அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, March 19, 2011

ஜப்பான்:உயிரை பணயம் வைத்து அணு உலைகளில் பணியாற்றும் மீட்பு பணியாளர்கள்.


70-percent-of-50-Workers-Sticking-to-FKS-Nuclear-Power-Plant-May-Sacrifice-in-2-Weeks

டோக்கியோ:அணுக் கதிர்வீச்சுகளுக்கிடையே மிகவும் அபாயகரமான சூழலில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் மீட்பு பணியாளர்கள் உலகிற்கு முன்மாதிரியாக மாறியுள்ளனர்.

அணுக்கதிர் வீச்சு மேலும் அதிகரிக்காமலிருக்கவும், மீட்பு பணியாளர்களுக்கு ஆபத்து ஏற்படாமலிருக்கவும் மக்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் மீட்பு பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

300க்கும் அதிகமானோர் ஜப்பானில் சுனாமி மற்றும் பூகம்பத்தால் உள்புறத்தில் வெடித்துள்ள அணு உலைகளால் அபாயம் ஏற்படாமலிருக்க கடுமையாக உழைத்து வருகின்றனர்.

மீட்பு பணியாளர்களை சில ஊடகங்கள் ‘தற்கொலைப் படை’ என அழைக்கின்றன. மிகவும் ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ள இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு எல்லா விதமான ஆதரவையும் அளித்து வருகின்றனர்.

மார்ச் 11-ஆம் தேதி புகுஷிமா டெய்ச்சி அணு மின் நிலைய உலைகள் வெடித்துச் சிதறின. தொடர்ந்து 3 வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. மீண்டும் அணு உலையில் வெப்பம் அதிகரித்து வருகிறது. தீப்பொறிகள் பறக்கின்றன. இதனால் அணுசக்தி நிலையம் உருகிவிடுமோ என பீதியில் அதிகாரிகள் ஆழ்ந்துள்ளனர்.

அணுசக்தி நிலையத்தில் பலத்த விபத்து ஏற்பட்டால் கடுமையான எதிர்விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டிவரும்.

மீட்பு பணியாளர்கள் யார்? இவர்களுக்கு அணுசக்தி நிலையத்தில் என்ன வேலை? என்பதுக் குறித்து பதிலளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இவர்கள் சுயமாக இப்பணியை மேற்கொள்கின்றார்களா? அல்லது நாடு அவர்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளதா? என்பதுக் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஜப்பான் அணுசக்தி விபத்து உக்ரைனில் நிகழ்ந்த செர்னோபில் விபத்திற்கு சமமானது என உக்ரைனில் அணுசக்தி கட்டுப்பாட்டு ஏஜன்சி தலைவர் யெலேனா மைக்கோசெலசுக் தெரிவித்துள்ளார்.

விபத்தை கட்டுப்படுத்த முடியாது எனவும், அதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அணுக்கதிர்வீச்சை கட்டுப்படுத்துவதற்கு உதவுமாறு ஜப்பான் அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ளது.

ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணுசக்தி விபத்தை தொடர்ந்து அமெரிக்காவிலுள்ள அணுசக்தி நிலையங்களை பரிசோதிக்க வேண்டுமென அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

No comments: