அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, March 25, 2012

தேச விரோத அமைப்புகளான சிவசேனா ,R S S ஆதரவாளர்களின் கள்ள நாணய அச்சடிப்பு !



மும்பையில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி சிலர் கள்ளமார்க்கெட்டில் நாணயங்களை விற்கிறார்கள். இவர்களிடம் நூறு ரூபாய்க்கு (சில்லரைக்கு) ரூ.120 வரை கொடுக்க வேண்டும். பண்டிகைக் காலங்களில் ரூ.125 வரை கொடுக்க வேண்டுமாம். தெற்கு மும்பை வி.எச்.பி, சிவசேனா வியாபாரிகள் நாணயங்களை அச்சிட்டு சந்தையில் வெளியிட்டுள்ளார்கள் எம்.கே.வி. என்ற வியாபாரிகள் சங்கத்தின் கீழ் செயல்படும். வி.எச்.பி., சிவசேனா வியாபாரிகள்தான் இந்த நாணய அச்சடிப்பு வேலையில் இறங்கியுள்ளனர். அவர்கள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மதிப்புள்ள சுமார் 50 ஆயிரம் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.
நாணயத்தின் ஒரு பக்கத்தில் சங்கத்தின் பெயரான எம்.கே.வி.யின் சின்னமும் உள்ளது. அடுத்த பக்கத்தில் நாணயத்தின் மதிப்பு இடம்பெற்றுள்ளது. 
இந்த நாணயங்களை மொத்த மார்க்கெட்டில் வியாபாரிகளிடையே புழக்கத்தில் விட்டுள்ளனர். இந்த தேசவிரோத செயலை வி.எச்.பி., சிவசேனா நியாயப்படுத்தியும் உள்ளனர். அதாவது வழக்கமான ரிசர்வ் வங்கி வெளியிடும் நாணயங்களைப் போல் கள்ள நாணயம் வெளியிடவில்லை. எங்கள் பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தைத்தான் வெளியிட்டுள்ளோம்; இது வியாபாரிகள் மத்தியில் சில்லரைத் தட்டுப்பாட்டை குறைத்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நாணயப் புழக்கம் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் யாரும் கருத்துக்கூற முன்வரவில்லை. மாநில அரசும் இந்த நாணயத்தைத் தடை செய்யவில்லை. காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்படியே போனால் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களையும் இவர்கள் சங்கத்தின் முத்திரையுடன் வெளியிட்டு புழக்கத்தில் விட்டால் நாட்டின் பொருளாதார நிலை என்னவாகும்? மும்பையைப் போல் அனைத்து மாநிலங்களிலும் வியாபாரிகள் தனியாக நாணயம் வெளியிட்டால் இந்தியாவின் நாணய மதிப்பு வீழ்ச்சியுற்று சந்தைப் பொருட்களின் விலையேற்றம் தாறுமாறாக உயர்ந்து மக்கள் பொருட்களை வாங்கும் சக்தி இல்லாமல் பசி, பட்டினியால் மடிந்துபோகும் சூழ்நிலை உருவாகும். மாநிலங்கள் அனைத்தும் தனித்தனி நாணயங்களை வெளியிட்டால் நாடு தனித்தனியாக துண்டாடப்பட்டு இந்தியா என்ற ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு ரஷ்யாவைப் போன்று பிளவுண்டு போகும் நிலை உருவாகிவிடும்.

இந்த நிலையில் நாடு இருக்கும்போது தாங்களே சொந்தமாக நாணயம் அச்சிட்டு வெளியிட்டு தெற்கு மும்பையில் புழக்கத்தில் உள்ள நாணயங்களைத் தடைசெய்வதோடு, இதன் பின்னணியில் உள்ள சிவசேனா, வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற தேசவிரோத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். செய்யுமா மத்திய அரசு?

நன்றி மக்கள் மனசு

No comments: