அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 20, 2009

அமெரிக்காவில் நோன்பை முன்னிட்டு பேரித்தம்பழ விற்ப்பனை சூடு பிடித்துள்ளது


அமெரிக்கா கிழக்கு கலிபோர்னியாவில்முஸ்லிம்களின் நோன்பை முன்னிட்டு பேரித்தம் பழ விற்பனை கடந்த சிலவாரங்களாக சூடு பிடித்துள்ளது.
டென்னிஸ் ஜென்சென் (கலிபோர்னியாவின்பிரசித்தி பெற்ற பேரித்தம் பழ தோட்டஉரிமையாளர் லாஸ் எஞ்செல்ஸ்நாளிதழுக்கு நேற்று செவ்வாய் கிழமைஅளித்த பேட்டியில் கூறுகையில்கொஞ்சம் பேரித்தம் பழம் அனுப்புங்கள்” ”என்னை காப்பாற்றுங்கள்அவரிடம் ஒருபேரித்தம் பழம் கூட இல்லாமல் விற்றுவிட்டதாம். இதே நிலைதான் அங்குவிற்பனை செய்யும் மொத்த மற்றும்சில்லரை விற்பனையாளர்களின்நிலையாம்.

ரமளானிற்கு முன் கோச்செல்லா பள்ளத்தாக்கில் உள்ள மொத்தவிற்பனையில் 20,687 டண் 32 பில்லியன் டாலர் விற்பனையானது. ரமளான்மாதத்தில் மாத்திரம் 480,000 டண் சாகுபடி ஆகி உள்ளது.மற்ற நாட்களைவிட 70% அதிகமாக விற்பனையாகி உள்ளதாகவும் பயிர் சாகுபடி அறிக்கைதெரிவிக்கிறது.

கலிபோர்னியா பாம் ஸ்பிரிங்ல் குடியிருப்பு உரிமையாளர் அப்துல்முஹம்மத் கூறுகையில் ரமளான் மாதத்தில் மெக்சிகொவில் வாழும்கிறிஸ்த்தவர்கள் எவ்வாறு கிறிஸ்துமஸ் சமயத்தில் தாமல்ஸ் என்ற ஒருவித பழகாரம் உண்பார்களோ அதே போன்று ரமளான் மாதம் முழுவதும்அதாவது 30 நாட்கள் பகல் ஆரம்பிப்பதற்கு சற்று முன் முதல் துவங்கி இரவுஆரம்பிப்பதற்கு சற்று முன் வரை உண்ணாமலும் பருகாமலும் இறைவனின்(படைத்தவனின்) நெருக்கத்தை அடைவார்கள். பேரித்தம் பழம் இந்தரமளான் நோன்பை பிறியும் வேளையில் உண்பது முஹம்மத் (ஸல்)அவர்களை இறுதி நபியாக ஏற்று வாழும் உலக முஸ்லிம்களின்பாரம்பரியம்.

அமெரிக்காவின் தற்போதைய செய்தியில் அமெரிக்காவில் 7 மில்லியனுக்குமேல் முஸ்லீம்கள் வெவ்வெறு சமூகத்தில் இணைந்து வழ்வதாகதெரிவிக்கிறது.

No comments: