அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, April 26, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த ஏப்ர்ல் 2ம் தேதி, விசேஷ கோர்ட் நீதிபதி சைனி முன் தாக்கல் செய்தது. அதில், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, பல்வா உட்பட ஒன்பது பேர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இவ்வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது (துணை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அதில், தி.மு.க.கட்சியின் ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் "டிவி”யின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார் ரெட்டி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இன்னொரு துணை குற்றப்பத்திரிகையும் சி.பி.ஐ. தரப்பில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது, அடுத்து மாதம் 30ம் தேதியன்று தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments: