* 1992 ஆம் ஆண்டில் அவர் கண்ணெதிரே அரங்கேற்றப் பட்ட பாபர் மசூதி இடிப்பு சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தது.
Thursday, February 19, 2009
அத்வானி வாழ்நாள் சாதனையாளரா?
* 1992 ஆம் ஆண்டில் அவர் கண்ணெதிரே அரங்கேற்றப் பட்ட பாபர் மசூதி இடிப்பு சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தது.
Pakistan's Swat to get Islamic law
Pakistan's government has agreed to restore sharia, or Islamic law, in the Swat Valley and neighbouring areas of the country's northwest as part of a peace deal with local pro-Taliban fighters. The agreement was reached after talks in Peshawar between members of Tahrik-e-Nafiz Shariat Muhammadi and officials of the North West Frontier Province (NWFP) government on Monday. Announcing the decision to restore sharia, a spokesman for the NWFP government said Asif Ali Zardari, the Pakistani president, had already agreed in principle to the concession to the region's religious conservatives. Officials gave few details of the kind of sharia they were planning to implement in the Malakand region, which includes Swat Valley, but said that laws that fail to comply with Islamic texts would be suspended. "All un-Islamic laws related to the judicial system, those against the Quran and Sunnah, would be subject to cancellation and considered null and void," a NWFP spokesman said in a statement following the talks. The Pakistani government has also agreed its troops will refrain from launching military operations in Swat as part of the deal. US response The US, which is battling Taliban and al-Qaeda groups in the area, has previously said that such deals only serve to allow fighters to regroup.
Tommy Vietor, a White House spokesman, said later that US officials had read the reports and were "in touch with the government of Pakistan about the ongoing situation in Swat". Speaking in India, Richard Holbrooke, the US special envoy to the region, did not directly address Pakistan's move but said the rise of the Taliban in Swat underscored the point that "India, the US and Pakistan all have a common threat now". "I talked to people from Swat and they were frankly quite terrified … Swat has really deeply affected the people of Pakistan," he added.. The Tahrik-e-Nafiz Shariat Muhammadi, or the Movement for the Enforcement of Islamic Law, has long demanded the implementation of sharia in the region. Al Jazeera's Kamal Hyder, explaining that sharia had been implemented in the region before, pointed out that the majority of people in the area were very conservative. Residents wanted sharia because they say the justice is swifter, our correspondent said, but added that the judges would still be appointed by Pakistan's government. Criticism But critics expressed doubt that the deal would stop the violence in the region, pointing out that similar agreements in the past had broken down, the latest one in August, and only allowed fighters to regroup and rearm.
"It will mean that the government is ceding territory to the Taliban, which will be a repeat of what happened when Prime Minister Benazir Bhutto was in power in 1994 and a number of districts in Swat and Malakand were handed over to essentially the same group so they could impose their rather convoluted view of sharia on those districts. "The moment you cede space to them, the Taliban will want to extend that control and then the government will have to go through this business of sending in the military yet again to clear and hold the territory." Necessary negotiations But Pakistan says that force alone cannot defeat all opposition groups and that talks must take place, although several past deals have failed.
Conservative groups aiming to introduce sharia have been fighting government troops in the region since 2007. The groups took control there after a 2008 peace deal collapsed within months of being signed. Much of the violence, which has left hundreds of thousands of people homeless, has been blamed on the Taliban in Swat, headed by Mullah Fazlullah, the son-in-law of Maulana Sufi Muhammad, the leader of Tahrik-e-Nafiz Shariat Muhammadi. Government struggle Regaining control of the Swat Valley - which was formerly a popular tourist destination - is a significant test for Pakistan's civilian leadership. Separately on Monday, at least 15 people were killed when a suspected US drone fired two missiles at a target on Pakistan's border region with Afghanistan. A security official in Pakistan's Kurram tribal region said that a building used by the Taliban was destroyed in the attack. "Afghan Taliban were holding an important meeting there when the missiles were fired," an intelligence official in the area said. |
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகடாக்டர் ராமதாஸ் அபாண்டம்
வட இந்தியாவில் இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் முஸ்லிம்கள் மீது சுமத்தி வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈடாக தமிழக முஸ்லிம்களையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு டாக்டர் ராமதாஸின் பேட்டி வழிவகுத்துள்ளது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அப்பாவி தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படகூடாது என்பதில் தமிழக முஸ்லிம்களும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அக்கறை கொண்டவர்கள்.
ஏனெனில் இலங்கை இராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் பாதிக்கப்படுவதைபோல், விடுதலைப்புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பலமடங்கு பாதிக்கப்பட்ட வர்கள்.குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணிக்கு துப்பாக்கி முனையில் புகுந்த விடுதலைப்புலிகள், இலட்சத்திற்கும் மேற்பட்ட அங்குள்ள முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி கொண்டு 24 மணி நேர அவகாசத்தில் வாழ்ந்த இடங்களை விட்டு உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்க தயாராக இல்லை.
அவர்களில் பலரது பூர்வீகம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு ராமதாஸை போன்ற வர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.இலங்கையின் கிழக்கு மாகானத்திலுள்ள காத்தான் குடி பள்ளிவாசலில் இரவு தொழுகை தொழுது கொண்டிருந்த நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானவர்களை விடுதலை புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது டாக்டர் ராமதாஸை போன்றவர்களுக்கு மறந்திருக்கலாம். ஏனெனில் இலங்கை தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், உள்ளிட்டவர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப் பட்டதையே மறந்து விட்டவர்கள்தானே இவர்கள்.புலனருவ மாவட்டத்தில் நள்ளிரவில் புகுந்த விடுதலைப்புலிகள் முஸ்லிம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவருமே மறக்க மாட்டார்கள்..
தமிழகத்தின் தொப்புள்கொடி உறவு தமிழர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள்தான் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என தடுத்தவர்கள் யாழ்ப்பாண தமிழர்கள் என்பதும், இதைப்பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நாடாளுமன்றத்தில் திரு.கே.டி. கோசல்ராம் நாடார் அவர்கள் சுட்டிக்காட்டியதும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஒன்று.இவைகள் அனைத்தையும் மறந்து விட்டு, சொந்த நாட்டிலும் பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது அநியாயமான அவதூறை டாக்டர் ராமதாஸ் சுமத்துவது, இந்திய தாய் நாட்டின் மீது விசுவாசம் கொண்டு பிரிவினை நேரத்தில் கிழக்கு பாகிஸ்தானி லிருந்து அஸ்ஸாமிற்கு வந்து குடியேறிய முஸ்லிம்களை, வங்கதேச வெளிநாட்டவர் என்று விரட்டத்துணியும் பாரதிய ஜனதாவின் செயலை விட கொடூர செயலாகும்.
நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இலங்கை பிரச்சினையில் காய் நகர்த்தும் டாக்டர் ராமதாஸ், இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், இந்திய அரசு இலங்கை தமிழர்களை காப்பாற்ற உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று அவர் சொல்வது உண்மையாக இருக்குமேயானால் மத்திய அமைச்சராக உள்ள அவரது மகன் பதவியை விலக செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும்.
அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் மீது அபாண்ட பழி சுமத்துவது அவரது சாயத்தை வெளுக்க வைக்கும் செயலாகும். இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது.
- காயல் மகபூப்.
மாநில செயலாளர்தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
புலி பாசிசத்தின் முடிவும், பேரினவாத பாசிசத்தின் ஆக்கிரமிப்பும்
தமிழ் மக்களுக்கு விடிவு கிடையாது. எந்த சுபீட்சமும் கிடையாது. எந்த நம்பிக்கையும் கிடையாது. இருண்டு போன பாசிச சூழலுக்குள், மக்கள் மீள மீள அழுத்தப்படுகின்றனர்.
புலிபாசிசத்துக்கு எதிரான வரலாறு, மிக வேகமாக மக்களால் எழுதப்படுகின்றது. மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் சாகடித்து விட்டு, அவர்களை நடைப்பிணமாக்கியவர்கள், அதன் சொந்த விளைவையே தான் அனுபவிக்கின்றனர். முடிவின் (புலிப்பாசிசத்தின்) நாட்கள் எண்ணப்படுகின்றது.
இதன் வரலாற்று வேர் ஆழமானது. பேரினவாதம் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய கொடூரங்களை எதிர்கொள்ளவே இயக்கங்கள் தோன்றின. அவை படிப்படியாக சமூகவிரோத குண்டர் குழுக்களாக, கொலைகாரக் குண்டர்களாக, மாபியாக்களாக, அன்னிய கூலிக் குழுக்களாக சிதைந்து சின்னபின்னமாகினர். இதன் மூலம் மொத்த மக்களையும் தமக்கு எதிராக நிறுத்தினர். இவர்களிள் இந்த சொந்த நடத்தையைத்தான் தேசிய விடுதலை என்றனர். மக்களுக்கு எதிரான இந்த துரோகத்தையும், சமூக விரோதத்தையும் எதிர்த்தவர்களை, துரோகியாக காட்டிக் கொன்றனர்.
இந்த மக்கள் விரோத அரசியல் தமக்கு இடையிலான குழு மோதலாக, புலி படுகொலைகள் மூலம் அனைவரையும் அழித்தொழித்தனர். புலிகள் தமது தனிச் சர்வாதிகரத்தை பாசிச வழிகளில், தமிழ் மக்கள் மேல் திணித்தனர்.
இப்படி புலிப் பாசிச சர்வாதிகார நடைமுறைகள் தான், தேசியமாக காட்டப்பட்டது. இப்படி அண்ணளவாக 20 வருடங்கள் புலிப் பாசிசம் தனித்தாடிய வெறியாட்டம், இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எப்படி இது நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது. இந்த நிலையை நாம் மட்டும் தான் கடந்தகாலத்தில் முன்கூட்டியே தெளிவுபடுத்தினோம். அவற்றில் சில கீழே உள்ளது. முழுமையாக அவற்றை பார்க்க (பி.இரயாகரன்) செல்லவும். புலிகளின் அழிவை முன்கூட்டியே அரசியல் ரீதியாக சரியாக காரணகாரியத்துடன் சுட்டிக்காட்டிய நாம், தேசியத்தை சரியாக மீட்டெடுக்கும் அரசியல் வழிமுறைகளைக் கூட முன்வைத்தோம்.
1. அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?
2. புலிகளின் தேனிலவே பேரினவாதத்தின் வெற்றியாகவுள்ளது
3. புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?
4. தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான்
5. தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்
6. புலியிசத்தை யாராலும் இனி காப்பாற்ற முடியாது.
7. முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது
8. பாசிசப் புலி தோற்றுக் கொண்டிருக்கின்றது
9. புலிகள் பின்வாங்குகின்றார்களா? அல்லது தோற்கின்றார்களா?
10. புலிகள் தமது சொந்த அழிவை நோக்கி வலிந்து செல்லுகின்றனர்
இன்று இதைத் திரும்பிப்பார்த்தல் மூலம் தான், மீள்வதற்கான வழியையும் சரியாக இனம் காணமுடியும். புலியெதிர்ப்பு பேசும் அரசு சார்பு ஜனநாயகம், எல்லாம் கானல் நீர் தான். அவை கூட தமிழ் மக்களுக்கு எதிரானது தான். எப்படி புலித்தேசியம் மக்களுக்கு எதிரானதோ அப்படித்தான் இவையும். மக்களுக்கான போராட்டமாகாத எவையும், மக்களுக்கு எதிரானது.
புலித் தேசியம், புலியெதிர்ப்பு ஜனநாயகம் மக்களுக்கு எதைப் பெற்றுக்கொடுக்கும்;? மக்களுக்கு கிடைக்காத தேசியம், ஜனநாயகம் மக்களுக்கு எதிரானதே. இது அடக்குமுறையையும் அடிமைத்தனத்ததையும் தவிர வேறு எதையும் மக்களுக்கு வழங்குவதில்லை. உங்கள் யாராலும் இதைத் தாண்டிய ஒன்றை, மக்களுக்கு இவர்கள் வழங்குவார்கள் என்று எதையும் காட்டமுடியாது. ஆனால் இவை இரண்டும் தான், சிலரின் சுயநலத்துடன் போற்றப்;படுகின்றது, பீற்றப்படுகின்றது. எல்லாம் முடிவுக்கு வருகின்றது.
இது புலித் தேசியமாகவும், அரச இனவாதமாகவும் மாறி, ஒன்றை ஒன்று அழித்து மேவ முனைந்தது. மக்களுடன் சம்பந்தப்படாத இவை, மக்களை ஒடுக்கியது. ஒடுக்குவதைத் தவிர, இதனிடம் எந்த மக்கள் அரசியலும்; கிடையாது.
இது எத்தனை எத்தனை ஆயிரம் உயிர்களை கொன்று குவித்தது. துரோகியின் பெயரால், பயங்கரவாதத்தின் பெயரால், தியாகத்தின் பெயரால் ஆயிரம் ஆயிரம் உயிர்கள் பலியிடப்பட்டது. இப்படி மனிதம் சந்தித்த துயரங்கள் எல்லையற்றது. மக்களால் வெறுக்கப்பட்டவர்கள் நடத்துகின்ற இந்த யுத்தம். புலிகளின் முடிவாகி வருகின்றது.
புலிகளின் அழிவு எப்படித்தான் சாத்தியமாகின்றது
யாரும் இன்னமும் நம்பாத, நம்பமுடியாத வேகத்தில் நடக்கின்றது. புலிகளிடம் பாரிய படை உண்டு. அதே ஒர்மமும் உண்டு. ஆனால் யுத்தத்தில் நிற்க முடியவில்லை. ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக இழக்கப்படுகின்றது.
அன்று ஒவ்வொரு பிரதேசமும் புலிகளால் பிடிக்கப்பட்ட போது ஆர்ப்பரித்து கூத்தாடிய கூட்டம், இன்று ஒப்பாரி கூட வைக்காமல் புலியைப் புதைக்கின்றனர். எதுவும் நடவாத மாதிரியும், தமக்கு எந்த சம்பந்தமுமில்லாத மாதிரியும் காட்டிக்கொண்டு, புலியை திட்டித் தீhப்பதும் இழிவாடுவதும் மெதுவாக வெளிப்படுகின்றது. புதிய அரச ஆதரவுக் கும்பல் ஒன்று, இங்கிருந்து புற்றீசல் போல் உருவாகின்றது.
இந்தக் கும்பலின் சுயநலத்துடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள், கூத்துகள், வக்கிரங்கள் மனிதத்தை சாகடிக்க வைத்தது. போராட்ட உணர்வையும், உணர்ச்சியையும் உறிஞ்சிக் குடித்தது. சுயநலம் புலித்தேசத்தின் நெம்புகோலாக, அவை வீங்கி வெம்பியது. இது மலிவாக மலினமாக, இதை புலித்தேசியமாக ஊட்டப்பட்டது.
இங்கு உண்மையும், மனித வாழ்வும் புதைக்கப்பட்டது. மனித அழுகுரல்கள் புலித் தேசிய இசையாக்கப்பட்டு அதற்கு ஏற்பவே பாசிச நடனமாடப்பட்டது.
எல்லாம் சரியாக இருப்பதாக காட்டப்பட்டது, நம்பப்பட்டது. ஆம் இது போலியான அடுக்குமாடிக் கட்டிடம் என்பது, யாரால் தான் நம்பமுடியும்? நாம் மட்டும் தான் இதை அரசியல் ரீதியாக, இதன் பொய்யான விம்பத்தை முன் கூட்டியே முன் அறிவிக்க முடிந்தது.
வீங்கி வெம்பிய பிரமிப்புக்கள், அச்சங்கள் எல்லாவற்றையும் தாண்டியது மக்கள் சக்தி. மக்களை ஒடுக்கி அவர்களை இழிபிறவிகளாக சாகடித்துவிட்டு, பெருமை பேசி பீற்றிக்கொண்டிருந்த போதே, மக்கள் உணர்வியல் ரீதியாக, உணர்ச்சி ரீதியாக செத்துப்போனார்கள். விளைவு பிணம் நாறியது. அதுவே புலிக்கு எதிரான நஞ்சாகத் தொடங்கியது.
புலிக்கும் மக்களுக்கும் இடையில் இருந்த உறவுகள் செத்துவிட்டன. இதுமட்டுடா இல்லை, புலித்தேசியம் என்ற அரசியலற்ற வெற்றுக்கோசத்தின் பின், உணர்ச்சிகள் எதுவுமற்ற கூலிப்படையாக புலிகளின் அணி பல குறுக்கு வழிகளில் அணிதிரட்டப்பட்டது. இப்படி அவனோ யுத்தத்துக்கு முன்பே, செத்துக் கிடக்கின்றான்.
யுத்தம் செய்யும் உளவியல் பலத்தை, எந்த அரசியலும் வழிகாட்டவில்லை. வெறும் கோசங்கள், பிரமிப்புக்கள், பிரமைகள், நம்பிக்கைகள் எல்லாம் கேள்விக்குள்ளாகின்றது. அடிக்கடி தகர்ந்து போகின்றது. எல்லாவற்றையும் இருட்டடிப்பு செய்தாலும், செத்துப்போன போராட்ட உணர்வை, உணர்வூட்டவே முடியாது.
அதற்கு வரம்புண்டு. அவன் தனது சொந்த தலைமையையும், அதன் போலித்தனத்தையும், தனக்கு எதிரான அடக்குமுறையையும், கண்டும் உணர்ந்தும் அனுபவித்த வெறுப்போடு யுத்த முனையில் மரணிக்கின்றான். ஏன் எதற்கு யுத்தம் செய்கின்றோம் என்று தெரியாது, தனக்கு எதிராகவே யுத்தம் செய்கின்றான்.
தலைமையோ பழைய பாணியில் மீட்சிக்காக முனைகின்றது. ஒரு பாரிய தாக்குதல் மூலம், எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என்று நம்புகின்றது.
1. இதில் தோற்றால், அலையலையாக அடுத்தடுத்த தோல்விகள் ஏற்படும். இன்றைய வேகத்தை விட, அதன் வேகம் பல மடங்காக அமையும்.
2. இதில் வென்றால் அலையலையாக வெற்றிவராது. அதற்கான சூழல் எப்போதோ கடந்து வி;ட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1. புலிகளை மக்கள் எப்போதோ தோற்கடித்துவிட்டனர்.
2. பேரினவாதம் முன் எப்போதையும் விட, உறுதியான அரசியல் மற்றும் இராணுவ தலைமையைக் மிக நேர்த்தியாக புலிக்கு எதிராக அணிதிரட்டியுள்ளது. அரச கூலிகளாக மாறிய தமிழ் குழுக்களின் துரோகத்தை தனக்கு ஏற்ப, நுட்பமாக யுத்தமுறைக்கு ஏற்ப பிரித்தாளுகின்றது.
புலிகளின் வழமையான வழிகளில், மீட்சிக்கான பாதை இனி எதுவும் கிடையாது. புலியின் வழமையான குள்ளநரிப் பாதைகள், இன்றைய நிலையில் வெற்றிக்கான மீட்சிக்கான பாதைக்கு எதிரானதாகி நிற்கின்றது. இதன் விளைவு, புலிகள் துடைத்தெறியப்படுவார்கள். கொரிலா வடிவில் கூட புலிகள் எஞ்சமுடியாது. புலிக்கு முன்னால், இவை கூட புலி வடிவில் காலம் கடந்த ஒன்றாகிவிட்டது.
மாறாக இழப்புடன் கூடிய மீட்சிக்கான ஓரேயொரு மாற்றுப் பாதை உண்டு. அது, புலிகள் தம்மைத் தாம் முழுமையாக சுயவிமர்சனம் செய்வது. மக்களுக்காக மக்களின் கோரிக்கைகளுடன் தம்மை புனரமைப்பு செய்வது. இன்றும் தப்பிப் பிழைக்க இதைவிட்டால், வேறு எந்த குறுக்கு வழியும் இனி கிடையாது.
இஸ்லாமியத் தாயகக் கனவுகள் : [அல்கைதாதொடர் - 4]
"முஸ்லீம்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கென்றொரு நாடில்லை. யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஏதாவதொரு பிரச்சனையென்றால் ஒன்று சேர்ந்து நிற்பார்கள். எமது இன மக்களிடையே ஒற்றுமையில்லை. முஸ்லீம்கள் தமக்கிடையே சண்டையிடாமல்
ஒன்றுபடவேண்டும். முஸ்லீம்கள் தாம் வாழும் நாடுகளில் அடக்கப்படுகின்றனர். பாலஸ்தீனத்தில் எம்மின மக்களை யூதர்கள் அழித்துக் கொண்டிருப்பதை உலக நாடுகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈராக் , பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் எமதின மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை ஆதரிப்பது ஒரு முஸ்லீமின் கடமை."
எகிப்தில் தோன்றி பின்னர் பிற அரபு நாடுகளிலும் பரவிய "முஸ்லீம் சகோதரத்துவம் " என்ற கட்சியின் அடிக்கடி கூறப்படும் கொள்கை விளக்க உரை அது. அந்தக்கட்சியின் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் மேற்படி கருத்துகளைப் பிரச்சாரம் செய்கின்றனர். "முஸ்லீம் நாடுகள்" என்று பொதுவாகக் கூறப்படுவதை இவர்கள் ஏற்றுக்கொளவதில்லை. முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி இதை "முஸ்லீம் சமுகம்" , "இஸ்லாமிய சமுகம்" என இரண்டாக வரையறுக்கிறது. முதலாவதில் பெயரளவில் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். ஆனால் அரசாங்கம் மதசார்பற்றது. இரண்டாவது பிரிவில் அரசாங்கம் இஸ்லாமியச் சட்டப்படி ஆட்சி செய்யும், பிரஜைகள் மதத்தை நெறிதவறாது கடைப்பிடிக்க கடமைப்பட்வர்கள்.
எகிப்து: முதன்முதல் ஐரோப்பிய (பிரெஞ்சு) காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட அரபு நாடு. அதனால் அங்கு ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய மாதிரி நிர்வாக அலகுகளால் உருவான படித்த மத்திய தர வர்க்கம் மேற்கத்தைய அரசியல் சிந்தனைகளையும் வரித்துக் கொண்டது. அவர்களிடையே பல்வேறு தேசிய வாத அமைப்புகள் தோன்றின. முஸ்லீம் சகோதரத்துவமும் அப்போதுதான் (1928 ம் ஆண்டு) தோன்றியது. பிற அரசியல் சக்திகளிலிருந்து முஸ்லீம் சகோதரத்துவம் வேறுபட்ட கருத்துகளை முன்மொழிந்தது. அவர்கள் காண விரும்பியது சாதாரண எகிப்திய தேசிய அரசையல்ல. மேற்கே மொறோக்கோவிலிருந்து கிழக்கே ஈராக் வரை விரிந்த "அகன்ற இஸ்லாமியத் தேசிய அரசு" அமைப்பதே இவர்களின் நோக்கமாக இருந்தது. இந்த எதிர்காலக் கனவை அவர்கள் "ஆண்ட பரம்பரைக் கதைகளால்" நியாயப்படுத்தினர். ஐரோப்பியரின் காலனியத் தலையீடு ஏற்படும் வரை மத்திய கிழக்கு முழுவதும் ஒரே இஸ்லாமியப் பேரரசாக முஸ்லீம்களின் தாயகமாக இருந்ததை நினைவு படுத்தினர். தமது இழந்த பெருமையை மீளப்பெற இதனை ஒரு தேசிய இனப்பிரச்சனையாக முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
எகிப்தைத் தனது பிடியில் வைத்திருந்த பிரிட்டிஷ் காலனிய அரசு மத அடிப்படைவாத முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியை அங்கு ஆட்சியைக் கைப்பற்றத் தயாராகவிருந்த தேசியவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் ஆதரவுச் சக்தியாகப் பார்த்தது. . எதிர்பாராத விதமாக பிரிட்டிஷார் போன கையோடு அரபுத் தேசியவாத இராணுவ ஜெனரல்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். மேற்கத்தைய நாடுகளில் இராணுவச் சதிப்புரட்சி என்றழைக்கப்படும் இந்த நிகழ்வு எகிப்தில் புரட்சி என்றழைக்கப்படுகிறது. புதிதாகப் பதவியேற்ற நாஸரின் தலைமையில் அங்கே பல புரட்சிகர மாற்றங்கள் இடம்பெற்றன. சுயஸ்கால்வாய் தேசிய மயமாக்கப்பட்டமை அவற்றில் ஒன்று.
இரண்டாவது உலகப்போர் முடிந்திருந்த காலகட்டம் அது. காலனிய ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவருவது என்ற பேரில் ஆமெரிக்கா நாஸரின் ஆட்சியை ஆதரித்தது.அமெரிக்க நிர்ப்பந்தத்தால் தான் பிரிட்டன் எகிப்திலிருந்து பின்வாங்கியது. இருப்பினும் சுயஸ் கால்வாய் பிரச்சினை உலக வரலாற்றில் ஒரு திருப்பு முனையானது. சுயஸ்கால்வாயை அதிலே முதலிட்ட பிரிட்டிஷ்-பிரஞ்சுக் கம்பனிகள்தான் நிர்வகித்து வந்தன. எகிப்து அதனைத் தேசியமயமாக்கிய உடனேயே பிரிட்டனும் பிரான்சும் போர்ப்பிரகடனம் செய்தன. இஸ்ரேல் நேரடி யுத்தத்தில் இறங்கி கால்வாய் பகுதியை ஆக்கிரமித்தது. இந்தப்போரில் இஸ்ரேலிய விமானங்கள் அமெரிக்கக் கப்பலொன்றையும் குண்டு வீசி அழித்திருந்தன. தவறுதலாக நடந்ததாகச் சொல்லப்பட்டாலும், அன்றைய யுத்தம் இஸ்ரேல் தன்னை மத்திய கிழக்கின் பலம் மிக்க சக்தியாகக் காட்டவும், அமெரிக்காவின் ஆதரவை என்றென்றும் தன் பக்கம் வைத்துக்கொள்ளவும் இது உதவியது.
1967 ல் நடந்த 6 நாள் யுத்தத்தில் எகிப்து இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை மீளக்கைப்பற்ற எண்ணியது. ஆனால், போரின் முடிவு எகிப்திற்கு பலத்த அடி கொடுத்தது. நிச்சயமாக இது பல எகிப்தியர்களுக்குச் சகிக்கமுடியாத தோல்விதான். முஸ்லீம் சகோதரத்துவக்கட்சி இத்தருணம் பார்த்து களமிறங்கியது. 1950 ல் அந்தக் கட்சி நாஸரினால் தடை செய்யப்பட்டிருந்தது. போரில் தொண்டர்களாகச் சேர்வதற்குக் கூட அதன் உறுப்பினர்களை அனுமதிக்கவில்லை. இருப்பினும் போரின் தோல்வி முஸ்லீம் சகோதரத்துவ மீள் வருகையை தவிர்க்கவியலாததாக்கியது.
"எமது நாடு ஒரு மதசார்பற்ற அரசாங்கத்தால் ஆளப்படுகிறது. மக்களிடையே மதப்பற்றுக் குறைந்து விட்டது." இதுவே போரில் முஸ்லீம் சகோதரர்கள் கூறிய காரணம்.சில வருடங்களுக்குப் பின்பு எகிப்து சிரியாவுடன் சேர்ந்துகொண்டு இஸ்ரேலுடன் போர் தொடுத்தது. இம்முறை இஸ்ரேலினால் வெல்லமுடியவில்லை. எகிப்திய சிரிய வீரர்கள் திறமையாகச் சண்டையிட்டு இஸ்ரேலியப் படைகளைத் தடுத்து நிறுத்தினர். சில ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீட்கப்பட்டன. இந்தப்போரில் குறிப்பிடத்தக்க அம்சம் முஸ்லீம் சகோதரர்களின் பங்களிப்புத்தான். போர்க்களத்தில் முதன்முறையாக "அல்லாஹ் அக்பர்" கோஷம் கேட்டது. போரின் முடிவு முஸ்லீம் சகோதரத்துவக் கட்சிக்கு அனுகூலமாக அமைந்தது. அவர்களின் புகழ் எகிப்து முழுவதும் பரவியது.
1973 ல் நடந்த இந்தப்போர் முடிந்து சில வருடங்களில் நாஸர் மரணமடைய , சதாத் ஆட்சிக்கு வந்தார். நாஸர் தனது காலத்தில் சோஷலிசப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தியதுடன், சோவியத் யூனியனுடனும் நெருங்கிய உறவு வைத்திருந்தார். சதாத் ஆட்சிக்கு வந்ததும் எகிப்தின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகள் மாற்றங் கண்டன. அமெரிக்காவுடன் நல்லுறவு ஏற்படுத்தப்பட்டது. முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு வழி திறந்துவிடப்பட்டது. மிக முக்கியமாக நாஸரால் சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்லீம் சகோதரத்துவ உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டு, ஆதரவளிக்கப்பட்டனர். சதாத் தனது எதிரிகளாகப் பார்த்த சோஷலிட்டுகளுக்கும், கம்யூனிஸ்டுக்களுக்கும் எதிராக அவர்களைத் தூண்டி விட்டார். இது கடைசியில் பாம்புக்கு பால் வார்த்த கதையாக முடிந்தது. 1977 ல் சதாத் இஸ்ரேலுடன் கேம்ப் டேவிட் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதை தேசத் துரோகமாய்ப் பார்த்த முஸ்லீம் சகோதரர்கள், சதாத்தை பாராளுமன்றத்தினுள் வைத்துத் தீர்த்துக் கட்டினர்.
தற்போது ஆட்சி புரியும் முபாரக்கின் காலத்தில் சர்வதேச இஸ்லாமிய வாதிகளின் அமெரிக்க எதிர்ப்பு ஜிகாத், எகிப்தில் நிலைமையை தலைகீழாக மாற்றிவிட்டது. அமெரிக்கா மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு அடுத்ததாக எகிப்தையும் பொருளாதார, இராணுவ உதவிகள் கொடுப்பதன் மூலம் நன்றாகக் கவனித்துக் கொள்கிறது. இவ்வளவிற்கும், முபாரக் ஒரு ஜனநாயகவாதியல்ல. அவரது ஆயுட்கால ஜனாதிபதிப் பதவியும், ஆட்சியை ஏகபோக உரிமையாக்கிக்கொண்ட சொந்தக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியும் சதாம் ஹோசைனின் ஈராக்கை நினைவுபடுத்தும். மேலும் அரசியல் கைதிகளால் எகிப்தியச் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. இது எவ்வகையிலும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. பெரும்பாலான முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி உறுப்பினர்கள் சிறைகளில் விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். எகிப்து சிறைக்கைதிகளை நடத்தும் முறைபற்றி பல மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி ஆரம்ப காலங்களில் பலரால் அறியப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹசன் அலி-பன்னாவினால் தலைமை தாங்கப்பட்டது. அவரின் மரணத்திற்குப்பிறகு கட்சி இரண்டாக, மூன்றாக உடைந்துவிட்டது. அவற்றில் சில குழுக்கள் தீவிரவாதப்போக்கைக் கொண்டிருந்தன. ஒரு குழு லுக்சொர் என்ற இடத்தில் ஜேர்மனிய உல்லாசப் பிரயாணிகளை சுட்டுக்கொன்றதன் மூலம் உலக அளவில் அதிர்ச்சியைத் தோற்றுவித்தது. (எகிப்து வருடாவருடம் உல்லாசப் பயணிகள் வருகையினால் பெருமளவு அந்நியச் செலவாணியை ஈட்டி வருகின்றது.). இன்னொரு குழு ஆப்கானிஸ்தான் சென்று பின் லாடனின் அல-கைதாவுடன் இணைந்து கொண்டது. இனி முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் அரசியற் கொள்கைகள், எதிர்காலம் என்பன பற்றிச் சிறிது ஆராய்வோம்.
இதற்கு "லிவா அல்-இஸ்லாம்", "அல் டாவா" போன்ற கட்சியின் வாராந்தப் பத்திரிகைகளிலிருந்து பல தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றில் அவர்களது பிரச்சார அல்லது கொள்கை விளக்கங்கள் சார்ந்த கட்டுரைகள் தவிர சில விளம்பரங்களும் காணப்படுகின்றன. இந்த விளம்பரங்களைக் கொடுப்பவர்கள் "இஸ்லாமிய" வங்கிகள், மருத்துவ மனைகள், புத்தகசாலைகள் என்பனவாகும். இந்த நிறுவனங்கள் ஒன்றில் கட்சியின் முதலீட்டில் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படுவன. இஸ்லாமிய வங்கிகள் பொதுமக்களுக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி அறவிடுவதில்லை. மருத்துவ மனைகள் ஏழைகளுக்கு இலவசச் சிகிச்சை வழங்குகின்றன. கட்சிக்கு வரும் வெளிநாட்டு உதவிகள் இந்த நிறுவனங்களை இயங்க வைக்கின்றன. சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் வேலை செய்கின்றனர். இந்தப் புலம்பெயர்ந்த எகிப்தியரில் பலர் முஸ்லீம் சகோதரத்துவ ஆதரவாளர்கள். அவர்களிடம் இருந்து பெருமளவு நிதி வசூலிக்கப்படுகின்றது. இதைவிட அண்மைக்காலம் வரை சவூதி அரேபிய அரசு உதவி வந்தது.
முஸ்லீம் சகோதரர்களின் முக்கிய எதிரிகள் யார் ? முதலாவது எதிரிகள் யூதர்கள். இவர்கள் யூதரைத் தனி இனமாகப் பார்க்கின்றனர். மத்திய கிழக்கில் நிறுவப்பட்டுள்ள யூத இயக்கம் (இஸ்ரேல்) முஸ்லீம் இனத்தை மெல்ல மெல்ல அழித்து வருகின்றது. யூதர்கள் சர்வதேச ரீதியாக இஸ்லாமிற்கு எதிராகச் சதி செய்கிறார்கள் போன்ற வாதங்கள் அடிக்கடி இவர்களின் பத்திரிகைகளில் வருவது வழமை. அமெரிக்காவும் யூதர்களின் பிரச்சாரத்தை ஏற்றுத்தான் முஸ்லீம்களைப் பகைக்கிறது என்ற கருத்து பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்படுகிறது. 11 செப் 2001 நியூ யோர்க் தாக்குதல் யூதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்ற கதை அரபு நாடுகளில் பிரபலமாக அடிபட்டது.
ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கிறிஸ்தவ நாடுகள் என்ற நோக்கில் பார்க்கப்படுகின்றன. சிலுவைப்போரை முஸ்லீம்கள் இன்னமும் மறக்கவில்லை. மேற்குலக நாடுகள் முஸ்லீம்களை அழிக்கும் நோக்கில் மீண்டும் ஒரு போருக்குத் தயாராகின்றன என்ற கருத்து உலகில் தற்போது நடக்கும் ஆப்கானிஸ்தான், ஈராக் பிரச்சனைகளுக்குக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. அமெரிக்கா குறித்து வேறுபட்ட பார்வையும் உள்ளது. அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய வல்லரசு. அது குறிப்பாக உலகில் இரண்டாவது பெரிய மதத்தைச் சேர்ந்த முஸ்லீம்களை அடிமைகளாகப் பார்க்கிறது. இன்னொரு விதமாகச் சொன்னால், உலகில் முஸ்லீம்கள் மட்டும்தான் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுக்கின்றனர்.
முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் அது மூன்றாவது எதிரியாகக் கருதப்பட்டது. கம்யூனிசம் நாஸ்திகத்தைப் பரப்புகிறது. நாஸ்திக அரசியல் இஸ்லாமியத்தை அழித்துவிடும் என்பதே அவர்களது முக்கிய கவலையாகவிருந்தது. மேலும் யூதர்கள்தான் சோவித் யூனியன் தலைமையில் சர்வதேசக் கம்யூனிசத்தைப் பரப்பி வருகின்றனர் என்பது அவர்களது கருத்து. எகிப்தியர்கள் மத்தியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளையும் மதசார்பற்றவர்களையும் முஸ்லீம் சகோதரர்கள் இன(மத) துரோகிகளாகப் பிரகடனம் செய்துள்ளனர். அவர்களது நீண்டகால அரசியற் திட்டத்தின்படி முன்னர் குறிப்பிட்ட முக்கிய எதிரிகளை வென்ற பின்னர் இந்தத் துரோகிகளுடனான கதை தீர்க்கப்படும். சோவியத் யூனியனின் வீழு;ச்சியைத் தமது கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாக இவர்கள் கருதுகின்றனர். அதாவது கடவுள்-மத நம்பிக்கையற்ற அரசு வீழ்ந்தமை பற்றி இவர்களுக்கு ஆச்சரியப்பட ஏதுமில்லை. முஸ்லீம் சகோதரர்கள் (ஜெர்மன்) நாஸிகளிடம் பாசம் காட்டுகின்றனர். இருகூட்டங்களுக்கும் யூதர்கள் பொது எதிரி என்பது மட்டுமல்ல, பல அரசியல் நடைமுறைகளும் ஒத்து வருகின்றன. யூதர்களை அழித்த ஹிட்லரை முஸ்லீம் சகோதரர்கள் தமது நாயகனாகப் பார்க்கின்றனர்.
எதிர்கால உலகம் எவ்வளவு தீவிரமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் என்பதிலேயே முஸ்லீம் சகோதரர்களின் எதிர்காலமும் தங்கியுள்ளது. ஒரு பக்கம் கிறிஸ்தவ மத அடிப்படைவாதம் முஸ்லீம் எதிர்ப்புச் சிலுவைப் போரை நடத்திக் கொண்டிருந்தால் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தமது ஜிகாத்தை நடத்துவதும் தொடரத்தான் போகிறது. "நாங்கள்", "அவர்கள்" எனப்படும் சொற்களுக்குள்ளான அர்த்தங்கள் முஸ்லீம்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் எழுகின்றன. பாலஸ்தீனத்தில் , ஆப்கானிஸ்தானில், ஈராக்கில் நடக்கும் போர்களில் மக்கள் சாகும்போது அது "முஸ்லீம்களின் " அழிவாகப் பார்க்கப்படுகின்றது. இதனால்தான் முஸ்லீம்கள் தமது இனத்தின் விடுதலைக்காக ஆயுதப்போராட்டம் நடாத்தி முஸ்லீம் தேசிய அரசு ஸ்தாபிக்க வேண்டுமென்ற அரசியல் இலக்கைக் கொண்ட இயக்கங்கள் வளர்கின்றன. முஸ்லீம் சகோதரர்கள் காணும் "அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம்" என்பது ஒரு கனவுதான். ஆனால் ஆங்காங்கே உதிரிகளாகச் செயற்படும் (தலிபான் போன்ற ) இஸ்லாமிய வாத அரசியல் அமைப்புகள் தத்தமது நாடுகளில் உருவாக்கும் தனியரசுகள் நீண்டகாலத்தில் இஸ்லாமியருக்கான தாயகத்தை நிதர்சனமாக்கும் என்று நம்புகின்றன.
ஈழம்: ப.சிதம்பரம் என்றோரு ஓநாயின் ஊளை ! கருத்துப்படம் !
தமிழக அரசியல்வாதிகளிடம் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை படாதபாடு படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஈழத்திற்காக உண்மையாக குரல் கொடுப்பதை தவிர்த்து வருகின்றன என்ற போதிலும் அதையே திரித்து தாங்கள் வெட்டிக் கிழிப்பது போல காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன.
செத்து விழும் ஈழத்து மக்களின் பிணம் கணக்கின்றி செல்வது போல இவர்களின் நாடகமும் முடிவின்றி செல்கின்றது. தாங்கள் ஈழத்து மக்களை நினைத்து கண்ணீர் உருகுவது போல காட்டுவதற்காக நடத்தப்படும் காட்சிகள்தான் தமிழகத்தின் தற்போதைய அரசியல் மேடையை ஆக்கிரமித்து வருகிறது.

அதனால்தான் தன்னெழுச்சியாக வளரும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் இவர்களின் கைபட்டு நீர்த்துப் போகின்றன. இந்தியாவின் ஆயுத உதவியும், ஆள் உதவியும் இலங்கை இராணுவத்திற்கு அளவின்றி வழங்கப்படுகிறது என்ற உண்மை இப்போது மக்களுக்கு தெரியும் என்பதால் தி.மு.க கூட்டணி கட்சிகள் அதை மறைப்பதற்கு தேவையான நாடகத்தை நாள்தோறும் நடத்தி வருகின்றன. மத்திய அரசுக்கு தந்தி, மனிதச் சங்கிலி, பிரணாப் பயணம், மீண்டும் மனிதச் சங்கிலி என்று தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறது தி.மு.கவின் சுற்று அரசியல். இதில் வில்லன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் காங்கிரசு கட்சி கூட ஈழத்திற்காக போராடுகிறது என்று வெட்கமில்லாமல் தங்கபாலுவின் தலைமையில் அறிக்கைகள் விட்டு வருகிறது.
ஆனால் இலங்கைக்கு உதவும் மத்திய அரசின் கொள்கை சரியானது என்று மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் கொக்கரித்திருக்கிறார் ப.சிதம்பரம். போர் நிறுத்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரும் எந்த கோரிக்கையையும் வைக்க முடியாது என்றும், அவர்கள் ஆயுதங்களைத் துறந்துவிட்டு சரணடைவு மூலம் பேச வேண்டுமெனவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதைத்தான் ராஜபக்க்ஷே அரசு பேசி வருகின்றது. இந்த முகாந்திரத்தில்தான் முல்லைத்தீவில் சிக்கியிருக்கும் மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகின்றனர். ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசின் போர் நிறுத்தப் படவேண்டும் என்று நாம் கோரினால் இல்லையில்லை விடுதலைப்புலிகளை வீழத்தும் வரை போர் தொடரும் என்று இனப்படுகொலையை நியாயப் படுத்துகிறார்கள். மேலும் புலிகளை ஒழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும் அழிக்கப்படுகிறது.
ஆயுதங்கள் வைத்திருக்கும் எந்தப் பிரிவினரோடும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு பேச முடியாது என்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார் ப.சிதம்பரம். ஆனால் இவர்கள் அரசு ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகளோடு பேச்சுவாரத்தை நடத்தியதும், எட்டு ஆண்டுகளாக நாக விடுதலைப்படையோடு நாகலாந்தில் பேச்சு வார்ததை நடத்தி வருவதும் எப்படி நடந்தது? இதுதான் நீதி என்றால் பாலஸ்தீனத்து மக்களோடு எவரும் பேச முடியாது என்றாகிறதே? இசுரேல் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்வதும், ஈராக்கில் அமெரிக்கா அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவதும் உண்மையாக இருந்தாலும் இவர்களை எதிர்த்துப் போராடும் மக்கள் பிரிவினர் ஆயுதங்களை ஏந்தினால் அது தவறு என்றால் எதுதான் சரி?
பிரச்சினை விடுதலைப்புலிகள் ஆயுதங்களை வைத்திருக்கிறார்களா, துறந்தார்களா என்பதல்ல. ஈழத்த் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கப்படவில்லை என்பதுதான் பிரச்சினை. இந்தப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் பல தவறுகளை இழைத்திருக்கிறார்கள் என்றாலும் அது ஈழத்து மக்களின் பிரச்சினை. புலிகள் போரை நிறுத்தட்டும் ஈழத்திற்கு சுய நிர்ணய உரிமை அளிக்கிறோம் என்று பேசலாமே? முப்பது ஆண்டுகளாக ஈழத்திற்காக நடந்து வரும் போராட்டம் அகதிகளின் அலைவு எல்லாம் வேலை வெட்டியில்லாமலோ அல்லது ஆயுதங்களை விரும்பித் தூக்கவேண்டும் என்பதற்காகவா நடந்தது? ஏதோ துப்பாக்கி மீதான காதல்தான் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் என்பது போல சித்தரிக்கும் கயமைத்தனத்தை என்னவென்பது?
ஆக அரசியல் ரீதியாக ஈழத் தமிழ் மக்களின் சுய உரிமைப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பதுவதோடு புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அம்மக்கள் சொந்த நாட்டிலேயே இலட்சக் கணக்கில் அகதிகளாக அலைவதும் போரில் மாட்டிக்கொண்டு உயிரைத் துறப்பதும், ஊனமாவதும்தான் இதுவரை உலகம் கண்டறிந்திருக்கிறது. இதற்காகத்தான் முத்துக்குமாரும், முருகதாஸூம் மற்றவர்களும் தன்னுயிரை தீயிற்கு இரையாக்கி உலக நாடுகளை போரை நிறுத்துமாறு கெஞ்சுகிறார்கள். இவர்கள் யாரும் புலிகளுக்கு ஆயுதம் தூக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்பதற்காக உயிர் துறக்கவில்லை. உயிர் துறக்கும் ஈழத்து மக்களின் அவலத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகத்தான் தங்கள் உயிர்களை அழித்திருக்கிறார்கள்.
பல ஆயிரம் பேரை களப்பலி கொடுத்திருக்கும் ஈழத்தின் போராட்டத்தை முடித்து விடுதற்கு இந்தியாவும், இலங்கையும் துடித்துக் கொண்டிருக்கின்றன. அதைத்தான் ப.சிதம்பரத்தின் திமிரான பேச்சு வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் இத்தனை பெரிய மக்களின் எழுச்சிக்குப் பிறகும் காங்கிரசு கட்சி தனது துரோகக் கொள்கையை கூட்டம் போட்டு பேசுகிறது என்றால் தமிழ் மக்கள் என்ன இளித்தவாயர்களா? எதிரிகளைக் கூட போரில் சந்தித்து வெல்ல முடியும். ஆனால் உள்ளிருந்தே துரோகம் செய்யும் இந்தக் கருங்காலிகளை ஈவிரக்கமின்றி வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களுக்கு கொஞ்சமாவது சுரணை இருக்கிறது என்று நீருபிக்க முடியும்.
காங்கிரசின் இந்த அடிவருடிக் கொள்கைதான் எல்லாக் கட்சிகளும் வெவ்வேறு அளவுகளில் ஏற்றுக் கொண்டு நடித்து வருகின்றன. கருணாநிதி ஈழத்திற்காக ஒன்றும் செய்யவில்லை என்று கூப்பாடு போடும் பா.ம.க ராமதாஸூ தற்போது மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து டெல்லிக்கு விரைந்து சோனியாவிடம் தாங்கள் நல்ல பிள்ளைகள் என்று உறுதி மொழி அளிக்க போயிருக்கிறார். இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் மந்திரி பதவியைக் கூட துறப்பதற்கு மனமில்லாத மருத்துவர் ராமதாஸூ தி.மு.க கூட்டணிக்கு எதிராக இலங்கைக்காக தனி கூட்டணி வைத்து ஆவர்த்தனம் செய்கிறார். தற்போது ப.சிதம்பரத்தின் மிரட்டல் பேச்சில் அய்யா நடுநடுங்கி தான் இந்திய அரசின் கொள்கையை எதிர்க்கவில்லை என்று தோப்புக் கரணம் போடுகிறார். அய்யாவின் கூட்டணியில் குஜராத்தின் முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த பா.ஜ.கவும் உண்டு. டெல்லி ம.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் ஆட்சில் இல்லை என்ற தைரியத்தில் அத்வானியும் ஈழத்திற்காக முழக்கமிடுகிறார். நாளை இவர்களது ஆட்சி வந்தாலும் இதுதான் நடக்கப்போகிறது. இந்திய அரசின் கொள்கை என்பது கட்சிகளின் நலனுக்கு அப்பாற்பட்டு இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்காக தீர்மானிக்கப்படுகிறது. இதில் காங்கிரசு ஈழத்திற்கு துரோகம் புரிகிறது, பா.ஜ.க நன்மை புரிகிறது என்று நினைப்பது அறிவீனம்.
ப.சிதம்பரத்தின் பேச்சை வைத்துப் பார்க்கும் போது அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் வந்தால் விளக்குமாறு வரவேற்பு கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.
( இந்தக் கருத்துப் படத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளோம். ஆங்கிலத்தில் வந்துள்ள கார்ட்டூனை நண்பர்களுக்கும் தமிழ் அறியாதவர்களுக்கும் அவர்களுது தளங்களுக்கும் அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
உலமாக்களுக்கு தனி நலவாரியம் அமைப்பு
கோழிக்கோட்டை கலக்கிய பி.எப்.ஐ., மாநாடு
ஸ்ரீ ஸ்ரீ சுப்ரமணியம் சுவாமி முட்டாபிஷேகம! கருத்துப்படம் வித் சு.சுவாமி கமென்ட்ஸ் !!
படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்
ஸேது ஸமுத்ரம் மாத்ரி சிதம்ப்ரம் கோவில் மேட்ரையும் ஆம்லேட் போட்டுடலாம்னு வந்தேன்
முடியல…ஸ்லிப் ஆயிடுத்து
ஆல் ரவுடீஸ், விட்தல புலீஸ்….கெடுத்துட்டா ! கர்னாநிதி ஆட்சீல ஒரு ஆம்லெட் கூட போட முட்ல
குனிஞ்சு என் வேஷ்டிய பாருங்கோ, ஐ ஹேவ் எவிடன்ஸ்.
சும்மா உட்ற மாட்டேன், ஐ வில் கோ டூ சுப்ரீம் கோர்ட்!







