அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 23, 2011

2-ஜி வழக்கு வலுவிழந்து வருகிறது: நீதிமன்றத்தில் ஆ.ராசா


புது தில்லி, ஜூலை 22: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நாளுக்கு நாள் வலுவிழந்து வருவதாக ஆ.ராசா நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
 இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கான வாதம் 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்தது.
 சிபிஐ வழக்கறிஞர் யூ.யூ.லலித்தின் வாதம் சரியாகக் கேட்கவில்லை எனவும், அவர் உரக்கப் பேச வேண்டும் எனவும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பி.சிங் கோரினார்.
 அப்போது குறுக்கிட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, "அதற்கு காரணம் (குரல் உரக்க ஒலிக்காதது) அவர்களது வழக்கு நாளுக்கு நாள் வலுவிழந்து வருவதுதான்' என குறிப்பிட்டார்.
 திங்கள்கிழமை வாதம் நடைபெறும்போது ஒலிபெருக்கிக் கருவி வைக்க வேண்டும் என ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர் ஷாகித் பல்வா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மஜீத் மேமன் வேண்டுகோள் விடுத்தார்.
 ரிலையன்ஸýக்கு ஆதரவாக... வாதத்தின்போது அரசு வழக்கறிஞர் யூ.யூ.லலித் குறிப்பிட்டதாவது:
 ஏற்கெனவே அலைக்கற்றை உரிமம் பெற்றிருந்த டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் இரட்டைத் தொழில்நுட்ப உரிமம் கோரியிருந்தது.
 ஆனால், அதன் மீதான கோப்பு வேண்டுமென்றே 35 நாள்களுக்கு இழுத்தடிக்கப்பட்டது. தில்லி பகுதிக்கான உரிமம் ஏற்கெனவே ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுவிட்டது என டாடா நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டது.
 டாடா நிறுவனத்துக்கு முன்னுரிமை அளித்திருக்க வேண்டிய நிலையில், எந்தக் காரணமும் இல்லாமல் இரட்டைத் தொழில்நுட்ப உரிம உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றார்.
 பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கட்டமைப்பு வசதிகளையே பயன்படுத்திக் கொள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றும் லலித் குற்றம்சாட்டினார்.
 "எச்.டி.எப்.சி.க்கு 2007 மார்ச் 1-ல் எழுதிய கடிதத்தில் ஸ்வான் டெலிகாம் தனது குழும நிறுவனத்தில் ஒன்று என ரிலையன்ஸ் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸின் அங்கம்தான் ஸ்வான் டெலிகாம் என்பது நிரூபணமாகி உள்ளது' என்றும் லலித் குறிப்பிட்டார்.

No comments: