அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, October 16, 2010

புரியாதத் தத்துவம்

islamic_dress.jpg


அஸ்ஸலாமு அலைக்கும்,

புரியாதத் தத்துவம்

புருவங்களை உயர்த்தும்;

ரணம் கொடுக்கும் வார்த்தைகளை

தினம் தொடுக்கும் அறிவாளிகள்!

சமதர்ம சமாதனப் பேச

மிடுக்கு ஆடையுடன்

ஒலிக்கும் குரல்

தரங்கெட்ட தரணியிடமிருந்து!

அனாச்சாரத்தில் அமர்ந்து

கலாச்சாரத்தைப் உரைக்கும்;

உலகத்திற்கு எப்போது உறைக்கும்!

மூடிச் செல்லும் எங்களுக்கு

முத்திரையிடும் உலகம்;

பெண்ணடிமை என்று!

மாற்று வண்ணத்தில்

வேற்று மக்கள் அணிந்தால்

ஒட்டுப்போடும் உலகம்;

நாங்கள் அணிந்தால் மட்டும்

வேட்டு வைக்கும் கிரகம்!

காட்டாறு உணர்வுக்கு

அணைப்போட நினைத்து;

அணைத்ததை படம்பிடித்த

பத்திரிக்கைக் கதையுண்டு இங்கே

பாதிரியார்கள் கன்னிகாஸ்திரி

பாதங்கள் கோலம் போடும் அங்கே!

நித்திரையைக் கெடுக்கும்

உன் மனதிற்க்காக நான்

முகத்திரையிட்டு வந்தேன்;

ஆபாசத்திற்கு முத்திரையிட்டுள்ளேன்!

ஒழுக்கத்திற்கு உடையிட்டு

நடைப்போட்டு வந்தோம்;

எதிர்புக்குரல் ஒலித்தாலும்

எதிர்த்து நின்று ஜெயிப்போம்!

No comments: