அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 25, 2011

குஜராத் ரயில் எரிப்பு வழக்குத் தீர்ப்பு

கோத்ராவில் எரிக்கப்பட்ட ரயில்
கோத்ராவில் எரிக்கப்பட்ட ரயில்-2002
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக, செவ்வாய்க்கிழமை வெளியாகியிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பில், 31 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டவர் உட்பட 63 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.

குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் நிலையம் அருகே இந்து அமைப்புக்களைச் சேர்ந்த தொண்டர்கள் வந்த ரயில் நிறுத்தப்பட்டு, தீ வைக்கப்பட்டது. அதில் 59 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.

குஜராத் வன்முறைகளில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
குஜராத் வன்முறைகளில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
இதில், கோத்ரா ரயில் எரி்ப்புச் சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. மொத்தம் 134 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில், போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தால் 14 பேர் விடுவிக்கப்பட்டார்கள். ஐந்து பேர் சிறுவர்கள் என்பதாலும், ஐந்து பேர் விசாரணைக் காலத்தில் உயிரிழந்துவிட்டதாலும் நீக்கப்பட்டார்கள். 16 பேர் தலைமறைவாக உள்ளார்கள். அதனால், 94 பேருக்கு எதிராக விசாரணை நடந்து வந்தது. அவர்களில் 80 பேர் சிறையில் உள்ளனர். 14 பேர் ஜாமீனில் இருக்கிறார்கள்,.

விசாரணையின்போது, 250க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அதே நேரத்தில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க குஜராத் அரசால் நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன், ரயிலில் பெட்ரோல் வீசப்பட்டதால்தான் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறியது.

அதே நேரத்தில், ரயில்வே அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட யு.சி. பானர்ஜி கமிஷன், அந்தச் சம்பவம் விபத்து என்று அறிக்கை அளித்தது.

இந் நிலையில் இன்று 31 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது.

No comments: