அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, June 22, 2009

பெண் கடத்தல்: பெண் டாக்டர் கைது


நாகர்கோவில்: பெண் கடத்தப்பட்ட வழக்கில் பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். அவரது கணவரான டாக்டர் தலைமறைவானார். குளச்சல் காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் செய்யது; இவரது மகள் ரிபாயா(17). கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணாமல் போன இவர், திருவிதாங்கோட்டில் ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்டார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கருங்கல்லைச் சேர்ந்த டாக்டர் கண்ணன் என்பவர் தன்னை கற்பழித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். டாக்டர் வீட்டில் சிறு சிறு வேலைகள் செய்ய சென்ற தன்னை, டாக்டர் வலுக்கட்டாயமாக கற்பழித்ததாகவும், அதில் கர்ப்பம் அடைந்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த விவரம் கண்ணனின் மனைவி, டாக்டர் அமுதாவுக்கு தெரிந்ததும் கண்ணனை திட்டியதோடு, கருவை கலைத்ததாக கூறியுள்ளார். பின்னர் ஒரு அனாதை ஆசிரமத்திலும், திருவிதாங்கோட்டில் ஒரு வீட்டில் தங்க வைத்ததாகவும் ரிபாயா கூறியுள்ளார். இதன்படி, டாக்டர்கள் கண்ணன், அமுதா மீது வழக்கு பதிவு செய்து, அமுதாவை கைது செய்தனர். கண்ணன் தலைமறைவானார்.




No comments: