அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, October 8, 2009

ரவுடிக் கும்பலால் கடத்தப்பட்ட காதல் மனைவியை மீட்டுத்தாருங்கள்:

சென்னை, அக். 5-
சென்னை வடமறைக்காயர் தெருவில் வசித்து வருபவர் செய்யது மன்சூர் ரகுமான் (வயது 22). இவரது சொந்த ஊர் பரமக்குடி. இவரும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கனிமொழி (19) என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் செய்யது மன்சூர் ரகுமான், தனது காதல் மனைவியை கூலிப்படையினர் கடத்திச் சென்றுவிட்டதாகவும் அவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறும் போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அந்த புகார் மனு விவரம் வருமாறு:-
எங்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இதனால் அந்தமானுக்கு தன் மனைவியுடன் புறப்பட்டு சென்றேன். பின்னர் வக்கீல் ஒருவரின் துணையுடன் சென்னை வந்தோம்.
இங்கு வந்த பின்னர் கூலிப்படை கும்பல் ஒன்று எங்களை மதுரைக்கு கடத்திச் சென்றது. அங்கு வைத்து எனது மனைவியை என்னிடமிருந்து பிரித்து விட்டனர். எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு மதுரையை சேர்ந்த போலீஸ் டி.எஸ்.பி. ஒருவரும் உடந்தையாக இருந்தார்.
எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

No comments: