அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, October 15, 2010

மேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்

உலக மக்களுக்குமனந்திறந்து சொன்னவை
அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தனது 4 தசாப்த கல அழைப்புப் பணியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல மேடைகளில் வாய் திறந்து சொன்ன சில செய்திகள் இன்றும் மறக்க முடியாதவைகளாகும்.
1. இஸ்லாத்திற்கு நான் ஒருசுதந்திரமான சேவகன், என்னை நீங்கள் இலவசமாக பயன்படுத்தலாம்,
எனது இலக்கியப் படைப்புக்கள், புத்தகங்கள் எதற்கும் பதிப்புரிமை கொடுத்துவரையருக்கவில்லை. அதனால் எவர் வேண்டுமானாலும் இலவசமாகவெளியிடலாம் அல்லது போதியளவு அச்சிட்டு விற்பனை செய்யலாம்.

2. எனது ஒளி ஒலி நாடாக்களும் அப்படித்தான், எதற்கும் பதிப்புரிமை இல்லை.எவர் வேண்டுமானாலும் அதனை நல்லதுக்கு பயன்படுத்தலாம்.

3. வாழும் காலத்தில் எந்த நாட்டுக்கு, பகுதிக்கு என்னை அழைத்தாலும் எனதுசெலவில் நான் அங்கு வந்து நிகழ்ச்சிகள் செய்வேன், விவாதங்கள்,கலந்துரையாடல்கள் என்று எந்த ஏற்பாடுகளாகட்டும் அதற்கு நான் தயார்.


4. உலகிலுள்ள முஸ்லிம் பல்கலைக்கழகங்களுக்கு விஜயம் மேற்கொண்டுஅங்குள்ள மாணவர்களுக்கு கருத்தறங்குகளை நடத்த எந்த நேரமும் தயாராகஇருக்கின்றேன், இஸ்லாத்தைப் படித்துவிட்டு மக்களிட்த்தில் பிரச்சாரகராக கடமையாற்றும் அனைத்து அழைப்புபணியாளர்களுக்கும் மதங்களுக்கிடையில் ஒப்பீட்டாய்வு முறையைப் படிப்பிப்பதில் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.

5. பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்குத் தேவையானவழிகாட்டல்களை முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கு தெளிவுபடுத்த தயாராகஇருப்பதாக தனது அபூதாபி தொலைக்காட்சி அலைவரிசைக்கு வழங்கியநேர்காணலில் பகிரங்கப்படுத்தினார்.

6. கிறிஸ்துவ போதகர்கள் தங்கள் மதத்தை பறப்பும் பிரதேங்களின் வாழும் போது மிக்க் கவனமாக இருக்கும்படியும் அவர்களின் தூண்டிலில் சிக்குண்டு மாட்டிகொள்ள வேண்டாம் என்று அனைத்து முஸ்லிம் சகோதரர்களையும் வேண்டிக்கொண்டார்.

கிறிஸ்வ போதகர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்கள் போன்று நடித்தே முஸ்லிம்களை மதமாற்றிவிடும் செயல்பாட்டுடையவர்கள் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

7. முஸ்லிம் சமூகம் அதிகமாக அல் குர்ஆனை ஆய்வு செய்ய வேண்டும்.

8. அல் குர்ஆனுடன் பிற மதவேத நூல்களை ஒப்பீட்டாய்வு செய்து அதனை பிறருக்குப் போதிக்க முன்வர வேண்டும்.

இஸ்லாத்தை உலக மக்கள் எல்லோருக்கும் போதிப்பதற்காக பல பிற மத வேத நூல்களைத் தேடிக் கற்றுக்கொண்டது போல் பல நாட்டு மொழிகளையும் கற்றுக்கொண்டார், அவர் ஆங்காங்கே பட்டியலிட்ட சில மொழிகளை இங்கு நான் பட்டியல் படுத்தியிருக்கிறேன்.
1. குஜராத்தி,
2. ஆபிரிக்கானா,
3. ஆங்கிலம்,
4. அரபு,
5. உருது,
6. ஹிந்தி,
7. சூளு,
8. பிரான்ஸ்,
9. இந்துநெசியன்,
10. ஹீப்ரு,
11. கிரேக்,
12. ஜெர்மனி
13. பெங்காளி
14. டச்
நான் அறியா இன்னும் பல.

No comments: