அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, February 24, 2011

கோத்ராவின் தீர்ப்பு மோடியின் அரசை உலுக்கியது!

புதுடெல்லி: கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த சபர்மதி இரயில் எரிப்பு சம்பவத்தின் போது மோடியின் அரசு கோத்ராவில் வாழக்கூடிய முஸ்லிம்கள் மீது வழக்கு போட்டு பாரபட்சமின்றி கைது செய்தது. ஆனால் இன்று சிறப்பு நீதி மன்றம் வெளியிட்ட தீர்ப்பில் 63 நபர்களை நிரபராதி என்று தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது. மேலும் 31 நபர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தண்டனை விபரத்தை நீதிமன்றம் வருகின்ற 25ஆம் தேதி அன்று வெளியிட உள்ளது.

இன்று தீர்ப்பை வழங்கிய சிறப்பு நீதி மன்றம் 31 நபர்கள் மீது பிரிவு 302ன் படி குற்றத்தை உறுதி செய்துள்ளது.

கடந்த 2002 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் அன்று சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் கோத்ரா அருகே தீப்பிடித்து எரிந்ததில் 59 கரசேவர்கள் உடல் கருகி உயிர் இழந்தனர். நீதிமன்றம் கூறும் போது இந்த செயலின் பின்னனியில் மிகப்பெரிய கூட்டுச்சதி உள்ளது என்று கூறியுள்ளது. இருந்த போதும் தீர்ப்பின் முழு நகல் வெளியிடும் வரை எந்த ஒன்றையும் உறுதியாக கூற முடியாது. மாநில அரசாங்கம் கூறுவது போல இது பாகிஸ்தானின் கூட்டுச்சதியா அல்லது இயல்பாக நடந்த ஒரு விபத்தான் என்பதை கூற முடியாது.

தொடக்கத்தின் காவல்துறையின் விசாரணையின் போது இது இயல்பாக நடந்த ஒரு விபத்து பெரும் மதக்கலவரத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது. ஆனால் இதனை விசாரித்த மாநில அரசால் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு காவல் படையின் அறிக்கை படி, இது நன்கு திட்டமிடப்பட்டு நடந்தேரியுள்ளது, என்றும் மெளவி உமர் என்பவர் 4 நபர்களை ஏவி கரசேவர்களை கொல்வதற்க்காக இரயிலுக்கு தீ வைத்துள்ளார் என்று அவர் மீது குற்றம் சுமத்தியது. இன்று நீதிமன்றம் மெளவி உமர் ஒரு நிரபராதி என்று கூறி தீர்ப்பளித்துள்ளது.

No comments: