அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, February 12, 2012

முஸ்லீம்களின் உரிமையை உறுதி செய்வேன்: சல்மான் குர்ஷித்!

ஃபரூக்காபாத்,பிப்.11- காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சட்ட துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது மனைவி போட்டியிடும் ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 27 சதவிகிதத்தில் சிறுபான்மையினருக்கான உள் ஒதுக்கீடு 9 சதவிகிதமாக உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.



இந்த வாக்குறுதிக்காக தேர்தல் ஆணையம் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவர் கூறியிருப்பதாவது:

பஸ்மந்தா முஸ்லீம்களின் உரிமையை நிலைநாட்டுவேன். தேர்தல் ஆணையம் என்னை தூக்கில் இட்டாலும் இவர்களின் உரிமையை பெற உறுதி செய்வேன் என கூறியுள்ளார்.

No comments: