன்

எப்போது திரும்புவாய் என்று;

சிரித்தாய்;

மறு மாதத்தில் கேட்டேன்

புன்னகைத்தாய்;

மற்றொரு முறைக் கேட்டேன்

கடுகடுத்தாய்!

புரியாத எனக்கு

புதிராகவே இருந்தது;

மனம் கனமாக இருந்தது!

பரிந்துப்பேச உனையன்றி

யாருமில்லை எனக்கு;

புரிந்துக் கொண்டு

புறப்பட்டுவா அன்புக்

கட்டளையிடுகிறேன் உனக்கு!

இப்படி

மணம் முடித்து

மனம் கொடுத்து

தனம் எடுக்க

வனம் இருந்து

வாழ்வதற்கு

வந்துவிடு இங்கே!

No comments: