அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, March 23, 2009

மாணவியை கடத்திய 2 குழந்தைகளின் தந்தை: போலீசார் தேடுகிறார்கள

நாகர்கோவில் அருகே உள்ள வடக்குசூரங்குடியைச் சேர்ந்தவர் ரூகையாபீவி. இவரது மகள் ரகீமாபீவி (வயது 18). இவர் நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரியில் ஆசிரியை பயிற்சி படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ரகீமாபீவி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது தாயார் ரூகையாபீவி ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார்.
புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகள் ரகீமாபீவி வீட்டில் இருந்து தினமும் பஸ்சில் புறப்பட்டு செட்டிக்குளம் சந்திப்புக்கு செல்வார். அங்கிருந்து கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு போவார். கல்லூரி பஸ்சில் டிரைவராக பணியாற்றிய நாகராஜ், எனது மகளிடம் ஆசைவார்த்தை கூறி அவரை கடத்திச் சென்று விட்டார். அவரிடம் இருந்து எனது மகளை மீட்டு நாகராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புகார் தொடர்பாக ஈத்தாமொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் லாசர், ஏட்டு கருணாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நடராஜ், ரகீமாபீவி ஆகியோரை தேடிவருகிறார்கள்.
போலீசார் தேடும் நடராஜூக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவரது மனைவியை அவர் காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments: