அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, February 9, 2009

அத்வானியின் ஜோக்கும், புதுமைப்பித்தன் கதையும்

advani

நேற்று பத்திரிக்கையில் அந்தச் செய்தியைப் படித்ததும் எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது. எப்போது படித்தாலும் சிரிப்பு வரக்கூடியது. புதுமைப் பித்தன் எழுதியது. அவருடைய நடையில் அதைப் படிக்க வேண்டும். அல்லது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லக் கேட்க வேண்டும். எனவே கதைச்சுருக்கம் மட்டும் சொல்கிறேன்.

ராமர் வயோதிகம் அடைந்து அயோத்தியில் இருப்பார். அனுமனும் அங்கேயே ஊழியம் செய்து கொண்டிருபார். உடலெல்லாம் பேன்கள் அடர்ந்து இருக்கும். எப்போதும் சொறிந்து கொண்டே இருப்பார்.

முன்னைப் போல தன்னை யாரும் மதித்து போற்றவில்லையே, தனது பராக்கிரமங்களை மக்கள் மறந்து விட்டார்களே என்ற ஆதங்கம் ராமருக்கு வந்துவிடும். மன உளைச்சலில் வாடுவார். அனுமனும் ராமரும் இது குறித்து விவாதிப்பார்கள்.

மீண்டும் சீதையை யாராவது தூக்கிக்கொண்டு போக மாட்டார்களா, நாமும் காட்டுக்குச் சென்று, போர் தொடுத்து நமது மகிமையை நிலைநாட்ட மாட்டோமா என்று திட்டம் போடுவார்கள். சரி, சீதையை யார் இப்போது தூக்கிக் கொண்டு போவார்கள் என்று கவலை வந்து விடும்.

விழுந்து விழுந்து சிரிக்கும்படியாய் கதை இப்படியே போகும். தேடிப் பிடித்துப் படியுங்கள்.

சரி... பத்திரிக்கையில் படித்த அந்தச் செய்தி என்னவென்று இப்போது புரிந்து விட்டதா?

முன்னர் சீரியஸாக இருந்தது, இப்போது ஜோக்காகத் தோன்றுகிறது. நாயகனாயிருந்தவரை வில்லனாக்கி கடைசியில் காமெடியனாகவும் மாற்றி விடுவார்கள் போல. ராமன் எத்தனை ராமனடி?

No comments: