அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 23, 2011

பாளை சிறை காவலர்கள் குற்றாலத்தில் கும்மாளமிட்டது தொடர்பாக டிஐஜி ராஜேந்திரன் நேரில் விசாரணை நடத்தினார்.



பாளை சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் இருந்து வந்தன. இதற்கு ஒரு சில சிறைகாவலர்கள் உடந்தையாக  இருப்பது தெரிவந்ததையடுத்து கண்காணிப்பாளர் ஆனந்தன் கடுமையாக நடந்து கொண்டார். மேலும் சிறைகாவலர்களிடம் கமோண்டோ படையினர் சோதனை நடத்தினர். இது காவலர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் மதுரை மத்திய சிறைக்கும், பாளை சிறை ஜெயிலர் அன்பழகன் சென்னை புழல் மத்திய சிறைக்கும், பாளை கூடுதல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் சேலத்திற்கும் மாற்றப்பட்டனர்.

இதனால் குஷியான பாளை சிறை காவலர்கள் 40 பேர் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சில தினங்களுக்கு முன் குற்றாலம் சென்றனர். அங்கு அவர்கள் விடிய விடிய அருவிகளில் கு(டி)ளித்து கும்மாளம் போட்டனர். அப்போது அவர்கள் போட்ட கூச்சல் குற்றாலத்தையே அதிர வைத்தது. இந்த விபரம் சிறைதுறை டிஐஜி (பொறுப்பு) ராஜேந்திரனுக்குத் தெரியவரவே, அவர் பாளை மத்திய சிறைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

சிறைகாவலர்கள் இருபிரிவுகளாக செயல்பட்டு வருவதும், இதில் ஒரு பிரிவைச் சேர்ந்த 40 பேர் 2 வேன்களில் குற்றாலத்திற்குச் சென்று கும்மாளமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து டிஐஜி  அவர்களிடம் ''சிறைகாவலர்கள் சாதி உணர்வுடன் செயல்பட கூடாது. ஒற்றுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்'' என்று எச்சரித்துள்ளார்.

No comments: