அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, May 15, 2009

உலகை உலுக்க ஆரம்பித்துள்ள பன்றிக்காய்ச்சல்

பன்றிக்காய்ச்சலானது முன்னைய பறவைக் காய்ச்சலைவிட மோசமானதாகும். மனிதரில் இருந்து மனிதருக்கு பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால் வைத்தியத்துறை நிபுணர்களும், அரசுகளும் இது குறித்து பெரும் கவலை கொண்டுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா , நியூசிலாந்து உள்ளிட உலகின் சகல பகுதிகளுக்கும் இதன் தாக்கம் பரவ ஆரம்பித்துவிட்டது. இதுவரை சுமார் 103 பேர் மரணித்துள்ளனர். அமெரிக்காவில் இருபது பேரும், நியூசிலாந்தில் பத்துப்பேரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோயின் அறிகுறிகள்
கடும் காய்ச்சல், இருமல், கடுமையான சத்தி, தலைச்சுற்று போன்ற இன்புளுயன்சியா குறியீடுகள் தெரிந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது
தவிர்க்க வேண்டியது
நோய்த்தாக்கம் உள்ளவர்களின் கண்கள், வாய்ப்பகுதியில் கைகள் பட்டால் உடனடியாக கைகளை உரிய முறையில் கழுவ வேண்டும். முகத்தினை மறைத்து துணியால் சுற்றிக்கொள்ள வேண்டும். இந்த நோயின் தாக்கமுள்ளவர் இருக்குமிடத்திற்கு போகக் கூடாது. நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும், தேகப்பயிற்சி செய்ய வேண்டும், ஸ்ரெஸ் மன அழுத்தம் அடைதல் கூடாது என்று சகலருக்கும் முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.மேலும் பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ள நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் விசேடமாக சோதிக்கப்படுகிறார்கள். அத்தோடு பன்றிக்காய்ச்சல் அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணிப்பதை கூடுதல்பட்சம் தவிர்க்கும்படியும் பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள்.
Thanks: Alaikal

No comments: