அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 25, 2011

சோனியா காந்தி - அன்புமணி சந்திப்பு - கருணாநிதி அதிருப்தி

பாமகவின் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் நேற்று புது டில்லியில் சோனியா காந்தியைச் சந்தித்து தனது வீட்டு திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார். இது திமுகவை எரிச்சலடைய செய்துள்ளது.

சென்ற மாதம் சோனியாவை சந்தித்த கருணாநிதி, பாமகவைத் துரோகி என சோனியா விமர்சனம் செய்ததாக திமுக பொது குழு கூட்டத்தில் கூறியிருந்தார். சென்ற பாராளுமண்ற தேர்தலுக்கு முன் அமைச்சரவையில் பங்கேற்று, தேர்தல் சமயத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக விஷயத்தில் கவனமாக இருக்குமாறு சோனியா கூறியதாக கருணாநிதி கூறியது பாமக வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்பட்டது. சோனியா அவ்வாறெல்லாம் பேசக் கூடியவர் அல்ல என்றும், தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு விஷயத்தில் பாமகவிற்குத் திமுக "செக்" வைப்பதற்காக கருணாநிதி அவ்வாறு சொனியா கூறினார் என புரளி கிளப்பி விடுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

தற்போது அன்புமணியைச் சோனியா சந்தித்தன் மூலம், சோனியா அவ்வாறு கூறியிருக்கமாட்டார் என பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாமக மீது சோனியா கோபமாக இருந்தால் அன்புமணியைச் சந்தித்து இருக்கமாட்டார் என்றும், அதேபோல் தற்போது மத்திய சுகாதார அமைச்சராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தும் சந்திப்பின் போது கூட இருந்தது பாமகவிற்குப் புது தெம்பைப் கொடுத்துள்ளது. ஏனெனில் குலாம் நபி ஆசாத் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர். ஆகவே அவரும் கூட இருந்தது திமுக தலைமைக்கு எரிச்சலை உண்டு பண்ணியுள்ளது. சோனியாவை அன்புமணி சந்தித்த போது, பாமக குறித்து சோனியா கூறியதாக திமுக கூறியது குறித்து தெரிவித்து இருக்கலாம் என்றும், அவ்வாறு கூறியிருக்கும் பட்சத்தில் சோனியாவின் அதிருப்திக்குக் கருணாநிதி ஆளாக நேரிடலாம் என அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இது திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை வெகுவாக பாதிக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதுவரை திமுக பாமக கட்சிகளிடையே உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments: