அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, October 16, 2010

வரிக்கும் வலிக்கும்..

feel.jpg

அஸ்ஸலாமு அலைக்கும்,

வருவாய்த் தேடி

வளைகுடாவிற்கு நீ;

தனிமைக்கு துணையாய்

பிரிவுக்கு புது வரவாய்;

வருவாய் நீ; என நான் இங்கே!

ஏங்கி ஏங்கி தூங்கிப்போனக்

காலங்கள் உண்டு;

வீங்கிப்போன இமைகளைக் கொண்டு!

வெட்கப்பட்டு வெளியே வந்த

கண்ணீர்த் துளிகள் உரைக்கும்;

என் புலம்பலைக் கேட்டு முரைக்கும்!

கருவில் உனை வைத்து

கன்னத்தில் கை வைத்து

காத்திருக்கிறேன் உனக்காக!

நொந்துப்போனப் பிரிவுக்கு

வந்துப்போகும் உன் நினைவு;

கனத்துப்போகும் மனது!

உறவுகளுடன் நானிருந்தாலும்

உன்னைப்பற்றியே நினைப்பேன்;

மடல் உனக்கு எழுதி எழுதி

அழுது வடியும் என் எழுதுக்கோல்!

திரும்ப திரும்ப ஒலிக்கும்

என் வரிக்கும் வலிக்கும்;

ஊமையான மையிற்கும் மயக்கம்;

சுற்றிச் சுற்றிச் சுழலும் என்

ஒரே கேள்விற்கு;

உன் விடுமுறை எப்போது!

No comments: