அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, September 25, 2010

சவூதி-யு.எஸ். 60 பில்லியன் டாலருக்கான ஆயுத ஒப்பந்தம் கையெழுத்து!

ரியாத்: சவூதி அரேபியாவுக்கு 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை
அமெரிக்கா விற்பனை செய்ய உள்ள நிலையில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது,

இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆயுத விற்பனைக்கான ஒப்பந்தம் எனக்
கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையானது மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான
சூழ்நிலையை உருவாக்குவதுடன் மற்ற நாடுகளை ஆயுதக் குவிப்பில் ஈடுபடுத்தும் நிலையை
உருவாக்கும். இத்தொகையில் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் போர்
விமானங்கள், வான் ஊர்திகள் வாங்க சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் தனது
கடற்படையைப் பலப்படுத்தும் செயற்பாடுகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த
விற்பனையானது அமெரிக்காவில் சுமார் 77, 000 வேலை வாய்ப்புக்களைப் உருவாக்கும்
எனத்தெரிகிறது
அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையானது ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கில்
மேற்கொண்டு வரும் இராஜதந்திர நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே இஸ்ரேலுடனான தனது உறவினைக் கருத்தில் கொண்டு சவூதிக்கு ஆயுதங்கள் விற்பனை
செய்வதை அமெரிக்கா தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சமாதானத்திற்கான நோபால் பரிசைக் கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா
வென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: