அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, March 6, 2011

விமானங்கள் நடு வானில் மோதல்!

கொழும்பில் இன்று நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்காக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டு தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்தன.

இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட கேபிர் ரக விமானங்கள், இலங்கை விமானப்படையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. விமானப்படையின், 60ம் ஆண்டு விழாவையொட்டி, கொழும்பில் இன்று விமான சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சாகச நிகழ்ச்சிக்காக, கேபிர் ரக விமானங்கள், நடுவானில் சீறி பாய்ந்து பயிற்சி செய்து கொண்டிருந்தன. திடீரென, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி தீ பிடித்து கீழே விழுந்தன. இவ்விபத்தில், விமானிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. காம்பகா மாவட்டத்தின் வாரனா என்ற இடத்தில், ஒரு விமானத்தின் எரிந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. மற்றொரு விமானத்தின் சிதைந்த பாகங்கள், சில கி. மீ., தள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

No comments: