அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, June 26, 2009

ஜனாஸா ஊர்வலத்தில் வந்தவர்களை ஜனாஸாவாக்கிய அமெரிக்கா!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தாலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளார்கள். எனவே அவர்களை அழிக்கப்போகிறோம் என்ற பெயரில், அவ்வப்போது ஆள் இல்லா விமானம் மூலம்மேற்கண்ட பகுதியில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவது நாம் அறிந்த செய்தியே. தாலிபான்களை அழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவிகளை கொல்வதையே தலையாய பணியாக அமெரிக்க செய்து வருகிறது என்பதற்கு மேலும் ஒரு சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானின் 'மகீன்' என்ற பகுதியில் மக்கள் ஓரிடத்தில்கூட்டமாக இருப்பதை செயற்கை கோள் வழியாக அறிந்த அமெரிக்கா,அந்த கூட்டம் தீவிரவாதிகள்தான் என்று கருதி ஆள் இல்லா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் சுமார் அறுபது பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. வழக்கம் போல தீவிரவாதிகளை தீர்த்து கட்டிவிட்டதாக அமெரிக்க தம்பட்டம் அடித்துக்கொண்டது.இறுதியில் அந்த கூட்டம் தீவிரவாதிகளல்ல மாறாக, ஒரு ஜனாஸா ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக கூடியிருந்த மக்கள்தான் அமெரிக்காவால்கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை வெளியாகியுள்ளது.

'
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது பழைய பழமொழி!
அமெரிக்காவின் கண்ணுக்கு அப்பாவிகள் எல்லாம் தீவிரவாதிகள் இது புதுமொழி!
இந்த சட்டாம்பிள்ளைக்கு எதிராக சாட்டையை சுழற்ற நாதியில்லையா? என்பதுதான் சாமான்யர்களின் குரலாக ஒலிக்கிறது.


Endrum anbudan…………
Brother Abu Hamz


"மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; "

No comments: