அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, September 23, 2010

சுதந்திர இந்தியாவில் நாங்கள்..

qw.jpg


மறந்துப்போன

மனிதநேயம்;

மரத்துவிட்ட

மனிதனின் மனம்!

குட்டி நாய் அடிப்பட்டாலும்

குமுறும் சமூகம் – எங்களை

வெட்டிப்போட்டாலும்

வேடிக்கைப் பார்க்கும்!

நல்ல உள்ளங்களுக்கு

நடுவே சில மதம் பிடித்த யானை;

மிதித்துவிட்டு

மிரட்டிவிட்டுச் செல்லும் - எங்களை

விரட்டி விரட்டிக் கொல்லும்!

விடுதலைக்கு

வித்திட்ட சத்தான சமூகம்;

களம் காண கல்விக்கு

பிரிவுக்கொடுத்தோம் பின்னாளில்

பறிக்கொடுத்தோம்!

மறந்துவிட்ட எங்கள் தியாகம்

மறைத்துவிட்டது எங்கள் சோகம்!

வெடித்தாலும் எங்கள் மீதேப் பழி

இடித்தாலும் எங்கள் மீதேப் பழி;

காஷ்மீரில் இருந்து

கன்னியாக்குமரிவரை

எங்களுக்குப் பிடித்த

காவலர்கள் குறைவு – பிடிக்காமல்;

எங்களைப் பிடித்த காவலர்கள் நிறைவு!

ஓட்டுக்கேட்க மட்டும்

ஓடி வரும் அரசியல் கூட்டம்;

வினாவோடு நாங்கள் போகும்போது

விடைக்கொடுத்துவிட்டு சென்றிடும்

வினோத அரசியல்வாதிகள்!

பத்திரிக்கைகளின்

பக்கம் நிரம்ப

முதலில் எங்கள் மீது பழிப்போடும்;

பின்புதான் வழித்தேடும்

குற்றம் செய்தது யார் என்று!

No comments: