அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, March 19, 2011

குளோரின் கலந்த தண்ணீரில் குளிப்பது புற்றுநோய் உருவாக காரணமாகும்


dangerchlorinesign

பாரிஸ்:குளோரின் கலந்த தண்ணீரில் தொடர்ந்து நீந்துவதும், குளிப்பதும் சிறுநீரகப்பை புற்றுநோய் உருவாக காரணமாகும் என ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குளோரின் மூலம் தயாரிக்கப்படும் Trihalomethanes (THMs) ட்ரை ஹாலோமீதேன்ஸ் புற்றுநோய் முளைகளுக்கு காரணமான carcinogenic chemicals கார்சினோஜெனிக் வேதிப் பொருளாகும்.

இந்த வேதிப்பொருள் தோல் மூலம் உடலுக்குள் உறிஞ்சு எடுக்கப்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

1270 பேரிடம் ஸ்பெயினில் செண்டர் ஃபார் ரிசர்ச் இன் என்விரான்மென்டல் எப்பிடெமியாலஜி நடத்திய ஆய்வில்தான் இது தெரியவந்துள்ளது.

பாட்டில் தண்ணீரை உபயோகிப்பதால் உடல்ரீதியான உபாதைகளை தவிர்க்கலாம் என உயர்ந்த கல்வி மற்றும் வசதியுடையவர்கள் கருதுகின்றனர். ஆனால், ஆரோக்கியத்திற்காக குளோரின் கலந்த தண்ணீரில் நீந்துவது உடல்ரீதியான பிரச்சனைகளை உருவாக்கும் என ஆய்வாளர் ஜெம்மா காஸ்டேகோ வின்யால்ஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வளவுதான் சுத்தமாக இருந்தாலும், அதிகமான உடற் பயிற்சிகளை செய்தாலும் அதிக நேரம் குளிப்பதாலும், நீச்சல் குளங்களை உபயோகிப்பதானலும் trihalomethanes (THMs) ட்ரை ஹாலோமீதேன்ஸ் கதிர்வீச்சு அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: