அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, September 25, 2010

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் குவிக்கப்படும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை

கடந்த வியாழக்கிழமை (23.09.2010) சில்வான் குடியிருப்புக்கருகில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் விளைவாக ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டு மற்றும் பலர் படுகாயமுற்றதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகர வீதிகளில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பிரதேசத்தில் வன்முறையைத் தூண்டிவிட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் குடியேற்றவாசிகள் சிலரும் ஐந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலீஸாரும் அங்கு இடம்பெற்ற மோதலில் காயமடைந்துள்ளதாக ஹீப்ரு வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி சம்பவம் பற்றிக் கருத்துரைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலீஸ் படை கமாண்டர் அஹ்ரோன் ஃப்ரான்கோ, ஜெரூசல நகரில் யூதக் குடியேற்றவாசிகளால் ஒழுங்குசெய்யப்படும் சுக்கொட் களியாட்ட விருந்து முதலான கொண்டாட்டங்களுக்கு எதிரான தடையுத்தரவுகளைத் தாம் பிறப்பிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். யூதக் குடியேற்றவாசிகளின் இத்தகைய களியாட்ட நிகழ்வுகளின் போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் பலஸ்தீனர்களை வேண்டுமென்றே ஆத்திரமூட்டி வம்புக்கிழுக்குமுமாக திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளும் அடாவடி நடவடிக்கைகளின் விளைவாகவே இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: