அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, April 18, 2009

யா அல்லாஹ்! இந்தச் சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு விடாதே!..

அஸ்ஸலாமு அலைக்கும்............ ......... .....

முஸ்லிம்கள் அடையும் அரசியல் விழிப்புணர்ச்சி, ஹிந்துத்துவாக்களின் அடிவயிறைக் கலக்க வைக்கிறதோ என்னமோ, தமிழகத்தில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் அடிவயிறுகளைக் கலங்கடிக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

இதனை உணர்ந்துக் கொள்ளாத தூரநோக்கற்ற சமுதாயத்தலைவர்கள் தங்களின் ஆதரவை இவர்களுக்குப் பகிர்ந்தளித்து விட்டு, முஸ்லிம்களாக களமிறங்குபவர்களை அழித்தொழிப்பதே இலட்சியம் என தீர்மானங்கள் நிறைவேற்றுகின்றனர்.

ஹிந்துத்துவாக்களுக்கும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் இத்தீர்மானங்கள் கேட்கப்பட்ட நேரத்தில் மனதில் நீண்ட நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டிருக்கும் - நமது வேலையை அவர்களே எளிதாக்கி விட்டனர் என்ற பரம திருப்தி!

"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் மானத்திற்குப் பாதுகாவலனாவான்" - ஹைதர் அலியின் மானத்திற்கு பிஜேயும் பிஜேயின் மானத்திற்கு ஹைதர் அலியும் பாதுகாவலர்கள் இல்லை - அவர்களின் செயல்பாடுகள் அதனை எடுத்தியம்புகின்றன.

எனில், இவர்கள் முஸ்லிம்கள் தானா?

யா அல்லாஹ்! இந்தச் சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு விடாதே!...

வழி தவறிய..தரங்கெட்ட தலைவர்களை பின்பற்றிய எந்த ஒரு சமுதாயத்தையும் ..வல்ல இறைவன் வெற்றிபெற்ற சமுதாயமாக’..ஆக்கியதில்லை..

"எங்கள் இறைவா ! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக"

அல் குர்ஆன் 14:41.

اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

No comments: