அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, May 9, 2011

கனிமொழியைக் காப்பாற்ற ராசாவை பலி கொடுப்பதா? - கிருஷ்ணசாமி கண்டனம்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி "அலைக்கற்றை ஊழலில் கனிமொழியைக் காப்பாற்ற ஆ.ராசாவை பலிகொடுக்க கருணாநிதி முயல்கிறார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர்,
"2G அலைக்கற்றை   ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை பதவியில் இருந்து அகற்றி, நாடாளுமன்ற  கூட்டுக்குழு விசாரணை அமைக்க வேண்டும் என, மக்களவையை எதிர்க்கட்சியினர் முடக்கிய போது , ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து, முதல்வர் எவ்வித கருத்தும் கூறவில்லை. மாறாக, தலித் என்பதால் ராசா மீது குற்றம் சுமத்துகின்றனர் என்றும், ஆரிய - திராவிட போர் என்றும், சாதி வர்ணம் பூசினார் கருணாநிதி.
ராசா குற்றமற்றவர் என கூறிய தி.மு.க. தம் வழக்கறிஞர் வாயிலாக  இப்போது, 'ராசா தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டிற்குக் காரணம். கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் இல்லை' என, நீதிமன்றத்தில்  கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. ஊழலில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கனிமொழியைக் காப்பாற்ற, ராசாவைப் பலிகடாவாக ஆக்கும் முயற்சியில் தீவிரமாக முதல்வர் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு, நீதிமன்றத்தில்  வழக்கறிஞர்  வைத்த வாதமே சாட்சியாக உள்ளது"
என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

No comments: